Monday, January 30, 2017

புரிதல்...சிறுகதை...

ஓர் ஊரில், வணிகன் ஒருவன் இருந்தான். பணக்காரனான அவன் சரியான கஞ்சன். எனவே, முட்டாளான ஒருவனை வேலைக்காரனாக வைத்திருந்தான். வணிகன்

ஒருநாள் அவனை அழைத்து, "நம் வண்டியை எடுத்துக்கொண்டு பனங்காட்டுக்குப் போ... அங்கே பலர் பனைமரங்களை வெட்டி வண்டியில் ஏற்றிக்கொண்டு இருப்பர். அதேபோல் நீயும் மரங்களை வெட்டிக்கொண்டு வா!'' என்றான்.

அப்படியே அவனும் வண்டியை ஓட்டிக்கொண்டு சென்றான். அங்கே சிலர் மரங்களை வெட்டி வீழ்த்திக் கொண்டு இருந்தனர். சிலர், கீழே கிடக்கும் மரங்களை முயன்று வண்டியில் தூக்கிப் போட்டுக்கொண்டிருந்தனர். இதைப் பார்த்ததும் வேலைக்காரனால் சிரிப்பை அடக்க முடியவில்லை.

"என்ன இவர்கள் எல்லாரும் முட்டாள்களாக இருக்கின்றனர். மரம் வெட்டும் போதே அதற்குக் கீழாக வண்டியை வைத்தால் மரம் அதில் சரியாக விழும். வீனாக ஒரு முறை பூமியில் கிடக்கும் மரத்தை வண்டியில் ஏற்ற வேண்டாமே!' என்று நினைத்தான்.

"என் திட்டத்தை இவர்கள் கண் முன்னாலேயே செய்து காட்டி, நான் எத்தகைய அறிவாளி என்பதைப் புரிய வைப்பேன்' என்ற எண்ணத்தில், தான் வெட்ட வேண்டிய பெரிய மரத்தை தேர்ந்தெடுத்தான்.

கோடாரியால் அந்தப் பனை மரத்தின் அடிப்பகுதியைப் பாதி அளவு வெட்டி முடித்தான். பிறகு, அந்த மரம் விழக்கூடிய இடத்திற்கு நேராக மாட்டுடன் வண்டியை நிறுத்தினான். மரம் வெட்டிக் கொண்டிருந்த மற்றவர்கள், "ஏன் இவன் இப்படிப் பைத்தியக்கார வேலை செய்கிறான்!' என்று நினைத்தனர்.

சிறிது நேரத்தில் அந்த மரம், "சடசட'வென்ற சத்தத்துடன் வண்டியின் மீது வேகமாக விழுந்தது. அவ்வளவுதான், வண்டி தூள் தூளானது. கால் உடைந்து குற்றுயிரும் குலை உயிருமாக மாடு துடித்துக் கொண்டிருந்தது. இதைக்கண்டு அவன் திகைத்து விட்டான். தன் திட்டத்தில் என்ன குறை என்று அவனால் கண்டுபிடிக்க முடியவில்லை.

"என் திட்டம் நல்ல திட்டம் தான். வண்டிக்குத்தான் வலிமை இல்லாமல் போய்விட்டது' என்ற முடிவுடன் வீடு திரும்பினான். நடந்ததை அறிந்த வணிகன், முட்டாளாக இருக்கிறாயே! இப்படி செய்யலாமா? என்று வேலைக்காரனைத் திட்டினான்.

சில நாட்கள் சென்றன. திடீரென்று அந்த ஊரில் மண்ணெண்ணெய் பஞ்சம் வந்துவிட்டது.

"தன்னிடம் இருக்கும் இருபத்தைந்து பீப்பாய் எண்ணெயைப் பதுக்கி வைத்தால் நிறைய லாபம் கிடைக்கும்!' என்று நினைத்தான் வணிகன். உடனே வேலைக்காரனை அழைத்து, ""கடையில் இருக்கும் மண்ணெண்ணெய் எல்லாவற்றையும் இன்றிரவு நம் தோட்டத்தில் பள்ளம் தோண்டிப் புதைத்துவிடு. யாருக்கும் தெரியக் கூடாது!'' என்றான்.

வணிகன் சொன்னபடியே, நள்ளிரவில் பெரிய பள்ளம் தோண்டினான் வேலைக்காரன். ஒவ்வொரு பீப்பாயாக உருட்டிச் சென்று அதிலுள்ள எண்ணெயைப் பள்ளத்தில் ஊற்றினான். இப்படியே எல்லாப் பீப்பாய்களில் உள்ள எண்ணெயையும் ஊற்றி முடித்தான்.

இப்போது அவன் உள்ளத்தில், "இந்தக் காலிப் பீப்பாய்களை என்ன செய்வது? இது குறித்து முதலாளி ஒன்று சொல்லவில்யலையே!' என்ற சிந்தனை எழுந்தது.

"சரி, அவரையே கேட்டு விடுவோம்' என்ற எண்ணத்தில் நன்றாகத் தூங்கிக் கொண்டிருந்த வணிகனை எழுப்பினான்.

"ஐயா! நீங்கள் சொன்னபடி மண்ணெண்ணெயைப் பள்ளம் தோண்டிப் புதைத்துவிட்டேன். காலி பீப்பாய்களை என்ன செய்வது என்று கேட்டான். வணிகனுக்குச் சிறிது சிறதாக உண்மை புலப்படத் தொடங்கியது. ஐயோ, "மண்ணெண்ணெய் எல்லாம் பேச்சே!' என்று அலறிய வணிகன், அன்றே அவனை வேலையிலிருந்து நீக்கினான்.".

பலர் இப்படி தான் நாம் சொன்ன கருத்தை சரியாக புரிந்து கொள்ளாமல் அவர் அவர்களின் எண்ணப்டி  தவறாக புரிந்து கொண்டு நல்ல நட்பையும் உறவையும் இழக்கிறோம்...
🌻🌻🌻🌻🌻🌻🌻🌻
இந்த நாள் இனிய நாளாக வாழ்த்துகள்....🙏🙏🙏🙏

Sunday, January 29, 2017

கணிதம் ஒரு கற்கண்டு...

👇🏻👇🏻👇🏻👇🏻👇🏻👇🏻👇🏻👇🏻
கணிதத்தை எப்படிப் படிக்கலாம்?

மொழி, சமூகம், அறிவியல், பொருளாதாரம் என எதைப் பற்றித் தெரிந்துகொள்ள வேண்டுமென்றாலும் அதற்கான புத்தகங்களைப் படித்தாலோ, ஒருவரிடமிருந்து விளக்கத்தைக் கேட்டாலோ நமக்குத் தேவையான தகவலைத் தெரிந்துகொள்ளலாம். ஆனால், கணிதத்தை அப்படித் தெரிந்துகொள்ள முடியாது.

தொடர்மொழி

உதாரணமாக, 8-ம் வகுப்பு அறிவியலையோ, சமூக அறிவியலையோ புரிந்துகொள்ள வேண்டுமென்றால் நேரடியாகப் படித்துத் தெரிந்துகொள்ளலாம். ஆனால், 8-ம் வகுப்புக் கணிதத்தைத் தெரிந்துகொள்வதற்காக நேரடியாகப் படித்தால் நிச்சயமாகப் புரிந்துகொள்ள முடியாது. அதற்கு முன்பு 7-ம் வகுப்பு வரை உள்ள கணிதப் புத்தகங்களைப் படித்திருந்தால் மட்டுமே 8-ம் வகுப்புக்கான கணிதப் புத்தகம் புரியும். ஏனெனில், 7-ம் வகுப்பு வரை படித்த கணிதத்தின் தொடர்ச்சியே 8-ம் வகுப்பில் தொடரும். எனவே, கணிதத்தை ஒரு தொடர்மொழி (Sequential Language) என அழைக்கலாம்.

இந்த உண்மையைப் புரிந்துகொள்ளாமல் இருப்பதால்தான் நாம் 9-ம் வகுப்பு படிக்கும்போதும், 11-ம் வகுப்பு படிக்கும்போதும் அதைப் படிக்காமல் 10-ம் வகுப்பு, 12-ம் வகுப்புப் பாடங்களை நேரடியாகப் படிக்க மாணவர்களை வற்புறுத்துகிறோம். இதனால்தான் அவர்கள் மனப்பாடம் செய்து படிக்க வேண்டிய சூழ்நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள்.

அனைத்துப் பாடங்களிலும் அதிக மதிப்பெண்கள் வாங்கும் மாணவரால்கூடக் கணிதத்தில் அதிக மதிப்பெண்களை வாங்க முடியவில்லை. ஏனெனில் அது ஒரு தொடர்மொழி என்பதை யாரும் புரிந்துகொள்வதில்லை.

பள்ளியில், குறிப்பாக 10-ம் வகுப்பில் 100 க்கு 100 எடுக்கும் மாணவர்கள் 12-ம் வகுப்பில் தேர்ச்சிகூடப் பெற முடியவில்லை. 12-ம் வகுப்பில் சிறப்பாக மதிப்பெண் பெற்றவர்களால் கல்லூரி வரும்போது குறைந்தபட்ச மதிப்பெண்கள் கூட எடுக்க முடியவில்லை.

திடீரென்று மாணவர்கள் எதிர்கொள்ளும் கணிதப் பாடங்கள் மிகவும் கடினமான சூழ்நிலைக்குள் தள்ளிவிடுகின்றன.

கணிதம் தனித்திறன்

கணிதம் கற்பது மற்ற பாடங்களைக் கற்பது போன்று அல்ல. இதற்கென்று வித்தியாசமான கற்கும் திறன் தேவைப்படுகிறது. மற்ற பாடங்களுக்கு அவற்றுக்கான புத்தகங்களைப் படித்து, புரிந்துகொண்டு பின்பு தேர்வில் எழுதினாலே போதும். ஆனால், கணிதத்தில் வெற்றிபெற இன்னும் சில உத்திகளைக் கையாள வேண்டும்.

கணிதம் ஒரு வேற்று மொழி போன்றது. முக்கோணவியல் ஒரு மொழி; அதில் Sin ,Cos போன்றவை மொழியின் புது வார்த்தைகள். இந்தப் புது வார்த்தைகளைத் தெரிந்துகொள்ளாமல், மொழியைப் புரிந்துகொள்வது மிகவும் கடினம்.

கீழே கொடுக்கப்பட்டுள்ள நான்கு நிலைகளைத் தெரிந்துகொண்டாலே போதும், நீங்கள் கணிதத்தில் சிறந்து விளங்கலாம்.

1. புரிந்துகொள்ளுதல்

2. புரிந்துகொண்டதை வெளிப்படுத்துதல்

3. கற்றுக்கொண்டதைப் பயன்படுத்துதல்

4. மீண்டும் நினைவுபடுத்திப் பார்த்தல்

உதாரணத்துக்குச் சிலவற்றை பார்க்கலாம்.

இமயமலையைப் பற்றிப் படிக்கிறோம், அதன் நீளம், உயரம் முதலான அதன் தன்மைகளைத் தெரிந்துகொள்கிறோம். பின்பு தேர்வில் மீண்டும் நினைவுகூர்ந்து எழுதுகிறோம். நீங்கள் இமயமலையைப் பற்றிப் படித்தது உன்மையா, இல்லையா என்பதைத் தெரிந்துகொள்ள நேரில் சென்று பார்க்க வேண்டிய அவசியம் இல்லை. ஆனால், கணிதப் பாடத்தில் நீங்கள் மேற்கண்ட முறையில் தேர்ச்சி பெற முடியாது.

பயன்படுத்தும் திறன் இல்லை யெனில், அதனைக் கணிதத்துக்கான அறிவாகச் சொல்ல முடியாது.

இசை, ஓவியம், பிற மொழிகளைக் கற்றல் ஆகியவை போன்றுதான் கணிதமும் ஒரு தனித்திறன்.

Saturday, January 28, 2017

கல்லும். கவி பாடும்...தாராசுரம்...

நெஞ்சில் நீங்காமல் இருப்போம்...

🚫ஒரு ஊரில் ஒரு செல்வந்தன் இருந்தான். அவன் வியாபார நிமித்தமாக வெளியூர் சென்று திரும்பிய போது அவனது அழகான பெரிய பண்ணை வீடு தீப்பற்றி எரிந்து கொண்டிருந்தது.

💐"அந்த ஊரிலேயே மிகவும் அழகான வீடு அவனுடையது தான். .

💐 "அந்த வீட்டை இரண்டு மடங்கு விலை கொடுத்து வாங்க பலரும் தயாராக இருந்தனர். ஆனால் இவன் விற்கவில்லை. 

💐 "இப்போது அந்த வீடு அவன் கண் முன்னே எரிந்துகொண்டிருந்தது.

💐"ஆயிரம் நபர்கள் சுற்றி நின்று வேடிக்கை பார்த்து கொண்டிருந்தார்கள். தீ முழுவதுமாக பரவிவிட்டதால் அதை அணைத்தும் பிரயோஜனம் இல்லை என்று எந்த முயற்சியும் எடுக்கவில்லை. .

💐"வணிகனோ செய்வதறியாமல் கண்ணில் நீரோடு புலம்பிகொண்டிருந்தான்.

💐"ஐயோ என் வீடு ! என் வீடு ! என்று அலறினான்.

💐"அப்போது அவனின் மூத்த மகன் ஓடிவந்து ஒரு விஷயத்தை சொல்கிறான் “தந்தையே ஏன் அழுகிறீர்கள் ?

💐 "இந்த வீட்டை நான் நேற்றே மூன்று மடங்கு லாபத்திற்கு விற்றுவிட்டேன். .

💐 "இதனால் நமக்கு நஷ்டம் இல்லை என்று கூறினான்.

💐 "இதை கேட்ட வணிகனுக்கு ஏக மகிழ்ச்சி.

💐"அவனது சோகம் அனைத்தும் மறைந்து மகிழ்ச்சி உண்டானது.

💐" இப்போது வணிகனும் கூடி இருந்த கூட்டத்தில் ஒருவனாக நின்று வேடிக்கை பார்க்க தொடங்கினான்.

🌹 " அதே வீடு தான் " ,

🌹" அதே நெருப்பு தான் " ,

💐"ஆனால் சில வினாடிகளுக்கு முன் இருந்த தவிப்பும் சோகமும் இப்போது அவனிடம் இல்லை.

💐"" சிறிது நேரத்தில் வணிகனின் இரண்டாவது மகன் ஓடி வந்து “தந்தையே ஏன் இப்படி கவலையில்லாமல் சிரிக்கிறீர்கள்?
நாங்கள் விற்ற இந்த வீட்டிற்கு முன்பணம் மட்டுமே வாங்கியுள்ளோம்.
முழு தொகை இன்னும் வரவில்லை.

💐"வீட்டை வாங்கியவன் இப்போது மீதி பணத்தை தருவானா என்பது சந்தேகமே” என்றான். .

💐"இதை கேட்ட வணிகன் அதிர்ச்சி அடைந்தான். மீண்டும் சோகத்தில் ஆழ்ந்தான். கண்ணீரோடு மீண்டும் புலம்ப ஆரம்பித்தான்.

💐"தனது உடமை எரிகிறதே என்ற எண்ணம் மீண்டும் அவனை வாட்டியது.

💐 "சில மணித்துளிகள் பின்பு வணிகனின் மூன்றாவது மகன் ஓடி வருகிறான். “தந்தையே கவலை வேண்டாம். இந்த வீட்டை வாங்கிய மனிதன் மிகவும் நல்லவன் போலும்.

💐"இந்த வீட்டை வாங்க அவன் முடிவு செய்தபோது வீடு தீ பிடிக்கும் என்று உங்களுக்கும் தெரியாது எனக்கும் தெரியாது.

💐 "ஆகையால் நான் பேசியபடி முழு தொகையை கொடுப்பது தான் நியாயம் என்று என்னிடம் இப்போது தான் சொல்லி அனுப்பினான்” என்று மகிழ்ச்சியோடு தெரிவித்தான்.

💐"இதை கேட்ட வணிகனுக்கோ ஏக சந்தோஷம்.

💐"கடவுளுக்கு நன்றி சொல்லி ஆடிப்பாடி மகிழ்ந்தான். கண்ணீரும் சோகமும் மீண்டும் காணாமல் போய்விட்டது.

💐"மீண்டும் கூட்டத்தில் ஒருவனாக நின்று வேடிக்கை பார்க்க தொடங்கினான்.

💐 " இங்கு எதுவுமே மாறவில்லை " ,

💐" அதே வீடு, அதே நெருப்பு, அதே இழப்பு ",

💐" இது என்னுடையது என்று நினைக்கும் போது அந்த இழப்பு உங்களை சோகத்தில் ஆழ்த்துகிறது.

💐" இது என்னுடையது அல்ல என்று நினைக்கும் போது உங்களை சோகம் தாக்குவது இல்லை. .

💐" நான், என்னுடையது, எனக்கு சொந்தமானது என்ற எண்ணம் தான் பற்று.

💐"உலகில் எதுவுமே நிரந்தரமானது இல்லை.

💐" ஒருவனுக்கு மட்டுமே சொந்தமானது இல்லை. அனைத்துமே அழிய கூடியது.

💐"நான் உட்பட எல்லாமே ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு பின் அழியக்கூடியது அல்லது வேறு ஒருவனுக்கு சொந்தமாக கூடியது என்பதை நாம் நினைவில் நிறுத்தினால் என்றும் கவலையில்லை..

அன்பாய் இருப்போம்..
பண்பாய் இருப்போம்..
அழிவிற்குப் பின்
அனைவரின் நெஞ்சில் நீங்காமலிருப்போம்...!!
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
இனிய இரவாக வாழ்த்துகள்...💐💐💐💐💐

வாழ்க்கை மாற்றிகள்!

வாழ்க்கை மாற்றிகள்!

நமது ஒட்டுமொத்த வாழ்க்கையையே புரட்டிப்போடும் அளவிற்கான பெரிய நிகழ்வுகள் மனித வாழ்வில் நடப்பதுண்டு. அதேசமயம், நமது ஒட்டுமொத்த வாழ்விற்கான மாற்றங் களைக் கொண்டுவரும் காரணிகளாக சின்னச் சின்ன நிகழ்வுகளும், தருணங் களும் உண்டு. அப்படியான விஷயங் களைக் கொண்டு, சிறு சிறு சம்பவங் களாக உருவாக்கப்பட்டு, “ராபர்ட் சுல்லெர்” அவர்களால் எழுதப்பட்டதே “லைப் சேஞ்சர்ஸ்” என்னும் இந்தப் புத்தகம்.

* சிக்கலற்ற திட்டம்!

எந்தவொரு பிரச்சினைக்கும் பூரண மான திட்டம் என்ற ஒன்று இல்லை என்கிறார் ஆசிரியர். அதாவது, ஒவ்வொரு திட்டமும் அதற்கே உரித்தான சிக்கலுடன் சேர்ந்தே இருக்கின்றது. மேலும், இதனை ஒரு நிகழ்வின் மூலம் விளக்கியுள்ளார் ஆசிரியர்.
ஒருவனுக்கு அழகிய முத்து ஒன்று கிடைக்கின்றது. ஆனால் அதன் ஒரு பகுதியில் சிறு குறைபாடு உள்ளதைக் காண்கிறான். அதை நீக்கிவிட்டால், இது இன்னும் அழகாகவும், விலைமதிப்பற்றதாகவும் மாறிவிடும் என நினைக்கிறான். அதனால் அந்த முத்தின் முதல் அடுக்கினை நீக்கிவிடுகிறான். ஆனால், அக்குறைபாடு சரியாகாமல் தொடர்ந்து இருப்பதைக் காண்கிறான். பிறகு அதன் இரண்டாவது அடுக்கினையும் நீக்கிவிடுகிறான். இப்பொழுதும் அந்த சிறிய குறைபாடு அப்படியே இருக்கின்றது. தொடர்ந்து ஒவ்வொரு அடுக்காக நீக்கிக்கொண்டே வருகிறான். இறுதியில் ஒட்டுமொத்த முத்தையும் இழந்து ஏமாற்றமடைகிறான்.

* இன்றைய நிலை!

நமக்கு ஒரு பிரச்சினை ஏற்படுகின்றது என்று வைத்துக்கொள்ளுங்கள். அந்த பிரச்சினையை ஒரே கண்ணோட்டத்தில் மட்டுமே அணுகாமல், அதன் தற் போதைய நிலையை சரியாக கண் காணித்து செயல்படும்போது மட்டுமே அதிலிருந்து மீண்டு வர முடிகின்றது. அதாவது, பிரச்சினையின் நேற்றைய நிலையானது இன்றைய நிலையி லிருந்து மாறுபட்டதாக இருப்பதற்கான வாய்ப்புகள் அதிகம். அதற்கான மாற்றங்களை நமது அணுகுமுறையில் கொண்டுவர வேண்டும்.
காட்டிலிருந்து பிடிக்கப்படும் யானை, எவ்வாறு பழக்கப்படுத்தப்படுகிறது என்பதை அறிந்திருப்பீர்கள். பிடிக்கப் படும் யானை வலிமையான நீண்ட சங்கிலியால் கால்களில் கட்டப்பட்டு, அதன் மறுமுனை பெரிய மரத்தில் பிணைக்கப்பட்டிருக்கும். பிடிபட்ட ஆரம்ப நாட்களில், சங்கிலியிலிருந்து விடுபட தொடர்ந்து யானை முயன்று கொண்டே இருக்கும். தன் கால்களை அசைத்து அசைத்து முயன்று, நாட் கள் செல்ல செல்ல இனி ஒன்றும் பயனில்லை என்ற முடிவுக்கு வந்து விடும். அதன்பிறகு அந்த யானைக்கு பெரிய மரமோ அல்லது வலிமை யான சங்கிலியோ தேவையில்லை. சிறிய இரும்பு கம்பியில் கட்டப்பட் டிருந்தாலும், தான் இன்னும் பழைய படி பெரிய மரத்திலேயே கட்டப்பட் டிருப்பதாக எண்ணி, அது விடுவிப்பதற்கு எவ்வித முயற்சியையும் எடுக்காது. நிகழ்கால நிலையை அறியாதிருப்பின், கடந்தகால வருத்தத்துடனே வாழ வேண்டியிருக்கும்.

வெற்றியின் ரகசியம்!

வளர்ப்பு பிராணிகளுக்கான உண வுப்பொருட்களை உற்பத்தி செய்யும் நிறுவனம் ஒன்று, நாய்களுக்கான உணவுப்பொருள் ஒன்றை புதிதாக தயாரித்தது. அனைத்து விதமான புரோடீன்ஸ், மினரல்ஸ், கார்போ ஹைட்ரேட்ஸ் மற்றும் கொழுப்புச்சத்து ஆகியவற்றை உள்ளடக்கியதாக இருந்தது அது. அழகான பேக்கேஜ் மற்றும் போட்டியாளர்களை விட குறைவான விலை என சிறப்பாக தயாரானது அப்பொருள். தனித்துவ மான முழு பக்க பத்திரிகை விளம் பரம் மற்றும் அதிக செலவிலான தொலைக்காட்சி விளம்பரங்களுடன் சந்தைப்படுத்தப்பட்டது அந்த உணவு.
மெதுவாக விற்பனையை தொடங் கிய அப்பொருள், ஆறு மாத காலத்திற் குள்ளாகவே விற்பனையில் மோசமான நிலையை சந்திக்க நேர்ந்தது. இதனால் நிறுவன தலைவர், அனைத்து மாவட்ட விற்பனை மேலாளர்களுடனான சிறப்பு கூட்டத்திற்கு ஏற்பாடு செய்திருந்தார். தரமான, விலை மலிவான, சிறந்த விளம்பரத்துடன் வெளியான பொருள், ஏன் விற்பனையில் சோபிக்கவில்லை என்ற கேள்வி அனைவரிடமும் கேட்கப் பட்டது. சிறிய நிசப்தத்திற்குப் பிறகு ஒருவர் மட்டும் நிறுவன தலைவரிடம் சென்று, நமது பொருளை நாய்கள் விரும்பவில்லை என்று கூறினாராம்.
ஆக, வெற்றிக்கான ரகசியம் சொகு சான அலுவலகத்தில் அமர்ந்துகொண்டு திட்டமிடுதலில் இல்லை. என்ன தேவை என்பதை அறிந்துகொண்டு, பிறகு அதற்காக செயல்படுவதிலேயே வெற்றி அடங்கியிருக்கின்றது என் கிறார் ஆசிரியர். காயத்தைக் கண் டறிந்து குணப்படுத்துவதும், சிக்கலைக் கண்டறிந்து தீர்வளிப்பதுமே வெற்றிக் கான ரகசியமாகும்.

நினைவில் வைப்போம்!

நமக்கு ஏற்பட்ட சிறந்த நிகழ்வுகளை அவ்வப்போது நினைவில் கொண்டு வருவது மிகச்சிறந்த வலிநிவாரணி என்கிறார் ஆசிரியர். ஆம், சிறந்ததை எண்ணிப்பார்க்க வேண்டுமே தவிர, இழந்ததை ஒருபோதும் நினைவில் வைத்துக்கொள்ளக்கூடாது. அதாவது மோசமான நிகழ்வுகளை மறந்து, நல்ல நிகழ்வுகளை நினைத்துப்பார்க்க வேண்டும்.
ஒரு சிறிய நோட்புக்கில், உங்களது தினசரி நிகழ்வுகளில் உங்களை அதிகம் மகிழ்ச்சியடைய வைத்த தருணங்களை மட்டும் குறித்துக்கொள்ளுங்கள். காலை உணவில் உங்களுக்கு பிடித்த பதார்த் தம், சந்தித்த நபர்களில் உங்களை சந்தோஷப்படுத்தியவர், சினிமாவில் உங்களுக்குப் பிடித்த காட்சி, படித் தததில் உங்களைக் கவர்ந்த கருத்துகள் என அனைத்து நல்ல விஷயங்களையும் பட்டியலிடுங்கள். அன்றைய நாளின் முடிவிலோ அல்லது குறிப்பிட்ட சில நாட்கள் இடைவெளியிலோ அல்லது துன்பமான நேரங்களிலோ இவற்றின் மீது பார்வை செலுத்துங்கள், அப் பொழுது இதன் மதிப்பு உங்களுக்கு தெரியவரும்.

மறைந்திருக்கும் செய்தி!

புதிதாக பல்பொருள் அங்காடி ஒன்றை துவங்குகிறான் இளைஞன் ஒருவன். அதன் திறப்பு விழாவிற்காக தயாரான சமயத்தில், அதே பகுதியில் ஏற்கெனவே இவ்வகையான கடை யினை நடத்திவரும் வியாபாரி ஒருவர், இளைஞனின் புதிய கடை தனது வியா பாரத்தைப் பெருமளவில் பாதிக்கும் என அச்சமடைகிறார். அதற்காக நன்கு ஆலோசித்து, உள்ளூர் செய்தித்தாளில் “ஐம்பது ஆண்டுகளாக வணிகம் செய்து வரும் எங்கள் கடையில் உங்களுக்கு தேவையான பொருட்களை வாங்குங் கள்” என்று விளம்பரம் செய்கிறார்.
இந்த விளம்பரத்தை கண்ட இளைஞன் கவலையடைகிறான். இந்தப் போட்டியை எவ்வாறு சமாளிப்பது? என்ன செய்வது? என்றெல்லாம் யோசித்து, அடுத்த வாரத்தில் அதே உள்ளூர் செய்தித்தாளில் “கடந்த ஒரு வாரம் மட்டுமே வணிகம் செய்துவரும் எங்களிடம் உங்களுக்கு தேவையான பொருட்களை வாங்குங்கள், அனைத்து விற்பனைப்பொருட்களும் புத்தம்புதியவை” என்று விளம்பரம் செய்து பதிலடி கொடுக்கிறான் அந்த இளைஞன். ஆக, ஏற்படும் இன்னல்களுக்கு உள்ளேயும் நமக்கு தேவையான நல்ல விஷயங்கள் மறைந்திருக்கும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

* மறைக்கப்படும் பகுதி!

உளவியல் பேராசிரியர் ஒருவர் தனது வகுப்பறையில் உள்ள பலகையில் ஒரு வெள்ளை காகிதத்தை ஒட்டுகிறார். அதில் ஒரு வட்டவடிவத்தை வரைந்து, அதில் கருப்பு வண்ணத்தை தீட்டுகிறார். பிறகு தனது மாணவர்களிடம், இதில் என்ன காண்கிறீர்கள்? என்று கேட்கிறார். ஒரு கருப்பு புள்ளியை பார்ப்பதாகவும், இருண்ட வட்டவடிவத்தை பார்ப்பதாகவும், கருப்பு தட்டு போன்றதைப் பார்ப்பதாகவும் தெரிவிக்கின்றனர் மாணவர்கள்.
இறுதியாக பேராசிரியர், காகிதத்தின் வெள்ளை நிறத்திலான பகுதி யாருக்கும் தெரியவில்லையா? என்று கேட்கிறார். ஆக, காகிதத்தில் உள்ள கருப்பு நிற பகுதியின் மீது மட்டுமே அனைவரது கவனமும் இருந்ததே தவிர, வெள்ளை பகுதியை ஒருவரும் கவனிக்கவில்லை. இதுபோலத்தான் பெரும்பாலானோர், சரியான விஷயங்களை விட்டுவிட்டு தவறான விஷயங்களின் மீதே தங்களது பார்வையை கொண்டிருக்கிறார்கள்.
நமக்கு ஏற்படும் நிகழ்வுகளின் வாயி லாக கிடைக்கும் நல்ல விஷயங்களே நமக்கான வாழ்க்கைப் பாடங்கள் என்பதை உணர்ந்து செயல்படுவோம்...

Wednesday, January 25, 2017

குடியரசு.....

💐குடியரசு💐

குடிமக்களால்
குடிமக்களுக்காக
உருவான
நாள்
இதை
பலர்
தவறாக
எண்ணி
குடியரசை
தன்னாதிக்க
அரசாக
மாற்றி
மக்களை
மாக்களாக
நினைத்து
வாழ்கிறார்கள்...

பாவம்
அவர்கள்
விடிந்த து
அறியாமல்
உறங்குகிறார்கள்
அதிகார
போதையில்...

குடியரசால்
நாட்டில்
செங்கோலாட்சி
நடக்கும்
என்றால்
நம் தமிழகத்தில்
காவல்
துறை
மூலம்
தமிழரை
செந்தமிழராய்
மாற்றியது
ஆராத
வடுவாய்..
என்றும்
நெஞ்சில்....

காலம்
மாறும்
காட்சியும்
மாறும்
என்ற
நம்பிக்கையோடு
நாட்களை
கடத்தி
வருகிறோம்
விடியலை
நோக்கி...
🌿🌿🌿🌿🌿🌿🌿
நட்புடன் ஆ.சிவா...
🌿🌿🌿🌿🌿🌿