Tuesday, May 05, 2020

புதிய பார்வை....புதிய கோணம்....

🍁 புதிய பார்வை 🍁

வால்மீகி ஓர்
வழிப்பறி
கொள்ளைக்காரன்
என்று எல்லோருக்கும்
தெரியும்,

அவன் நாரதரிடம்,
ஸ்ரீராம மந்திர
உபதேசம்
பெறும்போது,
மந்திரத்தின்
பொருளுணர்ந்தா
செய்தான்,

உணராமல் செய்த
ஜபத்தின் விளைவே,
அவன் உலகம்
போற்றும்
உத்தமனாகி...

காலத்தால்
அழிக்க முடியாத
காவியத்தை,
படைக்க முடிந்தது
எனில்...

'அசுத்த மனம்'
என்பது ஒரு
பிரச்சினையே
அல்ல.

ஆனால்...

அதை எவ்வாறு
'அகற்ற வேண்டும்'
என்பதே முக்கியம்.

'மாசு'
என்ற அழுக்கை,
'இறை பக்தி'
என்னும் சோப்பு,
எப்படியும்
'அடித்து துவைத்து
காயபோட்டு' விடும்.

வாங்க...

எந்த
நிலையில் நாம்
இருந்தாலும்...

மன உறுதியுடன்
முழு நம்பிக்கையுடன்...

'இறைவனிடம்
கையேந்துவோம்'...

'அவன்
இல்லையென
சொல்வதே இல்லை'.

*அன்புடன்*
*இனிய*
*காலை*
*வணக்கம்.*

2 comments:

LACSHANA SWATHY said...

அருமை

KILLERGEE Devakottai said...

அருமை ரசித்தேன்.