Tuesday, September 30, 2014

போட்டோ மிக்ஸ் மென்பொருள்




போட்டோ எடுத்து ரசிப்பது என்பது இன்றைக்கு ஒரு குழந்தை விளையாட்டாக மாறிவிட்டது. சிறுவர்கள் கூட மிக அழகாக போட்டோ எடுக்கும் வகையில், திறன் கொண்ட எளிய டிஜிட்டல் சாதனங்கள் தற்போது சந்தையில் கிடைக்கின்றன. இவற்றுடன், அதே அளவிற்குத் திறன் கொண்ட கேமராக்கள் இணைந்த மொபைல் போன்களும் பெருகி உள்ளன. எனவே போட்டோ எடுப்பது என்பது அவ்வளவாக செலவில்லாத ஒரு பொழுது போக்காக மாறிவிட்டது. இவற்றுடன், இன்னும் நம் கற்பனைக்குத் தீனி போடும் வகையில், இந்த போட்டோக்களை மாற்றி அமைக்க, மெருகூட்ட பல அப்ளிகேஷன் புரோகிராம்கள், இணையத்தில் இலவசமாகக் கிடைக்கின்றன. அவற்றில் ஒன்றான போட்டோ மிக்ஸ் (FotoMix) என்பது குறித்து இங்கு காணலாம். 


2.8 எம்.பி. அளவில் கிடைக்கும் இதனை டவுண்லோட் செய்து, இன்ஸ்டால் செய்வது மிகவும் எளிது. ஒரு சில நிமிடங்களில் எல்லாம் முடிந்துவிடுகிறது. புரோகிராம் இயக்கத்திற்குத் தயாராய்க் கிடைக்கிறது. இதன் மூலம், போட்டோக்களின் பின்புலத்தினை மாற்றி அமைக்கலாம். படங்களில் இருந்து நமக்குப் பிடித்த அல்லது பிடிக்காதவர்களை இணைக்கலாம், நீக்கலாம். பல போட்டோக்களை வெட்டி ஒட்டி கொலாஜ் எனப்படும் ஓவிய போட்டோக்களை அமைக்கலாம். வால் பேப்பர்கள், சிடி, டிவிடி கவர்களை உருவாக்கலாம். இறுதியில் கிடைக்கும் போட்டோ இவ்வாறு மாற்றப்பட்டது என அறிந்து கொள்ளாத அளவிற்கு இயற்கையாக எடுக்கப்பட்ட போட்டோ போல காட்சி அளிக்கும். அனைத்தும் முடிக்கப்பட்ட போட்டோக்களை பிரிண்ட் எடுக்கலாம். மின் அஞ்சல் மூலம் அனுப்பலாம். டீ கப், பனியன் ஆகியவற்றில் பிரிண்ட் செய்திடக் கொடுக்கலாம். 

விண்டோஸ் இயக்கத்தில் இந்த புரோகிராம் இயங்குகிறது.
 
மிக்க நன்றியுடன்
சிவா...
 

ஜிமெயிலில் தேவையில்லாதவற்றை நீக்க...!

இன்றைக்கு பெரும்பாலானவர்கள் பயன்படுத்தும் ஜிமெயில் தளத்தில் பயனாளர்களுக்கான வசதி ஒன்று, சிலருக்கு சிக்கலைத் தருவதாக அமைந்துள்ளது.பொதுவாக மின்னஞ்சல் தளங்களில், புரோகிராம்களில், நாம் யாருக்கேனும் மின்னஞ்சல் அனுப்பினால், அவருக்கு நாம் பின்னாளிலும் அனுப்புவோம் என்ற அடிப்படையில், அந்த முகவரி பதிந்து வைக்கப்படுகிறது.

அந்த முகவரியில் உள்ள எழுத்துக்களை, அடுத்த முறை டைப் செய்தவுடன், சார்ந்த முகவரிகள் ஒரு பாப் அப் விண்டோவில் காட்டப்படுகின்றன.

முழுமையாக டைப் செய்திடாமல், நாம் குறிப்பிட்ட முகவரியைத் தேர்ந்தெடுத்து, கிளிக் அல்லது என்டர் செய்தால், முகவரி அமைக்கப்படும். ஒரு நாளில் பலருக்கு அலுவலக ரீதியாக மின்னஞ்சல் அனுப்புபவர்களுக்கு இந்த வசதி எரிச்சலூட்டும் உதவியாக உள்ளது.


                                               



நாம் மீண்டும் அனுப்பும் சந்தர்ப்பம் இல்லாதவர்களின் முகவரியும் சேவ் செய்யப்பட்டுக் காட்டப்படுகிறது. இதனால், நாம் அனுப்ப விரும்பும் முகவரியினை பாப் அப் விண்டோவில், சற்றுத் தேடிக் கண்டறிய வேண்டியுள்ளது.


இவ்வாறு சேவ் செய்து வைத்திடும் வசதியினை நாம் ஜிமெயில் தளத்திலிருந்து எடுத்துவிடலாம்.

ஜிமெயில் செட்டிங்ஸ் (Gmail settings) செல்லவும். Settings திரை காட்டப்படுகையில், General என்ற டேப் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்க வேண்டும். இல்லை எனில் அதனைக் கிளிக் செய்திடவும்.

இங்கு கீழாகச் சென்று, "Complete contacts for autocomplete" என்று இருப்பதனைக் காணவும்.அங்குள்ள "I'll add contacts myself" என்ற ரேடியோ பட்டனைத் தேர்ந்தெடுத்து அமைக்கவும்.

தொடர்ந்து "Save Changes" என்பதில் கிளிக் செய்து வெளியேறவும். அடுத்த முறை நீங்களாக சேவ் செய்திடாமல், எந்த மின்னஞ்சல் முகவரியும் அதற்கான பட்டியலில் இடம் பெறாது..
 
 நன்றியுடன் 

சிவா.
 
 

Thursday, September 25, 2014

கணிதத்தில் சில சுவாரசியங்கள்



வணக்கம் நண்பர்களே
வணக்கம் என்பது ஐந்தெழுத்து
நண்பர்கள் என்பது ஆறெழுத்து
என்னென்னமோ பொழம்புறானே 
இதை எல்லாம் கேட்கிறது 
எங்க தலையெழுத்துனு நீங்க 
பொழம்புறது சத்தமா கேட்குது
இனி எல்லாமே கணக்கு தான்....

கணித விளையாட்டு!62 - 52 = 11
562 - 452 = 11 11
5562 - 4452 = 11 11 11
55562 - 44452 = 11 11 11 11
.......and so on
======
4 + 9 + 1 +3 = 17
4913 = 173

=======
13 + 53 + 33 = 153

கார்ப்ரேகர் எண்

தனியான நான்கு எண்களை எடுத்துக் கொள்ளுங்கள்.அந்த நான்கு எண்களை உபயோகித்து வரும் பெரிய எண்ணை எழுதிக் கொள்ளுங்கள் .பின் அதே நான்கு எண்களை உபயோகித்து வரும் சிறிய எண்ணையும் குறித்துக் கொள்ளுங்கள்.பெரிய எண்ணிலிருந்து சிறிய எண்ணைக் கழியுங்கள்.வருகிற விடையில் உள்ள நான்கு எண்களை உபயோகித்து பெரிய எண்,சிறிய எண் கண்டுபிடித்துப் பின் கழியுங்கள்.இதே போலத் தொடர்ந்து செய்தால் ஒரு முறை 6174 என்ற எண் வரும் எந்த நான்கு எண்களை எடுத்துக் கொண்டாலும் இதே போல ஒரு நிலையில் 6174 என்ற எண் வரும் இந்த எண்ணை கார்ப்ரேகர் எண் என்று சொல்கிறார்கள்.
உதாரணம்;
எடுத்துக் கொண்ட எண்கள்;8,7,9,6
இந்த நான்கு எண்களை உபயோகித்து வரும் பெரிய எண்;9876
சிறிய எண்;6789
வித்தியாசம்;3087
மீதியில் வரும் நான்கு எண்கள்;. 3,0,8,7
இந்த நான்கு எண்களை உபயோகித்து வரும் பெரிய எண்;8730
சிறிய எண்; 0378
வித்தியாசம்;8352
8,3,5,2,இவற்றின் பெரிய எண்;8532
சிறிய எண்;2358
வித்தியாசம்;6174
ஒரு சில எண்களுக்கு ஒரே முறையிலும் ,வேறு சில எண்களுக்கு நான்கைந்து தடவைகளுக்குப் பின்னும் இந்த 6174 என்ற எண் வரும் .

அழகான பெருக்கல்

கீழேதரப்பட்டுள்ள பெருக்கல்களில் ஒருசிறப்பம்சம்உள்ளது.விடையில்வரும் எண்கள் எல்லாம் ஒரே எண்கள் திரும்பவும் வருகின்றன.அதுவும் வரிசையாக வருகின்றன.(same figures in the same order starting in a different place as if written round the edge of a circle)
142857 X2= 285714
142857 X3 =428571
142857X4 =571428
142857 X5 =714285
142857 X6=857142

அதிசய பெருக்கல்

கீழே உள்ள பெருக்கல்களைப் பாருங்கள் இடது புறமும் வலது புறமும் ஒன்றிலிருந்து ஒன்பது வரை உள்ள எண்கள் இடம் பெற்றுள்ளன.
51249876 X3=153749628
32547891X6=195287346
16583742X9=149253678

கீழே உள்ள வித்தியாசமான பெருக்கலைப் பாருங்கள்.இடது புறத்தில் உள்ள எண்கள் வலது புறத்தில் அப்படியே திரும்பி இருக்கின்றன.
10989 X 9 =98901.

விந்தை எண்

2519 ஒரு விந்தையான எண்
இதை 9 ஆல் வகுத்தால் 8 மீதி வரும்.
இதை 8 ஆல் வகுத்தால் 7 மீதி வரும்
இதை7 ஆல் வகுத்தால்6 மீதி வரும்
இதை 6 ஆல் வகுத்தால் 5 மீதி வரும்
இதை5 ஆல் வகுத்தால்4 மீதி வரும்
இதை4 ஆல் வகுத்தால்3 மீதி வரும்
இதை3 ஆல் வகுத்தால் 2 மீதி வரும்
இதை2 ஆல் வகுத்தால்1 மீதி வரும்


அதிசய எண்

ஒரு அதிசய எண்;12345679
ஒன்றிலிருந்து ஒன்பதுக்குள் ஒரு எண்ணைத்தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள். அந்த எண்ணை ஒன்பதால் பெருக்கி வரும் விடையை இந்த அதிசய எண்ணுடன் பெருக்குங்கள்.விடை நீங்கள் தேர்ந்தெடுத்த எண்ணின் வரிசையாக இருக்கும்.
1x9x12345679=111111111
2x9x12345679=222222222
3x9x12345679=333333333
4x9x12345679=444444444
5x9x12345679=555555555
6x9x12345679=666666666
7x9x12345679=777777777
8x9x12345679=888888888
9x9x12345679=999999999

நினைத்த எண் எது?

ஒரு மூன்று இலக்க எண்ணை எழுதிக் கொள்ளுங்கள்.
அதனை தொடர்ந்து அதே எண்ணை மீண்டும் எழுதி ஆறு இலக்க எண்ணாக ஆக்குங்கள்.
அதை ஏழு கொண்டு வகுங்கள்.
வந்த விடையை பதினொன்றால் வகுங்கள்.
கிடைத்த எண்ணை பதிமூன்றால் வகுங்கள்.
இப்போது கிடைத்த விடை நீங்கள் முதலில் நினைத்த எண்.சரிதானா?
உதாரணம்;
மூன்று இலக்க எண் = 369
மீண்டும் எழுதினால் = 369369
ஏழு கொண்டு வகுத்தால்= 52767
பதினொன்றால் வகுத்தால் = 4797
பதிமூன்றால் வகுத்தால் = 369

அதிசய சதுரம்

இது ஒரு அதிசய சதுரம்.இடமிருந்து வலம்,மேலிருந்து கீழ், குறுக்காக எப்படிக் கூட்டினாலும் 264 வரும்.

96 11 89 68
88 69 91 16
61 86 18 99
19 98 66 81

அது மாத்திரமல்ல.இந்த சதுரத்தை அப்படியே தலைகீழாக மாற்றிப் பாருங்கள்.

18 99 86 61
66 81 98 19
91 16 69 88
89 68 11 96



இப்பொழுதும் இடமிருந்து வலம்,மேலிருந்து கீழ்,குறுக்காக கூட்டிப் பாருங்கள்.அதே விடை தான் வரும்.264.
 
மிக்க  நன்றியுடன் 
சிவா.
 
 

Monday, September 22, 2014

Facebook ற்கு விரைவாக புகைப்படங்களையும் வீடியோக்களையும் Upload செய்ய

உங்கள் கணினியில் இருந்து மிகவிரைவாகவும் இலகுவாகவும் உங்கள் புகைப்படங்களையும் விடியோக்களையும் facebook இல் தரவேற்றிக்க கொள்ள உதவும் ஒரு மென்பொருள் பற்றிய பதிவு.இந்த மென்பொருளை பயன்படுத்தி அப்லோட் செய்வதோடு டெஸ்க்டாப்பில் இருந்தே நண்பர்களுக்கு Tag செய்யவும் முடியும்,

                                                  
உங்கள் கணினியில்   டெஸ்க்டாப் திரையில் இருந்தே உங்கள் புகைப்படங்களையும் விடியோக்களையும் மிக விரைவான Facebook ல் அப்லோட் செய்து கொள்ள உதவும் ஒரு மென் பொருளே bloom என்கிற ஒரு இலவச மென்பொருளாகும் .. இதன் பதிப்பு Bloom 3.4.0 அண்மையில்  வெளியிடப்பட்டுள்ளது.. 

மேலும் உங்களுடையதோ அல்லது உங்கள் நண்பர்களது புகைப்படங்களையும் வேகமாக டவுன்லோட் செய்யவும் முடிவதோடு அவர்களது அல்பத்தை தரவிறக்காமலேயே கணினி முழுத்திரையில் slideShow வாக கண்டுகளிக்கவும் முடியும்


Bloom 3.4.0 இன் வசதிகளை பெற்றுக்கொள்ள முதலில் இதனை facebook இன் மூலம் login செய்து கொள்ள வேண்டும்.

இதற்க்கு Bloom மென்பொருளை open செய்து login என்ற பட்டனை அழுத்த கீழ் உள்ளது போல் தோன்றும்.
Log In



பின் அதில் உள்ள login என்பதை அழுத்தியவுடன் புதிதாக உங்கள் இணைய உலாவியில் Facebook இனை login செய்யுமாறு ஒரு விண்டோ திறக்கும். கடவுள் சொல்லினை கொடுத்து login செய்தவுடன் கீழே உள்ளது போன்று request to permission கேட்கும் அதனை Allow செய்யவும்.
Facebook Login

பின் மிண்டும் உங்கள் மென்பொருளுக்கு வந்து I have successfully login என உள்ளதை அழுத்தவும்...(இந்த செயன்முறை முதல்முறை செய்யும் போது மட்டுமே கேட்கும்.. பின்னர் login செய்யும் போது facebook user name password ஆகியவற்றை மட்டும் கொடுத்தால் போதுமானது.)
Allow Bloom


Bloom மென்பொருளை உபயோகித்து Facebook இற்கு அப்லோட் செய்தல்.

புகைப்படத்தை புது ஆல்பமாக  upload செய்ய

 create album என்பதை அழுத்தி பின் அல்பம் பெயர் விபரத்தை கொடுத்து drag Photo or folder here என்று உள்ள இடத்தில் உங்கள் புகைப்படத்தையோ அல்லது போல்டரையோ இழுத்துவிட்டு பின் upload எனும் பட்டனை அழுத்தவும்

ஏற்கனவே உள்ள அல்பத்திற்க்கு புகைப்படத்தை அப்லோட் செய்ய

 profile - > my album என்பதை அழுத்தி குறித்த அல்பத்தை தெரிவு செய்து அதனுள் புகைப்படத்தை இழுத்து விட்டு பின் upload எனும் பட்டனை அழுத்தவும்

நண்பர்களின் புகைப்படத்தை பார்வையிட

நண்பர்களின் புகைப்படத்தை பார்வையிட friends என்பதை அழுத்தவும் பின் வரும் நண்பர்கள் பட்டியலில் குறித்த நண்பரை தெரிவு செய்து புகைப்படத்தை அழுத்துவன் மூலம் புகைப்படங்களை முழுத்திரையில் பார்வையிடலாம்

புகைப்படத்தை download செய்தல்

குறித்த அல்பத்தையோ புகைப்படத்தையோ தெரிவு செய்து பின் மேல் உள்ள மெனுவில் Action --> Download Album என்பதை அழுத்துவதன் மூலம் தரவிறக்கி கொள்ள முடியும்.
 
மிக்க நன்றியுடன் 
..சிவா.
 

Friday, September 19, 2014

மழலை மனம்




இனிய இதம், மனதில் பதம்,
வாழ்வில் சுகம், மூன்றையும் நமக்கு அளிக்கும் இறைவன் "குழந்தை" 






 "அம்மா! வானம் ஏன் புளுவா இருக்குநட்சத்திரப் பூக்கள் ஏன் உதிரவே மாட்டேங்குது?   மாட்டுக்கு ஏன் இரண்டு கொம்பு இருக்கு?மூக்கு பெரிசாகிட்டே போனால் என்ன ஆகும்நான் உனக்குள் இருந்து எப்படி வெளியே வந்தேன்?  

ஓயாத அலைகளாக மனதின் கரையைத் தீண்டித் தீண்டி வியக்க

வைக்கும் கேள்விகளால் செல்லங்கள் வளர்கிறார்கள். ‘‘இது போன்ற

கேள்விகளால் ஆச்சரியப்பட்டு நின்று விடாமல் பொறுப்பான பதில் தரும்

பெற்றோராக நாம் மாற வேண்டும்’’ 



‘‘குட்டி மீன் கண்களின் அசைவு, எட்டிப் பிடிக்கும் பிஞ்சு விரல், உதட்டுச் சுழிப்பு, மெல்லச் சிவக்கும் முகம் என சின்னச்  சின்ன மாற்றங்களின் மூலமாக மொழி வசப்படுவதற்கு முன்பாகவே தங்களது கேட்டலை தொடங்கி விடுகிறார்கள் குழந்தைகள். அர்த்தம் புரிந்துஉச்சி முகர்ந்து, முத்தமிட்டு, முடி கோதி, காதுகளை வருடி, நெஞ்சோடு இறுக்கி, தோளில் சாய்த்து, மார்புகள் கசிய செல்லத்தின் பசி உணர்ந்து  பால் ஊட்டுகிறாள் தாய்


தாயின் வெளிப்பாடுகளில் இருந்து தன் கேள்விகளுக்கான பதில்களை குழந்தை சேகரிக்கிறது. குழந்தைசுற்றியுள்ளவர்களின் உதட்டு அசைவுகளைப் புரிந்து கொண்டு வார்த்தைகளைக் கற்கத் தொடங்குகிறது. கேட்பதை மழலையில் திரும்பச் சொல்கிறது.  
 
வார்த்தைகளால் வாக்கியங்களை அமைக்கிறது. பிறந்ததும் முதல் கண் அசைவில் இருந்தே குழந்தையின் கேள்விகள் தொடங்கி விடுகின்றன. 



கியூரியாசிட்டி எனப்படும் தூண்டுதல் மற்றும் தேடல் இருக்கும் போது குழந்தைகள் கேள்வி கேட்கத் தயங்குவதே இல்லை. பதிலைப்  பற்றிக் கவலைப்படாமல் எழுகின்றன அவர்களின் கேள்விகள். சரியான பதில் கிடைக்கும் போது புரிதலுடன் அவர்களின் தேடலுக்கான எல்லைகளும் விரிவடைகின்றன.
சில பெற்றோர் குழந்தைகளின் கேள்விக்கு பதில் அளிக்காமல் தவிர்ப்பார்கள்... வயதுக்கு மீறி கேள்வி கேட்கிறாய்’  என அடக்க முற்படுவார்கள். அதனால் குழந்தைகளின் ஆர்வம் தடுக்கப்படுகிறது. கேள்வி கேட்பதை நிறுத்தும் போது தேடலும் புரிதலும் நின்று  போகிறது. இது குழந்தைகளுக்குள் இயல்பாக வளரும் மற்ற திறன்களையும் மந்தமாக்கும். 








 குழந்தைகளிடம் இரண்டு வகையான கேள்விகள் கேட்கப்படுகின்றன. ஒரு விஷயத்தைச் சொல்லி, ‘இதைப் பற்றி நீ என்ன நினைக்கிறாய்?’ என்று  கேட்பது ஓப்பன் எண்டட்’. இது போன்ற கேள்விகளுக்குக் குழந்தைகள் மனம் திறந்து தயக்கமில்லாமல் சுதந்திரமாக பதில் அளிக்கலாம்.

 
மழலை ததும்பும் வயதில் உனக்கு அம்மா பிடிக்குமா, அப்பா பிடிக்குமாஎன்று பலர் கேட்பதுண்டு. இது குழந்தைகளின் உளவியலை தகர்க்கும்  கேள்வி. அம்மா, அப்பா இருவரிடமும் ஒரே மாதிரியான அன்பை வெளிப்படுத்தவே குழந்தை விரும்புகிறது. இப்படிக் கேட்கும் போது குழந்தை சங்கடத்தை எதிர்கொள்கிறது.  




இது போன்ற கேள்விகள் க்ளோஸ் எண்டட்எனப்படுகின்றன. இவற்றைத் தவிர்ப்பது நல்லது. கேட்கும்  கேள்விகளின் அடிப்படையில் குழந்தைகளின் மனநிலையைப் புரிந்து கொள்ள முடியும். ஆர்வத்தின் அடிப்படையில் எழுந்தவையா,
சிக்கலான  கேள்விகளா, எந்த விஷயத்தில் அதிகம் கவனம் செலுத்துகின்றனர் போன்றவற்றை அறிந்து கொள்ளலாம்.
பிரச்னைக்குரிய கேள்விகளாக இருந்தால்அவர்கள் எப்படிப்பட்ட மனக்குழப்பத்தில் இருக்கிறார்கள் என்பதையும் சிந்தனை ஓட்டத்தையும் தெரிந்து கொள்ளலாம்.  
குழந்தையின் கேள்வி எப்படிப்பட்டதாக இருந்தாலும் பொறுப்பாக பதில் சொல்ல வேண்டியது பெற்றோர் மற்றும் சுற்றியிருப்பவர்களின் கடமை.  வீடு, பள்ளி, வெளியிடம் என எல்லா இடங்களிலும் குழந்தைக்கு பதில் கிடைக்க வேண்டும்.

 

 
பெற்றோர் கேள்வியைத் தெளிவாகப் புரிந்து கொண்டு  பதில் தருவது நல்லது. குழந்தை, நமக்கே தெரியாத ஒன்றைப் பற்றிக் கேள்வி கேட்கும் போது, பதிலை புத்தகங்களில் தேடி படித்துச் சொல்லலாம்... இணையத்தின் வழியாகவும் தகவல்களை சேகரிக்கலாம்...
சம்பந்தப்பட்ட துறை சார்ந்த நிபுணர்களிடம் கேட்டும் விடை பெறலாம். ஆழமான கேள்விக்கு பதில் தர பெற்றோர் எடுக்கும் முயற்சியில் குழந் தைகளையும் பங்கெடுக்கச் செய்யலாம். இதன் மூலம் கேள்விகளுக்கு எங்கிருந்தெல்லாம், எப்படியெல்லாம் பதில் பெற முடியும் என்பதையும்  அவர்கள் கற்றுக் கொள்கிறார்கள்.
குழந்தைகளிடம் பெற்றோர் தங்களது அதிமேதாவித்தனத்தை நிரூபிக்கத் தேவையில்லை. நம்மை விட 20 ஆண்டுகள் கடந்து பிறக்கும் குழந்தையின் அறிவின் தாக்கமும் புரிதலும் நம்மைவிட அதிகமாக இருக்கும். அவர்களுக்கு ஈடு கொடுத்து ஓட நம்மைத்  தயார்படுத்திக் கொள்ள வேண்டும்.
கேள்விகளுக்கு சரியான பதில்களைப் பெறுவதோடு குழந்தை நின்று விடுவதில்லை. தான் பெற்றதை தனக்கு  உற்ற நபர்களிடம் சொல்ல முயற்சிக்கிறது. பல இடங்களிலும் தன்னை முன்னிலைப் படுத்திக் கொள்ள இந்த அறிவு குழந்தைக்கு உதவுகிறது.  கேள்விக்கு விடை கிடைக்கும் போது குழந்தையின் சிந்தனை அடுத்தடுத்த கட்டங்களை நோக்கி நகர்கிறது. யோசிக்கும் திறன் மேம்படுகிறது. 



மேலும்எந்த இடத்திலும் தெரியாது என்று தயங்கி நிற்க வேண்டிய நிர்ப்பந்தம் குழந்தைக்கு ஏற்படுவதில்லை. இது போன்ற குழந்தைகள் பிரச்னைகளுக்கு  எளிய தீர்வுகளை வைத்திருப்பார்கள்.
குழந்தை கேள்விகளின் மூலம் தனக்குள் இருக்கும் தனித் திறன் சார்ந்த தேடல்களை வெளிப்படுத்துகிறது. அதைப் புரிந்து கொண்டு அதற்கான  பயிற்சிகளை அவர்கள் பெறுவதற்கான சூழலை ஏற்படுத்தித் தர வேண்டும். விரும்பும் துறையில் கூடுதல் தகவல்களைப் பெறவும் வழிகாட்ட வேண்டும்.  








குழந்தைகள் சில நேரம் வித்தியாசமாக கேள்வி கேட்பார்கள். கோழி முட்டை ஏன் இந்த வடிவத்தில் இருக்க வேண்டும்? வேறு மாதிரி இருக்கலாமே..!’, ‘தண்ணீரைத் தொட்டால் கைகளில் ஏன் ஈரம் ஒட்டிக் கொள்கிறது?’ இவை குழந்தைக்குள் ஓர் ஆராய்ச்சியாளன் இருப்பதை  உணர்த்துபவை.
குழந்தை வளர்ப்பில் முக்கிய அம்சமே அவர்களைப் புரிந்து கொண்டு அவர்களது சுதந்திரத்தை அனுமதிப்பதுதான். கேள்வி கேட்கவும் ஒரு விஷயத்தை அனுபவம் சார்ந்து புரிந்து கொள்ளவும் அவர்களுக்கு வாய்ப்பிருக்க வேண்டும்.

 
மூன்று வயதுக்குள் குழந்தையின் மூளையில் அதிக இணைப்புகள் ஏற்படும். இந்த இணைப்புகளை பலப்படுத்தி மேலும் விரிவடையச் செய்ய கேள்விகள் கேட்க அனுமதிப்பதும்  அதற்கான பதில்களைத் தருவதும் அவசியம். ஒரு பொருளை பலகாலம் பயன்படுத்தாவிட்டால் அது வீணாகி விடும். 


அது போல் மூளையின்  அனைத்து இணைப்புகளுக்கும் சிந்திக்கும் பணியை, தேடலுக்கான வழியை கேள்விகளே திறந்து விடுகின்றன. குழந்தைகளுக்குள் ஒளிந்திருக்கும்  திறன்களைப் புரிந்து கொள்ள உதவுவது கேள்விகளே! அந்த மாயக்கண்ணாடியின் வழியாக குழந்தை தனது மனதின் முகத்தைக் காட்டுகிறது. குழந்தைகளிடம் வளரும் இந்தக் கண்ணாடி ஆரம்பத்திலேயே பல இடங்களில் உடைக்கப்படுகிறது. அப்படிப்பட்ட சூழலில் குழந்தை தன்னை  வெளிப்படுத்துவதற்கான வாய்ப்பில்லாமல் நத்தை ஓட்டுக்குள் முடங்குவது போல முடங்கி விடுகிறது.  


எப்போதாவது ஆர்வத்தில் தலையை நீட்டி வெளியே வந்தால், ‘அதிகப்பிரசங்கித்தனமாகக் கேள்வி கேட்கிறாயே!என சில பெற்றோர் தலையில்  தட்டுவார்கள். இது குழந்தைக்குள் எதிர்மறையான விளைவுகளை உருவாக்கும். எந்த ஆர்வமும் இல்லாத நிலையில் இப்படிப்பட்ட குழந்தைகளால்  மிகப்பெரிய உயரங்களை எட்ட முடியாது.
பெற்றோரிடம் நட்பான சூழல் நிலவினால் ஆழ்மன ஏக்கங்கள், எதிர்மறையான சிந்தனைகள்மறைக்கப்படும் விஷயங்கள் குறித்தும் கேள்வி கேட்பார்கள் குழந்தைகள். அப்படிக் கேட்கும் போது தடை போடாமல், வயதுக்கு ஏற்ற விளக்கத்தை  பொறுப்புடன் தர வேண்டும். ஒருவேளை தவறான விஷயங்களில் அதிகம் கவனம் செலுத்துவது தெரிந்தால் குழந்தைகளை திசை திருப்புவதற்கும்  கேள்விகளே உதவுகின்றன.

 

குழந்தைகளின் ஆரோக்கியமான அறிவுப் பயணத்துக்கு துணை வரும் கேள்விகளை ஒரு போதும் நாம் பதிலின்றி திருப்பியனுப்ப வேண்டாம்...’’




" ஒவ்வொரு நொடியும் நமக்காக படைக்கப்பட்டது - ஒவ்வொரு கணமும் ரசித்து வாழ்வோம் " மழலைகளை போல் 'தலைக்கனமற்ற தன்னலமற்ற' வாழ்வை வாழ்வோம்!

 
நன்றியுடன்

சிவா,
நன்றி:தினகரன்(மருத்துவம்/ குழந்தை வளர்ப்பு)