Tuesday, May 12, 2020

புதிய பார்வை...புதிய கோணம்...

🍁🍁புதிய பார்வை🍁🍁

'வீரத்தின் வழியே
வெற்றி காண்பவர்
சாதாரன வீரர்.

வீரத்தை தாண்டிய
வெற்றி ஒன்று
இருக்கிறது.

அது
'கருணை'.

இதனால்
நாமும்
வாழ்கிறோம்.

எதிரியும்
வாழ்கிறான்.

நாம்
உயர்கிறோம்.

அவனும்
உயர்கிறான்.

நாம் மகிழ்ச்சியாக
இருக்கிறோம்.

அவனும்
மகிழ்ச்சியாக
இருக்கிறான்.

வாழ்க்கையிலேயே
உயர்ந்த வெற்றி
இதுவே'.

இந்த கருத்தை
கூறியவர்...

சீனாவில் ஐந்து
மன்னர்களுக்கு
ஆலோசகராக
இருந்தவர்...

என்பது வயதுக்கு
மேலும் மிக சிறந்த
மனிதர் என உலகில்
போற்றப்படுபவர்...

அவர்
'லாட்சு'.

அவர் கூற்று
உண்மைதான்.

காந்தி, கலாம்,
அன்னை தெரசா
இவர்கள்...

'கருணை'
குணத்தால்...

காலத்தை
தாண்டியும்,
மக்கள் மனதில்
வாழ்கிறார்கள்.

வாங்க...

'பாசமுள்ள
பார்வையிலே
கடவுள்
வாழ்கிறான்.

அவன்
கருணை
கொண்ட
நெஞ்சினிலே
கோவில்
கொள்கிறான்'

வரிகளுக்கு ஏற்ப
நாமும் வாழ,
முயற்சிகள்
செய்யலாம்.

*அன்புடன்*
*இனிய*
*காலை*
*வணக்கம்.*

நன்றி
முனை.சுந்தரமூர்த்தி

No comments: