Saturday, December 12, 2020

புதிய பார்வை..புதிய கோணம்...

🍁  புதிய பார்வை  🍁

" மனித மனம் 
  எதை கற்பனையில் 
  உருவாக்குகிறதோ, 
  நம்புகிறதோ அதை 
  அதனால் அடைய 
  முடியும் "

- எம்.எஸ்.உதயமூர்த்தி -

ஆம். 

நம் மன
எண்ணங்களின் 
வெளிப்பாடுதான்...
 
நாம் 
செய்யும் 
செயலில் 
அரங்கேற்றம்
செய்யப்படுகிறது.

நம் 
முதல் 
குடிமகனும் 
நம்மை கனவுகாண 
சொன்னது இதனால் 
தான்.

ஆனால்...

கால
வரையறை 
இல்லாத 
கனவுகளும்
திட்டங்களும்
வெறும் 
கற்பனைகளே. 

நாம் 
காணும் 
கனவுகளை 
செயல்படுத்த 
நாம் முயற்சிக்க 
வேண்டும்.

' முடியாது
  என்னும் ஒரு 
  வார்த்தை என்
  அகராதியில்
  இல்லை '

என்று
கூறியவர்
நெப்போலியன்.

' IMPOSSIBLE '
  என்னும்
  வார்த்தையில்...

  I'M POSSIBLE 
  என்னும் பொருள்
  அடங்கியுள்ளது 
  கண்கூடு.
   
யாரோ
ஒருவரால்
முடியும் போது...

நம்மால்
முடியாதா
என்ன ???

முடியாததற்கு 
காரணம், 
முயலாததே. 

நமக்கும்
ஆயிரம்
கனவுகள்
கற்பனைகள்.

அவைகளை
நனவாக்க
முயற்சிகள்
செய்யலாம்
வாங்க.

  நேற்று
  என்பது
  உடைந்த
  பானை...

  நாளை
  என்பது
  மதில் மேல்
  பூனை...

  இன்று
  என்பதே
  நம் கையில்
  உள்ள
  வீணை.

புதிய
நம்பிக்கைகளுடன்...

அன்புடன்
காலை
வணக்கம்.

🎉🎉🎉🎉🎉🎉🎉

No comments: