Sunday, May 30, 2021

பகைபடத்தில் text & gif உருவாக்க...

அழகான வாழ்த்து அட்டைகள் ,& GIF படங்கள் உருவாக்க இந்த காணொளியை முடியும் வரை கண்டு பயன்பெற அன்போடு வேண்டுவதோடு மறக்காமல் எங்கள் YouTube channel யை subscribe செய்து ஆதரவு தர அன்போடு வேண்டுகிறேன்.
இவன்
என்றும் கல்விப்பணியில்
சேலம் ஆ.சிவா..

https://youtu.be/m__2gPQJDs4

Saturday, May 29, 2021

கொரோனேவை வெல்வோம்....?

கோவாக்சின் மற்றும் கோவிஷீல்டு இரண்டுக்கும் உள்ள வேறுபாடு 

கோவாக்சின் (Covaxin) மற்றும் கோவிஷீல்ட் (Covishield) ஆகிய இரண்டு தடுப்பூசிகளின் உள்ளடக்கமும் கொரோனா வைரஸ் தான்.

பெரும்பாலும் எந்த ஒரு நோயிற்கான தடுப்பு மருந்தாகவும் பயன்படுத்தப்படுவது அந்த நோயை உண்டாக்கும் நோய்க் கிருமியே ஆகும். அதாவது அந்த நோய்க்கிருமியின் நோய் உண்டாக்கும் திறனை மட்டுப்படுத்தியோ, அல்லது நீக்கியோ, அந்த நோய்க்கிருமியால் உண்டாகும் நோய்க்கு, அந்த நோய்க்கிருமியே தடுப்பு மருந்தாகப் பயன்படுத்தப்படுகிறது.

தடுப்பு மருந்தாகப் பயன்படுத்தப்படும் நோய்க்கிருமிகள் கொல்லப்பட்டோ அல்லது செயலிழக்க வைக்கப்பட்டோ (Inactivated) தான் பயன்படுத்தப்படுகிறது. எனவே தடுப்பூசியினால் நமக்கு நோய்வாய்ப்பட வாய்ப்பில்லை. மாறாக தடுப்பூசிகள் நமது உடலின் நோய் எதிர்ப்பாற்றலை அந்த நோய்க்கு எதிராக அதிகரிக்க வைக்கின்றன. முதலில் தடுப்பூசி எப்படி வேலை செய்கிறது என்பது புரிந்தால் தான் அது எப்படி நோய் எதிர்ப்பாற்றலை அதிகரிக்க செய்கிறது என்று விளங்கும்.

தடுப்பூசிகள் எவ்வாறு வேலை செய்கின்றன?

சுருக்கமாகவும் எளிமையாகவும் விளக்குகிறேன். எந்த ஒரு நோய்க்கிருமி நமது உடலில் நுழைந்தாலும், நமது உடலில் உள்ள நோய் எதிர்ப்பு அமைப்பு (Immune system) அந்த நோய்க்கிருமி ஒரு அந்நியப் பொருள் என்று அடையாளம் கண்டு கொள்ளும். உடனடியாக அந்த அந்நிய நோய்க்கிருமியைத் தாக்கி அழிக்கும் வேலையை ஆரம்பிக்கும். இதன் விளைவு தான் நோயின் போது நமக்கு ஏற்படும் காய்ச்சல். நமது உடலின் நோய் எதிர்ப்பு அமைப்பு நமது உடலில் நுழைந்த நோய்க்கிருமியை முற்றிலும் அழித்தப் பின் நாமும் காய்ச்சல் நீங்கி நலம் பெறுவோம்.

இந்த நோய் எதிர்ப்பு செயல்பாடுகள் அனைத்தும், நமது உடலில் உள்ள நோய் எதிர்ப்பு அமைப்பின் நினைவு செல்களின் (Memory cells) மூலம் நினைவில் நிறுத்திக் கொள்ளப்படும். அந்த நோய்க்கிருமியைப் பற்றிய தகவல்கள் அனைத்தும் இந்த நினைவு செல்களில் பதிந்து வைக்கப்பட்டிருக்கும். மீண்டும் நமது உடலில் அதே நோய்க்கிருமி நுழைந்தால், இந்த நினைவு செல்கள் உடனடியாக அந்த நோய்க்கிருமி இருக்கும் இடத்திற்கு, அழிக்கும் செல்களை (Killer cells) அனுப்பி, அந்த நோய்க்கிருமியை அழிக்கும். இப்படி இயற்கையாக, ஒரு நோய்க் கிருமிக்கு எதிராக நாம் பெறும் நோய் எதிர்ப்பு சக்தியே, பெறப்பட்ட நோய் எதிர்ப்பாற்றல் (Acquired immunity) என்று அழைக்கப்படுகிறது.

இப்படி இயற்கையாக நமக்குக் கிடைக்கும் நோய் எதிர்ப்பு சக்தியை செயற்கையாகத் தூண்டிப் பெறுவதற்கு உதவுவதே தடுப்பூசிகள் ஆகும். அதாவது நோய் உண்டாக்கும் திறன் மட்டுப்படுத்தப்பட்ட அல்லது நீக்கப்பட்ட நோய்க்கிருமியை உள்ளடக்கிய தடுப்பு மருந்து நமது உடலில் செலுத்தப்பட்ட உடன்,  நமது உடலின் நோய் எதிர்ப்பு அமைப்பு அந்த நோய்க்கிருமியை கண்டறிந்து அதை அழிக்கும் வேலையை ஆரம்பிக்கும். இதன் விளைவுதான் தடுப்பூசி எடுத்துக் கொண்ட அன்று நமக்கு ஏற்படும் காய்ச்சல், உடல் வலி ஆகியவற்றுக்கான காரணம்.

இவ்வாறு, அந்த நோய்க்கிருமியைப் பற்றிய தகவல்கள் அனைத்தும் தடுப்பூசியின் மூலம், நமது உடலின் நோய் எதிர்ப்பு அமைப்பின் நினைவு செல்களில் பதிய வைக்கப்பட்டு விடும். இதன் காரணமாக நமது உடல் உண்மையான நோய்க் கிருமியின் தொற்றுக்கு ஆளாகும் போது தடுப்பூசியின் மூலம் பெறப்பட்ட நோய் எதிர்ப்பாற்றலால் அந்த நோய்க்கிருமி அழிக்கப்பட்டு விடும். இதன் மூலம் அந்த நோய்க்கிருமியினால் ஏற்படும் நோய்க்கு ஆளாகாமலேயே நாம், அந்த நோய்க்கிருமிக்கு எதிராக நோய் எதிர்ப்பு ஆற்றலை தடுப்பூசியினால் பெறுவோம். சரி, இப்போது கோவாக்சின் மற்றும் கோவிஷீல்டைப் பற்றிப் பார்ப்போம்.

கோவாக்சின்

கோவாக்சின் தடுப்பு மருந்து, பாரத் பயோடெக் நிறுவனத்தால் (Bharat Biotech international Ltd), இந்திய மருத்து ஆராய்ச்சிக் கவுன்சில் (ICMR) மற்றும் தேசிய வைராலஜி நிறுவனம் (National Institute of Virology) ஆகியவற்றுடன் இணைந்து தயாரிக்கப்பட்டது.

கோவாக்சின் தடுப்பு மருந்தில், முழுமையான கொரோனா வைரஸ் செயலிழக்க வைக்கப்பட்டு பயன்படுத்தப்படுகிறது.

கோவிஷீல்ட்

கோவிஷீல்ட் தடுப்பு மருந்து, ஆக்ஸ்ஃபோர்ட்-ஆஸ்ட்ரா ஸெனெகா (Oxford-AstraZeneca) எனும் நிறுவனத்தால் வடிவமைக்கப்பட்டு, இந்தியாவில் இந்திய சீரம் நிறுவனத்தால் (Serum Institute of India) உற்பத்தி செய்யப்படுகிறது.

கோவிஷீல்ட் தடுப்பு மருந்தில், கொரோனா வைரசின் ஒரு முக்கிய பாகமான முள் புரதத்தை (Spike protein) மட்டும் எடுத்து சிம்பன்சி குரங்குகளில் காணப்படும் அடினோ வைரஸ் (AdenoVirus) எனப்படும் வைரசுடன் குளோனிங் (Cloning) முறையில் இணைத்து பயன்படுத்தப்படுகிறது.

கொரோனா வைரசின் மேல் முள் முள்ளாகத் தோன்றும் பாகம் தான் முள் புரதமாகும். இந்த முள் புரதம் தான் மனித செல்லுடன் கொரோனா வைரஸ் பிணைப்பு ஏற்படுத்த உதவும் முக்கிய காரணியாகும். இந்த முள் புரதத்தை நமது உடலின் நோய் எதிர்ப்பு அமைப்புக்கு தடுப்பூசியினால் அடையாளம் காட்டுவதன் மூலம் நாம் கொரோனா வைரசுக்கு எதிராக நோய் எதிர்ப்பைப் பெறலாம். இதுவே கோவிஷீல்டின் செயல்படும் முறையாகும்.

டோஸ் (Dose)

கோவாக்சின் மற்றும் கோவிஷீல்ட் இரண்டுமே இரண்டு தவணையாகப் போடப்படுகிறது.

கோவாக்சின் மற்றும் கோவிஷீல்ட் இரண்டுமே செயலிழக்க வைக்கப்பட்ட கொரோனா வைரஸைக் கொண்டுள்ளதால், அதன் மூலம் கிடைக்கும் நோய் எதிர்ப்பாற்றல் மிக நீண்டக் காலத்திற்கு நீடிப்பதற்காகத் தான் இரண்டு தவணையாக தடுப்பூசி போடப்படுகிறது.

செயல்திறன்

சமீபத்திய ஆய்வின் படி கோவாக்சின் தடுப்பூசியின் செயல்திறன் 81% ஆகவும், கோவிஷீல்டின் செயல்திறன் 90% ஆகவும் உள்ளது.

கோராவாசிகளுக்கு எனது அன்பான வேண்டுகோள் !

கொரோனா பெருந்தொற்று மூன்றாம் அலை, நான்காம் அலை என்று நீண்டு கொண்டே செல்லாமல் இருக்க நாம் அனைவரும் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளுதல் அவசியம். தடுப்பூசியைப் பற்றிய அவநம்பிக்கை, தேவையற்ற பயம் ஆகியவற்றைப் புறம் தள்ளிவிட்டு நாம் அனைவரும் கட்டாயம் தடுப்பூசியைப் போட்டுக் கொள்ள வேண்டும். நாம் போட்டுக் கொண்டதோடு நிற்காமல் நமது குடும்ப உறுப்பினர்களையும் அவசியம் போட்டுக்கொள்ள செய்ய வேண்டும். ஏதேனும் மருத்துவ சிக்கல்கள், உடல் நலக் குறைபாடு உள்ளவர்கள் மருத்துவரிடம் கலந்தாலோசித்து விட்டு பின்னர் அவர் அறிவுரையின் படி போட்டுக் கொள்ளலாம். மற்றபடி, எந்த விதமான மருத்துவ சிக்கல்களும், உடல் நலக் குறைபாடுகளும் இல்லாத ஆரோக்கியமான நபர்கள் எந்தவிதமான தயக்கமும் இன்றி தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம்.

நீங்கள் வசிக்கும் இடத்திற்கு அருகேயுள்ள ஆரம்ப சுகாதார மையங்களில் அரசால் இலவசமாகத் தடுப்பூசி போடப்படுகிறது.

*தடுப்பூசி போட்டுக் கொள்வோம் !*

கொரோனா எனும் கொடிய நோயை வெல்வோம் !

நன்றி..!
பகிர்வு பதிவு...

Friday, May 28, 2021

முன்களப்பணியாளர்களுக்கு சமர்ப்பணம்...

வணக்கம் உறவுகளே & நட்புகளே...

இந்த காணொளி இந்த பெரும் தொற்றில் களப்பணி ஆற்றி வரும் களப்பணியாளர்களான மருத்துவர்கள்,செவிலியர்கள்,ஊடகங்கள் மற்றும் அரசு பணியாளர்கள் அனைவருக்கும் எங்களது சிரு துளி சமர்ப்பணம், இந்த காணொளி...அனைவரும் காணுங்கள் மறக்காமல் எங்கள் எங்கள் சானலை மறக்காமல் Subscribe செய்து ஆதரவு தருமாறு அன்போடு வேண்டுகிறேன்...


என்றும் சமூக அக்கறையுடன்
ஆ.சிவா...சேலம்.

https://youtu.be/MlHKeu_kbrE

Friday, May 21, 2021

விருந்தாளி அல்ல...

#கொரோனா 

கொரோனா வெனும் சூராவளி அடித்துக் கொண்டிருக்கும் இவ்வேலையில். 

அரசாங்கமும் மருத்துவர்களும் செவிலியர்களும் முன்களப் பணியாளர்களும் காவல்துறையினரும் பொதுப்பணித்துறையினரும் ஆற்றும் பணி போற்றுதற்குறியது.

இவ்வளவு பேர் எதற்காக இரவு பகலாக உயிரைப் பனயம் வைத்து பணிபுரிகிறார்கள், நோய்த் தொற்றில் இருந்து மக்களை காக்க வேண்டும் கொரோனாவை முற்றிலுமாக ஒளிக்க வேண்டும் என்ற முனைப்புடன் சேவையாற்றி வருகிறார்கள். 

மருத்துவர்களும் செவிலியர்களும் சிகிச்சைப் பணிகளைத் தாண்டி பொது மக்களை எதிர்கொள்வதிலும் சில சமயங்களில் கடுமையான உளவியல் பிரச்சனைகளை எதிர்கொள்ள வேண்டியதிருக்கிறது.
ஒருசில மருத்தவர்கள் உயிர் தியாகமும் செய்திருக்கிறார்கள் என்பது நமக்கெல்லாம் தெரியும். 

இவ்வளவு பேரும் எதற்காக இப்படி 
முனைப்புடன் நேரம் காலம் பாராமல் 
தங்களது கடைமைகளை செய்கிறார்கள், நமக்காக தானே அதை ஏன் எள்ளளவும் புரிந்துகொள்ளாமல் நடந்து கொள்கிறீர்கள். 

மளிகை கடைகள் காய்கறி கடைகள் பழக்கடைகள் தேநீர் கடைகள் இறைச்சிக் கடைகளில் இப்படி எங்குப் பார்த்தாலும் சிறிது கூட சமூக இடைவெளி துளியும் இல்லாமல் வாங்க குவிகிறீர்கள்.
ஏன் தினமும் வாங்கி சமைத்து உண்டால் தான் சாப்பிட முடியுமா.
ஏன் இரண்டு நாட்களுக்கு மூன்று நாட்களுக்கு சேர்த்து வாங்கி வைத்துக்கொள்ள முடியாதா. உங்கள் ஆரோக்கியத்திற்கு காய்கறிகளும் பழங்களும் வாங்கி சாப்பிட்டால் நோய் எதிர்ப்பு சத்தியுடன் இருக்கலாம் என்ற நினைப்பா. 

நீங்கள் கடைகளில் சமூக இடைவெளி இல்லாமல் வாங்கிச் செல்வது பொருட்களை மட்டும் அல்ல கொரோனா தொற்று நோயையும் தான் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.இதனால் அதிகமாக பாதிக்கப்படுவது உங்கள் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் தான் என்பதை நீங்கள் சிறிதளவாவது யோசித்தீர்களா. 

இன்னும் கடற்கரை சாலையின் வழியே நடை பயிற்சி செய்கிறவர்கள் ஏன் நீங்கள் எல்லாம் படித்த அதி மேதாவிகள் தானே ஏன் அந்த நடை பயிற்சியை உங்கள் வீட்டின் மொட்டைமாடி அல்லது வீட்டிற்கு உள்ளேயே நடை பயிற்சி செய்ய முடியாதா. வெளியில் வந்து பயிற்சி செய்தால் தான் ஆரோக்கியம் கிடைக்குமா. இது ஒருபுறம் இருந்தாலும் விவேகானந்தர் இல்லம் அருகே ஒருவன் அதிகாலையிலேயே 
ஆர்கானிக் உணவு என்று நடைபாதை கடையை நடத்துகிறார்
அவரிடம் போய் சமூக இடைவெளி சிறிதும் இல்லாமல் வாங்கி சாப்பிடுகிறீர்கள் ஏன் இங்கே வந்து வாங்கி சாப்பிட்டால்தான் உங்கள் உடல்நலம் மேம்படுமா. 

இன்னொன்று ஊரடங்கு தளர்வு முடிந்த பின்னும் வீதிகளில் நடமாடுவது இரு சக்கர வாகனங்களில் செல்வது என்று சிறிது கூட சமூக பொருப்பு இல்லாமல் நடந்து கொள்வது எவ்வளவு கீழ்த்தரமான செயல் என்பதை நினைத்து பாருங்கள். 

மருத்துவமனைகளில் இடம் கிடைக்காமல் ஆக்ஸிஜன் இல்லாமல் எவ்வளவு பேர் உயிரைக் கையில் பிடித்து அவர்களது குடும்பத்தினர் விடும் கண்ணீரை சமூக ஊடகங்களிலும் தொலைக்காட்சிகளிலும் பார்க்கவில்லையா. 

அது நம்மிடம் வராத வரையில் தான் அது வெறும் செய்தி அந்நிலை உங்களுக்கு வராமல் பார்த்துக்கொள்ளுங்கள். 

சிறிதாவது இந்நேரத்தில் நம் நலநிற்காக பாடுபடும் அரசாங்க ஊழியர்கள் மருத்துவ பணியாளர்கள் காவல்துறையினருக்கும் ஒத்துழைப்பு கொடுங்கள். 

வீட்டிலேயே இருங்கள் உங்கள் வீர சாகசங்களை காட்ட இது நேரமில்லை. 

நான் காணும் காட்சிகளை வைத்தே இந்த பதிவை பதிவு செய்கிறேன்.
மற்றவர்களின் உயிரோடும் வாழ்கையோடு விளையாடாதீர்கள். 

முடிந்த வரை வீட்டிலேயே இருந்து 
கொரோனாவை இந்தியாவை விட்டே விரட்டுவோம். 

ஒன்றை மட்டும் மனதில் கொள்ளுங்கள் கொரோனா நமது விருந்தாளி அல்ல உங்கள் வீட்டிற்கு அழைத்துச் செல்ல.

சமூக அக்கறையுடன்.

மீள் பதிவு...( பகிர்வு)

Thursday, May 20, 2021

நீங்களும் மனிதர்கள்தானே...?

நீங்கள் எவ்வகை மனிதர்கள்?

1."இட்சக்கணக்கில் சம்பளம் வாங்கும் ஆசிரியர்களின்  சம்பளம் பாதியாகக் குறைக்கப்படுமா ?"

2."ஓராண்டாகப் பணிக்குச் செல்லாமல்
சம்பளம் வாங்கும் ஆசிரியர்கள்".

3."ஆசிரியர்களின் சம்பளத்தை நிறுத்திவிட்டு அதைப் ஒவ்வொரு குடும்ப அட்டைதாரருக்கும் பகிர்ந்தளித்தால் பத்தாயிரம் ரூபாய் கிடைக்கும்".

4."ஆசிரியர்களுக்கு வழங்கும் சம்பளத்தை பாதியாகக் குறைத்து விட்டு அதை முன்களப் பணியாளர்களுக்கு வழங்க வேண்டும்".

சமூகவலைத் தளத்தில் தீயாக பரவிவருபவை இவை.

ஏன்  ஆசிரியர்கள் மீது இவ்வளவு வன்மம் ?

1.முதலில் ஓர் உண்மையைத் தெரிந்துகொள்ளுங்கள் ஆசிரியர்களின் சம்பளம் இலட்சங்களில் இல்லை .இருபது  ஆண்டுகளுக்கும் மேல் பணிபுரிபவர்களில் இலட்சத்தை தொடுபவர்கள் சிலரிலும் சிலரே .
பெரும்பாலான ஆசிரியர்களின் சம்பளம் முப்பதாயிரத்திற்கே முட்டுவதை சமூகவலைத்தளப் போராளிகள் அறிந்திருக்க வாய்ப்பில்லை.

2.ஓராண்டாகப் பணிக்குச் செல்லவில்லை என்று கண்ணை மூடிக் கொண்டு  பதிவிடுபவர்களே...
கடந்த ஆகஸ்ட் 2020ஆம் ஆண்டிலிருந்து ஏப்ரல் 2021 கடைசி நாள்வரை சென்று கற்றல்சார்ந்த பணிகளில் ஈடுபடுபட்டிருக்கிறோம்.
தேர்தல் பயிற்சி வகுப்புகள்,
தேர்பணி என்று ஆசிரியர்களின் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த பணியும் அதில் ஒன்று.

3.குடும்ப  அரிசி அட்டைதாரர்களுக்கு 
நான்காயிரம்  என்ன பத்தாயிரம்கூட வழங்குவார் மாண்புமிகு முதல்வர் அவர்கள் .அது அவரின் வள்ளல் தன்மை.மக்களின் மீது கொண்ட அக்கறை. ஆனால் அதை ஒரு குடும்பத்தின் வயிற்றில் அடித்துதான் பண்ண வேண்டும் என்ற அவசியம் இல்லை அவருக்கு.

4. முன்களத்தில் நிற்கும் மருத்துவர் ,செவிலியர்களுக்கு முதல்வர் ஊக்க ஊதியத்தை ஏற்கெனவே அறிவித்திருக்கிறார்.தேவைப்படின்  துப்பரவுப் பணியாளர் ,காவலர்களுக்கும் அறிவிப்பார்.இதற்காக இன்னொருவர் உலையில் கை வைக்க வேண்டிய அவசியம் இல்லை அவருக்கு.

ஆசிரியர் என்றால் இளக்காரமா?

உங்கள்  தேவைக்காகக் குரல் கொடுப்பது ஒருவகை

எங்களுக்கு இவையெல்லாம் வேண்டும் என்று குரல் கொடுப்பதுவம் ஒருவகை

இவர்களுக்கு இதைக் கொடுக்காதீர் என்பது எவ்வகை ?

நீங்கள் எவ்வகை மனிதர்கள்?

மருத்துவ படிப்பிற்கு இடம் கிடைத்தும்  வசதியின்றி சேராமல்...

பொறியியல் கல்லூரிகளில்  படிப்பை பாதியில் விட்டுவிட்டு...

'ஆசிரியர் பயிற்சியில்' சேர்ந்தது எதற்காகத் தெரியுமா ? 

எங்களின் பசியை நீண்ட நாட்களுக்குத் தள்ளிப் போட முடியாத காரணத்தினால்தான்.

இப்போதுள்ள ஆசிரியர்களில் 70_90 சதவீதம்பேர் முதல் தலைமுறையினர் என்பதை அறிவீர்களா?

எங்கள் வேலைகளில் ஏதேனும்
ஐயப்பாடு இருப்பின் எங்கள் வகுப்பறையில் ஒருநாள் மாணவராய் இருந்து பாருங்கள்.

ஒருவேளை உங்கள் பிள்ளை என் வகுப்பறையில் என் பிள்ளையாக மாறிப்போய் இருப்பின் தாரளமாக வாருங்கள் ;பேசுவோமே!
அப்போது வந்தீர்களா?

அதிகபட்சமான 'எதிர்_கேள்வி 'உங்கள் குழந்தைகளை அரசுப்பள்ளியில் சேர்ப்பீர்களா? என்பதுதானே!

'உறுதியாகத் தயாராக இருக்கிறோம்' .

சொல்லப் போனால் காத்துக் கொண்டிருக்கிறோம்.

அதைச் சட்டமாக்கும்போது அனைத்து அரசு ஊழியர்களின்  குழந்தைகள் அரசுப்பள்ளிகளில் படிக்கும் சூழல் உருவாகும்.அதாவது மாவட்ட ஆட்சித் தலைவர் முதல் கடைநிலை ஊழியர்வரை .

கட்டடங்கள்  உயிர்பெறும்.
(இடிந்த கட்டடங்களை சீர்படுத்த எவ்வளவு பாடு படவேண்டியது  இருக்கிறது தெரியுமா?)

விளையாட்டுத் திடல் விரியும்.

கழிவறைகள் பளிங்காகும்.

வாகன வசதி உருவாக்கப்படும்.

சத்துணவு தரம் பெறும்.

மரங்கள் சூழ்ந்து சோலையாகும்.

கண்காணிப்பாளர் ,குழந்தைகளைப் பராமரிப்போர் போன்ற தேவைக்கேற்ப பணியிடம் உருவாக்கப்படும்.

தனியார் பள்ளிகள் என்ற ஒன்றே இல்லாமல் போகும்.(கவனிக்க)

தனியார் பள்ளி சகோதர சகோதரிகள் முறையான தேர்வைச் சந்தித்து அரசு வேலைக்கு வரும் சூழல் உருவாகும்.

(மாண்புமிகு முதல்வர் அவர்களுக்கும் ,பெருமதிப்பிற்குரிய  அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்களுக்கும் இத்தகவல் சேர்ந்தால்  அதுவே எங்கள் பெரும்பேறாகும்)

இதற்கு தேவை ஒரு சட்டம்.

எங்கே உங்கள் குரலை உயர்த்துங்களேன் பார்ப்போம்.

விடுமுறை நாட்களில் பீர்பாட்டில்களை பள்ளிச்சுவரில் உடைக்காமல் இருக்க முடியுமா ?

நல்ல பள்ளிக் கட்டமைப்புக்காக குரல்கொடுக்க இயலுமா?

பள்ளிக்கு வரும் மாணவிகளை 
சீண்டாமல் இருக்க முடியுமா?

இவ்வளவு ஏன் உங்கள் ஊரில் 
மாணவர்களை உற்சாகப்படுத்த 
ஒரு பென்சில்,குச்சி வாங்கிக் கொடுத்ததுண்டா?

"எண்ணம் தெளிவாக வையுங்கள்":

 அரசு அறிவித்துள்ள முழு ஊரடங்கை மதிக்க மாட்டீர்கள்.

முகக்கவசம் அணிய மாட்டீர்கள்.

தடுப்பூசி எடுத்துக்கொள்ளவும் மாட்டீர்கள் ;
அதற்கு எதிராக வதந்தியும் பரப்புவீர்கள்.

பொறுப்பற்ற ஒரு குடிமகனாக நீங்கள் செய்வதெல்லாம் சரி.

ஏதோ நாங்களாகவே பள்ளிக்குச் செல்ல மறுத்து வீட்டிலிருந்துகொண்டு சம்பளம்
பெற்றுக் கொள்ளவதாக நினைப்பு
உங்களுக்கு ...

ஓர் ஆசிரியர் என்பவர் ஆசிரியர் மட்டுமன்று அவருக்குள் ஓர் எளிய குடும்பம் மறைந்திருக்கிறது.

அதற்கான தேவையும் விரிந்திருக்கிறது.

தங்கை மகப்பேற்றிற்காக வாங்கிய கடனுக்கு இன்னமும் வட்டி கட்டியபாடில்லை.

அம்மாவின் மாத்திரைகள் 
இரண்டாயிரங்களில் கரையும் விசித்திர தன்மை கொண்டவை.

தம்பியின் பொறியியல் இறுதியாண்டு பொறிவைத்து காத்திருக்கும்

ஊர்ப்பசங்களின் 'சிறந்த மட்டைவீச்சாளருக்கான தொடர் விருது' இவரையே சார்ந்து விளையாடும்.

எங்களின் வார இறுதிகளோ 
பருவத்தேர்வு முடிவுகளோ
பல எழுதுகோள்களை
மகிழ்வாக கபளீகரம் செய்துவிடும்.

எங்களுக்கும் இஎம்ஐம் உண்டு.

எங்களுக்கும் மாதச் சம்பளத்தை தாண்டிய 
கடனும் உண்டு.

இப்படியாகவே பெரும்பாலான ஆசிரியர்களின் வாழ்க்கை 
நகர்ந்து கொண்டிருக்கும் ..

பொறாமையை விட்டொழியுங்கள்:

படித்தல்_ ஒரு தொழிற்பெயர் மட்டுமன்று.
அதன் ஆணிவேர் தீவிர 'வினை'ச்சொல்லாகும்.

இரவு பகல் பாராமல், 
ஊர் சுற்றித் திரியாமல், 
உறவுகள் தவிர்த்து ,
ஒரு நாளைக்கு பன்னிரண்டு மணிநேரத்திற்கும் மேலாகப்படித்து, 
தகுதித் தேர்வெழுதி,
தகுதியை வளர்த்துக் கொண்டு,
ஆசிரியராய் நிற்க நாங்கள்  பட்ட பாடு இருக்கே....

கடினப்பட்டு படித்ததால் உண்டான எளிய வழியை எங்கள் பிள்ளைகளுக்கு வழங்கி 
அவர்களை வாழ்வாங்கு வாழ 
முயற்சி செய்யும் ஆசிரியர் பணி 
நீங்கள் நினைப்பதுபோல சாதாரணப் பணியன்று.

அதாவது நீங்கள் 
ஒருவரைப் பற்றி குறைசொல்வது போன்று 
எளிய பணி அன்று 

ஒன்று செய்யுங்கள் 
மாமனிதர்களே ...

ஆறாம் வகுப்பிலிருந்து பத்தாம்வகுப்பு பாடநூல்வரையிலுள்ள அனைத்து  பக்கங்களையும் வரிக்குவரி படித்து வைத்துக் கொள்ளுங்கள்;
டிஎன்பிஎஸ்சி தேர்வுகளில் கலந்துகொண்டு தரவரிசையில் முன்னிலை பெற்றால் ஒருவேளை
அரசுப் பணி சாத்தியமாகலாம்.

அதற்கான காலம் முடிந்துவிட்டதென்றால் போய் பிள்ளை குட்டிங்கள படிக்க வையுங்க

இல்லையென்றாலோ
ஏதேனும் ஐயமிருந்தாலோ 
அருகிலுள்ள ஆசிரியர்களை 
கூச்சப்படாமல் அணுகுங்கள் .

கற்பித்தலுக்காக எப்போதும்
தயாராய் இருப்போம்
நாங்கள்.

நன்றி...

இந்த பதிவு ஒரு
பகிர்வு... பதிவு..

Saturday, May 15, 2021

புதிய பார்வை...புதிய கோணம்...

நீங்கள் எந்த அளவு அதிர்ஷடசாலி..??
இதை படிங்க..??

இதைப் படிப்பதால்.. உங்கள் வாழ்க்கை முறை.. கவலைகள் பழக்க வழக்கங்களில் கூட மாற்றம் ஏற்படலாம்..!!

* உண்ண உணவும்.. உடுத்த உடையும்.. வசிக்க இடமும் உனக்கு இருந்தால்.. உலகில் உள்ள 75% மக்களை விட.. நீ வசதி பெற்றிருக்கிறாய்..!!

* வங்கியில் பணமிருந்தால்.. அவ்வாறு உள்ள 8% பணக்காரர்களுள்.. நீயும் ஒருவன்..!! உலகில் உள்ள 80% மக்களுக்கு வங்கி கணக்கே இல்லை..!!

* உன்னிடம் கணிப்பொறி இருந்தால்.. நீ அவ்வாறு வாய்ப்பு பெற்ற.. 1% மனிதர்களுள் ஒருவன்..!!
நினைத்த நேரத்தில்.. நினைத்த நபருடன் மொபைலில் உன்னால் பேச முடிந்தால்.. அவ்வாறு வாய்ப்பே இல்லாமல் இந்த உலகில் இருக்கும்.. 175 கோடி மக்களை விட நீ மேலானவன்..!!

*நோயின்றி காலையில்.. புத்துணர்வுடன் நீ எழுந்தால்.. அந்த வாய்ப்பற்று இரவு படுக்கையிலையே.. உயிர் துறந்த பலரை விட.. நீ பாக்கியசாலி..!!

* பார்வையும்,, செவித் திறன்,, வாய் பேசாமை.. உள்ளிட்ட எந்த குறைபாடுகளும்.. இல்லாது நீ இருந்தால்.. அவ்வாறு உள்ள உலகில் உள்ள 20 கோடி மக்களை விட நீ நல்ல நிலையில் இருக்கிறாய்..!!

* போர்,, பட்டினி,, சிறைத்தண்டனை போன்ற சித்ரவதையில் நீ சிக்காமல் இருந்தால்.. உலகில் உள்ள 70 கோடி மக்களுக்கு கிடைக்காத நல்ல வாழ்க்கை அமைந்துள்ளது என அறிந்து கொள்..!!

*கொடுமைகளுக்கு உள்ளாகாமல்.. நீ விரும்பும் தெய்வத்தை தொழ முடிந்தால்.. உலகில் உள்ள 300 கோடி மக்களுக்கு கிடைக்காத சலுகையை நீ பெற்றுள்ளாய்..!!

* உன் பெற்றோரை பிரியாமல்  அவர்களுடன் இருந்தால்.. நீ துன்பத்தை அறியாதவன் என்பதை புரிந்து கொள்..!!

* தாகம் எடுத்தால் குடிப்பதற்கு.. உங்களுக்கு தண்ணீர் கிடைக்கிறதா..?
அப்படியெனில் நீங்கள் கொடுத்து வைத்தவர் தான்..!!
ஏனெனில் உலகம் முழுதும்.. சுமார் 100 கோடிக்கும் அதிகமான மக்களுக்கு.. பாதுகாப்பான தண்ணீர் குடிப்பதற்கு இல்லை..!!

* கல்வி அறிவு பெற்று.. இந்த செய்தியை உன்னால் படிக்க முடிந்தால்.. அவ்வாறு செய்ய இயலாத 80 கோடி பேர்களுக்கு கிடைக்காத கல்வியை நீ பெற்றுள்ளாய்..!!
உலக அளவில் எழுத படிக்க தெரியாத.. மக்களின் எண்ணிக்கை மட்டுமே 80 கோடிக்கும் மேல்..!!

* இணையத்தில் இந்த செய்தியை.. உன்னால் படிக்க முடிந்தால்.. அது கிடைக்காத 300 கோடி மக்களை விட நீ மேலானவன்..!!

* உன்னால் தலை நிமிர்ந்து நின்று சிரிக்க முடியுமானால்.. அவ்வாறு செய்ய இயலாத அளவுக்கு தைரியமும்.. நம்பிக்கையும் இல்லாதவர்களை விட.. நீ கொடுத்து வைத்தவன்..!!

* நீங்கள் அனுபவித்து வரும்.. வசதிகளையும்.. தொழில்நுட்பத்தையும் அனுபவிக்க இயலாமல்.. ஏன் அது பற்றிய அறிவு கூட இல்லாமல்.. கோடிக்கணக்கானோர் இவ்வுலகில் இருக்க.. ஆண்டவன் இவ்வளவு விசயம் உங்களுக்கு.. கொடுத்திருக்கும் போது.. நீங்கள் அதிர்ஷடசாலி இல்லையா பின்ன..??

* நீங்கள் அதிர்ஷடசாலி தான்..!!
வீண் கவலைகளை விட்டு.. அந்த கவலைகளை காரணம் காட்டி குடும்பத்தில் குழப்பங்கள்.. போதை பொருட்கள்.. என்பவற்றை விட்டு.. விட்டு
நான் அதிர்ஷடசாலி என்ற தைரியத்தோடு.. இயன்றவரை மற்றவர்களுக்கு உங்களால் முடிந்த வரை உதவுங்கள்..!!
உங்கள் வாழ்க்கை மேலும் அழகாகும்..!!

இருப்பதை உணர்ந்து நிறைவான சிந்தனையுடன் வாழப்
பழகிடுவோம்...! 👍💐

வாழ்த்துக்கள் 💐

பகிர்வு பதிவு...

Saturday, May 08, 2021

அன்னையர் தின வாழ்த்துகள்...

உலகம் 
முழுதும்
அவதரித்து
நடமாடும்
தெய்வம்
அன்னையர.
அனைவர்க்கும்
இதயம்
கனிந்த
நல்
வாழ்த்துகள்...

மிக்க 
அன்போடு


ஆ.சிவா....
ஆண்டாள்...
ரேஷ்மா..
சேலம்.

Wednesday, May 05, 2021

போட்டோ Graph ...ஒரு பார்வை...3

கற்றலின் பகிர்வு.

போட்டோகிராபிக்கு அடிப்படை காட்சி அமைப்பு  Rule of third. 

நாம் புகைப்பட கலையில் ஆரம்ப நிலையில் நாம் மொபைல் அல்லது கேமராவில் எடுத்து பழகுவோம் இதற்கு Bulls Eye என்று பெயர் இது ஒரு காட்சியை அதாவது ஒரு subject ஐ நடு சென்டரில் வைத்து எடுக்கப்படும் இது பார்ப்பதற்கு விருப்பபடாமலும் அதாவது Borring
மற்றும் அந்த புகைப்படம் ஒரு முழுமை இல்லாமல் இருக்கும். 

இதையே நாம் அடிப்படை composition Rule of third ஐ பயன் படுத்தி காட்சியை அமைத்தால் பார்க்க சிறப்பானதாகவும் ஒரு பொருள் உணர்த்தும் படியும் இருக்கும். அதாவது ஒரு subject ஐ காட்சி படுத்துபோது Rule of third அமைப்பை அமைத்து எடுக்கும்போது இதில்  Framing ல் horizontal & vertical type ல் ஒன்பது பிரிவுகளாக (Box type) ல் அமைந்து இருக்கும். (இது முதல் படத்தில் உள்ளது) 

உதாரணமாக ஒருவரை இடமிருந்து வலமாக பார்க்கிறார் போல் எடுத்தால் அவரை Framil இடது ஓரமாக அமைத்து எடுத்தால் அவர் வலது புரமாக பார்க்கிறார் என்பதை நாம் விளக்கி கூறவேண்டாம் அந்த காட்சி அமைப்பே  தெரிவித்து விடும். 

அதேபோல் Landscape புகைப்படங்கள் எடுத்தாலும் உதாரணமாக ஆகாயத்தை மையமாக காட்ட விரும்பினால் ஆகாயத்தை முதல் இரண்டு கிரிட் வரை அமைத்து எடுக்கலாம், அல்லது நிலத்தை மையப் படுத்தி எடுக்க நினைத்தால் நிலத்திற்கு அதிக அதாவது இரண்டு கிரிட்ல் பொருந்த அமைத்து காட்சியை அமைத்தால் தங்களுடைய புகைப்படம் மிக அழகாக தோன்றும். 

Grid ஐ கேமராவில் செட் செய்ய Nikon கேமராவில் (ஏனெனில் என்னிடம் Nikon கேமரா மட்டுமே உள்ளது)
View finder வழியாக பார்க்க Menu வில் சென்று custom setting menu தேர்வு செய்து அதில்
shooting display வில் உள்ள
view finder தேர்வு செய்து grid on செய்து கொள்ளவும், மொபைலில் செட்டிகில் சென்று Grid ஐ ஆன் செய்து கொள்ளவும். 

உதாரணமாக சில புகைப்படங்களையும் இங்கே தங்களின் பார்வைக்கு பதிவு செய்துள்ளேன். 

ஒளி இன்னும் ஒளிரும்...

நன்றி 
ஈஸ்வரன் ஒளிப்படக்காதலன் .

மற்ற நண்பர்களின் பயன்பாட்டுக்கு  இப்பதிவை மீள் பதிவு செய்கிறேன்.

மிக்க அன்போடு
ஆ.சிவா...சேலம்.

Monday, May 03, 2021

போட்டோ Graph ஒரு பார்வை..2

எனது கற்றலின் அனுபவ தொடர்ச்சி. 

ஒரு புகைப்படத்திற்கு ஒளி எப்படி முக்கிய பங்கு வகிக்கிறதோ அதேபோல் ஒரு காட்சி அமைப்பும் மிகமிக முக்கியம் நாம் காட்சி அமைக்கும் முறையில் தான் அது சிறந்த புகைப்படமா அல்லது ஒரு சாதாரண புகைப்படமா என்று தீர்மானிக்க படுகிறது. 

புகைப்பட கலை என்பது நம் ரசனையின் வெளிப்பாடு உதாரணமாக லைலா மஜ்னு காதல் கதையில் லைலா என்ன அவ்வளவு அழகானவளா? என்று ஒரு கேள்வி வருகிறது. அதற்கு பதில் லைலா எவ்வளவு அழகானவள் என்று உங்களுக்கு தெரிய வேண்டுமெனில், அவளை நீங்கள் மஜ்னுவின் கண்கள் வழியாகப் பார்க்கவேண்டும், என்று கவிதைபோல பதில் வரும். அதுபோல ஒரு காட்சியின் அழகை முழுமையாக உணர வேண்டும்மெனில் நீங்கள் ஒரு சிறந்த ஒளிப்பதிவாளராக இருக்கவேண்டும். 

காட்சி அமைப்பு தான் ஒரு சிறந்த புகைப்படத்தை உருவாக்குகிறது.
இதற்கு Composition என்று பெயர்,
இதில் பதினைந்து விதிமுறைகள் உள்ளன அவைகள்.
1.The rule of thirds
2.Leading lines
3.Golden ratio
4.Golden triangle
6.Depth of field
7.Framing
8.Fill the frame
9.Negative space 
10.Rule of odds
11.View point
12.Symmetery
13.Patterns
14.Balance
15Colour of theory 

இதை நாம் உபயோகித்தால் நாம் எடுக்கும் புகைப்படம் மேலும் சிறப்பானதாக அமையும்  The rule of third, leading lines, golden ratio, fill the frame, patterns இவைகளை  தெரிந்துகொண்டால் போதுமானது. 

அடுத்த  என்னுடைய அனுபவ பகிர்வு
The rule of thirds பற்றிய பதிவு
ஒளி தொடரும்.

நன்றி 
ஈஸ்வரன் ஒளிப்படக்காதலன் .

மற்ற நண்பர்களின் பயன்பாட்டுக்கு  இப்பதிவை மீள் பதிவு செய்கிறேன்.

மிக்க அன்போடு
ஆ.சிவா...சேலம்.