Tuesday, March 29, 2016

அப்பா என்ற அபூர்வம்....


                       --------------------

                  அப்பாக்கள்  :
                  -------------------------
 
ஒரு தந்தையாவது மிகவும் இலகுவானது.
ஆனால் , ஒரு தந்தையாக இருப்பது மிகவும் கடினமானது.

அப்பா...
ஒரு மனிதன், பின்னாளில் தனக்கு சொந்தமாக்கி வைத்திருக்கிற துணிச்சலும், திடமும் அப்பா என்கிற அடிவேரிலிருந்து கிடைத்தது தான். ஒரு குழந்தையின் நடத்தை, பழக்க வழக்கம், பண்பு எல்லாவற்றுக்கும் முன்னுதாரணமான வழிகாட்டி தந்தையே.

கடவுள் மனித உயிர்களுக்கு அளித்த மிகப்பெரிய வெகுமதி தந்தை. ஒரு நல்ல தந்தை ஆயிரம் ஆசிரியர்களுக்கு சமமாக இருப்பார். எப்போதும் எங்களோடு கூட இருந்து வழிகாட்டுகிற இந்த அகல்விளக்கின் தியாகம் அளப்பரியது.

தன் குழந்தையை வளர்த்து ஆளாக்க பொருளாதார ரீதியாக தந்தைமார் சுமக்கிற சுமைகள் அதிகமானவை . அதற்காக அவர்கள் படுகிற பாடுகள் வலிமிகுந்தவை.ا

ஒரு நல்ல தகப்பனுக்கு தன் குழந்தைகளின் வளர்ச்சி மீது இருக்கிற அக்கறையிலும், அங்கலாய்ப்பிலும் இருக்கும்  தீவிரம் வேறெந்த உறவுகளிடமும் இருக்காது. தம் குழந்தைகளின் எதிர்காலம் பற்றியே சதா சிந்திக்கும் அப்பாக்கள் அவர்களுக்காகவே தம் வாழ்க்கை முழுவதையும் தியாகம் செய்து விடுகின்றனர்.

அம்மா என்றால் அன்பு என்கின்றோம். ஆனால் வெளிக்காட்டிக் கொள்ளாத அப்பாக்களின் அன்பும் மிகுந்த ஆழமானது தான். அவர்களின் பாசமும் ஈரமானது தான்.

தம் பிள்ளைகளை நல்வழிப்படுத்தி கூட்டிச் செல்வதற்கு அவர்களுக்கு கண்டிப்பு அவசியமாகிறது. அதனாலென்னவோ பல அப்பாக்கள் தம் பிள்ளைகள் மீது கொண்டிருக்கிற தாய்க்கு நிகரான நேசத்தை வெளிக்காட்டாமல் மிகவும் இரகசியமாகவே வைத்திருக்கிறார்கள்.ا

தந்தை என்கிற சூரியனின் வெளிச்சம் நன்றாக கிடைத்துவிட்டால்
பிள்ளைத் தாவரங்கள் இயல்பாகவே செழித்து வளர்ந்து விடும்.

வாழ்வின் அனுபவப் பாடங்கள் அனைத்திலும் மிகச் சிறந்த ஆசானாக ஒவ்வொரு இளைஞனுக்கும் யுவதிக்கும் அவரவர் அப்பாக்களே இருக்கிறார்கள்.

நாம் வாழும் சமூகத்திற்கு ஒரு நல்ல மனிதன் கிடைத்திருக்கிறான் என்றால் அவனுக்கு பின்னால் ஒரு பொறுப்பு மிக்க தந்தையின் கடும் உழைப்பும் தியாகமும் இருந்திருக்கிறதென்றே அர்த்தம்.

யானையின் பலம் தும்பிக்கையிலே என்பது எவ்வளவு தூரம் உண்மையானதோ.. அதைவிட உண்மையானது ஒரு மனிதனின் பலம் நம்பிக்கையிலே என்பது. ஒவ்வொரு மனித மனசுக்குள்ளும் ஓடிக்கொண்டிருக்கும் அந்த நம்பிக்கை நதியின் நதிமூலம் அவரவர் அப்பாக்களே!

ஒரு குழந்தை அப்பாவின் கைப்பிடித்துக் கொண்டு எடுத்து வைக்கிற முதல் அடியே நம்பிக்கை விதையின் பதியமிடல் நிகழ்வு.

விழவும், எழவும் வலிகளையும் வடுக்களையும் தாங்கிக் கொண்டு நடக்கவும் ஒரு அப்பாவிடமிருந்து குழந்தை பெறுகிற பயிற்சி அவசியமானது.

இருகைகள் தட்டி எழும் ஓசை போல அம்மா அப்பா என்கிற இரு உறவுகளின் ஆரோக்கியமான இணைப்பும் பிணைப்பும் இல்லாமல் ஒரு நல்ல மனிதனை இந்த சமூகம் பெற முடியாது.

ஒரு தாய் தன் குழந்தை தன்னுடனேயே இருக்க வேண்டுமென்கிற அன்பின் உச்சத்தில் அதனை இடுப்பில் கெட்டியாக சுமக்கிறாள்.

தந்தையோ தன் குழந்தை தன்னைவிட உயர்ந்த நிலைக்கு சென்றுவிட வேண்டுமென்ற துடிப்போடு தன் தோள்களில் தூக்கி சுமக்கிறார்.

ஒவ்வொரு அப்பாக்களும் பிள்ளைகளுக்காக, அவர்களுக்கு கடைசிவரை தெரியாமலேயே இருந்துவிடுகிற எத்தனை துயரங்களை , அவமானங்களைச் சந்தித்திருப்பார்கள்?

பிள்ளைகளின் நல்வாழ்வுக்காக எத்தனை பேரிடம் உதவி கேட்டு நடந்திருப்பார்கள்?

எத்தனை பேரிடம் கடன் வாங்கியிருப்பார்கள்?

அதை கட்டிமுடிக்க எவ்வளவு போராடியிருப்பார்கள்?

எத்தனை இரவுகள் தூங்காது இருந்திருப்பார்கள்?

எத்தனை பாரங்களை மனசில் சுமந்திருப்பார்கள்?

முடியுதிர்ந்த மண்டையின் வெளிகளில்..

வெடிப்பு விழுந்திருக்கும் பாதங்களில்...

நரம்பு தெரியும் கைகளில் ...

நரை விழுந்த மீசைகளில் ...

அப்பாக்களின் உழைப்பின் வரலாறு அமைதியாய் குடிகொண்டிருக்கிறது.

தன் பிள்ளைகள் தான் படும் துயரம் கண்டு வருந்திவிடக் கூடாதென்று அவர்களுக்கு முன்னால் தம் வலிகளை எப்படி மறைத்திருப்பார்கள்?

ஆசைப்பட்டு பிள்ளைகள் கேட்கிற பொருட்களுக்காக எத்தனை மணி நேரங்கள் கூடுதலாக தம் வியர்வை சிந்தியிருப்பார்கள்?

மனைவி, பிள்ளைகளை ஏற்றிய குடும்ப வண்டியை இழுத்துச் செல்வதற்காக அப்பா என்கிற தியாகப் படைப்பு தன்னுடலை எவ்வளவு தூரம் வருத்தியிருக்கக் கூடும்?

பிள்ளைகள் தூக்கத்திலிருக்கும் போது அவர்களின் தூக்கம் கலையாமல் முத்தமிட்டுக்கொண்டு போர்த்தி விட்டு வேலைக்குப் போகிற அப்பாக்கள் பின்னர், பிள்ளைகள் தூங்கிவிட்ட பிறகு வீடு வந்து சேருகிற போது எப்படி தாங்கிக் கொள்கிறார்கள்? எத்தனை முறை மௌனமாக அழுதிருக்கும் அவர்கள் இதயங்கள்?

இதற்கும் மேலாய் உழைப்புக்காகவே கடல் கடந்து சென்று கரைந்து போகும் அப்பாக்களின் அவல வாழ்க்கையை அவர்களால் எப்படி ஏற்றுக் கொள்ள முடிகிறது? வேலை இடைவெளிகளில் பிள்ளைகளின் குரல் கேட்டு உற்சாகம் ஏற்றிக் கொள்கிற அவர்களின் உழைப்பின் பின்னாலிருக்கிற உழைச்சலை எப்படி புரியவைப்பது?

படுக்கையறை கட்டிலின் தலைப்பகுதியில் தன் மனைவி பிள்ளைகளின் புகைப்படத்தை ஒட்டி வைத்துக் கொண்டு சதா வலி சுமந்து வலி சுமந்து வாழ்க்கையை சுமந்து செல்கிற இந்த அப்பாமாரின் வாழ்க்கை எத்தனை கொடுமையானது?

வீரம், துணிச்சல்,
விடாமுயற்சி,
நம்பிக்கை, உழைப்பு..
இவைகள் ஒரு நல்ல அப்பாவிடமிருந்து இளைஞன் , யுவதிகளுக்கு இயல்பாகவே கிடைத்து விடுகிற பெரிய வெகுமதிகள்.

ஒரு இளைஞனோ ,  யுவதியோ வளர்ந்து பெரியவனான பிறகும்,
குழந்தைகளுக்கு பெற்றோரான பிறகும் அவர்களின் தந்தை தன் பிள்ளைகளை சிறு பிள்ளைகளாகவே பார்க்கிறார். பிள்ளைகளுக்கும் அப்பாவின் ஆலோசனைகள், வழிகாட்டல்கள், அனுபவப்பாடங்கள் என எல்லாம் எப்போதும் தேவைப்படுகின்றன.

“எதுக்கும் பயப்படாதே”

“ஒன்றுக்கும் யோசிக்காதே”

“எல்லாம் வெல்லலாம்”

“மனசை தளரவிடாதே”

“நான் இருக்கிறேன்”

இவையெல்லாம் அப்பாக்கள் தம் பிள்ளைகளின் செவிகளுக்குள் கடைசிவரைக்கும் திரும்பதிரும்ப சொல்லிக் கொள்கிற நம்பிக்கை தரும் ஒற்றைக் கட்டளைகள்.

அவர்கள் வாய்களிலிருந்து பிள்ளைகளின் மனங்களுக்கு கடத்தப்படுகிற இந்த வார்த்தைகளின் வீரியம் வலிமையானது.

தன் இயலாமையை தான் உணர்கிற ஒரு காலத்திலும் தந்தைமார் இந்த உற்சாகம் நிறைக்கிற வார்த்தைகளை சொல்ல மறப்பதேயில்லை. அவர்களுக்கு நன்றாகவே தெரியும் தம் பிள்ளைக்கு தமது குரலொன்றே போதுமென்பது.

அப்பாக்கள் :

➡பிள்ளைகளின் சுமைதாங்கிகள்

➡பிள்ளைகளின் நெம்புகோல்கள்

➡பிள்ளைகளின் அச்சாணிகள்

➡பிள்ளைகளின் சூரியன்கள்

➡பிள்ளைகளின் திசைகாட்டிகள்

➡பிள்ளைகளின் ஆசிரியர்கள்

➡பிள்ளைகளின்
நம்பிக்கைகள்

அப்பா:
தூய்மையான
அன்பு,

போலியற்ற
அக்கறை,

நேர்மையான வழிகாட்டல், 

நியாயமான
சிந்தனை, 

நேசிக்கத்தக்க உபசரிப்பு, 

மாறுதலில்லா நம்பிக்கை, 

காயங்களற்ற
வார்த்தை,  

கம்பீரமான
அறிவுரை,

கலங்கமில்லா
சிரிப்பு,

உண்மையான
அழுகை,

என அத்தனையும் உளமகிழ்ந்து 

செய்து வளர்த்தவர்.

தோழனுக்கு தோழனாய் 
தோள் கொடுப்பவர் அப்பா.

அப்படியொரு அப்பாவாக இருப்பதில் ஒவ்வொரு தகுதியுள்ள  அப்பாக்களும் மகிழ்ச்சியுருவர்.
இதுவரை இல்லாவிடிலும் இனியாவது இப்படிப்பட்ட அப்பாவாக இருக்க இப்போதிருந்தே  தன்னை மாற்றிக்கொள்ள ஆரம்பிப்பர்.

வாழ்த்துக்கள் தந்தையர்களே.
-----------------------------------------

மணி போல"!.

Siva03. /29.3.16
" மணி போல"!.

ஒரு ஜென் மாஸ்டர். அவரிடம் பல மாணவர்கள் பாடம் பயின்றுவந்தார்கள்.
சில மாதங்கள் கழித்து, ஒரு மூதாட்டி அவருடைய ஆசிரமத்துக்குள் கோபமாக நுழைந்தார். ‘யோவ் வாத்யாரே, நீ செய்யறது உனக்கே நியாயமாப் படுதா?’ என்று கூச்சல் போட ஆரம்பித்தாள்.
‘அம்மா, கோபப்படாதீங்க, என்ன விஷயம்? நிதானமாச் சொல்லுங்க!’ என்றார் ஜென் மாஸ்டர்.
’என் மகனும், அவனோட சிநேகிதனும் ஒரே நாள்லதான் உங்க ஆசிரமத்துல சிஷ்யர்களாச் சேர்ந்தாங்க’ என்றார் அந்த மூதாட்டி. ‘ஆறு மாசமா ரெண்டு பேரும் ஒரேமாதிரிதான் படிக்கறாங்க. ஆனா இன்னிக்கு, என் மகனைவிட அவனோட சிநேகிதன் அதிக புத்திசாலியா இருக்கான், நிறைய விஷயங்களைத் தெரிஞ்சுவெச்சிருக்கான், இதுக்கெல்லாம் என்ன அர்த்தம்?’
‘என்ன அர்த்தம்? நீங்களே சொல்லுங்களேன்!’
’நீங்க உங்க மாணவர்கள் மத்தியில பாரபட்சம் காட்டறீங்க, ஒரு பையனுக்கு நல்லாச் சொல்லிக்கொடுத்துட்டு இன்னொரு பையனை ஒதுக்கறீங்க!’
ஜென் மாஸ்டர் சிரித்தார். ‘அம்மா, கோயில்ல ஒரு மணியைக் கட்டியிருக்கோம், அதை நீங்க மெதுவா அடிச்சா கொஞ்சமா சத்தம் கேட்கும், பலமா அடிச்சா ரொம்ப தூரத்துக்குக் கேட்கும். இல்லையா?’
‘ஆமா, அதுக்கும் இதுக்கு என்ன சம்பந்தம்?’
‘குரு-ங்கறவர் அந்த மணியைப்போலதான், மாணவன் எந்த அளவு சிரத்தை எடுத்துகிட்டுப் படிக்கறானோ, அந்த அளவு அவனால அந்த குருவைப் பயன்படுத்திக்கமுடியும், அவர்கிட்டேயிருந்து விஷயங்களைக் கிரகிச்சுக்கமுடியும், இதையெல்லாம் செய்யாம சும்மா உட்கார்ந்திருக்கவும் முடியும். புரியுதா?’....

Monday, March 28, 2016

மாற்றங்களும், ஏற்றங்களும்!!!

அரசுப்பள்ளியில் பணியாற்றும் நம்மிடம்  இருந்து வர வேண்டிய மாற்றங்களும், ஏற்றங்களும்!!!

1.
ஆசிரியர்கள் தங்களை ஒரு சமூக மாற்றத்திற்கான விதைகள் என்பதை உணரவேண்டும்.

2.
ஒரு சிறந்த ஆசிரியர் தொடர்ந்து தம்முடைய வாசிப்பின் மூலம் தன்னை வளப்படுத்திக்
கொண்டே இருக்கவேண்டும்.

3.
வகுப்பறையில் தாம் மட்டுமே பேசிக்கொண்டிருக்காமல்,மாணவர்களுக்கு தங்கள் கருத்துக்களை கூற வாய்ப்பு தரவேண்டும்.

4.
வகுப்பறைகள் வெறும் சாக்பீஸால் எழுதப்பட்டதாக இல்லாமல் அறிவியல் கணித உபகரணங்களால் உயிர் பெற வேண்டும்.

5.
மாணவர்களை வெறும் மதிப்பெண்கள் போடும் கோழிகளாக உருவாக்காமல்,
கலை,
இலக்கிய ,
சமூக செயற்பாட்டாளர்களாக பரிமளிக்க செய்யவேண்டும்.

6.
மாணவர்களோடு ஆசிரியர்களின் நல்லுறவு  என்பது வகுப்பறையைத்
தாண்டி  நல்ல தோழமையை அடையாளப் படுத்தவும், காலத்தோடு தேவையான நல்ல  வழி காட்டுதல்களை செய்யத்தக்க வகையில் அமையவேண்டும்.

8.
ஓவியம்,
கலை,
பேச்சு,
பாட்டு ,
நடனம்,
பிரச்சினைகளை எதிர்கொள்ள தேவைப்படும் மனதைரியம் போன்றவற்றை கற்பிக்க வேண்டும்.

9.
தாம் பணியாற்றும் பள்ளியில் பணிபுரியும் சக பணியாளர்கள்,
அலுவலர்கள் முதலானவர்களோடு நட்பு பேண வேண்டும்.(கட்டாயம் இல்லை)

10.
எதனூடாக கற்றலை மிக எளிமையாக அடைய முடியும் என்கிற தன்னம்பிக்கை நமக்கு இருக்கிறதோ!
அந்த இலக்கை அடையும்வரை தொடர்ந்து முயற்சி செய்து கொண்டே இருக்கவேண்டும்.

11.
எந்த மொழிப்பாடமாக இருந்தாலும் அதை முதலில் உங்களுக்கு திருப்தி தரும்வகையில் தயார் செய்து அதனை வகுப்பறைகளில் நடைமுறைபடுத்த வேண்டும்,ஒருபோதும் நீங்கள் எதிர்பார்க்கும் கருத்தை திணிக்கக்கூடாது

12.
கணிணி,
குறுந்தகடு(CD),
அடர்தகடு(DVD),
வலைத்தளம்,
கட்செவி,
சுட்டுரை,  மின்னஞ்சல்,
செய்தித்தாள்கள் ,
காட்சி ஊடகங்கள் போன்ற தகவல் தொழில்நுட்பங்களைக் கொண்டு
கற்றல் கற்பித்தலை மேம்படுத்த வேண்டும்.

13.
நாம் பணியாற்றும் பள்ளியும்,
நம்மிடம் பயிலும் மாணவர்களும் ஏழை எளிய மாணவர்கள் என்பதை உணரவேண்டும்.

14.
நம்மிடத்தில் பயின்ற மாணவர்கள் உச்சநிலைக்கு சென்றபிறகு அதற்கு அடிப்படை காரணகர்த்தாவாக நாம்தான் இருந்தோம். எனபதை அம்மாணவனால் அடையாளப்படுத்தும் போது அதைவிட வேறு உயரிய விருது தேவையில்லையே??

15.
விதைத்தவன் உறங்கினாலும்,  விதைகள் உறங்குவதில்லை. என்பதற்கேற்ப எப்பவும் நாம் விதைப்பவர்களாகவே இருப்போம்....

நன்றி
அன்புடன்
சிவா....

மாற்றங்களும், ஏற்றங்களும்!!!

அரசுப்பள்ளியில் பணியாற்றும் நம்மிடம்  இருந்து வர வேண்டிய மாற்றங்களும், ஏற்றங்களும்!!!

1.
ஆசிரியர்கள் தங்களை ஒரு சமூக மாற்றத்திற்கான விதைகள் என்பதை உணரவேண்டும்.

2.
ஒரு சிறந்த ஆசிரியர் தொடர்ந்து தம்முடைய வாசிப்பின் மூலம் தன்னை வளப்படுத்திக்
கொண்டே இருக்கவேண்டும்.

3.
வகுப்பறையில் தாம் மட்டுமே பேசிக்கொண்டிருக்காமல்,மாணவர்களுக்கு தங்கள் கருத்துக்களை கூற வாய்ப்பு தரவேண்டும்.

4.
வகுப்பறைகள் வெறும் சாக்பீஸால் எழுதப்பட்டதாக இல்லாமல் அறிவியல் கணித உபகரணங்களால் உயிர் பெற வேண்டும்.

5.
மாணவர்களை வெறும் மதிப்பெண்கள் போடும் கோழிகளாக உருவாக்காமல்,
கலை,
இலக்கிய ,
சமூக செயற்பாட்டாளர்களாக பரிமளிக்க செய்யவேண்டும்.

6.
மாணவர்களோடு ஆசிரியர்களின் நல்லுறவு  என்பது வகுப்பறையைத்
தாண்டி  நல்ல தோழமையை அடையாளப் படுத்தவும், காலத்தோடு தேவையான நல்ல  வழி காட்டுதல்களை செய்யத்தக்க வகையில் அமையவேண்டும்.

8.
ஓவியம்,
கலை,
பேச்சு,
பாட்டு ,
நடனம்,
பிரச்சினைகளை எதிர்கொள்ள தேவைப்படும் மனதைரியம் போன்றவற்றை கற்பிக்க வேண்டும்.

9.
தாம் பணியாற்றும் பள்ளியில் பணிபுரியும் சக பணியாளர்கள்,
அலுவலர்கள் முதலானவர்களோடு நட்பு பேண வேண்டும்.(கட்டாயம் இல்லை)

10.
எதனூடாக கற்றலை மிக எளிமையாக அடைய முடியும் என்கிற தன்னம்பிக்கை நமக்கு இருக்கிறதோ!
அந்த இலக்கை அடையும்வரை தொடர்ந்து முயற்சி செய்து கொண்டே இருக்கவேண்டும்.

11.
எந்த மொழிப்பாடமாக இருந்தாலும் அதை முதலில் உங்களுக்கு திருப்தி தரும்வகையில் தயார் செய்து அதனை வகுப்பறைகளில் நடைமுறைபடுத்த வேண்டும்,ஒருபோதும் நீங்கள் எதிர்பார்க்கும் கருத்தை திணிக்கக்கூடாது

12.
கணிணி,
குறுந்தகடு(CD),
அடர்தகடு(DVD),
வலைத்தளம்,
கட்செவி,
சுட்டுரை,  மின்னஞ்சல்,
செய்தித்தாள்கள் ,
காட்சி ஊடகங்கள் போன்ற தகவல் தொழில்நுட்பங்களைக் கொண்டு
கற்றல் கற்பித்தலை மேம்படுத்த வேண்டும்.

13.
நாம் பணியாற்றும் பள்ளியும்,
நம்மிடம் பயிலும் மாணவர்களும் ஏழை எளிய மாணவர்கள் என்பதை உணரவேண்டும்.

14.
நம்மிடத்தில் பயின்ற மாணவர்கள் உச்சநிலைக்கு சென்றபிறகு அதற்கு அடிப்படை காரணகர்த்தாவாக நாம்தான் இருந்தோம். எனபதை அம்மாணவனால் அடையாளப்படுத்தும் போது அதைவிட வேறு உயரிய விருது தேவையில்லையே??

15.
விதைத்தவன் உறங்கினாலும்,  விதைகள் உறங்குவதில்லை. என்பதற்கேற்ப எப்பவும் நாம் விதைப்பவர்களாகவே இருப்போம்....

நன்றி
அன்புடன்
சிவா....

Thursday, March 24, 2016

ஒரு ரூபாயில் லேப் டாப்,.......

ஒரு ரூபாய் இருந்தால் போதும் தவனை முறையில் லேப்டாப் வாங்கலாம்

 laptop

டெல் இந்தியா நிறுவனம் இந்தியாவில் 'பேக் டூ ஸ்கூல்' எனும் திட்டத்தை துவக்கி மாணவர்களுக்கு புதிய லேப்டாப் கருவிகளை வெறும் 1 ரூபாய்க்கு வழங்குகின்றது. மீதி தொகையை தவனை முறையில் செலுத்தினால் போதும் என தெரிவித்துள்ளது. 

இந்த சலுகை மே மாதம் நிறைவடைகின்றது. டெல் நிறுவனம் அறிவித்திருக்கும் பேக் டூ ஸ்கூல் திட்டம் மார்ச் 22 ஆம் தேதி முதல் மே மாதம் 31 ஆம் தேதி வரை செல்லுபடியாகும். அனைத்து டெல் லேப்டாப் கருவிகளும் பேக் டூ ஸ்கூல் திட்டத்தில் கிடைக்கின்றது. 

டெல் வாடிக்கையாளர்கள் டெல் இன்ஸ்பிரான் கணினி அல்லது ஆல் இன் மாடல் அல்லது, இன்ஸ்பிரான் வகை லேப்டாப் கருவிகளை ரூ.1 முன்பணம் செலுத்தி வாங்க முடியும். மேலும் டெல் இன்ஸ்பையர் கணினி அல்லது ஆல் இன் ஓன் சீரிஸ் வாங்கி கூடுதலாக ரூ.999 செலுத்தினால் கூடுதலாக இரு ஆண்டு ஆன்சைட் வாரண்டி, ஒரு ஆண்டிற்கு எட்யூரைட் கன்டென்ட் பேக் மற்றும் பேட்டா பரிசு கூப்பன் பெறலாம். இன்ஸ்பைரான் 3000 சீரிஸ் லேப்டாப் வாங்குவோருக்கும் ரூ.999க்கு இரு ஆண்டு ஆன்சைட் வாரண்டி பெறலாம். பேக் டூ ஸ்கூல் திட்டமானது படிக்கும் மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோருக்கு பயனுள்ளதாக இருக்கும் என டெல் நிறுவனத்தின் செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மாணவர்கள் படிக்க கணினியை ஒரு பயனுள்ள கருவியாக வழங்க டெல் முயற்சித்து வருவதாகவும் அந்நிறுவன செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பேக் டூ ஸ்கூல் திட்டமானது நாடு முழுவதும் இயங்கி வரும் அதிகாரப்பூர்வ டெல் விற்பனை நிலையங்கள் மற்றும் CompuIndia இணையதளத்தில் செல்லுபடியாதும். கருவிகளை வாங்கிய முதல் ஏழு நாட்களுக்குள் வாடிக்கையாளர்கள் தங்களது கருவிகளை பேக் டூ ஸ்கூல் திட்டத்தில் பதிவு செய்து கொள்ள வேண்டும் என அந்நிறுவனம் கேட்டு கொண்டுள்ளது.



டெல் இன்ஸ்பைரான் 15 3551 

இதன் விலை ரூ.19,399 2.1 ஜிகாஹெர்ட்ஸ் பென்டியம் குவாட் கோர் பிராசஸர் 4 ஜிபி ரேம் 15.6 இன்ச் திரை 500 ஜிபி ஹார்டு டிரைவ் 

டெல் இன்ஸ்பைரான் 15 3541 

இதன் விலை ரூ.19,417 2.4 ஜிகாஹெர்ட்ஸ் ஏஎம்டி கோர் ஏ6 பிராசஸர் 4 ஜிபி ரேம் 2 ஜிபி கிராஃபிக்ஸ் 15.6 இன்ச் திரை 500 ஜிபி ஹார்டு டிரைவ்.

Tuesday, March 22, 2016

FA (a) activities . 8th std.

10 Standard English paper-1 Answer key

SSLC English first paper key:
1. Interest, victim, struggle, difficult task, private.
2. Clean, visible, rare, internal, fast.
3. Local area network
4. Mission
5.neighbor
6. Waterfall
7. Strata
8. Hyperactive
9. Give up
10. Ar- ti- cu- late
       Bit- ter
       Sym- pa_ thise
11. Listened
12.it is migrant bird
13. My decision is to join the arts college
14. We barely have enough water. 15.he would help the needy
16. Svoc
17.can she,?
18. As strong as
19. A fish cannot survive on land
20. Because of
21. Learn
22.of being
23. The
24. On
25. The lid of the bottle is too tight to open it.
26. The portions were completed by the teacher and a test was conducted by him.
27. The blind lady said to the student, " please help me to cross the road ".
28. If it rains, I will get wet.
29. James is elder than Siva
30. "An amazing model?"shouted Trevor at the top of his voice.
40.Dull and Grey
41. Hard work
42.being in dream world without action
43. Poet
44.migrant Bird
45. Minute- in it
Run- son
46. Betray- back- belong
47. Simile
48. Abab
49. Onomatopoeic

Monday, March 14, 2016

10 ஆம் வகுப்பு பொது தேர்வு மாணவர்களுக்கு...

🌺🌺�நாளை பத்தாம்வகுப்பு பொதுத்தேர்வு எழுதப்போகும் மாணவக் கண்மணிகளுக்காக
ஒரு கவிதை:
து.ராமராஜ்👍�💪🙏

🌺💪தம்பி ...
பாடங்களை பயின்றிடு....🖋

🌺💪உன்னை நம்பி
தமிழ் என்றும் தாய்மொழி என்றும்
தள்ளி விடாதே ...
தனி கவனம் கொடுத்து விட
மறந்து விடாதே...!!👍�

🌺💪ஆங்கிலத்தை அயல் மொழி என்று
ஒதுக்கி விடாதே...
அதுவும் ஓர் பாடம் என்று
மறந்து விடாதே...👍�

🌺💪கணிதத்தைக் கஷ்டம் என்று
கருதி விடாதே....
அது ஒரு கண் என்பதை
மறந்து விடாதே ...👍�

🌺💪அறிவியலை அறுவை என்று
நினைத்து விடாதே....
நாலும் அறிவதற்கு அதுவோர்
பாலமென மறந்துவிடாதே...👍�

🌺💪வரலாறு புவியலை
வெறுத்து விடாதே...
வரலாறு உனைப்புகழ அதைநீ
பயில மறந்துவிடாதே...👍�

🌺👍💪பாடம் எல்லாம் பயின்றுவிட்டால்
நீ ஓர் பல்கலைக்கழகம்...👍�

👉பாடத்தை வெறுத்து விட்டால் அது
உனக்கே நீ தோண்டிக்கொள்ளும்
பள்ளம்..👍�

⏩⏩⏩⏩நாளை (15.3.16)
10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத உள்ள அனைத்து இயக்க உறவுகள் மற்றும் அனைத்துவகை ஆசிரிய சொந்தங்களின் வாரீசுதாரர்கள் சிறந்த முறையில் தேர்வு எழுதி 
மாநிலம்
மாவட்டம்
பள்ளியில்
முதல் மாணவ மாணவிகளாக திகழ
இதயப்பூர்வ வாழ்த்துக்கள்
🖋🖋🖋🖋🖋🖋🖋🖋🖋
அன்புடன்
சிவா...

Wednesday, March 09, 2016

தமிழரின் கணக்கதிகாரம்......

தமிழன் என்கிற திமிரு எனக்கும் உண்டு
தமிழரின் கணக்கதிகாரம்......

ஓர் பூசனிக்காயை உடைக்காமலே அதில் எத்தனை விதை இருக்கிறது என்பதை உங்களால்
கூற முடியுமா ?

ஒரு தமிழ் செய்யுளின் வரிகள்

கீற்றெண்ணி முத்தித்துத் கீழாறினால் மாறி
வேற்றையஞ்சு தன்னில் மிகப்பெருக்கிப் பார்த்ததிலே
பாதி தள்ளி மூன்றிற் பகிர விதையாகும்
பூசனிக்காய் தோறும் புகல்

ஒரு பூசனிக்காயின் கீற்றுகளை எண்ணிக்கொண்டு அதை மூன்று, ஆறு , ஐந்து, இவற்றால் பெருக்கி வரும் விடையை பாதியாக்கி மீண்டும் மூன்றால் பெருக்கினால் வருவது விதைகளின் எண்ணிக்கையாகும்

ஒரு பூசனியில் உள்ள கீற்றுகளின் எண்ணிக்கையை "X" என்க.
பாடலின் படி அதை 3,6,5 ஆகியவற்றால் பெருக்க கிடைப்பது "90X" ஆகும்.

அதை பாதியாக்கினால் கிடைப்பது "45X" ஆகும்

அதை மீண்டும் மூன்றால் பெருக்க கிடைப்பது "135X" ஆகும்

ஒரு பூசனியில் உள்ள கீற்றுகளின் எண்ணிகையை X=6 ஆறு எனக்கொண்டால் (135 * 6 = 810) 135 ஐ ஆறால் பெருக்க வேண்டும் கிடைப்பது 810 ஆகும் எனவே பூசனியில் உள்ள விதைகளின் எண்ணிக்கை 810 ஆகும்...