Thursday, December 27, 2018

பத்து வருட மாற்றம்...மனிதத்தின் ஏமாற்றம்...

*பத்து வருடம்*

பத்து வருடங்கள் என்பது ஒரு சிறு கால அளவாக தோன்றுமாயின் அது மிக பெரிய தவறு.

பத்து வருட கால அளவுகளில் எத்தனை குடும்பங்கள் வேலையிழந்தது எத்தனை அழிவுகளை சந்தித்தோம் என்று யாரேனும் சிந்தித்ததுண்டா?

*1980 களில்* தொலைக்காட்சி பெட்டி வந்தது.... பக்கத்து வீடுகளின் நட்பு துண்டாக ஆரம்பித்தது... ரேடியோக்கள் மறைய ஆரம்பித்தது...

செயற்கை உரங்கள் ஊடுருவ ஆரம்பித்தது... இயற்கை விவசாயம் அழிய ஆரம்பித்தது...

குளிர்பானங்கள் ஊடுருவ ஆரம்பித்தது...
இளநீர், பதநீர் அழிய ஆரம்பித்தது...

வெள்ளை சக்கரை பரவலாக பிரபலம் ஆனது... சர்க்கரை நோய் படர ஆரம்பித்தது...

சிகரட்டுகள் அதிக அளவில் விற்பனை தொடங்கின... வெற்றிலை பாக்கு அழிய ஆரம்பித்தது...புற்றுநோய் முலைக்க ஆரம்பித்தது...

ரீல் கேசட்டுகள் வந்தன... பாடல் நிறைந்த தட்டு கிராமோஃபோன்கள் ஒலிக்காமல் போயின...

ரஸ்னா வந்தது... எலும்பிச்சை சாறு ஆவியானது...

பெரிய ஊரிலிருந்து இன்னொரு பெரிய ஊருக்கு போகும் வழியே ஒற்றை தார் சாலை.... புளியமரங்கள் இருபுறமும் இருந்தது.

*மாவட்டத்திற்க்கு ஐந்து ஆறு மருந்து கடைகள் இருந்தது...

*1990 களில்*
வண்ண தொலைக்காட்சி வந்தது வண்ணவண்ண விளம்பரங்கள் வரதொடங்கின... நோய்கள் அதிக அளவில் வேர்விட ஆரம்பித்தது...

ஐஸ்வர்யா ராய் எல்லாம் ஒரு அழகி,  அவளை உலக அழகி என்றார்கள்.... மஞ்சள் பூசிய பெண்கள் ஃபேர் அன்ட் லவ்லிக்கு மாறினார்கள்...

கலர்கலராய் பேஸ்ட்கள் வந்தது... கோபால் பல்பொடி, பையோரியா பல்பொடி, வேப்பங்குச்சி, ஆலங்குச்சி, கரித்தூள், உப்பு, செங்கல்தூள் போட்டு பல் விளக்கியவர்கள் பேஸ்ட் பிரஷ் சகிதம் பல்லை பளிச் ஆக்கினார்கள்...

இரு சக்கர வாகனங்கள் நடுதர வர்க்கத்தினரும் வாங்ககூடி அளவுக்கு விலையில் குறைந்தது சைக்கிலில் பயனித்தவர் பலர் இன்று மூட்டுவலியோடு சக்கர நாற்க்காலியில்.

ஒன்றிரெண்டு வீடுகளில் இருந்த தொலைபேசி, தொலைக்காட்சி பெட்டி அதிகமான வீடுகளை தொட்டது... தபால் நிலையங்கள் ஓய்வு நிலையங்களாக மாறதொடங்கின...

சீ.டி பாட்டு தட்டு வந்தது... ரீல் பாட்டு கேசட்டுகள் ரீல் உருவபட்டன...

சரக்கு பாட்டில்கள் பல வடிவங்களில் வந்தன பலர் பல கோணங்களிலில் தெருவில் நடந்தனர்...

மேகி வந்தது... பழைய சாதம், இட்லி,  தோசை, இடியாப்பம் போன்ற காலை உணவு செரிக்காமல் போனது...

ஐஸ்கட்டி பெப்ஸி வந்தது... கப்ஐஸ், பால்ஐஸ், சேமியாஐஸ் கரைந்து போனது...

ஏசி பிரபலம் ஆனது... மரங்களுக்கு பிராபளம் ஆனது...

வாசிங் மெஷின் வந்தது... இன்று பெண்கள் எலும்பு சத்து கால்சியம் ஹார்லிக்ஸ் குடிக்கிறார்கள்...

ஃபிரிட்ஜ் வந்தது... மண்பானைகள் உடைந்தது...

ஓசோன்ல ஓட்டைங்கற புது வார்த்தை காதுக்குள் பாய்ந்தது...

வீடியோ கேம்ஸ் வந்தது... பம்பரம், கோலிகுண்டு, கிட்டிபுல் போன்ற விளையாட்டுக்கள் மாயமானது...

ஊருக்குள்ளே ஒரு பெரிய பகுதியிலிருந்து இன்னொரு பெரிய பகுதிகளுக்கு தார்சாலை... ஊர்சாலை இருவழி சாலையாக மாற்றப்பட்டது... மரங்கள் வெட்டப்பட்டது...

*தாலுக்காவுக்கு பத்து பதினைந்து மருந்துக்கடைகள்... இருந்தது...

இன்னும் பல...

*2000 களில்*
ஆர்.ஓ சுத்திகரிப்பு வீட்டுக்குவீடு மாட்டப்பட்டது... சளி சிந்த ஆளுக்காளுக்கு கைக்குட்டை அவசியமானது... ஜலதோஷமா? ஆமாப்பா ஆமா, மூக்கடைப்பா? ஆமாப்பா ஆமா, விளம்பரம் பயன்பட்டது... மருந்து கம்பெனிக்காரன் கட்டிட கட்டுமான பொருட்களுக்கு புக் பண்ணான்.

மஞ்சள் பூசியபோது வராத தோல் நோய்கள், பரு, கரும்புள்ளி எல்லாம் மெல்லமாய் சருமம் மேல் தலைகாட்ட முகம் கருமமாக மாற கவலையடைந்த நம்ம ஊர் ஐஸ்வர்யாராய்களுக்கு விடைகிடைத்தது வண்ண தொலைக்காட்சி பெட்டியில் வந்த அடுத்தடுத்த விளம்பரங்கள்... இந்த முறை மருந்து கம்பெனிக்காரன் கட்டுமான பொருட்களையே தயாரிக்கவே ஆரம்பிச்சுட்டான் அவனோட அடுத்த கட்டிடங்களுக்கு...

டிஜிட்டல் கேமராக்கள் வந்தது... பல பிலிம் நிறுவனங்களும், ஸ்டுடியோக்களும் கடையை காலிசெய்தனர்.

குடிநீர் பாட்டில் வந்தது... ஏங்க கொஞ்சம் குடிக்க தண்ணிக்குடுங்க என்ற வார்த்தைகள் காணமல்போனது...

பட்டன் வச்ச செங்கல் செல்ஃபோன் போயி சிறுவடிவ செல்ஃபோன் வரை வந்தது லேண்ட்லைன் ஃபோன், பேஜர்களுக்கு பேஜார் ஆனது. விபத்துக்கள் அதிகம் ஆகின... ஹெல்மெட் வியாபாரம் பட்டைய கிளப்பின...

தெருவுக்கு தெரு தார்சாலை... ஊர்சாலைகள் நான்கு வழிபாதையாக மாற்றப்பட்டது... நன்கு மடங்கு மரங்கள் அழிக்கப்பட்டது...

வெப்பம் அதிகரித்தது ஆர்டிக் பனி உருக ஆரம்பித்தது...

*போஸ்ட்க்கு இருபது முப்பது மருந்து கடைகள் இருந்தது...

*2010 லிருந்து*
உங்களுக்கே தெரிந்திருக்கும்.... தெரியலைனா தெரிஞ்சுக்க வேண்டிய அவசியம் இருக்கு...

நாம் இப்பவும் ஆர்டிக் பனி உறைஞ்சு வந்தா என்ன அதான் ஓசோன்ல ஓட்டை இருக்கே அதுவழியா தண்ணி வெளியே போயிடும்யானு மொட்டை தலைக்கும் மொழங்கலுக்கும் சம்மந்தமே இல்லாம முடிச்சிபோட்டுக்கிட்டு ஜாலியா இருக்கோம்.

*வீட்டுக்கு வீடு மருந்து கடை தொடங்கும் அளவுக்கு மருந்துகள் உள்ளது.

*ஆக இந்த பத்து வருடம் என்பது வளர்ச்சி தரும் கால அளவுனு தீர்மானிச்சா... அது முற்றிலும் தவறு... அடுத்த பத்து வருடத்தில் அதாவது 2020 லிருந்து 2030 க்குள் ஆக்ஸிஜன் சிலிண்டர் விற்பனைக்கு வந்துவிடும். ஏற்கனவே சினாவில் வியாபாரம் ஆக தொடங்கி விட்டது*

இப்போதுதாவது விழித்துக்கொள் நண்பா... மரங்களை நடு ஆக்ஸிஜன் தானாக கிடைக்கும், மழை வரும்... நீர்நிலைகளை சரிசெய்து மழைநீரை சேமித்திடு... பாசனத்திற்க்கு திறந்து விடு. விவசாயம் பெருகும்... கால்நடைகளை பெருக்கு... இவைதான் எல்லா தொழிலுக்குமே மூலதனம்... சிந்தித்து செயல்படு.... மரமே மந்திரம்... *மரம் ஒன்றே ஒரே மந்திரம்...*

நன்றி.... நட்பே...

Wednesday, December 26, 2018

நுண்ணுயிரியல் லூயி பாஸ்டர் பிறந

#இன்று #பிறந்த #நாள்:- #டிசம்பர்-27.

நுண்ணுயிரியலின் தந்தை என்று அழைக்கப்பட்ட
பிரான்ஸ் வேதியியலாளர்
#லூயி #பாஸ்டர்
(Louis Pasteur)
பிறந்த தினம்.

#பிறப்பு:-

டிசம்பர்-27, 1822 ஆம் ஆண்டு,
டோல், பிரான்ஸில் பிறந்தார். 1831 இல் தனது ஆரம்பக் கல்வியை பயின்றார்.
டி அர்பாய்சு கல்லூரியில் தனது மேனிலைப் பள்ளிக் கல்வியைத் தொடர்ந்தார்.
1839 ஆம் ஆண்டில், மெய்யியல் படிப்பதற்காக ராயல் டி பெசன்கான் கல்லூரிக்குச் சென்று, தனது இளநிலை பட்டத்தினையும் (Bachelor of Letters degree) 1840 ஆம் ஆண்டு பெற்றார்.
1842 இல் டிசோனில் baccalauréat scientifique (பொது அறிவியல்) பட்டத்தில் தேர்ச்சி பெற்றார்.
பின்னர் 1842 இல், பாஸ்டியர் Ecole Normale Supérieure நுழைவுத் தேர்வு எழுதினார். 1843 ஆம் ஆண்டு அவர் உயர் தரவரிசையில் தேர்ச்சியடைந்து Ecole Normale Supérieure இடம்பெற்றனர்
. 1845 ஆம் ஆண்டில் அவர் licencié ES அறிவியல் பட்டம் (அறிவியலில் முதுகலைப் பட்டம்) பெற்றார்.

#பணிகள்:-

வேதியியலாளர் அண்டோனே ஜெரோம் பாலார்ட், லூயியை Ecole Normale Supérieure க்கு  ஆய்வக உதவியாளராக பணியாற்ற அழைத்தார். அவர் Balard உடன் இணைந்து
கொண்ட அதே வேளையில், படிகவியல் தொடர்பான தனது ஆய்வுகளையும் தொடங்கி, பின்னர் 1847 இல், வேதியியல், இயற்பியல் தொடர்பான இரு ஆய்வுக்கட்டுரைகளைச் சமர்ப்பித்தார்.
டிஜோன் உயர்நிலைப் பள்ளியில் இயற்பியல் பேராசிரியராக பணியாற்றிய  பின், 1848 ல், ஸ்ட்ராஸ்பர்க் பல்கலைக்கழகத்தில் வேதியியல் பேராசிரியராகக் பணிபுரிந்தார்.

#கண்டுபிடிப்புகள்:-

#பாஸ்டியர்முறை #நுண்ணுயிர் #நீக்கம்-

ஒயின் தயாரிப்பாளரான நண்பருக்கு உதவி செய்ய 1856 ஆம் ஆண்டு, ஆராய்ச்சி மேற்கொண்டார். ஒயினை புளிக்கச் செய்வது ஒருவகை பாக்டீரியா கிருமி என்பதைக் கண்டறிந்தார்.
கிருமிகள் பற்றி தொடர்ந்து ஆராய்ச்சி செய்தார். ‘பாலை புளிக்கச் செய்வதும் ஒருவகை பாக்டீரியாதான். அதை குறிப்பிட்ட அளவு வெப்பத்தில் வைத்தால் பெரும்பாலான கிருமிகள் அழிந்துவிடும்’ என்பதைக் கண்டறிந்தார். தற்போது பால் மற்றும் உணவுப் பொருள் பதப்படுத்தும் நிலையங்களில் இந்த தொழில்நுட்பமே பயன்படுத்தப்படு கிறது. இது அவரது பெயரால் ‘பாஸ்ச்சரைசேஷன்’ என்று அழைக்கப்படுகிறது. இம்முறையில் பாலானது 60 முதல் 100 °C  வெப்பநிலை வரைக் 30 நிமிடம் காய்ச்சி அதே வெப்பநிலையில் 30 நிமிடம் வேகமாக குளிரச்செய்யப்படுகிறது.
இதன் தொடர்ச்சியாக, மனித உடலில் நுண்ணுயிரிகள் புகுவதைத் தடுக்கும் ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டன. தீராத நோய்கள் என்று அதுவரை அறியப்பட்ட சின்னம்மை போன்ற நோய்கள் வராமல் தடுக்கவும், நோய் தீர்க்கவும் மருந்துகள், கிருமி நாசினிகள் கண்டறியப்பட்டன. கால்நடைகளுக்கு வரும் கோமாரி நோய்க்கும் மருந்து கண்டறிந்தார்.

#வெறிநாய்க்கடிக்கான #தடுப்பூசி:-

வெறிநாய்க் கடியால் உண்டாகும் ராபிஸ் நோய் பற்றி ஆராய்ந்தார்.
இந்த ஆராய்ச்சிக்காக, தன் உயிரையும் பொருட்படுத்தாமல் வெறிநாய்களைக் கொண்டு ஆபத்தான பல சோதனைகளை மேற்கொண்டார். ஆய்வு முடிவில், தடுப்பு மருந்தையும் கண்டறிந்தார்.
இவரது அடிப்படை கோட்பாடுகளைப் பயன்படுத்தி ஜன்னி, போலியோ போன்றவற்றுக்கும் மருந்து கண்டறிந்தனர் விஞ்ஞானிகள்.

#வேதியியல்:-

மூலக்கூறு அடிப்படையில் சில படிகங்களின் (crystal) ஒத்தமை
வின்மையைக் (assymmetry) குறித்த இவரது ஆய்வு குறிப்பிடத்தக்கது. இவரது ஆரம்பகால வாழ்க்கையில் டார்டாரிக் அமிலத்தில் இவரது ஆய்வு முதன் முதலில் ஒளியியற் சமபகுதியம் (optical isomer) என்ற தீர்மானத்துக்கு வழிவகுத்தது.
கரிமச் சேர்மங்களின் (organic compounds) அமைப்பைப் புரிந்து கொள்வதில், தற்போதுள்ள அடிப்படைக் கொள்கைக்கு இவரது ஆய்வு வழிவகுத்தது.

பாஸ்டியர் 1857 இல் தன்னுடைய பரிசோதனைகளைத் தொடங்கி, 1858 Comptes Rendus Chimie என்ற இதழில், ஏப்ரல் பதிப்பில் வெளியிட்டார்.

#விருதுகள்:-

ரம்ஃபோர்ட் விருது -(1856, 1892),
Forமெம்பர் ஆப் ராயல் சொசைட்டி-(1869),
கோப்லி விருது -(1874),
ஆல்பர்ட் விருது -(1882),
லீயுவென்கோக் விருது -(1895),
போன்ற விருதுகளை பெற்றார்.

#மறைவு:-

பல நோய்கள்
நுண்ணியிரிகளால் ஏற்படுகின்றன என்று கண்டறிந்த இவர்,
செப்டம்பர் -28, 1895 ஆம் ஆண்டு,
மார்னெசு-லா-கோக்கெட்,
பிரான்சில் மரணமடைந்தார்.

நன்றி..!

கணினியின் தந்தை பிறந்தநாள்....

#இன்று #பிறந்த #நாள்:- #டிசம்பர்-26.

கணினியின் தந்தை,
நியமத் தொடருந்துப் பாதை (Railway Track) அளவுக் கருவி கண்டுபிடித்த இங்கிலாந்து
கணினியியல் அறிஞர்-
#சார்லஸ் #பாபேஜ்  (Charles Babbage) பிறந்த தினம்.

#பிறப்பு:-

டிசம்பர்-26, 1791
இலண்டன், இங்கிலாந்தில் பிறந்தார். இங்கிலாந்து நாட்டிலுள்ள கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் உயர் கல்வி பயின்றார். இவர் கணிதத்தில் மிகுந்த நாட்டம் கொண்டவர்.

#கண்டுபிடிப்புகள்:-

கணிதவியலாளர், கண்டுபிடிப்பாளர், பகுப்பாய்வுத் தத்துவவாதி, இயந்திரப் பொறியாளர் என்று பல பரிமாணங்கள் கொண்டவர்.
கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் கணித விரிவுரையாளராகப் பணியாற்றிக் கொண்டிருந்தார். அப்போது, கணிதப் பாடங்களில் ஏராளமான பிழைகள் இருப்பது கண்டு அவரால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. பிழைகளைச் சரிசெய்ய ஒரு கருவியை உருவாக்க எண்ணினார். அதற்காகவே கணிதத்தில், வகைக் கணித சமன்பாடுகளை (Differential Equations) தீர்வு செய்து, தானாகக் கணக்கிடும் கருவியை 1822 இல் கண்டுபிடித்தார். இது வகைக் கணிதப் பொறி (Difference Engine) எனவும் அழைக்கப்பட்டது. இந்த மிகப்பெரிய இயந்திரம் நீராவியால் இயங்கியது. துளைகளைக் கொண்ட அட்டைகளைச் செருகியதன் மூலம் இந்தக் கருவியின் நிரல் (Program) இயங்கியது. அது கணக்கீடுகளைச் செய்து விடையைத் தானாக அச்சிட்டுத் தந்தது.
இதுவே இண்றைய கணினியின் அடிப்படைத் தத்துவம் ஆகும்.
இன்றைய
கணினிகள் பயன்படுத்தும் எந்திரக் கணக்கியல் இயந்திரங்களைக் கண்டுபிடித்தவர்.
வேறுபாட்டுப் பொறியில் பத்து ஆண்டுகள் பணிபுரிந்த பிறகு, 1834 ஆம் ஆண்டில் கணிதத்தையும், இயந்திரத்தையும் இணைத்துப் பகுப்பாய்வுப் பொறி (Analytical Engine) என்ற முதல் கணினியை உருவாக்கினார். அவருடன் ஆங்கிலக் கவிஞர் பைரனின் மகளான அடா லவ்லேஸ் வடிவமைப்பில் உதவ, ஆணைகள் அடங்கிய நிரலை (Program) உருவாக்கினார். இதன்மூலம் உலகின் முதல் கணினி நிரலர் (Computer Programmer) என்னும் பெருமையை அடா பெற்றார். ஒரு நிமிடத்திற்கு 60 வகையான கணிதம் சம்பந்தப்பட்ட பிரச்னைகளை இந்த நிரலால் தீர்க்க முடிந்தது. இந்த இயந்திரம் நவீன கணிப்பொறி போன்றே இருக்கும் என்பதுதான் அதன் சிறப்பம்சம். பல ஆண்டுகளுக்கு முன்னால் இந்தச் சாதனை நிகழ்த்தப்பட்டது என்றாலும், அதிகாரப்பூர்வமாக 1948 ஆம் ஆண்டில்தான் அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டது.
அதன்பிறகு டிரான்சிஸ்டர் (Transistor) கண்டுபிடிக்கப்பட்டு அதுவரை இருந்த வெற்றிடக் குழல் (Vacuum Tube) மாற்றப்பட்டு, இரண்டாம் தலைமுறைக் கணினிகள் உருவாகின.
மேலும் வாகனமங்களின் வேகமானி,
கண் பரிசோதனைக்கருவி,
புகையிரதத்தின் டைனமோ மீட்டர்,
சீரான அஞ்சல் கட்டண முறை,
கலங்கரை விளக்கு ஒளி,
கீறிவிச் ரேகைக் குறியீடு,
சூரிய ஒளி கொண்டு கண்களைச் சோதிக்கும் கருவி,
மணிச்சட்டம்,
நேப்பியர் கருவி,
பாஸ்கல் இயந்திரம்,
டிபரன்ஸ் இயந்திரம்
போண்றவற்றையும் கண்டுபிடித்தார்.

#மறைவு:-

அக்டோபர்-18, 1871 ஆம் ஆண்டு
மேரில்போன், இலண்டன், இங்கிலாந்தில் மரணமடைந்தார்.

#சிறப்புகள்:-

கணினியின் மூலம் இந்த உலகமே நம் கைகளில் தவழக் காரணமாக இருந்த சார்லஸ் பாப்பேஜை சிறப்பிக்கும் விதமாக, அவரது மூளை இங்கிலாந்திலுள்ள ஹண்டேரியன் காட்சியகத்தில் (Hunterian Museum) இன்றும் பாதுகாக்கப்பட்டு வருகிறது.

நன்றி!!