Showing posts with label மாணவர்பளுக்கு. Show all posts
Showing posts with label மாணவர்பளுக்கு. Show all posts

Tuesday, November 23, 2021

மெல்ல...கொல்லும்...உணவுமுறை...

#மெல்லஅழிந்த_இயற்கைஉணவுகள்..!!

ஆப்பிள் இன்று இந்திய சந்தையினை வியாபித்து நின்றாலும், சில ஆலயங்களின் பிரசாதம் என்ற அளவுக்கு வந்துவிட்டாலும் அப்பழம் உடலுக்கு நல்லதா என்றால் இல்லை..

இறைவன் சில விஷயங்களை மிக அழகாக செய்திருக்கின்றான்... குளிர் பிரதேசத்தில் சக்தி கொடுக்கும் காய்கனிகள், பாலை நிலத்தில் வெப்ப நிலத்தில் சக்தி கொடுப்பவை என அந்தந்த சூழலுக்கு ஏற்ப படைத்திருக்கின்றான்..

தமிழ்நாட்டு பனை கொடுக்கும் பதனீர் அப்படியானது, அது உடலுக்கு குளிர்ச்சி. இங்கு விளையும் அரிசி முதல் பயிர்வரை உடலுக்கு ஏற்றது..

அரேபிய பேரீட்சம்பழம் அந்த சூழலுக்கு ஏற்றது..
ஒட்டகங்கள் அங்கு தாக்குபிடிக்க படைக்கபட்டிருப்பது போல அங்குவாழும் மனிதருக்கானது அந்த கனி.

ஆப்பிள் உடலுக்கு சூடு கொடுக்கும் பழம், குளிர் பிரதேசத்தில் அது விளையும் குளிர்பிரதேச மக்களுக்கான பழம் அது..

மா பலா வாழை என தனக்கு சரியான பழத்தை இப்பூமி இங்கு விளைவித்தது..

இங்கு வெள்ளையன் 
வரும்வரை எல்லாம் சரியாக இருந்தது... சூடான பூமியில் மேலும் சூடேற்றி உஷ்ண கோளாரை உருவாக்கும் பழமோ உணவோ இங்கு இல்லை.

வெள்ளையன் மிளகை தேடித்தான் வந்தான்...

 வந்தவன் மிளகை வாங்கிவிட்டு சத்தற்றதும் நற்காரம் இல்லாததுமான மிளகாய் வற்றலை விட்டுவிட்டு சென்றான்... அது தென் அமெரிக்காவில் இருந்து வந்தது..

தக்காளியும் உருளையும் அப்படி வந்தது...

 புகையிலையும் அப்படி வந்ததே.

இங்கு காரத்துக்கு நல்லமிளகு பயன்படுத்தும் முறையே இருந்தது.

 உண்டபின் வெற்றிலையோடு மிளகும் பாக்கும் சுண்ணாம்பும் ஏலமும் வைத்தே தாம்பூலம் தரிக்கும் பழக்கம் இருந்தது.

வெள்ளையன் சமையலுக்கு வற்றலை கொடுத்தான், 
வெற்றிலைக்கு பாக்கை கொடுத்தான், மிளகை அவன் கொண்டு சென்றான்.

கருப்பட்டியும் வெல்லமும் இங்கு இனிப்புக்கான பொருளாய் இருந்தன, அதில் சீனியினை திணித்தான் , கருப்பட்டி சந்தை மெல்ல சுருங்கியது.

கள் இருந்த இடத்தை தன் நாட்டு ஒயினாலும் இன்னும் எதெல்லாமோ கொண்டு நிரப்பினான்.

தேங்காய் இருந்த 
இடத்தை எதுவெல்லாமோ பிடித்தது, தேங்காய் கொடுக்கும் ஆரோக்கியம் கொஞ்ச நஞ்சமல்ல‌

மிளகு, அரிசி, கருப்பட்டி, பயிர் என்றிருந்த தமிழர் உணவில் புகையிலை, சீனி, மிளகாய் என எதையெல்லாமோ திணித்தான் வெளிநாட்டு பரதேசிகள்...

நோய் பெருகின..

ஆப்பிளை அப்படித்தான் இங்கு பயிரிட்டான்...

 ஆப்பிளை மட்டுமா கொணர்ந்தான். கேரட் , பீட்ரூட் 
இன்னும் குளிரில் விளையும் பல பயிர்களை கொணர்ந்தான், அது அவனுக்கு சரி..

ஏற்கனவே உஷ்ணத்தில் வாழும் மக்களுக்கு இவை ஏன்? அவை கூடுதல் உஷ்ணத்தை ஏற்றின‌..

அத்தோடு விட்டானா?

அவன் ஏற்படுத்திய உலகப்போர்கள் அரிசி தட்டுப்பாட்டை உருவாக்கின.

 விளைவு..?

தமிழருக்கு சப்பாத்தியும் பரோட்டாவும் அறிமுகமாயின‌ ...

சப்பாத்தியினை கொடுத்தானே அன்றி அதை உண்ணும் முறை சொன்னான் இல்லை.

 சப்பாத்தி என்பது நெய் சேர்க்காமல் உண்ணகூடா உணவு...

ஆம்.... அதில் உஷ்ணம் அதிகம், அரேபியர் அதை தயிரோடு உண்பர், வட இந்தியர் நெய்யோடு உண்பர், தமிழன் அதை உண்ண தெரியாமல் உண்டான்..

நோய் பெருகிற்று....

அதாவது சூடான பூமியில் சூடு 
கொடுக்கும் உணவினை உண்டு நம்மை நாமே கெடுத்தோம்...

வெள்ளையனின் குளிர்நாட்டில் அரிசி கஞ்சியும், பனங்கள்ளும் குடிக்க சொல்லுங்கள், அவன் குடிப்பானா?

குடித்தால் என்னாகும் என அவனுக்கு தெரியும், அவன் தன் சமூகத்தை காத்து கொண்டிருக்கின்றான்..

உஷ்ணத்தால் ஏற்படும் நோய்க்கு விஞ்ஞானம் காரணம் சொல்லாது ..

இங்கு உஷ்ணத்தை கட்டுபடுத்த நல்லெண்ணெய் குளியலும் நெய்யும் இன்னும் பலவும் இருந்தது..

எல்லாம் பழமைதனம் என ஒழிக்கபட்டது.

இன்று எண்ணெய்யும் கலப்படம்... இப்போதுள்ள தலைமுறை டால்டாவினை நெய் என்றும் கலப்பட எண்ணெயினை சுத்தமான எண்ணெய் எனவும் அறிகின்றன...

பரிதாபம்.

காரணம்,  அவற்றுக்கு உண்மையான 
பொருளும் மணமும் எப்படி இருக்கும் என்றே தெரியவில்லை....

அவை என்ன செய்யும்?

எண்ணெயில் கலப்படம், உணவு பொருளில் கலப்படம் , இவை எல்லாம் இன்று ருசி இல்லா உணவல்ல...

 ஆரோக்கியமில்லா உணவினை கொடுத்துவிட்டன‌...!

நெய்யும் பாலும் வெண்ணெயும் போலி என அரசு கழகங்களே சொல்லும் நிலையென்றால் தனியார் 
நிலையங்கள் எப்படி இருக்கும்?

எதையோ தின்று 
எதையோ குடித்து, 
எதையோ புகைத்து, எதையோ மென்று 
இல்லா நோய்கள் எல்லாவற்றையும் தனக்குள்ளே இழுத்துவிட்டான் தமிழன்

எதை உண்டாலும் கசப்பாய் முடிப்பது உலகளாவிய உணவு முறையாய் இருந்தது, சீனாவில் தே எனும் கசப்பு பானத்தை அருந்துவார்கள்..

ஆப்ரிக்காவிலும் 
அரேபியாவிலும் காப்பி இருந்தது..

தமிழனுக்கு வேப்பம்பூ துவையலும் பாகற்காயும் அன்றாடம் சமையலில் இருந்தது. 

பாகம் என்றால் சமையல் அதில் இருக்க வேண்டிய காய் பாகற்காய் ஆனது..!

புரிகிறதா...?

இவை முறையாக இருந்தவரை சர்க்கரை நோய் இல்லை..

பாலில் காப்பி, டீ , சீனி என வெள்ளையன் ஏற்படுத்திய வியாபார தந்திரம்,
இன்று நம் வாழ்வியல் அங்கமாக மாறிவிட்டது. 

 காபியும் டீயும் பருகியே தீரவேண்டியவை அல்ல‌..

அவை இன்றியும் வாழமுடியும்...

அதுபோக பேக்கரிகள் வந்து நிரம்பியிருக்கின்றன.

 பரோட்டாவும் பேக்கரியும் இன்னும் பலவும் இங்கு ஏற்ற விஷயம் அல்ல. 

விஷம் அவை..

இவை பெருக பெருக மருத்துவ மனைகளும் பெருகுகின்றன. 
இச்சமூகம் எவ்வளவு நல்ல விஷயங்களை நாகரீகம் என இழந்து இன்று சீழ்பிடித்த சமூகமாக மாறிவிட்டது என நினைக்கும் பொழுது தலையே சுற்றுகின்றது

ஏகபட்ட விஷயங்களை இழந்துவிட்டோம், ஆனால் எதை எல்லாம் இழந்தோம் என்பதை இந்துமத ஆலயங்களிலும் இந்த நாட்டின் பாரம்பரியமான பண்டிகை மற்றும் சடங்குகளிலும் 
காணலாம்..

இந்து தெய்வங்களுக்கு பாரம்பரியமாக படைக்கபடும் பழம், பானம் எல்லாம் உடலுக்கு நல்லவையே..

துளசி போல் அருமருந்தில்லை..

அங்கு பயன்படும் எலுமிச்சை முதல் எள் வரை எல்லாமே நன்மை கொடுப்பவை.

தாம்பூல தட்டில் காணப்படும் வெற்றிலை முதல் எல்லாம் ஆரோக்கியமே..

தேர்களில் தெய்வங்களுக்கு 
வீசபடும் மிளமும் உப்பும் உடலுக்கு எக்காலமும் நன்மையே.

உங்களுக்கு ஆரோக்கியமான உணவு வேண்டுமென்றால் இந்துக்களின் உணவினை பாருங்கள், நைவேத்தியம் எனப்படும் உணவு முறையாக தயாரிக்கபடுமானால் அதை விட ஆரோக்கிய உணவு வேறு இல்லை...

அசைவத்தில் கூட கிராம ஆலயங்களை கவனிக்கலாம், ஆடும் சேவலும் எப்படி 
இருந்தால் அங்கு பலியிட வேண்டும் எப்படி சமைக்கபட வேண்டும் என்ற விதிகள் உண்டு.

அதன்படி உண்டால் அவையும் ஆரோக்கியமே, பிராய்லர் கோழியினை அங்கு வெட்டுவதில்லை.

சனிகிழமை தோறும் நல்லெண்ணெய் தேய்த்தால் உஷ்ணம் வராது..

அதிகாலை சேவலோடு எழுவதும் அந்தியில் பறவைகள் ஓயும்பொழுது தூக்கத்தை தழுவதும் 
நோய்க்கு இடம் கொடா...

மலைமேல் ஏறி தெய்வத்தை வணங்குவதும் , குளிர் ஆறுகளில் குளிப்பதும் ஆரோக்கியமே, மாதம் இருமுறையாவது இருக்கும் விரதம் உடலை வலுபடுத்தும்..

இன்னும் ஏராளமான விஷயங்கள் உண்டு..

அவை எல்லாம் இழந்ததன் விளைவு நீரிரிழிவு முதல் ஏகபட்ட நோய் ஒருபுறம்..

கருத்தரிப்பு சிக்கல் 
சிசேரியன் என மறுபுறம்.

 மிக மிக மோசமான சிக்கலுக்கு செல்கின்றது இச்சமூகம்..

பழமையினை மீட்டெடுத்து நல்வாழ்வு வாழ இந்துமதம் உதவும், நம் முன்னோரின் நலமான பலமான வாழ்வின் ரகசியம் அங்குதான் புதைந்திருக்கின்றது..

அதை மீட்டெடுப்பீர்களாயின் நல்வாழ்வு கிட்டும்...  மாறாக அதெல்லாம் பழமை என 
ஒதுக்குவீராயின் டாக்டரும் மருந்துகடைகாரனுமே உங்களுக்கு தெய்வமாவான்..

இந்த தெய்வத்தையும் ஆலயத்தையும் அதன் அனுகிரகத்தையும் அந்த உணவு மற்றும் விரத முறைகளை மறந்தவனுக்கு அதுதான் கதி.

அப்படி ஒரு பலஹீனமான சமூகமாக இந்தியா உருவாக வேண்டும் என வெள்ளையன் ஆசைபட்டதன் விளைவுதான் இங்கு உருவான 
இந்து எதிர்ப்பு கோஷ்டிகள்..

இந்துமதம் ஒழிய ஒழிய இங்கு நோய் கூடும் என்பதும் இந்தியா தன் மருந்து மற்றும் மருத்துவத்தின் வேட்டைகாடாகும் என்பது அக்காலத்தில் இருந்தே அவன் கணக்கு..

அது மிளகை திருடி வற்றலை கொட்டுவதில் தொடங்கி இன்றைய K F C வரை தொடர்கின்றது...

நாம் பாரம்பரியத்தை 
மீட்டெடுத்தால் தவிர நம் ஆரோக்கியத்தை திருப்பமுடியாது... அந்த பாரம்பரியம் இந்து ஆலயங்களின் வழிபாட்டிலும் இன்னும் பலவற்றிலுமே இருக்கின்றது..

என்று அதை இச்சமூகம் உணருமோ அன்றே இங்கு நல் ஆரோக்கியம் திரும்பும்..

ஆம். 

மாறாக,  கண்டதையும் உண்டுவிட்டு தெருத் தெருவாக + கடற்கரை கடற்கரையாக நடந்தாலும் 
ஆகபோவது ஒன்றுமில்லை...

நடக்க வேண்டியது வயல்வரப்புகளை நோக்கி..

 அங்கேதான் இருக்கின்றது உடல் நலத்துக்கான மருந்து...


நன்றி
பகிர்வு பதிவு

Saturday, October 09, 2021

முதுகெழும்பாய் தந்தை...

#அப்பா ஏன் எப்போதும் பின்தங்கி
யிருக்கிறார் என்று தெரியவில்லை.....

1. அம்மா 9 மாதங்கள் வயிற்றில் சுமக்கிறார். அப்பாவோ 25  வருடங்கள் மனதில் வைத்து சுமக்கிறார். ஆனால், இருவருமே சமம்தான். இருந்தாலும் அப்பா ஏன் பின்தங்கியிருக்கிறார் என்று இன்னும் தெரியவில்லை. 

2. தாய் குடும்பத்திற்கு ஊதியம் இல்லாமல் வேலை செய்கிறார். அப்பா தனது சம்பளத்தை குடும்பத்திற்காகவே செலவிடுகிறார். அவர்களின் முயற்சிகள் இரண்டுமே சமம்தான். இருப்பினும் அப்பா ஏன் பின்தங்கியிருக்கிறார் என்று இன்னும் தெரியவில்லை. 

3. அம்மா நீங்கள் விரும்பியதை சமைக்கிறார். அப்பா நீங்கள் விரும்பியதை வாங்கித் தருகிறார். அவர்களின் பாசம் இரண்டுமே சமம்தான். ஆனால், அம்மாவின் பாசம் உயர்ந்ததாக காட்டப்படுகிறது. அப்பா ஏன் பின்தங்கியிருக்கிறார் என்று தெரியவில்லை. 

4. நீங்கள் தொலைபேசியில் பேசும்போது, ​​முதலில் அம்மாவுடன் பேச விரும்புகிறீர்கள். உங்களுக்குக் காயம் ஏற்பட்டால், நீங்கள் ‘அம்மா’ என்று அழுகிறீர்கள். உங்களுக்குத் தேவைப்படும்போது மட்டுமே நீங்கள் அப்பாவை நினைவில் கொள்கிறீர்கள். ஆனால், மற்ற நேரங்களில் நீங்கள் அவரை நினைவில்கூட வைத்திருப்பதில்லை என்று அப்பா எப்போதாவது  நினைத்திருக்கிறாரா? குழந்தைகளிடமிருந்து அன்பைப் பெறும்போது, ​​தலைமுறை தலைமுறைகளாக, அப்பா எப்போதும் பின் தங்கியே இருக்கிறார். ஏன் என்று தெரியவில்லை..

5. அலமாரியில் வண்ணமயமான புடவைகள் மற்றும் குழந்தைகளுக்கான பல ஆடைகள் கொண்டு நிரப்பப்பட்டிருக்கும். ஆனால், அப்பாவின் உடைகளோ மிகவும் குறைவுதான். அவர் தனது சொந்த தேவைகளைப் பற்றி எப்போதும் கவலைப்படுவதில்லை. அப்பா ஏன் பின்தங்கியிருக்கிறார் என்று இன்னும் தெரியவில்லை. 

6. அம்மாவிடம் பல தங்க ஆபரணங்கள் இருக்கும். ஆனால், அப்பாவுக்கென்று ஆபரணம் ஏதும் இருப்பதில்லை. தனக்கென்று ஏதும் வாங்கியதுமில்லை. 
இருந்தாலும்  அப்பா ஏன் பின்தங்கியிருக்கிறார் என்று இன்னமும் தெரியவில்லை.

7. குடும்பத்தை கவனித்துக் கொள்வதற்கு அப்பா அன்றாடம் மிகவும் கடினமாக உழைக்கிறார். ஆனால், அங்கீகாரத்தைப் பெறும்போது, ​​அவர் எப்போதும் பின்தங்கியே இருக்கிறார். அது ஏன் என்று புரியவில்லை.

8. அம்மா கூறுகிறார், "நாம் இந்த மாதம் குழந்தைகளின் பள்ளி/ கல்லூரிக்கு கல்விக் கட்டணம் செலுத்த வேண்டும். எனவே, வரும் விசேஷத்துக்கு எனக்காக சேலை எதுவும் வாங்க வேண்டாம்" என்கிறாள். நான் முன்பே முடிவெடுத்து விட்டேன். எனக்கும் வேண்டாம் என்கிறார்.  குழந்தைகளுக்குப் தங்களுக்குப் பிடித்த உணவை வீட்டிலும், வெளியிலும் வாங்கித் தருகிறார். அப்பாவுக்கு என்று எதையும் வைப்பது இல்லை. அப்பா அன்று உணவுடன் ஊறுகாயைப் பொரியலாக எண்ணி  சாப்பிடுகிறார். பிள்ளைகள் மீது அவர்களின் பாசம் இரண்டுமே சமம்தான். ஆனால், அப்பா ஏன் பின் தங்கியிருக்கிறார் என்று இன்னும் தெரியவில்லை. 

9. பெற்றோர்களுக்கு வயதாகும் போது, ​​குழந்தைகள் சொல்கிறார்கள், வீட்டு வேலைகளை கவனித்துக் கொள்வதில் அம்மா தங்கள் உடன் இருப்பது பயனுள்ளதாக இருக்கும் என்று. ஆனால், அப்பாவோ பயனற்றவர் என்று குழந்தைகள் நினைக்கிறார்கள்.
அப்பா ஏன் பின்தங்கியே இருக்கிறார்?

அவர்தான் குடும்பத்தின் முதுகெலும்பாக இருக்கிறார். அவர் இருக்கும்  காரணத்தால் தான் நம்மால் நிமிர்ந்து நிற்க முடிகிறது. 
இருந்தாலும் அப்பா 
ஏன் பின்தங்கியே இருக்கிறார் என்றுதான்
தெரியவில்லை...,...

தந்தையைப் போற்றுங்கள்.

படித்ததில் வலித்தது.

நன்றி..
பகிர்வு பதிவு...

Monday, September 06, 2021

ஆசிரியர் தின சிறப்பு நடனம்..

ஆசிரியர் தினத்தை முன்னிட்டு
ஆசிரியர்களின் தியாகத்தை போற்றும் விதமாகவும், அவர்களின் அர்பணிப்பை சிறப்பிக்கும்  வகையில் சிறப்பு நடனம் அமைத்துள்ளோம். அனைவரும் கண்டு களித்து
ஆசிரியர்களை மதித்து..வாழ்வில் முன்னேறுவோமாக!   ...
காணொளியை கண்டு மகிழ்ந்த பின் மறக்காமல் Subscribe செய்து bell buttenயை அழுத்தி all யை செலக்ட் செய்ய அன்போடு வேண்டுகிறேன்..

மிக்க பேரன்போடு...
கனவு ஆசிரியர்
சேலம்.ஆ.சிவா

ஆசிரியர்தின சிறப்பு நடனத்தைக் காண blue லிங்கை தொடவும்....
https://youtu.be/sMH8H4tBn14


Friday, August 13, 2021

நிலம் பொது..உரைநடை உலகம்..8

[13/08, 7:23 am] Sivaramakrishnan.Salem: https://anchor.fm/sivaramakrishnan7/episodes/13-----8-e15r2vl
[13/08, 7:24 am] Sivaramakrishnan.Salem: 8 ஆம் வகுப்பு. தமிழ் பருவம்.1. இயல்.2. உரைநடை உலகம். நிலம் பொது வலையொலி வழங்குவது. கனவு ஆசிரியர் சேலம்.ஆ.சிவராமகிருஷ்ணன்.

Saturday, May 08, 2021

அன்னையர் தின வாழ்த்துகள்...

உலகம் 
முழுதும்
அவதரித்து
நடமாடும்
தெய்வம்
அன்னையர.
அனைவர்க்கும்
இதயம்
கனிந்த
நல்
வாழ்த்துகள்...

மிக்க 
அன்போடு


ஆ.சிவா....
ஆண்டாள்...
ரேஷ்மா..
சேலம்.

Wednesday, May 05, 2021

போட்டோ Graph ...ஒரு பார்வை...3

கற்றலின் பகிர்வு.

போட்டோகிராபிக்கு அடிப்படை காட்சி அமைப்பு  Rule of third. 

நாம் புகைப்பட கலையில் ஆரம்ப நிலையில் நாம் மொபைல் அல்லது கேமராவில் எடுத்து பழகுவோம் இதற்கு Bulls Eye என்று பெயர் இது ஒரு காட்சியை அதாவது ஒரு subject ஐ நடு சென்டரில் வைத்து எடுக்கப்படும் இது பார்ப்பதற்கு விருப்பபடாமலும் அதாவது Borring
மற்றும் அந்த புகைப்படம் ஒரு முழுமை இல்லாமல் இருக்கும். 

இதையே நாம் அடிப்படை composition Rule of third ஐ பயன் படுத்தி காட்சியை அமைத்தால் பார்க்க சிறப்பானதாகவும் ஒரு பொருள் உணர்த்தும் படியும் இருக்கும். அதாவது ஒரு subject ஐ காட்சி படுத்துபோது Rule of third அமைப்பை அமைத்து எடுக்கும்போது இதில்  Framing ல் horizontal & vertical type ல் ஒன்பது பிரிவுகளாக (Box type) ல் அமைந்து இருக்கும். (இது முதல் படத்தில் உள்ளது) 

உதாரணமாக ஒருவரை இடமிருந்து வலமாக பார்க்கிறார் போல் எடுத்தால் அவரை Framil இடது ஓரமாக அமைத்து எடுத்தால் அவர் வலது புரமாக பார்க்கிறார் என்பதை நாம் விளக்கி கூறவேண்டாம் அந்த காட்சி அமைப்பே  தெரிவித்து விடும். 

அதேபோல் Landscape புகைப்படங்கள் எடுத்தாலும் உதாரணமாக ஆகாயத்தை மையமாக காட்ட விரும்பினால் ஆகாயத்தை முதல் இரண்டு கிரிட் வரை அமைத்து எடுக்கலாம், அல்லது நிலத்தை மையப் படுத்தி எடுக்க நினைத்தால் நிலத்திற்கு அதிக அதாவது இரண்டு கிரிட்ல் பொருந்த அமைத்து காட்சியை அமைத்தால் தங்களுடைய புகைப்படம் மிக அழகாக தோன்றும். 

Grid ஐ கேமராவில் செட் செய்ய Nikon கேமராவில் (ஏனெனில் என்னிடம் Nikon கேமரா மட்டுமே உள்ளது)
View finder வழியாக பார்க்க Menu வில் சென்று custom setting menu தேர்வு செய்து அதில்
shooting display வில் உள்ள
view finder தேர்வு செய்து grid on செய்து கொள்ளவும், மொபைலில் செட்டிகில் சென்று Grid ஐ ஆன் செய்து கொள்ளவும். 

உதாரணமாக சில புகைப்படங்களையும் இங்கே தங்களின் பார்வைக்கு பதிவு செய்துள்ளேன். 

ஒளி இன்னும் ஒளிரும்...

நன்றி 
ஈஸ்வரன் ஒளிப்படக்காதலன் .

மற்ற நண்பர்களின் பயன்பாட்டுக்கு  இப்பதிவை மீள் பதிவு செய்கிறேன்.

மிக்க அன்போடு
ஆ.சிவா...சேலம்.

Wednesday, April 28, 2021

போட்டோ Graph...ஒரு பார்வை...1

என் மானசீக குரு பாலுமகேந்திரா அவர்களின் ஆசியுடன்  புகைப்படகலையில் நான் கற்றுக்கொண்ட எனது அனுபவத்தை
தங்களுடன் பகிர்ந்து கொள்வதில் பெருமை கொள்கிறேன். 

ஓவியங்களில் இருந்து பிறந்தது தான் புகைப்படக் கலை photograph  photo என்றால் லைட்(ஒளி) Graph என்றால் எழுதுதல் ஒளியைக் கொண்டு எழுதுவதுதான் photography. 

ஒரு காட்சியை சாமானியர்கள் பார்ப்பதற்கும் புகைப்பட கலைஞர்கள் பார்ப்பதற்கும் நிறைய வித்யாசங்கள் இருக்கும். 

ஒவ்வொரு புகைப்பட கலைஞர்களுக்கும் ரசிப்பு தன்மை அதிகம் வேண்டும் இது இக்கலையில் மிக முக்கியம்.உங்களுக்கு நேரம் கிடைக்கும் போதெல்லாம் நிறைய கவிதைகளை இலக்கியங்களையும் படியுங்கள் இவைகளை மேலோட்டமாக படிக்காமல் பொருள் உணர்வு ஆழ்ந்து படியுங்கள் இவை உங்களுடைய புகைப்படங்களில் தனித்தன்மையை பிரதிபலிக்கும். 

மற்றவர்களின் வித்யாசமாக எடுக்கப்பட்ட புகைப்படங்களை தேடித் தேடி பாருங்கள் ஆனால் அதேபோல் எடுக்க ஒருபோதும் முயற்சிக்காதீர்கள், 

ஒரு காட்சியை பல கோணங்களில் 
வித்தியாசமாக பாருங்கள், வித்தியாசமாக சிந்தியுங்கள்.
தேடல்களை அதிக படுத்துங்கள் நிறைய இடங்களுக்கு பயணங்கள் செய்யுங்கள் அப்படி செல்லும்போது உங்களுக்கு நிறைய அனுபவங்கள் கிடைக்கும், நீங்கள் நினைத்த காட்சி கிடைக்கும் வரை விடாதீர்கள் காத்து இருங்கள் நிச்சயம் நாம் நினைத்த காட்சி அமையும் நானும் அப்படி தான். 

ஒளி தொடரும்...
நன்றி
ஈஸ்வரன் ஒளிப்படக்காதலன் அவர்களின் அனுபவ பகிர்வை மற்றவர்பள் பயன் பெற இப்பதிவை மீள் பதிவு செய்கிறேன்

மிக்க அன்போடு
ஆ.சிவா..