Monday, November 09, 2020

புதிய பார்வை....புதிய கோணம்....

வறுமை 
கல்லாத 
பாடங்களை 
கற்றுத்தரும் 
இல்லாத 
திறமைகளை 
கற்றுத்தரும் ...

வழக்கத்துக்கு 
மாறான 
வாய்ப்புகளோ
சகல 
செல்வங்களோ
சொகுசுகளோ
தரமுடியாதவற்றை
வறுமை
நமக்கு
கற்று
தருகிறது...

அது 
ஒரு 
பல்கலைக்கழகம் 
அந்த
பல்கலைக்கழகத்தில் 
பல 
அரசியல்வாதிகளும் மேதைகளும் 
பேச்சாளர்களும் 
அறிஞர்களும்
இசை  
வல்லுனர்களும் மனிதநேயமிக்கவர்களும்
புனிதர்களும்
படித்து 
பட்டம் 
பெற்று 
இருக்கிறார்கள் ...

வலுவான 
நோக்கம்
உள்ள 
மனிதனை 
விதியாலும்
தடுத்து 
நிறுத்த 
முடியாது ...

நம்மிடம் 
உள்ள 
பெரிய
குறை
எதுவெனில்
நாம்
மிக
உயரத்தில் 
அல்ல 
அதிக
தூரத்தில் 
நம்முடைய 
வாய்ப்புகளை தேடிக்கொண்டிருக்கிறோம்..


வாய்ப்புகள்
நம்மருகில்
உள்ளதை
பற்றிக்கொண்டு
வாழ்வின்
வெற்றி
பாதையில்
வீருநடை
போடுவோம்
வாங்க...

அன்புடன்
இனிய
காலை
வணக்கம்.