Sunday, October 11, 2020

புதிய பார்வை...புதிய கோணம்...

முயல் ஒன்று 
தற்கொலை செய்து கொள்ளும் முடிவை 
எடுத்தது ...

என்ன பிரச்சனை 
அதற்கு பிரச்சனை 
மற்ற உயிரினங்களால்
தான் அது 
அழகாக  வேறு
இருக்கிறது துள்ளித் 
துள்ளி  குதிக்கிறது.. எல்லாவற்றையும் விட 
அதன் கறி 
ருசி மிக்கவாறு
இறைவன் படைத்துவிட்டான் 
முயல் கறி 
என்றால் அசைவ பிரியர்களுக்கு தனி சுவைதான் போங்க 
இதனால் முயலைப் 
பிடித்து கொடுத்தால் 
நல்ல காசு 
என்று வேடர் 
காட்டில் ஒருபக்கம்...

மற்றொரு திசையில் நாய்களின் தொந்தரவு ..

மூன்றாவது திசையை நோக்கினால் அங்கே 
புலி ஒன்று உரிமி கொண்டிருந்தது  
கடைசியாக நான்காவது 
திசை 
நோக்கி சென்றது  
அது 
தண்ணீர் நிரம்பிய 
ஏரி வெறுத்துப் 
போய் விட்டது
முயல்....

பயந்து பயந்து
வாழ வேண்டிய 
கட்டாயம் இந்த 
வாழ்க்கை தேவையா? தற்கொலை செய்து கொள்ளலாம் என்று முடிவெடுத்து ஏரிக்கரைக்கு சென்றது ஏரிக்கரையில் உணவு தேடிக்கொண்டிருந்த தவளைகள் முயலை
கண்டு பயந்து
விசுக் விசுக்கென்று 
தண்ணீர் குதித்தன ...

 நம்மை பார்த்து 
கூட சில 
விலங்கினங்கள் பயப்படுகிறது என்ற 
எண்ணம் முயலுக்கு 
சிறிது தன்னம்பிக்கை 
துளிர்க்க வைத்ததால்
தற்கொலை எண்ணத்தை மாற்றிக் கொண்டது...


நாமும் இப்படித்தான் வலிமையானவர்களை
பார்த்து பயந்து
நம்பிக்கை இழக்கிறோம்...

நமக்கு சமமானவர்களையும்
வலிமையில் குறைந்தவர்களை பார்த்து நம்முடைய நம்பிக்கையை வளர்த்து வளமாக வாழலாம்
வாங்க....
அன்புடன்
ணண்ண
இனிய
காலை 
வணக்கம்...