Friday, December 04, 2020

புதிய பார்வை..புதிய கோணம்....



சிறு 
ஆலம் 
விதைக்குள்...

அற்புத 
விருட்சம்
மறைந்திருப்பது
போல...

நம்
ஒவ்வொரு
மனிதருக்குள்ளும்...

அபார சக்தி
மறைந்திருப்பது
உண்மை.

அதை
சரியான
நேரத்தில் நாம் 
வெளிப்படுத்தும்
போது...

மாபெரும்
முடிவுகள்
மலர்ந்தே தீரும்.

இதற்கு
மிக சரியான
எடுத்துக்காட்டு.

மதிப்பிற்குரிய
நடராஜன்.

தமிழ்நாட்டின்
சேலம் மாவட்டம்
தாரமங்கலம் 
அடுத்த...

சின்னப்பம்பட்டி 
கிராமத்தை
சார்ந்த...

சாதாரண 
குடும்பத்தை 
சேர்ந்தவர் இவர்.

தந்தை 
தங்கராஜ் 
ஒரு நெசவு
தொழிலாளி.

தாய் 
சாந்தா 
சாலையோர 
கோழிக்கடை 
நடத்துபவர்.

12 ஆம் 
வகுப்பு வரை 
தன் சொந்த ஊரில்
அரசு மேல்நிலை 
பள்ளியில் படித்தார்.

வட்ட
மாவட்ட
மாநில 
அளவில்...

தன் 
கிரிக்கெட்
விளையாட்டில்
பரிமளித்தவர்...

TNPL 
மற்றும் ரஞ்சி 
போட்டிகளில் மிளிர 
தொடங்கினார்.

அதன்
தொடர் நிகழ்வாக
I P L போட்டிகளில்
மேலும் தன்னை
பட்டை தீட்டி
கொண்டார்.

இதன்
விளைவு...

இதோ 
இன்று 
சர்வதேச 
போட்டியில்
இடம் பெற்று...

இவர் மீது 
வெற்றி வெளிச்சம்
ஒளி வீச தொடங்கி
உள்ளது.

ஒட்டுமொத்த
தமிழர்களின்
இதய பூர்வ
வாழ்த்துக்கள்
நட்ராஜ்.

வாருங்கள்...

மென்மேலும்
புகழ் ஏணியில்
ஏறுங்கள்.

உங்களால்
நாங்கள் 
மகிழ்ச்சி
அடைகிறோம்.

தமிழ்நாடு
மட்டுமல்ல...

இந்தியாவே
உங்களால்
பெருமை 
கொள்கிறது.

இவரின்
வெற்றி பயணம்...

இன்றைய
இளைஞர்களுக்கு
மட்டுமல்ல...

நம்பிக்கையுடன்
செயல்பட்டு
வரும்...

ஒவ்வொரு
மனிதருக்கும்
ஒரு பாடமே.

புதிய
நம்பிக்கைகளுடன்...

No comments: