Sunday, February 14, 2021

ஆசிரியர் செம்மல் விருது...

சோழநாடு  ( தஞ்சாவூர் பகுதி) என்றாலே  மொழி,பண்பாடு மற்றும் கலை என்று நம் மன கண் முன் வந்து காட்சி கொடுக்கும்...இது அன்று மட்டுமல்ல இன்றும்  தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது...முத்தமிழான இயல்,இசை & நாடகம் வளர்க்கவும் இதில் சிறந்தோரை கண்டு அவர்களின் சீரிய பணிகளை பாராட்டி போற்றி வரும் ஒரு சில குழுமங்களில் தஞ்சை தமிழ் மன்றம் தனித்து நிற்கிறது.  நேற்று (14-2-21)வலங்கைமானில் இம் மன்றம் சிறந்த கவிஞர்களையும், கலைஞர்களையும் மற்றும் சிறந்த ஆசிரியர்களையும் அடையாளம் கண்டு அவர்களுக்கு விருது வழங்கி மகிந்தார்கள்..இந்த இனிய நிகழ்வில் எனக்கும் *ஆசிரியச் செம்மல்* என்று விருதை வழங்கி என் பணியை போற்றினார்கள்..என்னை போற்றிய * தஞ்சை தமிழ் மன்றம்*  நிறுவனர்,தலைவர்,செயலர் மற்றும் அனைத்து பொறுப்பாளர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்...

இவண்
என்றும் கல்விப் பணியில்
கனவு ஆசிரியர்
ஆ.சிவராமகிருஷ்ணன்.
சேலம்.

5 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

வாழ்த்துகள்...

L.S.Sir said...

வாழ்த்துகள் சார்

L.S.Sir said...
This comment has been removed by the author.
Sivaramakrishnan. Salem said...

நன்றி நட்புகளே....

Unknown said...

🙏🙏வாழ்த்துக்கள் ஐயா 🙏🙏....