Friday, October 23, 2020

புதிய பார்வை...புதிய கோணம்...

வறுமையில் அடிபட்டவர்களுக்கு 
அதுவே
புகலிடம் 
மனம்
வாடியவர்களுக்கு 
அதுவே 
இளைப்பாறும் 
பூஞ்சோலை
அதன்
பெயர்
கனவுகள் ....

உங்கள் 
உடம்புக்கும் 
மனசுக்கும் 
வலிமை 
அளிக்கவல்லது... சுறுசுறுப்பைத் 
தரும் 
கனவுலகில் 
உங்களை 
நீங்களே 
புதுப்பித்துக் 
கொள்வீர்கள் 
கண்கவர் 
வண்ண 
ஓவியங்கள் 
காதுக்கு 
இனிய 
இசை 
வடிவங்கள் 
மனதில் 
பதியும் 
சிற்பங்கள்
உணர்வைத் 
தட்டியெழுப்பும்
கவிதைகள் ..
இவற்றுக்காக 
சில 
மணித்துளிகள்
உங்கள் 
வாழ்வில் 
ஒதுக்கியிருக்க 
மாட்டீர்களா ?...
இவையெல்லாம் 
கலைஞர்கள் 
கண்ட 
முதற்கனவு 
கனவின் 
படைப்பு 
என்பதை 
நீங்கள் 
அறிவீர்கள்..

வாங்க
கனவு
காணுவோம்
புதியவற்றை
படைத்து
சாதனை
நோக்கி
பயணிப்போம்


மிக்க அன்புடன்
இனிய
காலை
வணக்கம்....