Showing posts with label பெற்றோர்கள். Show all posts
Showing posts with label பெற்றோர்கள். Show all posts

Sunday, May 31, 2020

புதிய பார்வை..புதிய கோணம்...

🍁🍁புதிய பூமி🍁🍁

ஒரு
சொல்
மற்றவர்
வாழ்க்கையை
புரட்டி போடும்
தன்மையை
உடையது.

நாம்
உதிர்க்கும்
சொல்...

ஆளை
கொல்லும்
விஷமாக
இல்லாமல்...

அன்பை
பரப்பும்
விதையாக
இருக்கட்டும்.

மனதை
குத்தும்
முள்ளாக
இல்லாமல்...

மனதை
மயக்கும்
மலராக
மணக்கட்டும்.

அடுத்தவர்
வாழ்வு அழிய
கூடியதாக
இல்லாமல்...

அவர் 
குடும்பம்
ஜொலிக்கும்
ஒளியாக
அமையட்டும்.

அகன்அமர்ந்து 
ஈதலின் நன்றே 
முகனமர்ந்து
இன்சொலன் 
ஆகப் பெறின்.

உள்ளம் 
மகிழ்ந்து 
கொடுக்கும் 
பொருளுதவியை
விடவும்...

முகம் 
மலர்ந்து 
சொல்லும்... 

இனிமையான 
வார்த்தை 
சிறந்தது.

இது
ஐயன்
வள்ளுவனின்
வாக்கு.

வாய்ப்புகளும்
வார்த்தைகளும்
நம் வசமே.

வாங்க...

நல்லதை
நினைப்போம்.

நல்லதையே
பேசுவோம்.

அன்புடன்
இனிய
காலை
வணக்கம்.


நன்றி...
- Dr.Sundar Murthy -

💫💫💫💫💫💫💫