Friday, April 30, 2021

மே தின வாழ்த்துகள்...

உலகம் முழுதும் 
உள்ள அனைவருக்கும்
இனிய
உழைப்பாளர் தின வாழ்த்துகள்...

மிக்க அன்போடு..
ஆ.சிவா...
சேலம்.

Wednesday, April 28, 2021

போட்டோ Graph...ஒரு பார்வை...1

என் மானசீக குரு பாலுமகேந்திரா அவர்களின் ஆசியுடன்  புகைப்படகலையில் நான் கற்றுக்கொண்ட எனது அனுபவத்தை
தங்களுடன் பகிர்ந்து கொள்வதில் பெருமை கொள்கிறேன். 

ஓவியங்களில் இருந்து பிறந்தது தான் புகைப்படக் கலை photograph  photo என்றால் லைட்(ஒளி) Graph என்றால் எழுதுதல் ஒளியைக் கொண்டு எழுதுவதுதான் photography. 

ஒரு காட்சியை சாமானியர்கள் பார்ப்பதற்கும் புகைப்பட கலைஞர்கள் பார்ப்பதற்கும் நிறைய வித்யாசங்கள் இருக்கும். 

ஒவ்வொரு புகைப்பட கலைஞர்களுக்கும் ரசிப்பு தன்மை அதிகம் வேண்டும் இது இக்கலையில் மிக முக்கியம்.உங்களுக்கு நேரம் கிடைக்கும் போதெல்லாம் நிறைய கவிதைகளை இலக்கியங்களையும் படியுங்கள் இவைகளை மேலோட்டமாக படிக்காமல் பொருள் உணர்வு ஆழ்ந்து படியுங்கள் இவை உங்களுடைய புகைப்படங்களில் தனித்தன்மையை பிரதிபலிக்கும். 

மற்றவர்களின் வித்யாசமாக எடுக்கப்பட்ட புகைப்படங்களை தேடித் தேடி பாருங்கள் ஆனால் அதேபோல் எடுக்க ஒருபோதும் முயற்சிக்காதீர்கள், 

ஒரு காட்சியை பல கோணங்களில் 
வித்தியாசமாக பாருங்கள், வித்தியாசமாக சிந்தியுங்கள்.
தேடல்களை அதிக படுத்துங்கள் நிறைய இடங்களுக்கு பயணங்கள் செய்யுங்கள் அப்படி செல்லும்போது உங்களுக்கு நிறைய அனுபவங்கள் கிடைக்கும், நீங்கள் நினைத்த காட்சி கிடைக்கும் வரை விடாதீர்கள் காத்து இருங்கள் நிச்சயம் நாம் நினைத்த காட்சி அமையும் நானும் அப்படி தான். 

ஒளி தொடரும்...
நன்றி
ஈஸ்வரன் ஒளிப்படக்காதலன் அவர்களின் அனுபவ பகிர்வை மற்றவர்பள் பயன் பெற இப்பதிவை மீள் பதிவு செய்கிறேன்

மிக்க அன்போடு
ஆ.சிவா..

Sunday, April 18, 2021

கொரோனா... வாழ்வும் வாழ்வில் நம் கையில்...

*கரோனா இரண்டாம் அலையில் நாம் அடித்து செல்லப்பட்டு கொண்டு இருக்கும் நிலையில் கோவிட் 19 பற்றிய சந்தேகங்கள் பலருக்கு தீர்ந்தபாடில்லை.*

1. *நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக இருந்தால் கரோனா நம்மை தாக்காது என்று பலர் எண்ணுகிறார்களே உண்மையா ?* 

இல்லை. நீங்கள் எப்பேற்பட்ட அசகாய சூரர் என்றாலும் தகுந்த சுழ்நிலை *(Suitable Condition for Virus Exposure) அதாவது கரோனா வைரஸ் உங்கள் உடலுக்குள் செல்லும் தருணம் அமைந்தால் உங்களை அது தாக்கத்தான் செய்யும். அந்த தகுந்த சூழ்நிலை *அதாவது கரோனா பாதிக்கப்பட்ட நபர் தும்மிய இடத்துக்கு நீங்கள் சென்று இருந்தாலோ அவரின் எச்சின் திவலைகள் காற்றில் இருக்கும் போதோ)* க்கு நீங்கள் உட்படவில்லை என்று அர்த்தமே தவிர நீங்கள் நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் உள்ளவர் என்று அர்த்தம் இல்லை. 

2. *கரோனா வைரஸ் நம் உடலுக்குள் வந்து எத்தனை நாட்களில் முதல் அறிகுறி தெரியும் ?* 

இது வரை பாதிக்கப் பட்டவர்களின் தரவுகளின்படி சராசரியாக வைரஸ் உங்கள் உடலுக்குள் நுழைந்து 5-6 வது நாட்களில் காய்ச்சலோ உடல்வலியோ, தலைவலியோ வரும். அதே நேரத்தில் 14 நாட்கள் வரை Incubation Period இந்த வைரஸ்க்கு இருக்கிறது. 

3. *கரோனா வைரஸ் வந்து போனதே தெரியாமல் பலர் இருக்கலாம் என்று கூறுகிறார்களே உண்மையா ?* 

ஓரளவு உண்மை. ஆனால் ஏதாவது ஒரு அறிகுறியையாவது அவர்கள் அனுபவித்து இருப்பார்கள். அது காய்ச்சலாகவோ, லேசான சளியாகவோ, உடல்வலியாகவோ இருந்து இருக்கலாம். எந்த அறிகுறியும் தராமல் கரோனா வைரஸ் உங்கள் உடலை விட்டு நீங்கி இருக்காது. வெளிப்புற அறிகுறி உங்களுக்கு தெரியாவிட்டாலும் *CT Lungs* எடுத்து பார்த்தால் அதன் தாக்கம் இல்லாமல் இருக்காது. எனவே ஒரு அறிகுறியையாவது நீங்கள் அனுபவிப்பீர்கள்.

4. *எனக்கு இருமல் காய்ச்சல் இருக்கிறது. ஆனால் சோதனை செய்ய பயமாக இருக்கிறது. என்ன செய்ய வேண்டும் ?* 

உங்களுக்கு இருமல் காய்ச்சல் ஒரு நாள் இருந்தால் கூட யோசிக்காமல் உடனே அருகிலுள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் *RT PCR* பரிசோதனைக்கு உங்கள் மாதிரியை கட்டாயம் கொடுங்கள். உயிர் காக்க முன்னரே நாம் நடவடிக்கைகள் எடுத்து கொள்ளலாம். பயந்து சோதனை செய்யாமல் இருந்தால் வைரஸ் பல்கி பெருகி உங்கள் உயிருக்கே உலை வைக்கலாம். அதே நேரத்தில் நீங்கள் முகக் கவசம் அணியாமல் வெளியே செல்லும்போது உங்களால் பலருக்கு பரவ வாய்ப்பும் இருக்கிறது. 

5. *கரோனா வைரஸ் பாதிக்கப்பட்ட நபரிடம் பேசினாலே அல்லது அவர் சென்ற அறைக்கு சென்றாலே அவர் தொட்ட பொருளை தொட்டாலே நாம் தொற்றுக்கு உள்ளாகி விடுவோமா ?* 

அமெரிக்காவின் CDC வெளியிட்ட தரவுகளின் படியும் உலக சுகாதார நிறுவனத்தின் கடந்த ஒரு வருட ஆய்வறிக்கையின் படி *99 சதவீதம் மூக்கு வழியாக தான்* இந்த கரோனா வைரஸ் பரவுகிறது. அதே நேரத்தில் கரோனா பாதிக்கப்பட்ட நபர் தொட்ட பொருள் மூலமாக இன்னொருவருக்கு பரவுவது என்பது 0.001 வாய்ப்பு தான் என்று உலக சுகாதார நிறுவனமே கூறி இருக்கிறது. அப்படி பரவி இருந்தால் இதற்குள் உலக மக்கள் தொகை பாதி அழிந்து இருக்கும். கரோனா பாதிக்கப்பட்ட நபர் தும்முவதன் மூலமும் இருமுவதின் மூலமாக தான் அதிகம் பரவுகிறது. 

6. *பிறகு ஏன் கோலப்பொடி போல குளோரின் பொடியையும் மருந்தையும் கரோனா பாதிக்கப்பட்ட நபரின் வீட்டிலும் அலுவலகத்திலும் தெளித்து சுத்தம் செய்கிறார்கள்? அவ்வாறு செய்வதால் கரோனா அழிந்து விடுமா ?* 

கண்டிப்பாக இல்லை. கரோனா பரவிய நேரத்தில் அதாவது 2020 ஆம் ஆண்டு இந்த வைரஸ் பற்றிய தெளிவு உலக சுகாதார நிறுவனத்திடம் இல்லை.கடந்த ஆண்டே உலக சுகாதார நிறுவனம் கிருமிநாசினி வீட்டிலும் அலுவலகத்திலும் தெளிப்பதால் கரோனா வைரஸ் ஒழியாது என்று தெளிவாக  கூறிவிட்டது. இவ்வாறு தெளிப்பதால் பாக்டீரியா மற்றும் பிற கிருமிகள் சாகுமே தவிர கரோனா வைரஸ் அழியாது. 

7. *ஏன் சிலர் லேசான அறிகுறிகளாலும் சிலர் தீவிர அறிகுறிகளாலும் பாதிக்கப்படுகின்றனர் ?*

இதற்கு பல காரணங்கள் உள்ளன. வயது, ஏற்கனவே ஏதேனும் நோயால் பாதிக்கப்பட்டது என பல காரணங்கள் உள்ளன. ஆனாலும் முக்கிய காரணம் நீங்கள் எவ்வளவு அளவு வைரசால் (Viral Dose) பாதிக்கப் படுகிறீர்கள் என்பது முக்கிய பங்காற்றுகிறது. அதிக அளவு வைரஸ் க்கு நீங்கள் Expose ஆனால் தீவிர தொற்று ஏற்பட வாய்ப்புண்டு. குறைந்த அளவு Viral Dose க்கு நீங்கள் Expose ஆனால் குறைவான பாதிப்புக்கு உள்ளாகலாம். அதே நேரத்தில் உடலின் உச்ச பட்ச நோய் எதிர்ப்பு போராட்டமான *Cytokine Storm* அதாவது நம் உடல் சொந்த செல்லையே தாக்கி கொல்லும் நிலைக்கு உங்கள் உடல் சென்றாலும் உயிரிழப்பு ஏற்படும். 

8. *கரோனா Positive என்று அறிய வந்தால் என்ன செய்ய வேண்டும்* ? 

முதலில் பதறக் கூடாது. யாரிடமும் மறைக்க கூடாது. வீட்டில் உள்ளவரிடம் தெரியபடுத்தி 14 நாட்களுக்கு தனி அறையில் இருக்க வேண்டும். வெளியே வரவே கூடாது. முதல் நாளிலேயே உங்கள் நுரையீரலை CT Scan எடுத்து பார்த்து விடுவது நல்லது. தொடர்ந்து 5 நாட்கள் மேல் காய்ச்சல் இருக்கும் பட்சத்தில் உடனடியாக மருத்துவமனையில் சிகிச்சை பெற வேண்டும். பெரும்பாலனோருக்கு காய்ச்சல் முதல் மூன்று நாட்களிலேயே குணமாகி மற்ற அறிகுறிகளான இருமல் உடல் வலி தொடர்கிறது.ஆனால் தொடர் காய்ச்சல் என்பது நாம் கவலை கொள்ள வேண்டிய விஷயமாக கருத வேண்டும். 

9. *என்னென்ன மாத்திரைகள் உட்கொள்ள வேண்டும்* ? 

Paracetamol காய்ச்சலை குறைப்பதற்கும் இருமல் என்பது பாக்டிரியாவல் ஏற்படுவது எனவே அதை குறைக்க Antibiotics ஆன Cefixime or Azithromycin or Amoxcyillin மாத்திரைகளை தவறமால் உட்கொள்ள வேண்டும். தொடர்ந்து காலை இரவு என உட்கொள்ளும் பட்சத்தில் ஐந்து நாட்களில் உங்களுக்கு உடல் முன்னேற்றம் தென்படும். 

10. *எப்போது நாம் அச்சம் கொள்ள வேண்டும்* ? 

கரோனா பாதித்து 5,6,7 ஆம் நாட்கள் மிக முக்கியமானது. அப்போது உங்களுக்கு நெஞ்சு வலி, மூச்சுத் திணறல் ஏற்பட வாய்ப்புண்டு. அப்படி அறிகுறி தென்பட்டால் உடனே மருத்துவமனையில் சிகிச்சை பெற சென்று விட வேண்டும் 

11. *என்ன சாப்பாடு சாப்பிட வேண்டும்* ? 

வழக்கமான சாப்பாடு சாப்பிட்டாலே போதுமானது. அதே நேரத்தில் அதிகமான நீர் குடிக்க வேண்டும். பழச்சாறு தவறாமல் பருக வேண்டும். புரதமே உடலின் கட்டுமான வீரர்கள். எனவே சைவம் என்றால் பருப்பு வகைகளையும் அசைவம் என்றால் சிக்கன் மீன் போன்றவற்றை எடுத்து கொள்ள வேண்டும். அதே நேரத்தில் உங்களுக்கு சுவை மணம் போன்ற உணர்வுகளை இழந்து இருப்பீர்கள். சாப்பிட முடியாது, ஆனால் சாப்பிட்டே ஆக வேண்டும் தவறாமல். ஒன்றே ஒன்று தான். உங்கள் உடல் ஆற்றலை இழக்க கூடாது. இழக்கும் பட்சத்தில் நோய் எதிர்ப்பு சக்தி இல்லாமல் அதிக தொற்றுக்கு அது வழி வகுக்கும். 

12. *Walking,Yoga போன்றவற்றை செய்யலாமா* ? 

தாராளமாக செய்யலாம். நீங்கள் அடைந்து இருக்கும் அறைக்குள் மட்டுமே. ஆனால் இதையெல்லாம் செய்ய உங்கள் மனம் ஒத்துழைக்காது என்பதே உண்மை. ஏனெனில் அதிக உளவியல் பாதிப்புக்கு உள்ளாகும் போது உங்களால் சகஜமாக இருக்க முடியாது. 

13. *ஏன் கரோனா வந்ததையே வெளியில் சொல்ல பலர் பயப்படுகின்றனர்* ? 

நோய் பற்றிய புரிதல் இல்லாததும் அறிவியல் விழிப்புணர்வும் இல்லாததுமே காரணம். இது ஒரு தொற்று. அதே நேரத்தில் அசிங்கப்பட கூடிய நோய் ஒன்றும் அல்ல. இது வல்லரசு நாடுகளின் அதிபர்கள் முதல் பாமர மக்கள் வரை யாரை வேண்டுமானாலும் பாதிக்க கூடிய தொற்று. எனவே பாதிப்பு வந்த உடன் நாம் சொல்லும் போது மட்டுமே மற்றவர்கள் நம்மிடம் வராமல் இருக்கவும் நம்மால் பிறருக்கு பரவாமல் இருக்கவும் நாம் செய்யும் சமூக கடமை. அதே நேரத்தில் உங்கள் அனுபவங்களை பகிர்வதன் மூலம் பலர் எச்சரிக்கையுடன் இருப்பர். வைரசின் சங்கிலியை அறுத்தாலே கரோனா பெருந்தொற்று விரைவில் முடிவுக்கு வந்துவிடும் 

14. *கரோனாவால் பாதிக்கபட்டால் நம் உடல் மீண்டும் தொற்றுக்கு உள்ளாக வாய்ப்புண்டா* ? 

இயற்கையாகவே நம் உடல் எல்லா விதமான வைரஸ் பாக்டீரியாவை எதிர்கொள்ளும் திறன் உடையது தான். ஒரு புதுவிதமான வைரஸ் உள்ளே வரும்போது தான் நம் உடல் திணறும். அந்த திணறலே காய்ச்சல் இருமல் உடல்வலியாக நமக்கு நம் உடல் நம்மிடம் தெரிவிக்கிறது. அதே நேரத்தில் வைரஸை முழுமையாக நம் உடல் போரிட்டு வென்ற உடன் நம் உடலில் Antibodiesஐ உற்பத்தி செய்துவிடும். இது அடுத்த நோய் தொற்றில் இருந்து நம்மை பாதுகாக்க உதவும். 
ஆனால் கரோனவை பொறுத்தவரை இயற்கையாகவே நம் உடலில் Antibodies உற்பத்தி ஆனாலும் சுமார் 6-9 மாதங்களே அந்த பாதுகாப்பு இருக்கும் என்று உலக சுகாதார நிறுவனம் தெரிவிக்கிறது. உங்கள் உடல் எந்த அளவிற்கு Antibodies உற்பத்தி செய்துள்ளது என்பதை கரோனா பாதித்த 21 நாட்களுக்கு பிறகு Covid Antibody Test எடுத்து பார்த்தால் நமக்கு தெரியவரும். அந்த சோதனையில் Antibodies கம்மியாக இருந்தால் நீங்கள் கரோனா தடுப்பூசி செலுத்தி அந்த Antibodies அளவை கூட்டிக் கொள்ளலாம். இது மீண்டும் தொற்றுக்கு உள்ளாவதில் இருந்து கூடுதல் பாதுகாப்பு தரும். 

15. *தொற்றில் இருந்து தப்பிக்க மிகச்சிறந்த வழி என்ன* ? 

Mask மட்டுமே. Mask ன் முன் பகுதியை நாம் தொடக்கூடாது. தொட்டுவிட்டு கழட்டி நம் முகத்தை துடைத்தால் தொற்றுக்கு உள்ளாக நேரிடும். அதே போல் கையுறை பயன்படுத்துவதால் எந்த பயனும் இல்லை. ஏற்கனவே சொன்னது போல மூக்கு தான் கரோனாவின் நுழைவு வாயில். 

16. *கரோனா தடுப்பூசி எடுத்துக் கொள்ள வேண்டுமா* ? 

கட்டாயம் எடுத்து கொள்வது நல்லது. இது தீவிர தொற்று நிலைக்கு கொண்டு செல்லாமல் உங்களை பாதுகாக்க உதவும். அதே நேரத்தில் தடுப்பூசி எடுத்து கொண்டாலே கரோனா தாக்காது என்று எண்ண கூடாது. 

அன்புடன் 

Dr. கிரிதரன் MBBS., MD.

பகிர்வு 
*அத்திக்கடவு சுப்பிரமணியம்*

*களஞ்சியம் விவசாயிகள் சங்கம்*

Friday, April 16, 2021

தொழில்நுட்பம் பழகுவோம்..1

வணக்கம் உறவுகளே & நட்புகளே...
நேற்று (15-04-21) சேலம் உத்தமசோழபுரம் ஆசிரியர் மற்றும் பயிற்சி நிறுவனத்தில்
Effectieness of free  open source software  ( FOSS ) in Social science . என்ற தலைப்பில்   ஆராய்ச்சிக்கான ஆசிரியர்கள் மற்றும் மாணவர்பளுக்கு உதவக்கூடிய open source ஆன Learning app.org  ல் ஒரு பிரிவான Time Line ( கால வரிசை) என்ற செயலியின் செயல்  விளக்க காணொளி காட்சிக்கான படப்பிடிப்பு நடைப்பெற்றது. இந்த அரிய வாய்ப்பை நல்கிய சேலம் ஆசிரிய பயிற்சி நிறுவன முதல்வர் அவர்களுக்கும் மற்றும் விரிவுரையாளர் திருமதி.தனம்மாள் அவர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

இவண்
என்றும் கல்விப்பணியில்
கனவு ஆசிரியர்
ஆ.சிவராமகிருஷ்ணன்
சேலம் ஊரகம்.


Tuesday, April 13, 2021

இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள்...

உலக முழுதும் பரவி உள்ள
எம் தமிழ் மக்களுக்கும்
உறவுகளுக்கும்
நட்புகளுக்கும்
இனிய
தமிழ் திருநாள் ( புத்தாண்டு)
வாழ்த்துகள்...

மிக்க அன்புடன்
ஆ.சிவா..
ஆண்டாள்..
ரேஷ்மா..
சேலம்.

Thursday, April 08, 2021

புதிய பார்வை...புதிய கோணம்...

பல 
பேர் 
வாழ்க்கையில்
வெற்றி 
பெற 
முடியாமல் 
போவதற்கு
காரணம் 
தாங்கள் 
எதை 
விரும்புகிறோம் 
என்று 
அவர்கள் 
கடைசி 
வரை 
அறியாமல் 
இருப்பது ....


முகவரி 
இல்லாமல் 
கடிதம் 
எழுத 
முடியுமா..?
 போகுமிடம் 
தெரியாமல் 
பயணம் 
செய்ய 
இயலுமா ...?

தெரிந்திருக்க 
வேண்டும் 
நம்முடைய 
தேவை 
என்னவென்று 
நமக்கு 
தெரிந்திருக்க 
வேண்டும்
 நாம் 
எதை 
அடைய 
விரும்புகிறோம்
என்று...

அதுவே
 நம் 
வாழ்க்கையின் 
குறிக்கோளாக 
இருக்க 
வேண்டும் 
அதுவே 
நமது
இலக்காக 
இருக்க 
வேண்டும் ...
யாரும் 
இலக்கில்லாமல் குறிவைப்பதுண்டா..?


 முதலில் 
சிந்தியுங்கள் 
பிறகு 
முடிவு 
செய்யுங்கள்
நாம் 
விரும்புவது 
என்ன ..?
உங்களுக்குள் 
கேட்டுக் 
கொள்ளுங்கள் 
மகிழ்ச்சியா..?
அதிகாரமா..?
 செல்வமா..?
 புகழா...?
 ஆரோக்கியமா..?
 வெற்றியா...?
இவற்றில் 
எதை 
விரும்புகிறீர்கள் ..?
என்பதை
நீங்கள் 
தேர்வு 
செய்யுங்கள் 
வேலை 
எளிதாகி 
விடும் 
எதை
 செய்வது 
எப்போது 
செய்வது 
எப்படி 
செய்வது
என்பதை 
தீர்மானியுங்கள்...
பின்
அந்த
ஒத்தையடி
பாதை
உங்களை
வெற்றியை 
நோக்கி 
அழைத்து
செல்லும்...

வாங்க
சேர்ந்து
பயணிப்போம்...

அன்புடன்
இனிய 
காலை
வணக்கம்...

Tuesday, April 06, 2021

நம் ஜனநாயகம்...வாழும்..?

அலுவலகத்தில் இருந்து இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு திரும்புகையில் ஒரு குறிப்பிட்ட பகுதியிலிருந்து என் தெரு முழுக்கவும் ரோஜா சாமந்தி பூக்களின் இதழ்கள் சிதறிக்கிடந்தன.  தூரத்தில் எங்கோ பறையொலி கேட்டது.

யாராயிருக்கும்? என்று யோசித்துக் கொண்ட தெருவில் மெல்ல நுழைந்தேன்.

பெரியவர் கோவிந்தன் வீட்டு வாசலில் நிறைய மலர்களின் இதழ்கள்... ஒரு வேளை பெரியவர்..? ச்சே இருக்காது.  அப்படி இருந்திருந்தால் எனக்கு தகவல் வந்திருக்குமே.  அப்போ அவர் வீட்டில் குடியிருக்கும் யாராவது...!

வாசலில் வண்டி நிறுத்தும் போதுதான் கவனித்தேன் தெருவின் எல்லா பகுதியிலுமே பூவிதழ்கள்.

புரியாமல் வீட்டிற்குள் நுழைந்தேன்.  ஷோபாவில் சப்பணமிட்டு அமர்ந்திருந்த பையன், "ஹாய்! டாடி" என்று சொல்லிவிட்டு மடியிலிருந்த புத்தகத்தில் மீண்டும் கண் செலுத்தினான்.  லஞ்ச் பையை வாங்கிய மனைவியிடம் கேட்டேன்.

"யாரு"?

"யாருன்னா"?

"தெருவெல்லாம் பூவா இருக்கே, அதான் யாருன்னு கேட்டேன்".
 
மனைவி சிரிக்க மகன் சொன்னான் "அப்பா ...கட்சி வேட்பாளரு ஓட்டுக் கேட்க வந்தாரு.  நம்ம வீட்டுக்குள்ளேயே வந்துக் கேட்டாருப்பா" என்று அதை ஒரு நம்ப முடியாத அதிசயமாக சொன்னான்.

சமையலறை உள்ளே போய் வந்த மனைவி ஒரு கவரை என்னிடம் நீட்டினாள்.

"என்னது"?

"பிரிச்சிப் பாருங்க".

உள்ளே புத்தம் புதிய ஐநூறு ரூபாய் தாள் இருந்தது.

"ஏது"?

"அந்தக் கட்சிகாரங்கதான் கொடுத்தாங்க".

"ஏன் வாங்கின".

"ஆன்...எல்லாரும் வாங்கும் போது நாம மட்டும் வாங்காம இருக்க முடியுமா".

எல்லாரும்...என்று மனதில் நினைத்ததை கேட்காமல் வாயடைத்தேன்.

காந்தி ஐநூறில் சிரித்துக் கொண்டிருந்தார்.

தெருவைப் பார்த்தேன்.  ரோஜா பூவிதழ்கள் காற்றில் அலைபாய்ந்து கொண்டிருந்தன.

பறையொலியையும் பூச்சிதறல்களையும் கண்டு யாரோ இறந்துவிட்டார்கள் என்று முதலில் நான் எண்ணியது உண்மை என்றே இப்போது தோன்றுகிறது.

ஆம் செத்தது...
நம்
#ஜனநாயகம்.

நன்றி...பகிர்வு...

Monday, April 05, 2021

துணிந்தவனுக்கு தோல்வி இல்லை..

ஏப்ரல் 3, 1680
இன்று மராட்டிய மன்னன் மாவீரன் சத்ரபதி சிவாஜியின் நினைவு நாள் - கோடிக் கணக்கானவர்கள் இவ்வுலகில் பிறக்கிறார்கள். ஆனால் அவர்களில் சிலர் மட்டுமே சரித்திரப் புத்தகத்தில் இடம்பிடிக்கிறார்கள். இவ்விதம் சரித்திரத்தில் தனக்கெனெத் தனியிடத்தைப் பிடித்தவர்தான் சத்ரபதி சிவாஜி. ‘ மராட்டிய மக்களை ஒன்றுபடுத்தி மொகலாயப் படைகளை வென்று ஒருமராட்டிய பேரரசினை உருவாக்கிய பெருமை சிவாஜிக்கே உரியதாகும். பல போர்களில் வெற்றி பெற்றுப் பல கோட்டைகளையும் ராஜ்ஜியங்களையும் கைப்பற்றினார். சிவாஜி இந்திய வரலாற்றில் தனக்கென ஒரு தனித்துவமான இடத்தினைப் பெற்றிருக்கிறார் என்பதில் மாற்றுக்கருத்தக்கள் கிடையாது. 1680-ம் ஆண்டு மரணமைடயும் வரையில், சிவாஜியைத் தோல்வி என்பது நெருங்கவே இல்லை. காரணம், ‘துணிந்தவனுக்குத் தோல்வியில்லை’என்கிற அவரது தாரக மந்திரம்தான்.