Tuesday, April 28, 2020

புதிய பார்வை...புதிய கோணம்...

🍁🍁புதிய பாதை 🍁🍁

குருவிடம்
அவரது சீடர்கள்,
"நல்லவர் யார் ?
கெட்டவர் யார் ??
என்னும் குழப்பம்...

அடிக்கடி
எங்கள் மனதில்
தோன்றுகிறது...

அதை எவ்வாறு
சீரமைத்து கொள்வது ?"
என்று கேட்டனர்.

அதற்கு
குரு...

"செருப்பு
நம் காலை கடித்து
கொண்டிருக்கும் வரை,
நம் கவனம்
அங்கேயேதான்
இருக்கும்.

அது சரியாக
பொருந்தி விட்டால்,
அதை பற்றிய
சிந்தனை நமக்கு
ஏற்படாது.

அது
போலத்தான்...

நல்ல எண்ணங்கள்
நம் மனதில்
படியாத வரை,
நமக்கு குழப்பங்கள்
ஏற்படத்தான் செய்யும்.

மாறாக...

நல்ல
எண்ணங்கள்
மட்டுமே,
நம் மனதில்
நிரந்தரமாக
படிந்து விட்டால்,
இந்த மாதிரி
பிரச்சனைகள் எழாது"
என்று கூறினார்.

அவரின் கூற்று
உண்மைதான்.

அதன்படி...

நம்மை சுற்றி
உள்ளவர்கள்,
'நம்மை நல்லவர்கள்
என்று கூறுவதற்காக,
நாம் நல்லவர்களாக
இருப்பதை விட ...

எந்த
சூழ்நிலையிலும்,
நமக்கு நாமே
நல்லவர்களாக
மாறும் சூழ்நிலையில்...

எல்லோருமே
நம் கண்களுக்கு
நல்லவராக தெரிய
தொடங்குவர்'.

கொஞ்சம்
கஷ்டம் தான்
இருந்தாலும்,

வாங்க...

பார்வைகளை
மாற்றலாம்...

புதிய பாதையை
போட தொடங்கலாம்...

அன்புடன்
காலை
வணக்கம்.

No comments: