Tuesday, December 01, 2020

புதிய பார்வை..புதிய கோணம்...



Niagara 
Syndrome.

ஒரு
பெரிய ஆறு.

ஒரு 
மனிதன் 
படகில் சென்று 
கொண்டு இருந்தான்.

காற்று 
தென்றலை போல 
வீசிக்கொண்டு
இருந்தது.

ரம்மியமான
சூழல்.

அதை
ரசித்து
கொண்டே,
துடுப்புகளை
பயன்படுத்தாமல்,
அதன்போக்கிலேயே
படகை போக விட்டான்.

காற்று 
சற்று வேகமாக 
வீச தொடங்கியது.

படகு 
ஆட்டம் போட 
தொடங்கியது.

இயற்கை
நம்மை இதமாக
தாலாட்டுகிறது

என்று 
மகிழ்ந்த இவன் 
இதனையும்
ரசிக்கலானான்.

நேரம்
ஆக ஆக
காற்று மிகவும்
பலமாக வீச
ஆரம்பித்தது.

அப்போது தான்
அவனுக்கு விழிப்பு 
நிலை வந்தது.

துடுப்புகளை 
எடுத்து கரையை
நோக்கி போட்டான்.

அவை அவன்
கட்டுபாட்டிற்கு
வரவில்லை.

அருகில்...

'ஹோ' என்ற
இரைச்சல் கேட்டது.

சில
நொடிகளில்...

படகு
மிக பெரிய
நீர்வீழ்ச்சியில்
விழ தொடங்கியது.

அதே
போலத்தான்.

'  நம்
  வாழ்வில்
  அதன் போக்கினை
  அதன் வழியில்
  போக விடாமல்...

  நம்
  போக்கிற்கு
  ஏற்ப திருப்பி
  கொள்ளாவிடில்...

  ஏற்படும்
  அபாயகர
  விளைவே...

  '  Niagara
     Syndrome '

எனப்படும்.

Anthony 
Robbins  
என்பவர் 
தன்னுடைய...

Awaken the Giant 
Within என்னும் 
நூலில்...

இதனை விரிவாக
விளக்கியுள்ளார்.

நம்
வாழ்க்கையும்
அமைதியான
ஓடம் தான்.

அதுவே
அளவில்லாத
வெள்ளம் வந்தால்
ஆடும் தான்.

' தென்னம் 
  இளங்கீற்றினிலே 
  தாலாட்டும் 
  தென்றலது...

  தென்னை தனை 
  சாய்த்துவிடும் 
  புயலாக 
  வரும்பொழுது '

என்னும்
வரிகளும்
உண்மையே.

இதைப்போன்ற
நேரங்களில்...

' வருமுன்னர் 
  காவாதான் 
  வாழ்க்கை 
  எரிமுன்னர் 
  வைத்தூறு 
  போலக் கெடும் '

என்னும்
வள்ளுவரின்
எச்சரிக்கையின் படி 
வாழ்ந்தோம் எனில்...

எந்த வகை
காற்றடித்தாலும்
நம் வாழ்வு வீழாது.

நம்
கனிந்த மனம்
எந்த காலத்திலும்
கலங்காது.

வாங்க...

முயற்சிகள்
செய்யலாம்.

அன்புடன்
காலை
வணக்கம்.


No comments: