Saturday, May 02, 2020

புதிய பார்வை....புதிய கோணம்...

சீடன்
ஒருவன்
குருவிடம்
"தாங்கள்
ஞானம்
பெற்று
விட்டீர்களே
இனி
என்ன செய்ய
போகிறீர்கள் ?"
என கேட்டார்.

"காட்டிற்கு
போவேன்,
அடுப்பு எரிக்க
சுள்ளிகளை
பொறுக்குவேன்,
அன்றாட
பணிகளை
மேலும்
ஆர்வத்துடன்
செய்வேன்"
என்று குரு
கூறினார்.

"அதுதான்
தொடர்ந்து
செய்கிறீர்களே"
என சீடர்
கேட்டார்.

"நேற்றைய
என் பணிகளில்,
இருந்த
குறைகளை
களைந்து,
இன்றைய
என் பணிகளில்,
மேலும்
சிறப்பை
கூட்டுவேன்,
இதுதான்
ஞானமடைதல்"
என கூறினார்
குரு .

வாங்க...

நாமும் அவர்
போலத்தான்...

நேற்றைய நம்
கடமைகளை,
செயல்களை
இன்று
தொடரும் போது...

இன்னமும்
சிறப்பாக,
விருப்பத்துடன்
செய்வோம்.

நம்
வாழ்க்கையை
அற்புதமாக
அமைத்தும்
கொள்வோம் .

அன்புடன்
காலை
வணக்கம்.
நன்றி

- Dr.Sundar Murthy -

No comments: