Sunday, August 31, 2014

ஹைக்கூ ... கவிதைகள்...


இரவில் பேய் மழை
_________________________________



கலின் படாடோபத்தை, மதிக்கும் அனைவரும்,
“இரவாகிய தன்னை யாரும் மதிப்பதில்லையென்று,”
இருட்டுப் போர்வையில் முகம் புதைத்துக்கொண்டு,
இரவு முழுதும் மனம் விட்டு அழுதது…! 




நறுமண மலர்…!
_________________________
 
வாடி கிடந்த மலரிடம், அன்றலர்ந்த மலர்,
“நறுமணத்துடன் நானிருக்க, நலம் குலையும்படி
நேற்றே ஏன் மலர்ந்தாய்..? என்ன அவசரம்..?” என்று
அதிகாரமாய் வினவ, “கவலைபடாதே..! நாளை நீயும்
என்னருகில்…!”என்றது வாடிய மலர் அலட்சியமாய்…!



பூங்காவின் புற்கள்….!
_________________________________
 
நாங்கள் இனி, எந்நாளும் எவர் கால்களிலும்
மிதிபட்டு நசுங்காமல், தலைநிமிர்ந்து நலமுடன்
நிற்போம் என்று, வெளியிருந்த மற்ற புற்களிடம்,
தன்னம்பிக்கையுடன்” சொல்லிக்கொண்டது…..!   
   

சூறாவெளியின் போட்டி அழைப்பு…! 
_________________________________________________________  
      
ன்னைப்போல் உன்னால் பயணிக்க முடியுமா..?”
ஆக்ரோசமாக சுழன்றடித்து ஆவேசபட்ட சூறாவளியிடம்,
“உன் ஆரம்பமே நான்தான்..!” என்று தன்னடக்கத்துடன்,
பதில் ௬றி அமைதியுடன் நகர்ந்தது தென்றல்….!



கற்றவர்களின் பெருமை..!
_________________________________________
 
ன்னால்தான் உனக்குப்பெருமை..!” என்றது காகிதம்
எழுத்திடம்..! அவசரமாய் அங்கு வந்து “இல்லவே இல்லை! என்னால்தான்!” என்றது எழுதுகோல்.! எழுந்து நின்ற
எழுத்துக்கள் “நம்மால் எதுவுமில்லை, கற்றவர்களால்தான்
நமக்கு என்றும் பெருமை..!” என்றது அமைதியுடன்..!



இன்னும் வளரும்...
 
நன்றியுடன் ...
.சிவா..

No comments: