Monday, September 28, 2020

புதிய பார்வை.. புதிய கோணம்..



பிறர் 
உன்னை 
தூற்றலாம்
தாழ்த்தலாம்
வெறுக்கலாம்
அவமான 
படுத்தலாம்.

அது 
அவர்களது 
பிரச்சினை.

உன்னை நீ 
உணர்ந்து 
கொண்டால்...

பிறரின் 
தூற்றுதலும் 
போற்றுதலும்...

கடல் 
அலைகளை
போலவே...

' இதுவும்
  மேல்மட்ட 
  செயலே '

என்பதை
உணரலாம்.

_*கடல்*_
_*அலைகளால்*_

_*கடல்*_
_*ஒருபொழுதும்*_

_*பாதிக்கப்படுவது*_
_*இல்லை*_

- ஓஷோ -

அவமானங்களை
சந்திக்காத
தலைவர்கள்
இல்லை.

ஆனால்...

அவர்கள்
அவைகளை
வெகுமானமாக
மாற்ற தெரிந்து
வைத்திருந்தார்கள்.

அதனால் தான்
அவர்கள்
வெற்றியும்
பெற்றார்கள்.

வாங்க...

நம் 
வாழ்வில்
நமக்கும்
இவைகள்
ஏற்படுவது
உண்டு.

இவைகளை
உரமாக்கி
உயர்வடைய
முயற்சிகள்
செய்வோம்.

' இன்று 
  கண்ட 
  அவமானம் 

  வென்று 
  தரும் 
  வெகுமானம்

  வானமே 
  தாழலாம்

  தாழ்வதில்லை 
  தன்மானம்

  மேடுபள்ளம் 
  இல்லாமல் 

  வாழ்வில் 
  என்ன 
  சந்தோஷம்

  பாறைகள் 
  நீங்கினால்
  ஓடைக்கில்லை 
  சங்கீதம்  '

வைரமுத்துவின்
வைர வரிகள்
உண்மைதானே.

அன்புடன்
இனிய
காலை
வணக்கம்.

நன்றி
பகிர்வு..


No comments: