Wednesday, April 29, 2020

புதிய பார்வை...புதிய கோணம்...

🍁🍁 புதிய பூமி 🍁🍁

கலீல் கிப்ரான்
கவிதை ஒன்று...

சோளகாட்டு
பொம்மையிடம்
ஒரு கேள்வி.

"நீ மகிழ்ச்சியாய்
இருக்கிறாயா?"

"அடுத்தவர்களை
பயமுறுத்துகிறேன்
அல்லவா.
அந்த மகிழ்ச்சியே
எனக்கு போதும்."

இது தான்
அதன் பதில்.

இப்படித்தான்
தன்னை
'வைக்கோலால்'
திணித்து கொண்டு,
மற்றவர்களை
பயமுறுத்தி,
அதை பெருமை
என நினைத்து
கொண்டிருப்பர்
பலர்.

அவர்களுக்கு
அது இன்பத்தை
கொடுக்கும்.

ஆனால்
அவர்களை சுற்றி
உள்ளவர்களுக்கு,
அது துன்பம்
தருவதாகவே
அமையும்.

பயமுறுத்தும்
பார்வைகளில்,
வார்த்தைகளில்...

அன்பு
மலராது...

மகிழ்ச்சி
வளராது...

நட்பு
கிடைக்காது...

உறவுகள்
நிலைக்காது...

அன்பிற்கு என
சில பண்புகள்
உண்டு.

அது...

ஏழை
பணக்காரன்,
படித்தவன்
படிக்காதவன்,
மேல்சாதிகாரன்
கீழ்சாதிகாரன்,
என்னும்
நிலைகளை
பார்க்காது.

பார்வையில்
பாசம் தெரியும்.

வார்த்தைகளில்
அன்பின் அக்கறை
புரியும்.

எல்லோரையும்
ஒன்றாகவே
மதிக்கும்.

ஒரு
மனதாகவே
நினைக்கும்.

"ஆசை கோபம்
களவு
கொள்பவன்
பேசத்தெரிந்த
மிருகம்..

அன்பு நன்றி
கருணை
கொண்டவன்
மனித வடிவில்
தெய்வம்"...

இது
கவியரசரின்
கூற்று...

இதன்படி,
வாங்க...

எல்லோரிடமும்
புன்னகையுடன்
பழக
தொடங்கலாம்...

புதிய பூமியை
புதிதாக
படைக்க
செய்யலாம்...

அன்புடன்
காலை
வணக்கம்.

நன்றி
திரு. முனைவர்.சுந்தரமூர்த்தி

No comments: