Friday, May 15, 2020

புதிய பார்வை...புதிய கோணம்...

🍁🍁புதிய பார்வை🍁🍁

ஒரு
அழகான
கடற்கரை.

புதிய
காலை
பொழுது.

ஒரு பெரியவர்
அலைகளை
ரசித்தபடி
நடந்து கொண்டு
இருந்தார்.

தூரத்தில் ஒருவர்
கைகளை வீசியும்
கடல் பக்கம்
நீட்டியும் ஏதோ
நாட்டியம் போல
அபிநயம் செய்து
கொண்டிருந்தார்.

பெரியவர் அருகே
சென்று பார்த்தார்.

தூரத்தில் பார்த்த
அந்த மனிதர் ஓர்
இளைஞர்.

கடல் அலைகளில்
தெறித்து விழுந்த
சிறிய மீன்களை
குனிந்து எடுத்து
மீண்டும் கடலில்
போட்டு கொண்டு
இருந்தார்.

இதுதான்
பெரியவருக்கு
தூரத்தில்
பார்க்கும் போது
நாட்டியம் போல்
தெரிந்திருக்கிறது.

அந்த
இளைஞனின்
அருகில் சென்று
"நீங்கள் என்ன
செய்து கொண்டு
இருக்கிறீர்கள்?"
என்று கேட்டார்.

அந்த இளைஞன்
"இந்த சிறு மீன்கள்
அலையில் பட்டு
தெறித்து சற்று
நிமிடங்களில்
இறக்க
நேரிடுகிறது

எனவே அதனை
பிடித்து மீண்டும்
கடலில் விடுகிறேன்"
என்று கூறினான்.

அதற்கு பெரியவர்
"இந்த கடற்கரை
மிக நீளமானது.
உங்களால் எவ்வளவு
மீன்களை காப்பாற்ற
முடியும்?" என்று
கேட்டார்.

பேசி
கொண்டிருக்கும்
அந்த நிமிடத்திலும்
ஒரு சிறு மீனை
கடலில் சேர்த்த
இளைஞன்...

"இந்த
ஒரு நிமிடத்தில்
இந்த மீன் குஞ்சு
பிழைத்தது
இல்லையா.
இதுவே மகிழ்ச்சி"
என்று கூறினார்.

இளைஞனின்
இந்த பதிலில்
மிகுந்த
ஆச்சர்யமும்
மகிழ்ச்சியும்
அடைந்த
பெரியவர்...

அவரும் குனிந்து
ஒரு மீனை எடுத்து
கடல்நீரில் போட்டார்.

"என்னால்
இந்த மீன்
உயிர் பெற்றது"
என்று கூறி
மனம் மகிழ்ந்து
அந்த இடத்தை
விட்டு சென்றார்.

நாம் மட்டும்
சிறப்பாக
வாழ்வது
சாதாரண
வாழ்க்கை.

நம்மை
சுற்றியுள்ள
மக்களையும்
உயர்த்தி...

நாமும்
சிறப்பாக
வாழ்வதுதான்
உயர்ந்த
வாழ்க்கை.

வாங்க...

முயற்சிகள்
செய்யலாம்.

அன்புடன்
காலை
வணக்கம்.

No comments: