Tuesday, March 10, 2020

புதிய பார்வை...புதிய கோணம்...

அடர்ந்த காட்டில் ஒரு பறவை, தன் சிறகுகளை கொஞ்சம் கொஞ்சமாக இழந்து கொண்டு வந்தது.

'தான் இறந்து விடுவோமோ' என்னும் பயத்தில், 'தன்னை யாராவது காப்பாற்ற மாட்டார்களா' என்று அது
ஏங்கி கொண்டிருந்தது.

ஒரு நாள் அந்த வழியே ஒரு சீடர் சென்று கொண்டிருந்தார்.

அந்த பறவை
அந்த சீடரை அழைத்து,

" என்னை போல மற்ற பறவைகள் எல்லாம் சந்தோஷமாக வானில் பறந்து கொண்டிருக்கின்றன.
எனக்கு மட்டும்
இந்த துயரம் ஏன்?
இனி நான் உயர பறக்க இயலாது.உயிர் பிழைக்கவும் முடியாது.
உங்கள் குருவை எல்லோரும் மகான்
என்று அழைக்கின்றனர்.
உங்கள் குருவிடம் சொல்லி என்னை காப்பாற்றுங்கள்"
என்று கெஞ்சியது.

சீடர் தன் குருவிடம்
நடந்ததை கூறினார்.

" நீ ஒன்றும் செய்ய வேண்டாம். அது அந்த பறவையின் கர்மா. நீ அந்த பறவையிடம் சென்று
'எனக்கு கிடைத்த இந்த வாழ்க்கைக்கு நன்றி. நான் நிறைவாகவே இருக்கிறேன். குறை ஒன்றும் எனக்கு இல்லை' என்று தினமும் கடவுளிடம் கூறச்சொல்"
என்று சீடனிடம்  கூறினார் குரு.

அந்த சீடர்
பறவையிடம் சென்று
'குரு சொன்னதை'
சொல்லிவிட்டு சென்றார்.

பறவையும்
'குரு கூறியவாறு'
தினமும் கடவுளுக்கு
'நன்றி' சொல்லிவந்தது.

மாதங்கள்
சில சென்றன.

குருவும் சீடரும்
மீண்டும் ஒருநாள்,
அந்த வழியாக வந்தனர்.

அந்த பறவை
மகிழ்ச்சியாக வானில்
சிறகடித்து பறந்து கொண்டிருந்தது.

இதனை பார்த்த சீடர்
"இது எப்படி சாத்தியமாயிற்று"
என்று குருவிடம்  வினவினார்.

"நம்பிக்கையை இழந்த
அந்த பறவைக்கு,
'நன்றி' என்னும்
'மந்திரச்சொல்',
அதன் வாழ்க்கையையே
மாற்றி விட்டது"
என்று குரு கூறினார்.

நேர்மறை
சிந்தனைகளும்,
நேர்மறை
செயல்களும்,
சிறப்பான
முடிவுகளை தரும்
என்பது உண்மையே.

வாங்க
நாமும்
நேர்மறை
எண்ணத்தை
வளர்த்து
மகிழ்ச்சியாய்
வாழ்வோம்...

அன்புடன்
இனிய
காலை
வணக்கம்.

No comments: