Tuesday, April 28, 2020

புதிய பார்வை...புதிய கோணம்...

🍁 புதிய பார்வை 🍁

சிறிய வயது மகனை
அழைத்துக்கொண்டு,
மலை உச்சிக்கு
சென்றார் தந்தை.

செல்லும் வழியில்,
தவறி விழுந்த சிறுவன்,
'அம்மா' என்று
அலறினான்...

அந்த வார்த்தை
அப்படியே, மலையில்
எதிரொலித்தது...

குதுகலமடைந்த
சிறுவன்...

மேலும் சில
வார்த்தைகளை
சொல்லி,
எதிரொலிகளை
கேட்டு மகிழ்ந்தான்...

திடீரென
'நீ ஒரு முட்டாள் '
என்றான்...

மலையும் அதே
வார்த்தையை
எதிரொலித்தது...

சிறுவன் கடுப்பாகி
போனான்...

இதை பார்த்த
தந்தை...

"நீ ஒரு அறிவாளி,"
என்று கத்த
சொன்னார்...

சிறுவனும்
அதே போல்
கத்தினான்...

மலையும் அதே
வார்த்தையை
எதிரொலித்தது...

மனம் மகிழ்ந்த
மகனை பார்த்து...

"இதுதான் வாழ்க்கை.
நம் செயல்கள்
அனைத்தும்,
நம்முடைய
மனதை
போலவே,
பிரதிபலிக்கும்
தன்மை
கொண்டது...

நல்லவைகளுக்கு
நல்லவையாகவும்,
தீயனவைக்கு
தீயதாகவும்,
அமைவது
இப்படியே,"
என்று தந்தை
கூறினார்...

'எண்ணம் போல்
வாழ்வு' என்பது
இதுதானே...

வாங்க...

நாமும்,
நேர்மறை
சிந்தனைகளை,
விதைக்க
தொடங்குவோம்...

எதிர்மறை
எண்ணங்களை
குறைக்க
தொடங்குவோம்...

அன்புடன்
காலை
வணக்கம்...

- Dr.Sundar Murthy -

No comments: