Saturday, December 28, 2019

🍁🍁புதிய பார்வை. ....புதிய கோணம்....🍁🍁

🍁🍁புதிய பார்வை🍁🍁

சில காயங்கள்
*மருந்தால்*
சரியாகும்.

சில காயங்கள்
*மறந்தால்* 
சரியாகும்...

மனிதனுக்கு 
*பிரச்சனை*.

அதனால்,
கடவுளுக்கு 
*அர்ச்சனை*...

*வறுமை* 
வந்தால்
வாடக்கூடாது.

*வசதி*
வந்தால்
ஆடக்கூடாது...

*கருப்பு* 
மனிதனின்
இரத்தமும்
சிவப்புதான்.

*சிவப்பு* 
மனிதனின்
நிழலும்
கருப்புதான்...

வியர்வை
துளிகள்
*உப்பாக* 
இருக்கலாம்.

ஆனால்,
அவை
வாழ்க்கையை 
*இனிப்பாக* 
மாற்றும்...

*வீரன்* 
சாவது
இல்லை.

*கோழை* 
வாழ்வதே
இல்லை...

உன்னை நீ
*செதுக்கி*
*கொண்டே*
இரு.

*வெற்றி* 
பெற்றால்
சிலை.

*தோல்வி*
அடைந்தால்
சிற்பி...

மனிதனுக்கு
ABCD 
*தெரியும்*.

ஆனா *"Q"* ல
போக *தெரியாது*.

எறும்புகளுக்கு
ABCD
*தெரியாது*.

ஆனா *"Q"* ல
போக *தெரியும்*...

உண்மை
எப்போதும் 
*சுருக்கமாக* 
பேசப்படுகிறது.

பொய்
எப்போதும்
*விரிவாக*
பேசப்படுகிறது...

பேசிப்பேசியே
நம்மை
ஏமாற்றுகிறார்கள்
என்பதெல்லாம் 
*பொய்*.

அவர்கள்
பேச்சில், நாம்
ஏமாந்து
விடுகிறோம்,
என்பதே 
*உண்மை*...

குறைகளை 
*தன்னிடம்*
தேடுபவன்
தெளிவடைகிறான்.

குறைகளை 
*பிறரிடம்* 
தேடுபவன்
களங்கப்படுகிறான்.

*கடனாக*
இருந்தாலும்சரி,
*அன்பாக* 
இருந்தாலும் சரி.

*திருப்பி*
*செலுத்தினால்தான்*
மதிப்பு...

உறவினர்களில்
யார்
முக்கியம்
என்பதை...
 
*உயிரற்ற*
பணமே
முடிவு செய்கிறது...

பணம்
கொடுத்துப்பார்.

உறவுகள் உன்னை 
*போற்றும்*.

கொடுத்த
பணத்தை
திரும்ப
கேட்டுப்பார்.

மண்ணை வாரி
*தூற்றும்*...

அறுந்து போன
செருப்புக்கு கூட,
வீட்டில்
ஒரு இடம்
*உண்டு*.

இறந்து போன
மனித உடலுக்கு,
வீட்டில்
ஒரு இடமும்
*இல்லை*...

இதுதான்
உண்மை.

இதுவே
வாழ்க்கை...

அன்புடன்
இனிய
காலை
வணக்கம்....

💐💐🙏🙏🌷🌷

Thursday, December 26, 2019

ஒன்றாம் எண்ணிற்கு சலாம்-

ஒன்றாம் எண்ணிற்கு சலாம்- விழியன்
_மழலைக் கதை ....

எண்களில் உலகத்தில் இரும எண்களின் நாட்டிற்குள் ஒன்பதாம் எண் சிக்கிக்கொண்டது. எண்களில் உலகில் 0-9 ஆகிய பத்து வகையான எண்கள் உலாவும். சின்ன பூஜ்ஜியமாக இருந்து மெல்ல மெல்ல பெரிய பூஜ்ஜியமாக வளரும். அதே போலவே ஒன்று, இரண்டு, மூன்று.. ஒன்பது வரையான எண்களும் வளரும். பிறக்கும் குழந்தைகள் எந்த எண்ணாக வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால் அங்கே எல்லோருக்கும் ஒரே மதிப்பு தான். அந்த உலகில் ஆங்காங்கே சில சின்ன நாடுகளும் இருந்தன. இரும எண் நாடு ஒன்று இருந்தது. அங்கே இரண்டு எண்கள் மட்டுமே பிறக்கும், நடக்கும், உயிர் வாழும். அவை பூஜ்ஜியமும் ஒன்றும் மட்டும் தான். மற்றவர்களுக்கு அங்கே இடமே இல்லை. வேறு எண்கள் அங்கே நுழைந்தார்கள் என்றால் காவலாளி பூஜ்ஜியங்கள் அவர்களை சிறை பிடித்து கை கால்களை உடைத்து நாட்டிற்கு வெளியே வீசிவிடுவார்கள்.

அந்த இரும எண்களின் நாட்டிற்குள் (Binary Numbers World) தான் ஒன்பதாம் எண் சிக்கிக்கொண்டது. தனக்கு நோவே என பெயர் சூட்டிக்கொண்டு இருந்தது. (போர்ச்சுகீஸ் மொழியில் நோவே என்றால் ஒன்பது). நோவே நிறைய உடற்பயிற்சி செய்து உடம்பினை கட்டுக்கோப்பாக வைத்திருந்தது. நீண்ட பயணம் மேற்கொள்ள வேண்டும் என்ற ஆசையில் காடுகளில் நடந்தும் ஓடியும் சென்றது. ஒரு ஆற்றுப் பாதையில் சென்று கொண்டிருந்த போது தவறி ஆற்றில் விழுந்துவிட்டது. நீந்தி மறு கரையில் ஏறிய போது அங்கே நறுமணம் கமழ்ந்தது. எங்கே அந்த மணம் வருகின்றது என வாசனையை பிடித்துச் சென்றால் ஓர் அழகிய பிருந்தாவனத்தினை அடைந்தது. அங்கிருந்து பார்த்த போது தான் இரும எண்களின் உலகத்திற்கு வந்துவிட்டது புரிந்தது.

இரும எண்களின் நாட்டினைப் பற்றி நிறைய கதைகளை நோவே கேட்டுள்ளது. வேறு எண்கள் சிக்கினால் அதோகதி தான் என்று சொல்லி இருக்கின்றார்கள். அந்த நாட்டுடன் என்னதான் சமாதானம் பேசினாலும் அவர்கள் அங்கிருந்து வர மறுக்கின்றார்கள். அவர்களுக்கும் ஒரு வித பயம் தான். எல்லோருமே எண்கள் தானே என்றாலும் கேட்கவில்லை. இதனை எல்லாம் நினைத்ததுமே நோவேயின் உடல் சூடானது. சுரம் அடிக்க ஆரம்பித்துவிட்டது. மறைவான ஒரு மரத்தில் இருந்து எப்படி அங்கிருந்து தப்பிப்பது என யோசித்துக்கொண்டு இருந்தது.

நான்கு ஒன்றுகள் தூரத்தில் வருவதினை பார்த்துவிட்டது நோவே. ஒரு மரத்தின் கீழே நின்றுகொண்டு இருந்தது. மரத்திற்கு மேலே ஏறுவது என்பது முடியாத காரியம். ஓடினால் அவ்வளவு தான். திடீரென ஒரு யோசனை பிறந்தது. சடாரென படுத்துக்கொண்டது. ஒன்பதில் இருக்கும் அந்த நீண்ட ஒன்றினை இலைகளில் மறைத்துக்கொண்டு வெறும் பூஜ்ஜியத்தினை மட்டுமே வெளியே காட்டியது. அருகில் சென்றால் தான் அது எண் ஒன்பது என்று தெரியும், கொஞ்சம் தள்ளி இருந்தால் பூஜ்ஜியம் போலத்தான் இருக்கும். சூச்சூ போவது போல பாவனை செய்தது. ஒரு பாட்டினை பாடிக்கொண்டு இருந்தது. நடந்து வந்த நான்கு ஒன்றுகளும் சிரித்தபடியே தங்களுக்குள் பேசியபடியே கடந்துவிட்டது. நோவேவிற்கு இப்போது தான் மூச்சே வந்தது.

எப்படியாவது தப்பிக்க வேண்டும். தூரத்தில் வானத்திலிருந்து புகை வந்துகொண்டு இருந்தது. அது எண்களில் ஆராய்ச்சிகூடம் என்பது நோவேவிற்கு புரிந்தது. ஆமாம் அவர்களின் உலகத்திலும் எண்களின் ஆராய்ச்சிகூடம் இருக்கின்றது, அங்கேயும் இதே போன்ற புகை வரும். அங்கே இருப்பவர்கள் தான் நாட்டிலேயே மிகவும் முதுமையானவர்கள் மற்றும் அறிவாளிகள். எண்களுக்கு வரும் பிரச்சனைகளை தீர்வுகளையும் அங்கே தான் ஆராய்ச்சி செய்து தீர்வுகளைக் கொடுப்பார்கள். சிலர் மேலும் புதிய எண்களைக் கண்டுபிடிக்கும் பணியிலும் இருந்தார்கள். அங்கே சென்றுவிட்டால் எப்படியும் காப்பாற்றப்படலாம் என்று நோவேவிற்கு தோன்றியது.

ஆராய்ச்சிக்கூடத்தினை நோக்கி ஊர்ந்து செல்ல ஆரம்பித்தது. சரியாக அப்போது எட்டு பூஜ்ஜியங்கள் சத்தமாக சிரித்தபடி கையில் கூரிய ஆயுதங்களுடன் நடந்து வந்தன. நோவே டகால் என அந்தர் பல்டி அடித்து தலைகீழாக நின்றுகொண்டு இருந்தது. ஒரு கட்டிடத்தின் ஓரத்தில் தலைகீழாக நின்றதால் ஒன்பதின்  முன்பகுதியான பூஜ்ஜிய பகுதியை மறைத்து நின்றது. ஆயுதங்களுடன் இருந்த பூஜ்ஜியங்கள் அதனை ஒன்று என நினைத்துக்கொண்டது. அருகே வரும்போது லொக் லொக் என இருமியதால் ஏதோ வயதான ஒன்றாம் எண் என நினைத்து கவனிக்காமல் சென்றன.

ஒருவழியாக அந்த ஆராய்ச்சி கூடத்தினை அடைந்தது. மெல்ல கதவினை திறந்து உள்ளே சென்றது. சென்றது நிறைய வயதான பூஜ்ஜியங்களும் ஒன்றாம் எண்களும் அங்கே இருந்ததன. “கனிவான எண்களே, நான் ஒன்பதாம் எண். என் பெயர் நோவே. இரும எண்களுக்கு தவறி வந்துவிட்டேன். என்னை காப்பாற்றுங்கள். நான் தவறி ஒரு ஆற்றில் விழுந்து இங்கே வந்துவிட்டேன். என்னை பத்திரமாக எங்கள் நாட்டிற்கு அனுப்புங்கள்” என்று மன்றாடியது. ஒரு வயதான பூஜ்ஜியம் நோவேயின் அருகே வந்து “எழுந்து இந்த படுக்கையில் படுத்துக்கொள். கொஞ்சம் ஆசுவாசப்படுத்திக்கொள்” என்றது. “நாங்கள் ஆலோசனை செய்கின்றோம்” என்றது.

நல்ல உணவிற்கு பிறகு சில மணி நேரம் உறங்கியது நோவே. எழுந்த போது அது தப்பிக்கு ஒரு திட்டம் காத்திருந்தது. தாடி வைத்திருந்த ஒன்றாம் எண் ஒன்று ஒரு கருப்பு போர்வையினை கொடுத்தது.” இதனை போர்த்திக்கொள், ஒன்றாம் எண் பூஜ்ஜியத்தை ஏந்திச் செல்வது போல இருக்கும். யாரும் ஒரு குழந்தையை பெரியவர் எடுத்துச் சென்றால் சீண்ட மாட்டார்கள். இங்கிருந்து கிழக்குப்பக்கம் நான்கு கி.மீட்டர் நடந்து சென்றால் ஒரு மலை வரும். நான்காம் மரத்தின் அருகே ஒரு பொந்து இருக்கும். அது ஒரு சுரங்கப்பாதையின் ஆரம்பம். சுரங்கப்பாதையில் 10 கி.மீட்டர் நடந்தால் உங்கள் உலகிற்கு சென்றுவிடலாம். ஆனால் வெளியே சென்றதும் இந்த பாதையை மறந்துவிடவும். ஆராய்ச்சியாளர்களுக்கான பிரத்யேக பாதை இது” என்று சொல்லி வழி அனுப்பியது.

அந்த ஒன்றாம் எண் சொன்னபடியே மலைக்கு அருகே அந்த பொந்து இருந்தது, அரை நாள் நடந்து தன் உலகினை அடைந்தது. தான் இரும எண்களின் உலகத்திற்கு சென்று வந்த கதையை எல்லா எண்களுக்கு கூறியது, எங்கே ஒன்றாம் எண்ணினை பார்த்தாலும் எழுந்து நின்று வணக்கம் தெரிவிக்க ஆரம்பித்தது.

நன்றி...

-விழியன்...

ஒன்றாம் எண்ணிற்கு சலாம்-

*ஒன்றாம் எண்ணிற்கு சலாம்- விழியன்*
_மழலைக் கதை வரிசை - 189_

எண்களில் உலகத்தில் இரும எண்களின் நாட்டிற்குள் ஒன்பதாம் எண் சிக்கிக்கொண்டது. எண்களில் உலகில் 0-9 ஆகிய பத்து வகையான எண்கள் உலாவும். சின்ன பூஜ்ஜியமாக இருந்து மெல்ல மெல்ல பெரிய பூஜ்ஜியமாக வளரும். அதே போலவே ஒன்று, இரண்டு, மூன்று.. ஒன்பது வரையான எண்களும் வளரும். பிறக்கும் குழந்தைகள் எந்த எண்ணாக வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால் அங்கே எல்லோருக்கும் ஒரே மதிப்பு தான். அந்த உலகில் ஆங்காங்கே சில சின்ன நாடுகளும் இருந்தன. இரும எண் நாடு ஒன்று இருந்தது. அங்கே இரண்டு எண்கள் மட்டுமே பிறக்கும், நடக்கும், உயிர் வாழும். அவை பூஜ்ஜியமும் ஒன்றும் மட்டும் தான். மற்றவர்களுக்கு அங்கே இடமே இல்லை. வேறு எண்கள் அங்கே நுழைந்தார்கள் என்றால் காவலாளி பூஜ்ஜியங்கள் அவர்களை சிறை பிடித்து கை கால்களை உடைத்து நாட்டிற்கு வெளியே வீசிவிடுவார்கள்.

அந்த இரும எண்களின் நாட்டிற்குள் (Binary Numbers World) தான் ஒன்பதாம் எண் சிக்கிக்கொண்டது. தனக்கு நோவே என பெயர் சூட்டிக்கொண்டு இருந்தது. (போர்ச்சுகீஸ் மொழியில் நோவே என்றால் ஒன்பது). நோவே நிறைய உடற்பயிற்சி செய்து உடம்பினை கட்டுக்கோப்பாக வைத்திருந்தது. நீண்ட பயணம் மேற்கொள்ள வேண்டும் என்ற ஆசையில் காடுகளில் நடந்தும் ஓடியும் சென்றது. ஒரு ஆற்றுப் பாதையில் சென்று கொண்டிருந்த போது தவறி ஆற்றில் விழுந்துவிட்டது. நீந்தி மறு கரையில் ஏறிய போது அங்கே நறுமணம் கமழ்ந்தது. எங்கே அந்த மணம் வருகின்றது என வாசனையை பிடித்துச் சென்றால் ஓர் அழகிய பிருந்தாவனத்தினை அடைந்தது. அங்கிருந்து பார்த்த போது தான் இரும எண்களின் உலகத்திற்கு வந்துவிட்டது புரிந்தது.

இரும எண்களின் நாட்டினைப் பற்றி நிறைய கதைகளை நோவே கேட்டுள்ளது. வேறு எண்கள் சிக்கினால் அதோகதி தான் என்று சொல்லி இருக்கின்றார்கள். அந்த நாட்டுடன் என்னதான் சமாதானம் பேசினாலும் அவர்கள் அங்கிருந்து வர மறுக்கின்றார்கள். அவர்களுக்கும் ஒரு வித பயம் தான். எல்லோருமே எண்கள் தானே என்றாலும் கேட்கவில்லை. இதனை எல்லாம் நினைத்ததுமே நோவேயின் உடல் சூடானது. சுரம் அடிக்க ஆரம்பித்துவிட்டது. மறைவான ஒரு மரத்தில் இருந்து எப்படி அங்கிருந்து தப்பிப்பது என யோசித்துக்கொண்டு இருந்தது.

நான்கு ஒன்றுகள் தூரத்தில் வருவதினை பார்த்துவிட்டது நோவே. ஒரு மரத்தின் கீழே நின்றுகொண்டு இருந்தது. மரத்திற்கு மேலே ஏறுவது என்பது முடியாத காரியம். ஓடினால் அவ்வளவு தான். திடீரென ஒரு யோசனை பிறந்தது. சடாரென படுத்துக்கொண்டது. ஒன்பதில் இருக்கும் அந்த நீண்ட ஒன்றினை இலைகளில் மறைத்துக்கொண்டு வெறும் பூஜ்ஜியத்தினை மட்டுமே வெளியே காட்டியது. அருகில் சென்றால் தான் அது எண் ஒன்பது என்று தெரியும், கொஞ்சம் தள்ளி இருந்தால் பூஜ்ஜியம் போலத்தான் இருக்கும். சூச்சூ போவது போல பாவனை செய்தது. ஒரு பாட்டினை பாடிக்கொண்டு இருந்தது. நடந்து வந்த நான்கு ஒன்றுகளும் சிரித்தபடியே தங்களுக்குள் பேசியபடியே கடந்துவிட்டது. நோவேவிற்கு இப்போது தான் மூச்சே வந்தது.

எப்படியாவது தப்பிக்க வேண்டும். தூரத்தில் வானத்திலிருந்து புகை வந்துகொண்டு இருந்தது. அது எண்களில் ஆராய்ச்சிகூடம் என்பது நோவேவிற்கு புரிந்தது. ஆமாம் அவர்களின் உலகத்திலும் எண்களின் ஆராய்ச்சிகூடம் இருக்கின்றது, அங்கேயும் இதே போன்ற புகை வரும். அங்கே இருப்பவர்கள் தான் நாட்டிலேயே மிகவும் முதுமையானவர்கள் மற்றும் அறிவாளிகள். எண்களுக்கு வரும் பிரச்சனைகளை தீர்வுகளையும் அங்கே தான் ஆராய்ச்சி செய்து தீர்வுகளைக் கொடுப்பார்கள். சிலர் மேலும் புதிய எண்களைக் கண்டுபிடிக்கும் பணியிலும் இருந்தார்கள். அங்கே சென்றுவிட்டால் எப்படியும் காப்பாற்றப்படலாம் என்று நோவேவிற்கு தோன்றியது.

ஆராய்ச்சிக்கூடத்தினை நோக்கி ஊர்ந்து செல்ல ஆரம்பித்தது. சரியாக அப்போது எட்டு பூஜ்ஜியங்கள் சத்தமாக சிரித்தபடி கையில் கூரிய ஆயுதங்களுடன் நடந்து வந்தன. நோவே டகால் என அந்தர் பல்டி அடித்து தலைகீழாக நின்றுகொண்டு இருந்தது. ஒரு கட்டிடத்தின் ஓரத்தில் தலைகீழாக நின்றதால் ஒன்பதின்  முன்பகுதியான பூஜ்ஜிய பகுதியை மறைத்து நின்றது. ஆயுதங்களுடன் இருந்த பூஜ்ஜியங்கள் அதனை ஒன்று என நினைத்துக்கொண்டது. அருகே வரும்போது லொக் லொக் என இருமியதால் ஏதோ வயதான ஒன்றாம் எண் என நினைத்து கவனிக்காமல் சென்றன.

ஒருவழியாக அந்த ஆராய்ச்சி கூடத்தினை அடைந்தது. மெல்ல கதவினை திறந்து உள்ளே சென்றது. சென்றது நிறைய வயதான பூஜ்ஜியங்களும் ஒன்றாம் எண்களும் அங்கே இருந்ததன. “கனிவான எண்களே, நான் ஒன்பதாம் எண். என் பெயர் நோவே. இரும எண்களுக்கு தவறி வந்துவிட்டேன். என்னை காப்பாற்றுங்கள். நான் தவறி ஒரு ஆற்றில் விழுந்து இங்கே வந்துவிட்டேன். என்னை பத்திரமாக எங்கள் நாட்டிற்கு அனுப்புங்கள்” என்று மன்றாடியது. ஒரு வயதான பூஜ்ஜியம் நோவேயின் அருகே வந்து “எழுந்து இந்த படுக்கையில் படுத்துக்கொள். கொஞ்சம் ஆசுவாசப்படுத்திக்கொள்” என்றது. “நாங்கள் ஆலோசனை செய்கின்றோம்” என்றது.

நல்ல உணவிற்கு பிறகு சில மணி நேரம் உறங்கியது நோவே. எழுந்த போது அது தப்பிக்கு ஒரு திட்டம் காத்திருந்தது. தாடி வைத்திருந்த ஒன்றாம் எண் ஒன்று ஒரு கருப்பு போர்வையினை கொடுத்தது.” இதனை போர்த்திக்கொள், ஒன்றாம் எண் பூஜ்ஜியத்தை ஏந்திச் செல்வது போல இருக்கும். யாரும் ஒரு குழந்தையை பெரியவர் எடுத்துச் சென்றால் சீண்ட மாட்டார்கள். இங்கிருந்து கிழக்குப்பக்கம் நான்கு கி.மீட்டர் நடந்து சென்றால் ஒரு மலை வரும். நான்காம் மரத்தின் அருகே ஒரு பொந்து இருக்கும். அது ஒரு சுரங்கப்பாதையின் ஆரம்பம். சுரங்கப்பாதையில் 10 கி.மீட்டர் நடந்தால் உங்கள் உலகிற்கு சென்றுவிடலாம். ஆனால் வெளியே சென்றதும் இந்த பாதையை மறந்துவிடவும். ஆராய்ச்சியாளர்களுக்கான பிரத்யேக பாதை இது” என்று சொல்லி வழி அனுப்பியது.

அந்த ஒன்றாம் எண் சொன்னபடியே மலைக்கு அருகே அந்த பொந்து இருந்தது, அரை நாள் நடந்து தன் உலகினை அடைந்தது. தான் இரும எண்களின் உலகத்திற்கு சென்று வந்த கதையை எல்லா எண்களுக்கு கூறியது, எங்கே ஒன்றாம் எண்ணினை பார்த்தாலும் எழுந்து நின்று வணக்கம் தெரிவிக்க ஆரம்பித்தது.

நன்றி...

-விழியன்...

Monday, December 23, 2019

புதிய பார்வை....புதிய கோணம்...

தனிமனிதவாழ்வில் துவங்கி,பொது வாழ்க்கை, குடும்பம், அரசியல், அலுவலகம் என மனித சமூகத்தின் அனைத்திலும் ஆளுமை செலுத்துகிற, ஆற்றல் கொண்ட,
ஓர் அற்புதபண்புதான்
'சகிப்பு தன்மை'.

சகிப்புத்தன்மையை
இழந்து விட்டால்,
நம் நிலை மாறிவிடும்.
வாழ்க்கைபோகும்
பாதையும் தவறாய் போய்விடும்.

எப்போது நாம் சகிப்புத்தன்மையை மேற்கொள்கின்றோமோ, அப்போதே வியக்கத்தக்க வகையிலான வாழ்க்கையை நோக்கி நாம் பயணிக்க துவங்கி விடுவோம்.

நமக்குள்ளே
'பதிலுக்கு பதில்'
என்ற உணர்வு
இயல்பாகவே இருக்கும்.

'அவன் பேசிவிட்டால்
நாமும் பேசவேண்டும்,
அவன் அடித்து விட்டால்
நாமும் அடிக்க வேண்டும்.
ஒருவர் நம்மிடம்
மரியாதைக்குறைவாக
நடந்து கொண்டால்,
நாமும் அவரிடம்அப்படியே
நடந்துகொள்ளவேண்டும்'
என்று நினைப்பதுதான்
பழிவாங்கும் தன்மை.

இந்த பழி வாங்கும் தன்மையை விட்டு விட்டால் அதுதான் 'சகிப்புத்தன்மை'.

அதே போல, மற்றவர்கள் எல்லா விதத்திலும் 'நமது விருப்பத்திற்கு ஏற்பவே நடந்து கொள்ள வேண்டும்' என்று நினைக்காமல், 'அவர்களுக்குரிய முறையில் அவர்கள் இருப்பார்கள்'
என்று ஏற்று கொண்டால்
அது'சகிப்புத்தன்மை'.

ஒரு மனிதன் சக மனிதரை மதித்தல், அவரின் சுதந்திரத்தை மதித்தல்,  அவர்களின் உரிமைகளில் தலையிடாமல் இருத்தல்
'சகிப்புத்தன்மையாகும்'

ஒரு கருத்துக்கு எதிர்க்கருத்தை வழங்கும்போது தனி மனிதனின் மானத்துக்கு மதிப்புக்கொடுக்க வேண்டும்.

கருத்து வேறுபாடுகள் எழுதல்' என்பது பகுத்தறிவு உலகில் சகஜமான ஒன்று. 

ஆனால் வேறுபாடுகளை களைவதற்கான வழி 'அறவழியாக' இருக்க வேண்டும்.

எவரிடம் விமர்சனங்களை தாங்கிக் கொள்ளும் சக்தி இருக்கிறதோ, அவரே சகிப்புத்தன்மையுடையவர்.

மனிதகுலம் வாழ்வதற்கு தேவையான அன்பு, பரிவு, ஒற்றுமை என, பல உயர்ந்த உணர்வுகளுக்கு அடிப்படையாக, சகிப்புத் தன்மை நம்மிடையே
இருப்பது அவசியம்.

தன் தவறுகளை பிறர் சுட்டிக் காட்டும் போது, பொறுமையுடனும் பகுத்தறிவுடனும் அதை சரிசெய்ய முயல வேண்டும்.

இது இன்றைக்கு சமுதாயத்தில் அருகி வருகிறது.

புத்தர், மகாவீரர் போன்ற சகிப்புத்தன்மை கொண்ட ஞானிகளை தந்த நம் நாட்டுக்கு, சகிப்புத்தன்மை என்ற மேலான நெறியை உலக அளவில் எடுத்து செல்லும் தகுதி அதிகமாகவே உள்ளது.

'இன்னா செய்யாமை', என்ற திருவள்ளுவரின் அதிகாரத்துக்கு விளக்கம்
கொடுத்துக்கொண்டே, ஒருவரையொருவர் வாயாரத்திட்டிவரும் மனிதர்களை,
நம் சமுதாயம்
கொண்டிருக்கிறது.

இப்போதெல்லாம்
படித்தவர்களுக்கு கூட
'சகிப்புத் தன்மை'
இருப்பதில்லை.

வருங்கால தலைமுறையின் வாழ்வு இனிதாக அமைய, சகிப்புத்தன்மை என்னும் வேர்களை, நம்மை
சுற்றியுள்ள மனிதர்களின் மனதில், ஆழமாக ஊன்ற வேண்டியது, நமது கடமை.

சகிப்புத் தன்மை அனைவரிடத்திலும் இருக்கும்பட்சத்தில்,
உலகம் முழுவதும்
'அமைதி பூங்காவாக'
திகழும்.

- தினமணி -

வாங்க
சகிப்புத் தன்மையை
வளர்ப்போம்
வளமாய்
வாழ்வோம்...

அன்புடன்
இனிய
காலை
வணக்கம்.

புதிய பார்வை...புதிய கோணம்...

🍁🍁புதிய பார்வை🍁🍁

"நீங்கள்
அழுத்தத்தில்
இருக்கிறீர்களா ?

அப்போது கடந்த
காலத்திலேயே
வாழ்ந்து கொண்டு
இருக்கிறீர்கள்
என்று பொருள்"...

"நீங்கள்
பயத்துடன்,
பதற்றத்துடன்
இருக்கிறீர்களா ?

எதிர்காலத்தை
எண்ணி,
கவலையுடன்
இருக்கிறீர்கள்
என்று பொருள்"...

"முழுமையான
புரிதலான
உணர்வுடன்,
முதிர்ச்சியான
அறிவின் துணை
கொண்டு,
சூழலை
சிறப்புடன்
கையாளும்
பக்குவத்தில்,
இருக்கிறீர்களா ?

நீங்கள் நிகழ்
காலத்தில்,
அற்புதமான
மகிழ்ச்சியுடன்,
ஆனந்தமாக
வாழ்கிறீர்கள்
என்பதே உண்மை"...

- கனகா -

வாங்க
நிகழ்காலத்தில்
நிஞமாய்
வாழலாம்...

அன்புடன்
இனிய
காலை
வணக்கம்.

கணித மேதை இராமானுஜம்...

ஈரோட்டில் பிறந்த கணிதமேதை இராமானுஜம் பிறந்தநாளான இன்று அவரைப் பெருமிதத்துடன் நினைவு கூர்வோமே.....

  ( அவரைப் பற்றிய
வாழ்க்கைக் குறிப்புடன்
நம் மகிழ்வான
வாழ்க்கைக்கு உரிய
கணிதக் குறிப்பும்
உங்களுக்காக.....)

*இன்றைய நாளில் பிறந்தவர்...*
(22-திசம்பர்)
*இராமானுஜன்*.....

🌟 இந்திய கணித மேதை சீனிவாச இராமானுஜன் 1887ஆம் ஆண்டு டிசம்பர் 22ஆம் தேதி தமிழ்நாட்டிலுள்ள ஈரோடு மாவட்டத்தில் பிறந்தார். இவருடைய பிறந்த நாள் தேசிய கணித தினமாக இந்தியாவில் கொண்டாடப்படுகிறது.

🌟 இவருடைய வாழ்வில் யு ளுலnழிளளை ழக நுடநஅநவெயசல சுநளரடவள in Pரசந யனெ யுppடநைன ஆயவாநஅயவiஉள என்ற புத்தகம் ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தியது. இந்த புத்தகமே இவருக்கு கணிதத்தில் இருந்த ஆர்வத்தை அதிகப்படுத்தியது.

🌟 இவர் தன்னுடைய 12வது வயதில் லோனி எழுதிய முக்கோணவியல் (வுசபைழழெஅநவசல) என்ற பாட புத்தகத்தை கல்லூரியில் இளங்கலை வகுப்பில் படித்துக் கொண்டிருந்த தன் பக்கத்து வீட்டு மாணவனிடமிருந்து கடன் வாங்கி படிக்கத் தொடங்கினார். அப்பாட புத்தகத்தை ஒரே வாசிப்பில் முடித்ததோடு மட்டுமல்லாமல் அதிலிருந்த எல்லா கணக்குகளையும் தானே போட்டு முடித்து விட்டார்.

🌟 இவர் மனதிலும்இ கையிலும் இருந்ததெல்லாம் விந்தைச் சதுரங்கள் (ஆயபiஉ ளுஙரயசநள)இ தொடர் பின்னம் (ஊழவெiரெநன குசயஉவழைளெ)இ பகா எண்களும் கலப்பு எண்களும் (Pசiஅந யனெ ஊழஅpழளவைந ரேஅடிநசள)இ எண் பிரிவினைகள் (ரேஅடிநச Pயசவவைழைளெ)இ நீள்வட்டத் தொகையீடுகள் (நுடடipவiஉ ஐவெநபசயடள)இ மிகைப்பெருக்கத் தொடர் (hலிநசபநழஅநவசiஉ ளநசநைள) மற்றும் உயர்தர கணிதப்பொருள்களுமாகும்.

🌟 இராமானுஜன் ஆய்வுகளில் தியரி ஆஃப் ஈகுவேசன்ஸ்இ தியரி ஆஃப் நம்பர்ஸ்இ டெஃபினிட் இன்ட்டக்ரல்ஸ்இ தியரி ஆஃப் பார்டிஷன்ஸ்இ எலிப்டிக் ஃபங்ஷன்ஸ் அண்ட் கண்டினியூடு ஃப்ராக்சன்ஸ் எனும் நிலைப்பாடுகள் மிகச் சிறந்தவைகளாகக் கருதப்படுகின்றன.

🌟 1914ஆம் ஆண்டுக்கும்இ 1918ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலகட்டத்தில் இவர் 3000க்கும் அதிகமான புதுக் கணிதத் தேற்றங்களில் கண்டுபிடித்த உண்மைகள் இன்று இயற்பியல் துறை முதல் மின்தொடர்புப் பொறியியல் துறை வரைஇ பல துறை உயர்மட்டங்களில் அடிப்படையாக பயன்படுத்தப்பட்டு வருகின்றது.

🌟 உலகத்தை வியக்கச் செய்த ஒப்பற்ற பெரும் கணித மேதையாக திகழ்ந்த இவர் 1920ஆம் ஆண்டு மறைந்தார்.