Sunday, December 06, 2020

புதிய பார்வை...புதிய கோணம்....

சிரித்து
வாழ வேண்டும் :::

மூன்று
புத்த துறவிகள்
சிரிப்பது கூட ஒரு
தியானமே என்னும்
கொள்கையை...

தாங்களும்
கடைபிடித்து
மற்றவர்களையும்
கடைபிடித்து
வருமாறு உலகம்
முழுவதும் பயணம்
செய்து வந்தார்கள்.

இதற்கு...

' Laughing
  Therapy '

என
பெயரும்
வைத்தனர்.

ஒருநாள்
மூவரில் ஒருவர்
இறந்து போனார்.

அவர் உடல்
அருகே அமர்ந்த
மற்ற இருவரும்
சிரித்து கொண்டே 
இருந்தனர்.

இதனை கண்ட 
ஊர்மக்கள்
ஆத்திரம் அடைந்து
இருவரையும்
திட்டினர்.

துறவிகள்...

" வாழ்க்கையை
  மகிழ்ச்சியாக
  வைத்து கொள்ள
  ஒரே வழி...

  எப்போதும்
  எதற்கும்
  சிரித்து
  கொண்டே
  இருப்பதுதான்...

  இதை தான் தன்
  வாழ்நாள் முழுவதும்
  இவர் கடைபிடித்தார் "

என்றும்
கூறினர்.

ஊர்மக்கள் சற்று
பொறுமை அடைந்தனர்.

இறுதி சடங்குகளும்
செய்ய தொடங்கினர்.

இறந்த துறவி
கேட்டு கொண்டதின்
பெயரில் அவரின்
உடலை குளிப்பாட்டாமல்
சுடுகாட்டிற்கு எடுத்து 
சென்றனர்.

சற்று நேரத்தில்
நெருப்பு வைக்க
பட்டது.

உடனே...

துறவியின் உடலை
சுற்றி பட்டாசுகள்
வெடித்தன..

ஆம்...

அவர்
இறந்த பிறகும்
மக்கள் மகிழ்ச்சியாக
இருக்க வேண்டும்
என்பதற்காக
தன் உடலுடன்
பட்டாசுகளை கட்டிய
நிலையிலேயே
இறந்துள்ளார்.

அந்த
துறவியின் 
பெயர்தான்...

' Laughing
  Buddha '.

இன்று பல  
வீடுகளில்
வாஸ்து 
பிரச்சனை
நீங்குவதற்காக
வைக்கப்பட்டு
இருக்கும்...

தொந்தியுள்ள
சிரிக்கும் புத்தர் 
சிலை...

இவர்
நினைவில் 
வைக்கப்படுவது
தான் என்பது 
நினைவு 
கூறத்தக்கது.

" வாய்விட்டு
  சிரித்தால்
  நோய்விட்டு
  போகும் "

என்னும் 
சொலவடை 
நிஜமே.

வாங்க...

இனிவரும்
காலங்களில்
யாராவது
நகைச்சுவை
துணுக்குகள்
நம்மிடம்
உதிர்க்கும் 
போது...

அது 
நன்றாக 
இருந்தாலும்
இல்லாவிட்டாலும் 
கூட...

அவரையும் ஒரு
பொருட்டாக மதித்து
நாம் சிரிக்க
தொடங்குவோம்.

நம்மை சுற்றி
இருப்பவர்களையும்
சிரிக்க வைத்து
கொண்டே இருக்க 
முயற்சிகள் செய்வோம்.

  சிரிப்பில் 
  உண்டாகும் 
  ராகத்திலே

  பிறக்கும் 
  சங்கீதமே 

  அது 
  வடிக்கும் 
  கவிதை ஆயிரம்

  அவை 
  எல்லாம் 
  நம் எண்ணமே

  நம்
  மகிழ்ச்சி நம் 
  கை வண்ணமே.

அன்புடன்
காலை
வணக்கம்.

பகிர்வு

No comments: