Monday, May 04, 2020

புதிய பார்வை.....புதிய கோணம்.....

🍁🍁புதிய பார்வை🍁🍁

ஒரு ஊரில்
யாருக்கும்
எந்த உதவியும்
செய்யாத,
பணக்காரர்
ஒருவர் இருந்தார்.

அவர் சிரித்து
யாரும் பார்த்தது
இல்லை.

எப்போது
பார்த்தாலும்
முகம் கடுகடுவென
இருக்கும்.

ஒருநாள் இரவு,
'தான் இறந்து
போவதாகவும்,
அதற்கு பிறகு
சொர்க்கத்திற்கு
செல்வதாகவும்'
கனவு கண்டார்.

சொர்கத்தில்
ஓர் அழகான
வீதியில், அவர்
நடந்து போய்
கொண்டிருந்தார்.

அந்த வீதியில்
ஒவ்வொரு வீடும்,
மாளிகையாக
இருந்தது.

குறிப்பாக
ஒருவீடு மிகவும்
அழகாகவும்,
நேர்த்தியாகவும்
இருந்தது.

அவர்
"அந்த வீடு
யாருடையது?"
என்று கேட்டார்.

"அது உங்களுடைய
வேலைக்காரருக்கு
சொந்தமானது"
என்று பதில்
தரப்பட்டது.

அவர்
'என்னுடைய
வேலைக்காரரின்
வீடே இப்படி
அற்புதமாக
இருக்கும் போது...

என்னுடைய வீடு
இதைவிட நன்றாக
இருக்கும்' என்னும்
இறுமாப்புடன்
சென்றார்.

அடுத்ததாக
ஒரு சின்ன வீடு
வந்தது.

அதற்கடுத்து
இன்னமும்
சிறிய வீடு
வந்தது.

தொடர்ந்து
வந்தவை
சின்ன சின்ன
குடிசைகளாக
இருந்தது.

"நீ இந்த சிறிய
குடிசையில் தான்
வசிக்க போகிறாய்"
என்று அவரிடம்
தெரிவிக்கப்பட்டது.

மிகுந்த கோபம்
அடைந்த அவர்,
"இந்த பொந்திலா
நான்  வசிக்க
போகிறேன்?" என
ஆத்திரப்பட்டார்.

"நாங்கள் என்ன
செய்ய முடியும்?
நீங்கள் பூமியில்
இருக்கும் போது
எப்படி
இருந்தீர்களோ,
என்ன
செய்தீர்களோ,
எந்த பொருட்களை
அனுப்பினீர்களோ...

அவற்றை
கொண்டுதான்,
தங்களுக்கு வீடு
கட்டியுள்ளோம்"
என்று சொர்கத்தின்
நிர்வாகஸ்தர்கள்
அவரிடம்
சொன்னார்கள்...

திடீரென்று
கனவில் இருந்து
அவர் விழித்து
கொண்டார்.

மனதில் 'பயம்'
பற்றி கொண்டது.

மறுநாளில் இருந்து,
அவரின் அனைத்து
செயல்களும் மாறி
போயிருந்தன...

அவரிடம் இருந்து
புறப்பட்ட புன்னகை,
மற்றவர்களுக்கு
தொற்றி கொண்டது.

தான தர்மங்கள்
அவரால் அதிக
அளவில்
செய்ய பட்டன.

அவரின்
இறுதி நாள் வரை
இது தொடர்ந்தது.

"அள்ளிக்கொடுத்து
வாழ்பவன் நெஞ்சம்
ஆனந்த பூந்தோப்பு..

வாழ்வில்
நல்லவர் என்றும் கெடுவதில்லை
இது நான்குமறை
தீர்ப்பு",..

இது திரைப்பட
பாடல் வரிகள்
மட்டுமல்ல...

நம்மை
மாமனிதனாக
மாற்ற கூடிய
மாய வரிகளே...

வாங்க...

பொருளோ
புன்னகையோ
கொடுத்து
பழகலாம்.

வரிகளின் படி
வளமாக
வாழ்ந்து
பார்க்கலாம்.

*அன்புடன்*
*இனிய*
*காலை*
*வணக்கம்.*

No comments: