Tuesday, September 28, 2021

புதிய பார்வை..புதிய கோணம்..

🍁  புதிய பார்வை  🍁

  ஒருவர்
  கேட்கும் 
  பத்து
  உதவிகளை
  தொடர்ந்து
  செய்

  பதினோராவது
  உதவியை
  மறுத்து
  பார்

  செய்த பத்து
  உதவியையும்
  மறந்து

  மறுத்த
  நிகழ்வை
  மட்டுமே அவர்
  மனதில் தாங்கி
  கொண்டிருப்பார்

இது
தமிழ் வாணன்
அவர்களின்
கூற்று

  இது
  தான்
  உலகம்

  இது
  தான்
  மனித 
  இயல்பு

  இதுதான்
  யதார்த்தம்

  இருப்பினும்

  நமக்கும்
  அதைப்போல
  சூழ்நிலைகள்
  வரலாம்

  அந்த
  நேரங்களில்

  கருத்து
  வேறுபாடு
  கொண்டு
  நாம் சலித்து
  கொள்ளாமல்

  அவர்கள்
  நமக்கு செய்த
  நன்மைகளை
  நெஞ்சத்தில்
  நிறுத்தி

  ஒரு
  நிமிடம்
  பொறுத்து
  போனால்

  ஏற்படும்
  நன்மைகள்
  ஏராளம்

இது
லேனா
தமிழ் வாணன்
அவர்களின்
கருத்து

  நன்றி 
  தெரிவிக்கும் 
  மக்களின்
  வாழ்க்கை 
  நிலையாகவும் 
  வலிமையாகவும் 
  இருக்கும்

  மேலும்
  நன்றி 
  தெரிவித்து 
  வாழ்பவர்கள் 
  மிகவும் 
  ஆனந்தமாய் 
  இருப்பார்கள் 

என்கிறது  
மெக்சிகன் 
பல்கலைக்கழக 
ஆய்வு முடிவுகள்

இன்றைய
நடைமுறையில்
இவைகளை
கடைபிடிப்பது
கண்டிப்பாக
கடினம்தான்

இருப்பினும்

  நாம்
  செய்த
  உதவிகளை
  மறந்த அவர்
  
  அவராகவே
  இருந்து விட்டு
  போகட்டுமே

  அவர்
  செய்த
  உதவிகளை

  நம் 
  மனதில் நாம் 
  என்றைக்கும்
  நிறுத்துவோமே

  நன்றி 
  சொல்லும் 
  நெஞ்சம் 
  நமக்கு
  இருப்பின்

  நான்கு 
  திசையிலும் 
  நன்மைகள்
  நமக்கு
  விளையுமே

முயற்சிகள்
செய்து
பார்க்கலாம்
வாங்க

புதிய
நம்பிக்கை
கீற்றுக்களுடன்

அன்புடன்
காலை
வணக்கம்

🎉🎉🎉🎉🎉🎉🎉

நன்றி முனைவர். சுந்தர மூர்த்தி

Saturday, September 18, 2021

தலைக்குள் ஓர் உலகம்- சுஜாதா ( நிலை.8 விரிவானம்)

சுஜாதா எழுதிய கட்டுரை தலைக்குள் ஓர் உலகம். வலையொலி ஓசை உங்கள் காதருகில் பேசுவது சேலம்.ஆ.சிவா...
https://anchor.fm/sivaramakrishnan7/episodes/20-----8------e17i84i
கேட்டு மகிழுங்கள்...


Friday, September 17, 2021

பள்ளிக்கு செல்லாமல்...CBSC க்கு இணையான படிப்பு...

NIOS ஓர் அறிமுகம் 

என்னுடைய மூத்த மகன் மதி, 2018 - ல் பத்தாம் வகுப்பு தேர்வு பெற்றான். சில காரணங்களினால் அவனால் 11 - ம் வகுப்பை  பள்ளியில் தொடர முடியவில்லை. மாற்று வழி என்னவென்று யோசித்துக் கொண்டிருந்த சமயம். நம் வீட்டுத் தலைவர் தான் "Alternative education, Home schooling" அப்படின்னு நிறைய படிக்கிறார் இல்லையா, அதனால், "Home schooling பண்ண சொன்னால் என்ன!" என்ற ஒரு சிறு யோசனை தான் இன்று மதி யை NIOS - ல் பன்னிரெண்டாம் வகுப்பை முடிக்க செய்திருக்கிறது.

NIOS என்றால் என்னவென்று தெரியாதவர்களுக்கு அதைப்பற்றி முதலில் சொல்லிவிடுகிறேன். NIOS - National Institute of Open Schooling, என்பது CBSE, ISC, State Syllabus போன்றதொரு அமைப்பு. இது இந்திய மத்திய அரசால் நடத்தப் படுகிறது. இதன் பாடத்திட்டம் CBSE யோடு  ஒப்பிட முடியும்.  இதில் படிக்கும் மாணவர்கள் பல பயன்களை பெற முடியும். உதாரணமாக, மதி க்கு அறிவியல் என்றாலே ஒத்து வராது. மேலும் அவனுக்கு சட்டம் படிக்க வேண்டுமென்பது இப்போதைய குறிக்கோள். கணக்கு மற்றும் வரலாறு ஆகியவை மிகவும் பிடித்த பாடங்கள். இவை எல்லாம் சேர்ந்த ஓர் பிரிவு எந்தவொரு பள்ளியிலும் கிடைக்கவில்லை. இப்பொழுதிருக்கும் பள்ளியில் ஏதாவது ஓர் பிரிவை தேர்ந்தெடுத்தால், அதில் அவனுக்கு பிடித்த பாடங்களை விட பிடிக்காத பாடங்களே அதிகம். NIOS யை தேர்ந்தெடுக்கும் மாணவர்கள் தங்களுக்கு விருப்பமான பாடங்களை, NIOS - ன் பாடப்பட்டியலில் இருந்து தேர்வு செய்து கொள்ளலாம். அவர்களின் பாடப்பட்டியலை இங்கு சென்று காணலாம். https://www.nios.ac.in/departmentsunits/academic/senior-secondary-course-equivalent-to-class-xii.aspx

எப்படியும் பன்னிரெண்டாவது படிக்கும் நம் பிள்ளைகளை டியூஷன் ல் சேர்ப்போம். பள்ளிக்கும் சென்று வந்து பின்பு டியூசன் க்கும் சென்று வர நம் பிள்ளைகள் எவ்வளவு கஷ்டப்படுகிறார்கள் என்பதை நாம் அறிவோம். NIOS - ல் சேர்த்தால் டியூசன் மட்டும் போய் வந்தால் போதும், பள்ளிக்கு போக தேவை இல்லையே என்ற சந்தோஷம் பெற்றோர்களாகிய எங்களுக்கு இல்லாமல் இல்லை. மேலும் NIOS, நம் நகரங்களிலேயே சில பள்ளிகளின் பட்டியலை, வார கடைசி நாட்களில் சென்று நம் சந்தேகங்களை தீர்த்துக் கொள்ள, நமக்கு அளிக்கிறது. அதிலிருந்து நமக்கு வசதியான பள்ளியை நாம் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். அங்கு சென்று practical classes ஐயும் attend செய்து கொள்ளலாம். 

மதி இம்முறையை தேர்ந்தெடுத்ததினால், பள்ளியில் படிக்கும் பாடங்கள் அல்லாமல் அவனுக்கு பிடித்தமான பாடங்களில் சில "Certification" ஐயும் முடிக்க முடிந்தது. அது கல்லூரியில் சேர்வதற்கான நேர்க்காணலில் மிகவும் பயனுள்ளதாய் இருந்தது. 

இம்முறையில் இன்னுமொரு சிறப்பு என்னவென்றால், NIOS குழுமம் வருடத்திற்கு அக்டோபர், ஏப்ரல் என இரண்டு முறை பரீட்சையை நடத்துகிறது. ஆகையால், நாம் நம் பாடங்களை பிரித்தும் எழுதிக் கொள்ளலாம். மதி, 3 பாடங்களை அக்டோபரிலும், 2 பாடங்களை ஏப்ரலிலும் எழுதி 80% உடன் தேர்ச்சி பெற்றிருக்கிறான். 

எல்லா மாற்று முறைக்கும் நன்மை, தீமை ஆகிய இரண்டும் இருக்கும். அதை போலத்தான் இம்முறைக்கும் சில எதிர்மறைகளும் இருக்கின்றன. பிள்ளைகள் தங்களுடைய நண்பர்களுடனான நேரத்தை அதிகம் இழக்கிறார்கள். மேலும் மதி, அவனுடைய vocabulary ஐ இழந்து வருவதாக மிகவும் வருத்தமடைந்தான். சில கல்லூரிகள் NIOS ல் படித்திருந்தால் admission கொடுக்க தயங்குகிறார்கள். மத்திய அரசின் பாடத்திட்டத்திற்கு ஏன் இந்த தயக்கம் என்று தான் புரியவில்லை. ஆனால் பயன்களுடன் ஒப்பிடும் பொழுது, இது பரவாயில்லை என்றே தோன்றியது. ஒன்றை பெற மற்றொன்றை சில நேரங்களில் இழந்து தானே ஆகவேண்டும். 

இன்று மதி, இந்தியாவின் top 10 ன் ஒன்றான, புகழ் பெற்ற கல்லூரி ஒன்றில் சட்டம் படிக்க தேர்வு செய்யப்பட்டிருக்கிறான். இப்பொழுதிருக்கும் பள்ளிக் கல்விக்கு மாற்றுமுறையில் செல்கிறோமோ என முதலில் மனதில் பயம் இருந்தது. ஆனால் எங்களின் ஊக்கமும் மதியின் உழைப்பும், இம்முறையை தேர்ந்தெடுத்ததில் வெற்றி பெற செய்திருக்கிறது. 

இப்பதிவு கண்டிப்பாக எங்களை போன்ற சில பெற்றோர்களுக்கு உதவியாக இருக்கும் என்ற நம்பிக்கையில் பதிவிடுகிறேன். 

NIOS - ன் link https://www.nios.ac.in/default.aspx 
தேவை எனில் மேற்கூறிய சுட்டியை பயன்படுத்தி விவரங்களை தெரிந்து கொள்ளலாம். 

பி. கு. : சொல்ல மறந்துவிட்டேன். மதி பன்னிரெண்டாவது படிக்க ஆன செலவு 1700/- ரூபாய் மற்றும் ஒவ்வொரு பாடத்திற்கான தேர்வுக் கட்டணம் தலா 250 ரூபாய். இந்த 1700 ரூபாயில் புத்தக செலவும் அடக்கம். 

படத்தில் - மதி.

Wednesday, September 08, 2021

ஆசிரியர் இன்றைய நிலை...?

*தினமணியின் தலையங்கம்...*

*ஆசிரியர்கள் அச்சம் தவிருமா?*

முன்பொருகாலத்தில் ஆசிரியர்கள் மீது மாணவர்களுக்குப் பக்தி, மரியாதை, பயம் முதலியன மேலோங்கிக் காணப்பட்டன. ஆசிரியர்களை வழிகாட்டிகளாகவும் முன்மாதிரிகளாகவும் மாணவர்கள் எண்ணிய காலம் தற்போது மாறிப் போய்விட்டதாகவே படுகிறது.

தொடக்கக்கல்வி முதல் கல்லூரிக்கல்வி வரை பணியாற்றும் ஆசிரியப் பெருமக்கள் அண்மைக்காலமாக மாணவ-மாணவிகளுக்கு அஞ்சும் துர்பாக்கிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

கண்ணுக்குத் தெரிந்து தவறுகள் செய்யும் மாணவர்களை நேரடியாகக் கூப்பிட்டுக் கண்டிக்க முடியவில்லை. அப்படியே மாணவர்களின் நலன்கருதி கண்டிப்பில் ஈடுபடும் ஆசிரியர்களின் நிகழ்கால வாழ்வு அதோகதி நிலைக்குத் தள்ளப்பட்டு விடுகிறது. நான்காம் வகுப்பே படிக்கும் மாணவிக்குக்கூட இன்று கோபம் பொத்துக்கொண்டு வந்துவிடுகிறது.

ஆசிரியர்கள் தம் சொல்லாலும் செயலாலும் மாணவர்களுக்கு உடல் மற்றும் மன ரீதியாக எப்பொழுதிலும் எத்தகைய வழியிலும் துன்பம் தரக்கூடாது என்று இக்கட்டாயக் கல்வி உரிமைச்சட்டம் இரும்புக்கரம் கொண்டு வலியுறுத்துகின்றது. இதன் விளைவு என்ன தெரியுமா?

இளைய பாரதமாகத் திகழும் மாணவ சமுதாயம் திசைமாறிச் செல்வதைத் தடுக்க வழியின்றி ஆசிரியர்கள் கைகளைப் பிசைந்துகொண்டு உணர்வின்றி வெறுமனே கூலிக்கு மாரடிக்கும் கூட்டமாக மாறிப்போய்விட்டனர்.நிதானம் தவறி வெற்று உணர்ச்சிகளுக்கு அடிமையாகி தம் இன்னுயிரைப்பற்றிக் கிஞ்சித்தும் கவலைப்படாமல் தம்மை மாய்த்துக்கொள்ள நினைக்கும் மாணவச்சமூகத்தைத் திருத்தி நல்வழிக்காட்டுவது ஆசிரியர்களின்றி வேறு யார்?

அச்சு,காட்சி ஊடகங்கள்,வளர்ந்துவரும் நவீனத் தொழில்நுட்பங்களான செல்பேசிகள்,இணையங்கள்,தெருவெங்கும் திறந்துகிடக்கும் மதுபானக்கடைகள்,மலிவான போதைப்பொருள்கள்,நலிவடைந்துபோன மனித மதிப்புகள்,அதிநுகர்வுக் கலாச்சார நோக்குகள் மற்றும் போக்குகள் போன்றவை பிஞ்சு உள்ளங்களைப் பெருமளவில் நஞ்சாக்கி வருவது கண்கூடு.

மேலும்,உடல் கவர்ச்சி மற்றும் எதிர்பால் ஈர்ப்புக் காரணமாகப் பதின்பருவ வயதினரிடையே இயல்பாக எழும் அன்பொழுக்கம் தவறாகத் திரிந்து காதலெனக் கூறப்பட்டு வகுப்பறைக்குள்ளும் வெளியேயும் சொல்ல நா கூசுமளவிற்குத் தகாத முறைகளில் நடைபெற்று வருவதை ஆசிரியர்கள் கண்டும் காணாமலும் ஒதுங்கிச்செல்லவே முற்படுகின்றனர்.இந்த இழிநிலைக்குக் காரணம் எது?

மாணவர்களுக்கு இரண்டாம் பெற்றோராக விளங்கும் ஆசிரியரின் கைக்கு விலங்கையும் வாய்க்குப் பூட்டையும் போடும் சட்டமா? பெற்றோரின் மாறிப்போன மனப்போக்கா? சமுதாயத்தின் ஒருதலைப்பட்சமான குறுகிய பார்வையா? பரபரப்பையும் விறுவிறுப்பையும் மட்டுமே குறிக்கோளாகக்கொண்டு செயல்படும் ஊடகங்களின் சமூக அக்கறையின்மையா? மாணவரிடையே மங்கிப்போன குருபக்தியா? இவ்வாறு ஒரு பெரும்விவாதமே நிகழ்த்தவியலும்.

தப்பித்தவறி தாய் உள்ளத்துடன் குடும்பநிலை மற்றும் வருங்காலம் குறித்து நல்லறிவு புகட்டத் துணியும் ஆசிரிய,ஆசிரியைகளுக்கு மிஞ்சுவது மிரட்டல்கள் மட்டுமே. ஆம். காதல்வயப்பட்ட அப்பாவிப் பள்ளிச்சிறுமி வெளிப்படையாகவே ஆசிரியர்கள்மீது அவதூறுகளைப் பரப்பி அவர்கள் வாழ்க்கையையே நாசப்படுத்திவிடும் கொடுமையை என்னவென்பது?

ஒருசார்பான தீர்ப்பினாலும் முடிவினாலும் அவ்வாசிரியரின் நல்லதோர் குடும்பம் வீண்பழியால் சிதைந்து சின்னாபின்னமாவது என்பது வெளிச்சத்திற்கு வராத பேருண்மையாகும்.இத்தகைய குரலற்றவர்களின் குரலைச் சற்றேனும் காதுகொடுத்து கேட்க இச்சமூகம் ஏனோ முன்வருவதில்லை.இருதரப்பு நியாயங்களை இனியாவது செவிமடுக்க முன்வருதல் எல்லோருக்கும் நல்லது.

அதுபோல,தாம் பணியாற்றும் பள்ளியை முழுத் தேர்ச்சி பெறவைக்கவும், தேர்ச்சிக்குரிய குறைந்த மதிப்பெண்கள் அடைவை எட்டாத மாணவ, மாணவியர்மீது தனிக்கவனம் செலுத்தி,சிறப்பு வகுப்புகள் நடத்தித் தேர்ச்சியுற வைக்கவும் முயலும் ஆற்றல்மிக்க ஆசிரிய, ஆசிரியைகள் படும்பாடுகள் சொல்லிமாளாதவை. மென்மையாகக்கூட மாணவ, மாணவிகளைக் கண்டிக்கவோ, தண்டிக்கவோ இயலவில்லை. ஒருபக்கம் அரசு மற்றும் அதிகாரிகளின் கெடுபிடிகள் மற்றும் கிடுக்கிப்பிடிகள். மறுபக்கம் சொல்பேச்சுக்கேளாத அடங்காப்பிள்ளைகள். இதைத்தவிர, வேறொருபக்கம் நன்குத் திட்டமிடப்பட்டு வேலைக்கு உலைவைக்கும் அச்சுறுத்தல்கள் மற்றும் அவப்பெயர்கள். அதிகம் போனால் பளார் அறைகள், கத்திக்குத்துகள், பாலியல் வன்கொடுமைப் புனைவுகள் எனப் பட்டியல் நீண்டுகொண்டே போகும்.

தவிர, அண்மைக்காலமாக மாணவ, மாணவியரிடையே சில விரும்பத்தகாத நடவடிக்கைகள் பெருகிக் கிடப்பதை நன்கு அறிய முடிகின்றது. மேலும் சமூகத் தீங்குமிக்கப் பல்வேறு தகாத நடவடிக்கைகளும் மலிந்துள்ளன. கற்றல்-கற்பித்தல் நிகழ்வுகளின்போதே தவறு செய்யும் மாணவனைக்கண்டு உண்மையில் ஆசிரியர்கள் கண்டிக்கத் திராணியின்றி அஞ்சி வருந்தும் அவலநிலைதான் எதிர்காலச் சிற்பிகளை உருவாக்கும் வகுப்பறை நடப்பாக இருக்கின்றது.

தமிழகத்தின் ஒட்டுமொத்த வகுப்பறைகளும் மாணாக்கர்களும் இவ்வாறு உள்ளனர் என்று பொதுவாகக் குற்றம் சாட்டுவது இங்கு நோக்கமல்ல. நல்ல நெல்மணிகளாய் மாணவக் கண்மணிகள் பலர் பல்வேறிடங்களில் அறியக்கிடைக்கின்றனர் என்பது மறுப்பதற்கில்லை. எனினும், பதர்கள், முட்செடிகள், நச்சுக்களைகள் போலுள்ள தீயோரை அடையாளம் காட்டுவதென்பது சமுதாயக் கடமையாகும்.

திசைமாறிப் பயணித்துக்கொண்டிருக்கும் மாணவ சமுதாயத்தை மீளவும் நல்வழிக்குக் கொணர பெற்றோர், சமுதாயம், அரசாங்கம், ஊடகங்கள் ஆகியவை ஆசிரியர்களுடன் கைகோர்ப்பது சாலச்சிறந்தது. ஆசிரிய சமுதாயத்தைத் தவறாகச் சித்தரித்து கேலி,கிண்டல் செய்து இழிவாகக் கருதும் சமுதாய பொதுமனநிலை நிச்சயம் மாற்றம்பெற வைக்கவேண்டியது. அதற்கு ஆசிரியரின் தனிப்பட்ட நல்லொழுக்கப்பண்பும் மட்டுமல்லாது காலந்தோறும் சமுதாயத்திற்கு உதவக்கூடியவகையில் அமைந்த விழுமியகுணங்களும் முன்மாதிரி நடத்தைகளும் இன்றியமையாதவை.

ஆசிரியர்-மாணவர் உறவென்பது ஆண்டான்-அடிமை உறவல்ல.அதுவொரு நல்ல கருத்துப் பரிமாற்றம் உள்ளடக்கிய நட்புறவு.அதைப் போற்றிப் பேணிக்காத்தல் என்பது இருவரின் கடமையாகும். அப்போதுதான் வலியின்றிச் சுதந்திரமாக கல்வி மலரும். நாடும் நலமுடனும் வளமுடனும் ஒளிவீசித் திகழும்.

*நன்றி : தினமணி*

படித்ததில் பிடித்தது...

Monday, September 06, 2021

ஆசிரியர் தின சிறப்பு நடனம்..

ஆசிரியர் தினத்தை முன்னிட்டு
ஆசிரியர்களின் தியாகத்தை போற்றும் விதமாகவும், அவர்களின் அர்பணிப்பை சிறப்பிக்கும்  வகையில் சிறப்பு நடனம் அமைத்துள்ளோம். அனைவரும் கண்டு களித்து
ஆசிரியர்களை மதித்து..வாழ்வில் முன்னேறுவோமாக!   ...
காணொளியை கண்டு மகிழ்ந்த பின் மறக்காமல் Subscribe செய்து bell buttenயை அழுத்தி all யை செலக்ட் செய்ய அன்போடு வேண்டுகிறேன்..

மிக்க பேரன்போடு...
கனவு ஆசிரியர்
சேலம்.ஆ.சிவா

ஆசிரியர்தின சிறப்பு நடனத்தைக் காண blue லிங்கை தொடவும்....
https://youtu.be/sMH8H4tBn14