Tuesday, May 24, 2022

அன்றும்...இன்றும்...

*அன்று* 
வீடு நிறைய குழந்தைகள் 
*இன்று* 
வீட்டுக்கொரு குழந்தை 
*அன்று* 
பெரியவர் சொல்லி பிள்ளைகள் கேட்டனர்
*இன்று* 
சிறியவர் சொல்ல பெரியவர் முழிக்கிறார்கள்
*அன்று* 
குறைந்த வருமானம்
நிறைந்த நிம்மதி 
*இன்று*
நிறைந்த வருமானம்
குறைந்த நிம்மதி 
*அன்று*
படித்தால் வேலை
*இன்று* 
படிப்பதே வேலை
*அன்று* 
வீடு நிறைய உறவுகள்
*இன்று* 
உறவுகள் அற்ற வீடுகள்.
*அன்று*  
உணவே மருந்து
*இன்று*
மருந்தே உணவு
*அன்று*
முதுமையிலும் துள்ளல்
*இன்று*
இளமையிலேயே அல்லல்
*அன்று* 
உதவிக்கு தொழில் நுட்பம்
*இன்று*
தொழில் நுட்பமே உதவி
*அன்று* 
யோக வாழ்க்கை
*இன்று*
எந்திர வாழ்க்கை 
*அன்று*
தியாகம் நாட்டை காப்பாற்றியது
*இன்று*
துரோகம் நாட்டை கூறுபோடுகிறது
*அன்று* 
படங்களில் பாடல் கருத்தானது. 
*இன்று*
கருத்தே இல்லாத பாடலானது
*அன்று*  
ஓடினோம் வயிற்றை நிறைக்க 
*இன்று* 
ஓடுகின்றோம் வயிற்றை குறைக்க
*அன்று*
பெரியோர்கள் பாதையில்
*இன்று* 
இளைஞர்கள் போதையில் 
*அன்று*  
ஒரே புரட்சி 
*இன்று* 
ஒரே வறட்சி
*அன்று* 
வளச்சிப்பாதையில் இளைஞர்கள்.
*இன்று*
போதையின் பிடியில் இளைஞர்கள்.
*அன்று* 
ஊரே கூட கோலாகல விழா
*இன்று*
ஊருக்கே போக முடியாத மூடுவிழா 
*அன்று*
கைவீசி நடந்தோம்
*இன்று*
கைப்பேசியுடன் நடக்கிறோம்
*அன்று* 
ஜனநாயகம்
*இன்று*
பணநாயகம்
*அன்று* 
விளைச்சல் நிலம்
*இன்று*
விலை போன நிலம்

*அன்று* 
கோடை விடுமுறையில் உறவுகளிடம் தஞ்சம்
*இன்று*
கோடை விடுமுறையில் உறவுகளிடம் அச்சம்.
*அன்று* 
நிறைந்தது மகிழ்ச்சி
*இன்று*
மகிழ்வை தேடும் நிகழ்ச்சி
 
*அன்று*
வாழ்ந்தது  வாழ்க்கை
*இன்று*
ஏதோ வாழ்கிறோம் வாழ்க்கை..

நன்றி
பகிர்வு பதிவு...

Thursday, May 19, 2022

மகிழ்ச்சியின் சாவி.....

*கோடி ரூபாய் கொடுத்தாலும் கிடைக்காத தகவல்கள்*

*வாழ்க்கையும், வசதிகளும், நமது நோய்களும்*

*இன்றே நீங்கள் உங்கள் வீட்டில் ஆரம்பியுங்கள்*.

*1) உங்கள் துணியை நீங்களே முதலில் துவைக்க பழகுங்கள்.*

*அதுவே நீங்கள் உங்கள் குழந்தைகளுக்கு சொல்லாமல் சொல்லும் முதல் பாடம்.*

*2) காலையில் எழுந்தவுடன் குளித்து இறைவனைத் வணங்குங்கள்.*

*உங்கள் மனைவிக்கு சொல்லாமல் சொல்லும் இரண்டாவது பாடம்.*

*3) முடிந்தால், சமயலறையில் முடிந்த உதவிகளை செய்யுங்கள். நம் வீடு. நாம் செய்வோம். இது கூட்டு குடும்பத்தின், கூட்டு முயற்சியில் நாம் சொல்லாமல் சொல்லும் மூன்றாவது பாடம்*.

*4) காபி குடித்தவுடன் , அதை முடிந்தால் அலம்பி வைக்கவும். இல்லையென்றால்அலம்பும் இடத்தில் வைக்கவும். இது நமக்குள்ளே ஒரு கட்டுப்பாட்டை வைத்துக் கொள்ள உதவும். இது நமக்கான  நான்காவது பாடம்.*

*5) எங்கெல்லாம் உதவி செய்ய முடியுமோ, வீட்டில் உதவுங்கள். அது முக்கியமான ஐந்தாவது பாடம்- மற்றவர்களுக்கு உதவும் பழக்கம் வர வேண்டும்.*

*6) காலை காபி குடிக்கும் போதோ, இல்லை எது சாப்பிட்டாலும் , குறை கூறாதீர்கள். வேண்டுமென்றால் நல்ல முறையிலே கூறுங்கள். கோபமும், அதட்டலும், நமக்கு ரத்த அழுத்தம் தரும். இது ஆறாவது பாடம்.*

*7) உண்ணும் முன், பெரியவர்கள் இருந்தால், அவர்களை கேளுங்கள் -சாப்பிட்டு விட்டார்களா? என்று. குழந்தைகளை கூப்பிட்டு கேளுங்கள். இது ஏழாவது பாடம் .*

*8) முடிந்த வரை நடந்து செல்லுங்கள். பண மிச்சம், கஞ்சத்தனம் என்று இல்லை. நமது கால் நடக்கக் கற்றுக் கொண்டால், நாம் நமது காலில் இறக்கும் வரை , நின்றும், நடந்தும் வாழலாம். இது வாழ்க்கையின் எட்டாவது பாடம்.*

*9) அடுத்தது நம்மை அழிக்கும் தொலைக்காட்சி. அது கத்திக் கொண்டு இருந்தாலும், நீங்கள் ஒரு நல்ல புத்தகத்தை எடுத்துக் கொண்டு படியுங்கள். மின்சார கட்டணம் கண்டிப்பாக* *குறையும். குழந்தைகள் படிக்க ஆரம்பிப்பார்கள். இது நமக்கு நாமே சொல்லும் ஒன்பதாவது பாடம்.***************** *Who Will Cry When You Die?"ராபின் ஷர்மா எழுதிய புத்தகம்.*

*அதாவது நீங்கள் இறந்த பின் யார் அழப் போகிறார்கள்? என்ற தலைப்பில் எழுதப்பட்ட இப்புத்தகத்தில்...*
*“நீ பிறந்த போது, அழுதாய்...*
*உலகம் சிரித்தது..*.
*நீ இறக்கும் போது,    பலர் அழுதால் தான் உன் ஆத்மா சாந்தியடையும்" என ஆரம்பிக்கும் ராபின் ஷர்மா, இந்த புத்தகத்தில் கூறும் அற்புத கருத்துக்களை காண்போம்...*

*1. உங்கள் வாழ்க்கையில் நீங்கள் சந்திக்கும் ஒவ்வொரு நபரும் உங்களுக்கு ஏதோ ஒன்றை சொல்லி தருகின்றார். எனவே நீங்கள் சந்திக்கும் எல்லோரிடமும் கருணையுடன் இருங்கள்..*.

*2. உங்களுக்கு எந்த விஷயத்தில் திறமை உள்ளதோ அதிலேயே கவனத்தையும், நேரத்தையும் அதிகம் செலுத்துங்கள். மற்ற விஷயங் களுக்காக அதிக நேரம் செலவழிக் காதீர்கள்.*

*3. அடிக்கடி கவலைப் படாதீர்கள். தேவை எனில் கவலை படுவதற்கென ஒவ்வொரு நாளும் மாலை நேரம் முப்பது நிமிடம் ஒதுக்குங்கள். அந்த நேரம் அனைத்து கவலைகள் குறித்து சிந்தியுங்கள்.*

*4. அதிகாலையில் எழப்பழகுங்கள்*. 
*வாழ்வில் வென்ற பலரும் அதிகாலையில் எழுபவர்களே.*

*5. தினமும் நிறைய சிரிக்க பழகுங்கள்.*
*அது நல்ல ஆரோக்கியத் தையும், நண்பர்களையும் பெற்று தரும்.*

*6. நிறைய நல்ல புத்தகங்களை படியுங்கள்.* 
*எங்கு சென்றாலும், பிரயாணத்தின் போதும் ஒரு புத்தகத்துடன் செல்லுங்கள். காத்திருக்கும் நேரத்தில் வாசியுங்கள்.*

*7. உங்கள் பிரச்சனைகளை ஒரு தாளில் பட்டியலிடுங்கள். இவ்வாறு பட்டியலிடும் போதே உங்கள் மன பாரம் கணிசமாக குறையும். அதற்கான தீர்வும் இதன் மூலம் கிடைக்கவும் வாய்ப்பு உண்டு.*

*8. உங்கள் குழந்தைகளை, உங்களுக்கு கிடைத்த மிக சிறந்த பரிசாக (Gift) நினையுங்கள். அவர்களுக்கு நீங்கள் தரக் கூடிய சிறந்த பரிசு, அவர்களுடன் நீங்கள் செலவிடும் நேரமே.*

*9. தனக்கு வேண்டியதை கேட்பவன் சில நிமிடங்கள் முட்டாளாய் தெரிவான். தனக்கு வேண்டியதை கேட்காதவன் வாழ் நாள் முழுவதும் முட்டாளாய் இருக்க நேரிடும்*.

*10. எந்த ஒரு புது பழக்கமும் உங்களுக்குள் முழுதும் உள் வாங்கி, அது உங்கள் வாடிக்கையாக மாற 21 நாட்களாவது ஆகும். ஆகவே தேவையான விஷயங்களை திரும்ப திரும்ப செய்யுங்கள்.*

*11. தினமும் நல்ல இசையை கேளுங்கள். துள்ளலான நம்பிக்கை தரும் இசை, புன்னகையையும் உற்சாகத்தையும் தரும்.*

*12. புது மனிதர்களிடமும் தயங்காது பேசுங்கள். அவர்களிடமிருந்து கூட உங்களை ஒத்த பல சிந்தனைகளும், நல்ல நட்பும் கிடைக்கலாம்.*

*13. பணம் உள்ளவர்கள் பணக்காரர்கள் அல்ல. மூன்று சிறந்த நண்பர்களை கொண்டவனே பணக்காரன்*.

*14. எதிலும் தனித்துவமாக இருங்கள். பிறர் செய்வதையே வித்தியாசமாக, நேர்த்தியாக செய்யுங்கள்.*

*15. நீங்கள் படிக்க துவங்கும் எல்லா புத்தகமும் முழுவதுமாய் படித்து முடிக்க வேண்டியவை அல்ல. முதல் அரை மணியில் உங்களை கவரா விட்டால் அதனை மேலும் படித்து நேரத்தை வீணாக்காதீர்கள்*.

*16. உங்கள் தொலை/கை பேசி உங்கள் வசதிக்காகத்தான். அது அடிக்கும் ஒவ்வொரு முறையும் நீங்கள் எடுத்து பேச வேண்டும் என்பதில்லை. முக்கியமான வேளைகளில் நடுவே இருக்கும் போது தொலை பேசி மணி அடித்தாலும் எடுத்து பேசாதீர்கள்.*

*17. உங்கள் குடும்பத்தின் முக்கிய நிகழ்வுகளை அவசியம் புகைப்படம் எடுங்கள். பிற்காலத்தில் அந்த இனிய நாட்களுக்கு நீங்கள் சென்று வர அவை உதவும்.*

*18. அலுவலகம் முடிந்து கிளம்பும் போது சில நிமிடங்கள் வீட்டிற்கு சென்றதும் மனைவி/ குழந்தைகளுக்கு என்ன செய்ய வேண்டுமென யோசியுங்கள்.*

*19. நீங்கள் எவ்வளவு வெற்றி அடைந்தாலும், எளிமையான (humble) மனிதராயிருங்கள்.* *வெற்றிகரமான பல மனிதர்கள் எளிமையான வர்களே!*
*"ஆணவம் ஆயுளைக் குறைக்கும்...*"

*மேற்கண்ட கருத்துக்களை பின் பற்றி,*
*ஆனந்தமாக வாழுங்கள்* *நண்பர் ஒருவர் எனக்கு அனுப்பியதை உங்களுக்கு அனுப்பியுள்ளேன்.....!!!!வாழ்க வளமுடன்*!

படித்ததில் பிடித்தது
பகிர்வு பதிவு
நன்றி..!

Friday, May 06, 2022

உறவை காப்போம்.....

*உறவின் இழை*
 
ஒரு நகை வியாபாரியின் மறைவுக்குப் பிறகு, அவரது குடும்பம் மிகவும் மோசமான துன்பத்திற்கு உள்ளானது. 

சாப்பிடுவதற்கும் கூட போதுமான அளவுக்கு பணம் இல்லாத நிலைமையை அடைந்து விட்டார்கள். 

ஒரு நாள் அந்த நகை வியாபாரியின் மனைவி தன் மகனை அழைத்து, ஒரு நீலக் கல் பதித்த நெக்லஸை அவனது கையில், கொடுத்துக் கூறினாள்... 

*மகனே, இதை எடுத்துக் கொண்டு, உன் மாமாவின் கடைக்குச் செல். அவரிடம் இதை விற்று நமக்குக் கொஞ்சம் பணம்  தரும்படி கேள்* என்றாள்.

மகன் அந்த நெக்லஸை எடுத்துக் கொண்டு, அவனது மாமாவின் கடையை அடைந்தான்.    அவனது மாமா அந்த நெக்லஸை முற்றிலுமாகப் பார்த்தார். 

அவனிடம் கூறினார்... *என் அன்பு மருமகனே, உன் அம்மாவிடம் கூறு! அதாவது இப்போது மார்க்கெட் மிகவும் மோசமாக இருக்கிறது. கொஞ்ச நாள் கழித்து இதை விற்றால், அவளுக்கு நல்ல விலை கிடைக்கும்* என்று..

பின் குடும்ப செலவுக்காக அவர் அவனிடம்  கொஞ்சம் பணத்தைக் கொடுத்தார். 

மேலும் *நாளை முதல் கடைக்கு வந்து என்னுடன் உட்கார்ந்து வேலையை கற்றுக்கொள்* என்றார்.

எனவே, அடுத்த நாள் முதல், அந்தப் பையனும் தினமும் கடைக்குப் போகத் தொடங்கினான். அங்கே கற்றுக் கொள்ளத் தொடங்கினான். 

*எப்படி வைரம் மற்றும் கற்களை பரிசோதிக்க வேண்டும்?* என்பதையும் தெரிந்து கொண்டான்.

விரைவிலேயே, அவன் ஒரு சிறந்த அறிவாளியாக என்று  மாறினான். 

வைரத்தைப் பற்றி பகுத்தாய்வு செய்து கூறுவதில் ஒரு வல்லுநராக மாறினான்.  

நெடுந்தொலைவில் இருந்தும்  கூட, மக்கள், இவனிடம் வைரத்தைப்  பரிசோதிப்பதற்காக வந்தார்கள்.

ஒரு நாள் அவனது மாமா கூறினார்... *மருமகனே, அந்த நெக்லஸை உன் அம்மாவிடம் இருந்து இப்போது வாங்கி வா! அவளிடம் கூறு... அதாவது மார்க்கெட் நிலைமை இப்போது நன்றாக இருக்கிறது. உனக்கு நல்லதொரு விலை கிடைக்கும்.*  
 
அவன் அம்மாவிடம்  இருந்து நெக்லஸை பெற்றவுடன், அந்த வாலிபன்,  *அவனாகவே அதனைப் பரிசோதித்தான்.* 

*அது ஒரு போலி* என்பதைக் கண்டு பிடித்தான்.  

*அவனுடைய மாமா, ஒரு சிறந்த வல்லுநராக இருந்தும், இதை ஏன் நம்மிடம்  தெரிவிக்கவில்லை?* என்று அவன் ஆச்சரியம் அடையத் தொடங்கினான். 

நெக்லஸை வீட்டில் விட்டு, விட்டு அவன் கடைக்குத் திரும்பினான்.

மாமா கேட்டார், *நெக்லஸை கொண்டு வரவில்லையா?* 

அவன் கூறினான், *மாமா இது போலியானது. ஆனால், இதை என்னிடமிருந்து நீங்கள் ஏன் மறைத்தீர்கள்?*

பிறகு அவன் மாமா கூறினார்... *நீ முதன் முதலில் நெக்லஸை என்னிடம் கொண்டு வந்த போது, "அது போலியானது" என்று நான் உன்னிடம் கூறியிருந்தால்,  நான் வேண்டுமென்றே  இதைக் கூறுவதாக நீ நினைத்துக் கொள்ளக் கூடும்.  ஏனென்றால், அப்போது நீ ஒரு  கஷ்டமான சூழ்நிலையில் இருந்தாய்.*

*இன்று நீ, நீயாகவே இதைப் பற்றிய அறிவை பெற்றிருப்பதால், இந்த நெக்லஸ், "உண்மையிலேயே போலியானது" என்பதை நீ உறுதியாக அறிந்திருப்பாய்.* 

*அந்த நேரத்தில்,  "உண்மையைக்" கூறியாக வேண்டும் என்பதை விட... "உறவு இழையை அறுந்து விடாமல்  காப்பது "மேலானது" மற்றும் "முக்கியமானதாக" எனக்கு தோன்றியது.*

*நண்பர்களே! "எந்த வித பட்டறிவும்" இல்லாமல், நாம் இந்த உலகில் "பார்ப்பது," "நினைப்பது," "தெரிந்து கொள்வது" எல்லாமே "தவறு" என்று கூறுகின்றோம்.*

*"தவறான புரிதல்களால்" நம்முடைய உறவு  முறைக்கு, பெரும் பாதிப்பை உண்டாக்குகிறது.*

*பிறகு "முறிவுக்கு" இட்டுச் செல்கிறது.*

*நம்முடைய வாழ்க்கையும் தனியாக நின்று "வீழ்ச்சியும்" அடைகின்றது.*

*நம் "உறவின் இழைகளை" அறுந்து  விடாதவாறு பாதுகாத்து வாழ்வோம்...

நன்றி..
பகிர்வு பதிவு...