Wednesday, June 22, 2022

அதிக மதிப்பெண் பெற வழிகள்..

*அதிக மதிப்பெண் எடுப்பது சுலபம்*. 
கீழ் கண்டவைகளை செயல்படுத்தினால்! 

*மாணிக்க மாணவர்களின் அனுபவங்கள்* 

1) ஆசிரியர் பாடம் நடத்தும் போது (முழுமையாக) 'கவனித்தாலே போதும்' 
கணிசமாக மதிப்பெண் எடுக்கலாம். 
2) புரிந்து படித்தால்...... 
3)பிறர்க்கு சொல்லிக் கொடுத்தால்..... 
4)அதிகாலையில் எழுந்து படித்து வந்தால்..... 
5)போட்டி போட்டு படித்தால்... 
6)தமது அம்மா அப்பாவிற்கு 
நல்வாழ்வளிக்க என்ற லட்சியம் இருந்தால்.... 
7) படித்ததை எழுதிப் பார்த்தால்.
8) குழுவாக விவாதித்து படித்தால்.... 
9)அமைதியான சூழலில் படித்தால். 
10)விளையாட்டு, யோகா, உடற்பயிற்சிக்குப் பிறகு படித்தால்..,. 
11)படித்ததை 
எழுதிப்பார்த்தால்.... 
12) பெரிய ஒரு பாராவை ' பல சிறிய பகுதிகளாக பிரித்து'
வரிசைப்படுத்தி படித்தால். 
13) கவனத்தை ஒருமுகப்படுத்தி
 ' குறிக்கோலுடன் ' படித்தால். 
14) கையெழுத்து அழகாய் இருக்க பயிற்சி செய்தால்.... 
15) பொது அறிவு புத்தகங்களை படித்தால்..... 
16)பள்ளிக்கு நேரத்திற்கு செல்வதும், விடுமுறை எடுக்காமல் செல்வதும் 
வழக்கப்படுத்தினால்.... 
17) சந்தேகங்களை தயக்கமின்றி கேட்டுத் தெளிவடைவதை  பழக்கமாக்கிக்கொண்டால்.... 
18)கால அட்டவணை போட்டு அதன்படி படித்துவந்தால்.... 
19) உதாரணங்கள், கதைகளுடன் ஒப்பிட்டு
நினைவு வைத்துக்கொண்டால்....

Thursday, June 09, 2022

கணிதம். இனிக்கும்....

மீன் விற்பவரிடம் 120 பெரிய இறால் மீன்களும் 180 நெத்தலி மீன்களும் 150 கணவாய் மீன்களும் இருந்தது. அவரிடமிருந்த எல்லா மீன்களையும் வாங்கிய ஒருவர் அந்த மீன்களை ஒவ்வொரு பைகளிலும் மூன்று வகை மீன்களும் சம எண்ணிக்கையில் இருக்குமாறு மீன்கள் பிரித்து சிறு பைகளில் போட்டுத் தரும்படி கேட்கிறார். மீன் விற்பவரிடம் சிறிய பைகள் இல்லாததால் பக்கத்து கடையில் இருந்து வாங்கி வருமாறு சொல்கிறார். எத்தனை பைகள் தேவைப்படும் என்ற கேள்விக்கு மீன் விற்பனை செய்தவரால் பதில் சொல்லத் தெரியவில்லை. ஒவ்வொரு பையிலும் எத்தனை மீன்கள் போடவேண்டும் என்பதும் அவருக்கு தெரியவில்லை.

இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த மீன் விற்பவரின் ஆறாவது படிக்கும் மகன் தன் தந்தைக்கு உதவி செய்ய முயற்சி செய்தான். அருகிலிருந்த ஒரு தாளை எடுத்து 120, 180, 150 என மூன்று மீன்களின் எண்ணிக்கையையும் எழுதினான். படத்தில் காட்டியது போல அவற்றின் மிப்பெரு பொது வகுத்தியை (மீபொவ) கண்டு பிடித்தான். 120, 180,150 ஆகிய எண்களின் மீபொவ 30 என கண்டுபிடித்தான் (படம் பார்க்க). மீன் வாங்க வந்தவரிடம் 30 பைகளை வாங்கி வரச் சொல்கிறான்.

தந்தையிடம் ஒரு பையில் 4 இறால் மீன்கள், 6 நெத்தலி மீன்கள், 5 கணவாய் மீன்கள் வைத்து 30 பைகளில் போட்டால் ஒவ்வொரு பையிலும் சமமான அளவு மீன்கள்  இருக்கும் என்று கூறுகிறான். தந்தை தனது மகனின் அறிவைப் பார்த்து ஆச்சரியமடைகிறார்.

Greatest Common Divisor (GCD) என்று நாம் படித்த மிப்பெரு பொது வகுத்தியின் வாழ்க்கை கணக்கு இது.  LCM , GCD போன்ற கணக்குகளை வாழ்க்கையில் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவு. படிக்கும் போது இரண்டு அல்லது மூன்று எண்களை கொடுத்து அதற்கான GCD அல்லது LCM கண்டுபிடி என்ற கேள்வியோடு முடிந்துவிடுகிறது. இப்படி படிக்கும் கணக்குகளை வாழ்க்கையில் பயன்படுத்த முடியால் இருக்கும் போது தான் கணிதம் கசக்கிறது.

தேசிய பாடத்திட்டத்தில் இந்த இடத்தில் தான் வேறுபடுகிறோம். 
தமிழ்நாடு பாடத்திட்டத்திலும் தேசிய பாடத்திட்டத்திலும் GCD என்ற பாடம் இருக்கிறது. 
State board கேள்வித்தாளில் 48 மற்றும் 32 க்கும் மான மிபொவ கண்டுபிடி என கேள்வி இருக்கும். அதே கேள்வி தேசிய பாடதிட்டத்தில் கேள்வியாக கேட்கும் போது 
ஒரு நிகழ்ச்சியில் 48 பெரியவர்களும் 32 சிறியவர்களும் கலந்து கொண்டனர். இவர்களை அங்கு போடப்பட்டிருந்த மேஜையில் உட்காரவைக்க வேண்டும். ஒவ்வொரு மேஜையிலும் சம எண்ணிக்கையிலான பெரியவர்கள் மற்றும் சிறியவர்கள் அமர வைக்க எத்தனை மேஜை தேவைப்படும்?

இரண்டு கேள்விகளின் விடை 16 தான். இரண்டு கேள்விகளின் தீர்வுக்கான படிநிலையும் ஒன்று தான். முதல் முறையில் கேட்ட கேள்விக்கு பதில் தெரிந்தவனுக்கு இரண்டாவது முறையில் கேள்வி கேட்டாலும் பதில் சொல்லியிருக்க வேண்டும். ஆனால் சிரமப்படுகிறான். ஏன்?. புரிந்து படிக்காததால் தான்.

தனக்கு  புரிந்த concept ஐ வாழ்க்கை கணக்குகளில் பயன்படுத்த தெரிந்திருக்கிறதா என்பதையே இன்றைய போட்டித் தேர்வுகளில் கேள்விகளாக கேட்கப்படுகிறது. அதில் ஜெயிப்பவர்களுக்கே இன்றைய அவசர உலகில் வெற்றி கிடைக்கிறது.

நம் பாடங்கள் அனைத்துக்கும் பயன்பாடு இருக்கிறது. வாழ்க்கையில் பயன்படுத்துகிற சூழல் இருக்கும். நாம் அதை படிப்பதோடு நிறுத்தி விடுகிறோம். அதற்கான சூழலே இங்கு இருக்கிறது. கணக்குப் பாடம் ஆரம்பிக்கும் போது அந்த கணக்கின் பயன்பாடு தெரிந்துவிட்டு கணக்கைப் படிப்பது அந்த கணக்கின் மேலுள்ள ஆர்வத்தை அதிகரிக்க உதவும்.

எல்லா கணக்குகளுடனும் அதன் பயன்பாடு பற்றி ஒவ்வொரு பாடத்தின்  கடைசியில் கொடுக்கப்பட்டிருக்கும். அதற்கு நாம் குறைவான முக்கியத்துவமே கொடுக்கிறோம். 
கணக்கு நடத்தும் ஆசிரியர் எல்லா கணக்குகளுக்கும் சம்மந்தப்பட்ட வாழ்க்கை கணக்குகளை தேடி கண்டுபிடிக்க வேண்டும். அறிவியல் பாடத்தில் செய்முறை செய்வது போல கணக்குப் பாடத்திலும் ஒவ்வொரு கணக்கு concept க்கு முன்னரும் இந்த செய்முறை செயல்பாடுகளை மாணவர்களை செய்யச் சொல்ல வேண்டும். பின்பு அது சம்மந்தமான கணக்குகளை நடத்த வேண்டும். அப்படி நடத்தினால் 
கணக்கு வேப்பங்காயாக கசக்காது. நெல்லிக்காய் மாதிரி சாப்பிட்ட பின்னரும் இனிக்கும்.

Wednesday, June 01, 2022

அன்பெனும் நீர்....

 புதிய பார்வை   கோணம்..

ஒரு
வரலாற்று
நிகழ்வு ::

அசோகர்
காலத்தில் 
அவருடைய
தலைநகரான
பாடலிபுத்திரத்தில்
ஒரு சிறைச்சாலை
இருந்தது

அதன் பெயர்
'அசோகர் நரகம்'

அந்த 
சிறைச்சாலையில்
உள்ளே சென்றவர்
யாரும் உயிருடன்
வெளியே 
வந்ததில்லை

புத்த துறவி
ஒருவர் செய்யாத 
குற்றத்திற்காக
உள்ளே அடைக்க
பட்டார்

அங்கே 
மிக கொடூர
தண்டனைகள் 
அவருக்கு 
விதிக்க பட்டன

ஆனால் எந்த 
தண்டனையும்
அவருக்கு 
எந்த
பாதிப்பையும்
ஏற்படுத்தவில்லை

சிறை 
அதிகாரிகள்
ஆச்சரியப்பட்டு
அவரை 
கொதிக்கும்
கலனில் 
போட்டனர்

அவர் சர்வ 
சாதாரணமாக
எழுந்து 
வெளியில்
வந்தார்

இதை 
பார்த்த 
அதிகாரிகள்
பயந்து போய்
அசோகரிடம்
முறையிட்டனர்

அசோகர் 
வந்தார்

அவரை கண்டு 
அதிசயப்பட்டு
அமைதியாக 
வெளியே 
செல்ல
எத்தனித்தார்

மூத்த 
சிறை
அதிகாரி 
அசோகரிடம்

  புத்த 
  துறவியை 
  என்ன செய்வது ?

என்றதுடன்...

  உள்ளே 
  வந்தவர்கள் 
  வெளியே 
  செல்ல 
  கூடாது

  அரசர்
  உள்பட

என்று 
கூறினார்

இதை கேட்டு 
ஆத்திரப்பட்ட 
அசோகர்

புத்த
துறவியை
விடுதலை
செய்ததோடு

தன்னை
வெளியே விட
மறுத்த 

அந்த மூத்த 
அதிகாரியை 
தூக்கி
கொதிக்கும் 
கலனில் போட 
உத்தரவு 
பிறப்பித்தார்

அடுத்த
சில நொடிகளில்

தவறு 
செய்யாத 
துறவிக்கு 
தண்டனை 
தந்ததை 
எண்ணி 
எண்ணி 
மனம் 
நொந்தார்

எதிர்த்து
பேசிய
மூத்த சிறை
அதிகாரியை
கொதிக்கும்
கலனில் 
போட 
உத்தரவு
பிறப்பிக்க
பட்டதற்கு
மனம்
வெந்தார்

சிறைக்கு
வெளியே 
வந்த 
அசோகர் 

அடுத்த சில
நாட்களில் 
அந்த சிறை
சாலையையே 
இடித்து 
தரைமட்டமாக்க 
உத்தரவு 
பிறப்பித்தார்

இடிந்தது 
சிறைச்சாலை 
மட்டுமல்ல

அவரின் 
செருக்கு 
வெறுப்பு
ஆணவம் 
அதிகாரம் 
அத்தனையும் 
தான்

அன்றில்
இருந்து
அசோகர் 
மனதளவில்
மாறிபோனார்

அதன்  
தொடர்ச்சியாக
நடைபெற்ற
கலிங்க போர்
அவரை 
முற்றிலுமாக
புரட்டி போட்டது

  வன்முறையை
  வேருடன் அழிக்க
  ஒரே வழி

  'அ ன் பு '

என்பதை 
நிரூபிக்க,
புத்த மதத்தை
தழுவினார்

இது 
கதையல்ல
நிஜம்

  வாங்க ::

  நெருப்பை
  நெருப்பால்
  அணைக்க
  முடியாது

  அது
  நீரினால் தான்
  அணையும்

  வெறுப்பை
  வெறுப்பால்
  அழிக்க 
  முடியாது

  அது
  அன்பினால் 
  தான் அழியும்

  உலகில்
  மென்மையானது
  அன்பு

  உலகில்
  வலிமையானது
  அன்பு

  ஆதலினால்
  அன்பு 
  செய்வோம்

  அகிலத்தை
  வெல்வோம்

புதிய
நம்பிக்கை
கீற்றுக்களுடன்

 நன்றி..
முனைவர்.சுந்நரமூர்த்தி

பகிர்வு பதிவு