Friday, November 27, 2020

புதிய பார்வை..புதிய கோணம்...



நன்றி 
என்றொரு
மந்திர சொல் :::

ஒரு
காடு.

ஞானி தன் 
சீடர்களுடன்
நடந்து சென்று
கொண்டு இருந்தார்.

கடும்
வெயில்.

உண்பதற்கு
கனிகள்
குடிக்க நீர் கூட
கிடைக்க வில்லை.

மிதியடி
இல்லாத
கால்களை
முட்களும் பதம்
பார்த்து கொண்டு
இருந்தன.

இரவு நேரம்
வந்து விட்டது.

சீடர்கள்
பாழடைந்த ஒரு
கோவிலில் தங்க
ஏற்பாடுகள் செய்து
கொண்டு இருந்தனர்.

ஞானி
சற்று சத்தமாக...

" இறைவனே !
  இன்றய 
  நாளை
  இனிமை
  ஆக்கியமைக்கு
  நன்றி "

என்று கூறி
இரவு வழிபாட்டை
தொடங்கினார்.

அன்றய
நிலைகளில்
பாதிக்க பட்டு
இருந்த சீடர்கள்
ஞானியிடம்
சற்று ஆவேசமாக...

" இன்று காலை
  முதல் நாம்
  அனைவரும்
  கொலைபட்டினி...

  குடிப்பதற்கு நீர்
  கூட இல்லாமல்
  துன்ப பட்டு 
  கொண்டு
  இருக்கிறோம்...

  இதில்...

  ஒன்றுமே தராத
  இறைவனுக்கு
  நன்றியா "...

என்று
வினவினர்.

அதற்கு
ஞானி...

" எதை 
  எப்படி 
  யாருக்கு 
  என்ன நேரத்தில் 
  தர வேண்டுமோ...

  அதை
  அவரவர்க்கு
  உரிய நேரத்தில்
  நிச்சயம்
  வழங்குவார்.

  இன்று...

  பசியை
  வலியை
  வேதனையை
  தந்துள்ளார்.

  நாளையே இந்த
  நிலை மாறலாம் "

என்றார்.

சீடர்கள் 
ஞானியிடம்
மன்னிப்பு கேட்டனர்.

வாங்க...

இறைவனுக்கு
மட்டுமல்ல...

தினமும்
நாம் சந்திக்கும்
அனைத்து
மனிதர்களுக்கும்...

எந்த
சூழ்நிலையிலும்
நாம் நன்றியை
தெரிவிக்கும் போது...

விளையும் 
நன்மைகள் ஏராளம்.

இதனை
புரிந்து கொண்டு...

இன்று 
இந்த நொடிமுதல்...

இறை 
சக்திக்கும்
நாம் சந்திக்கும்
அனைவருக்கும்
நன்றிகளை சொல்ல
தொடங்குவோம்.

நம்
வாழ்வின்
நிலையினை
மாற்றி அமைத்து
கொள்ள முயற்சிகள்
செய்வோம்.

அன்புடன்
காலை
வணக்கம்.

*பகிர்வு....*

No comments: