Friday, August 07, 2020

புதிய பார்வை..புதிய கோணம்..



" லட்டு
  கொடுத்தால்
  இன்பம்
  வருமா ???

  துட்டு
  கொடுத்தால்
  இன்பம்
  வருமா ???

  நகை
  நட்டு
  கொடுத்தால்
  இன்பம்
  வருமா ???

  விட்டு
  கொடுத்தால்
  தான்
  இன்பம்
  வரும் "

நீதியரசர்
கற்பக விநாயகம்
அவர்களின்
வார்த்தைகள்
இவை.

' விட்டு 
  கொடுப்பவர்
  கெட்டு
  போவதில்லை...

  கெட்டு
  போபவர்
  விட்டு
  கொடுப்பது
  இல்லை '

இது
பெரியோர்களின்
வாக்கு.

விட்டு 
கொடுப்பது
என்பது...

மென்மையானவர்
மேன்மைமிக்கவர்
குணங்களில் 
ஒன்று.

அதை
ருசித்தவர்க்கே
அதனை
ரசிக்க தெரியும்.

அதை
ரசிப்பவர்க்கே
அதன்
ருசி புரியும்.

அதெல்லாம்
ஒரு மகா
ரசனை.

நீங்களும்
வாங்க...

ரசிக்க
ருசிக்க
தொடங்கலாம்.

வாழ்க்கையை
கொண்டாட
முயற்சிகள்
செய்யலாம்.

அன்புடன்
இனிய
காலை
வணக்கம்.


1 comment:

திண்டுக்கல் தனபாலன் said...

விட்டுக் கொடுப்பது, கால்கள் ஒன்றை ஒன்று விட்டுக் கொடுப்பதை போல...