Thursday, August 21, 2014

உனக்கும் மழை என்று பேர்!







உன் மச்சமாக முடியாததால்
தன் எச்ச நொடிகளை புனிதமாக்க
உன் இதழோரம் சிந்திமடிகிறது - மழைத்துளி!!



மழை முத்தத்தால் நாணி நின்ற
மரத்தின்நேசத்தை,
வேரைப்போலவே உணர்ந்த
கிளை மேவிய கிளி
சிறகுலுக்கும்சிலிர்ப்பாய்!!!

மழைத்திருநாளில்
கொடியேற்றமாய் தேநீர்
மழையோடு கரைந்து மழையாதல்
சொக்கப்பனை !!!

ஒரு துளிக்கும் மறுதுளிக்கும்
இடையே சிந்துகின்ற உன்னையும்
மழை என்கிறார்கள் அவர்கள்!!
 
நன்றியுடன் 
சிவா..

No comments: