Sunday, April 26, 2020

புதிய பார்வை...புதிய கோணம்....

🍁🍁புதியபார்வை 🍁🍁

உலகில் பல
மனிதர்களை,
வருத்தத்தில்
உள்ளாக்குவது,
மனித
உறவுகளிடம்,
சமரசம்
காணாமையே.

நம்மை சுற்றி உள்ள
மனிதர்கள் மீதும்
உறவுகள் மீதும்
நமக்கிருக்கும்
கசப்பான
நினைவுகளை...

தன் வாழ்நாளின்
கடைசிநாள் வரை
சுமந்து கொண்டே
இறப்பவர்கள்
நிறைய பேர்
உள்ளனர்.

நம்
கோபத்தை
பேச்சுக்களில்
வெளிபடுத்தி,
ஜெயிக்கிறோம்
அல்லது
தோற்கிறோம்.

தொடர்ந்து
அவர்களை
எப்படியாவது
வெல்லும்
எண்ணங்களிலும்
செயல்களிலும்
ஈடுபடுகிறோம்.

இதன்
விளைவுகள்...

வருத்தங்கள்,
வேதனைகள்,
பகை உணர்வுகள்
தான்.

இந்த
வாழ்வு முறை,
அடுத்த
தலைமுறை வரை
தொடர்தல்,
அதை விட
கொடுமையானது.

மனித உறவுகள்
என்பது
மகத்தானது !
உயர்வானது !!
உன்னதமானது !!!

"தன்னைப்போல
பிறரை எண்ணும்
தன்மை வேண்டுமே

அந்த தன்மை வர
உள்ளத்திலே
கருணை வேண்டுமே

பொன்னைப்போல
மனம் படைத்தால்
செல்வம் வேறில்லை

இதை புரிந்துகொண்ட
ஒருவனை போல்
மனிதன் வேறில்லை"

என்னும்
வைர வரிகள்
நினைவு
கூறத்தக்கது.

வாங்க...

கசப்பான
நினைவுகளை
களை எடுப்போம்.

மக்கள் விரும்பும்
மனிதனாக வாழ
முயற்சிகள் செய்வோம்.

அன்புடன்
காலை
வணக்கம்.

No comments: