Friday, April 24, 2020

புதிய பார்வை.....புதிய கோணம்....

🍁🍁புதிய பார்வை🍁🍁

'தங்க
புத்தர்'

தாய்லாந்து நாட்டில்
களிமண்ணால் ஆன
புத்தர் சிலை ஒன்றை,
சில காரணங்களுக்காக
ஒரு கிராமத்தில்
இருந்து மற்றொரு
கிராமத்திற்கு
இடம் பெயர்த்தனர்.

சிலை
பயணப்பட்டிருந்த
நேரத்தில்...

திடீரென
காற்று வீச
தொடங்கியது.

மழை வரும்
சூழ்நிலையும்
உருவானது.

'மழையில் சிலை
கரைந்து விடுமே',
என்னும் அச்சத்தில்
மக்கள் சிறு பந்தல்
அமைக்க தொடங்கினர்.

ஆனாலும்...

காற்று மற்றும்
மழையின்
வேகத்தில்,
கொஞ்சம்
கொஞ்சமாக,
சிலை கரைய
ஆரம்பித்தது.

மக்கள்
செய்வதறியாது
தவித்தனர்.

அப்போது ஓர்
அதிசயம் நிகழ்ந்தது.

புத்தரின் தலை
பகுதியில் இருந்து,
களிமண் கரைய கரைய...

புத்தர்
தங்கமாக
ஜொலித்தார்.

ஆம்...

தங்கத்தால் அமைக்க
பட்டிருந்த புத்தர் சிலை
'களவாடப்படும்'
என்னும் அச்சத்தில்...

களிமண்னால்
முழுவதும்
மறைக்கபட்டு,
உருவாக்கியிருந்த
'ரகசியம்' அன்று
வெளிப்பட்டது.

தாய்லாந்து நாட்டில்,
இன்றும் அந்த
'தங்க புத்தரை'
நாம் காண முடியும்.

நாமும்
அது போலத்தான்...

நல்
குணங்களையும்,
நன்னெறிகளையும்,
கலாச்சாரத்தையும்
மறந்து...

தீய
சிந்தனைகளையும்,
செயல்களையும்,
குணங்களையும்...

'களிமண் பூச்சு'
என்னும் போர்வையில்,
நம் மீது நாமே
சில சமயங்களில்
பூசி கொள்கிறோம்.

'தன்னை அறிதல்'
மற்றும்
'விழிப்புணர்வு'
என்னும்...

காற்று, மழை
மூலமாக,
அவை கரைய
தொடங்கினால்...

நாமும்
தங்க புத்தரை போல்
ஜொலிக்க முடியும்.

வாங்க...

முயற்சிகள்
செய்யலாம்.

அன்புடன்
காலை
வணக்கம்.

1 comment:

Kasthuri Rengan said...

இது தனபாலன் அண்ணா பல ஆண்டுகளுக்கு முன் அவர் வலைப்பூவில் பகிர்ந்த கதை
அருமை.