Sunday, March 01, 2020

புதிய பார்வை...புதிய கோணம்..

💐💐💐💐💐
பொதுத்தேர்வு
எழுதப்போகும்
எனதருமைக் குழந்தைகளே!
வணக்கம் 🙏🏼

🌻🌻🌻🌻🌻

எழுதுவது
விஷப்பரீட்சை அல்ல
விஷயம் நிறைந்த
பரீட்சை.
⛱👍🏻
தேர்வு
வாழ்க்கை அல்ல
அச்சப்பட...

எளிதாக
எதிர்கொள்
எந்த உயரத்தையும்
எட்டலாம்.

இதுவரை
அப்பாவின் ஆறுதல்
அம்மாவின்
தேறுதல்
ஆசிரியரின்
தேடல்கள்
உன்னை
பட்டை தீட்டியிருக்கும்.

படி...படி...படி...
படித்துவிட்டாயா?
எழுதிவிட்டாயா?
மதிப்பெண் எவ்வளவு?
மருத்துவமா?
பொறியியலா?

என்ற
கேள்விக்கனைகள்தான்
உன்
காதுகளை
வேட்டையாடிருக்கும்.

மறந்து விடு
எல்லாம் மறந்து விடு.
👍🏻👍🏻👍🏻
தேர்வு
உன்னுடையது.

தைரியத்தை
உனக்குள் வை.

தேர்வு நாளில்

எழு
அதிகாலை யில் எழு.

உன்னைத் தூய்மையாக்கு.
உள்ளத்தைத்
தூய்மையாக்கு.

படித்ததை
மூளையில்
முடிந்து வை.
☕☕☕☕
எதை எழுதுவது?
எப்படி எழுதுவது?
எனத் திட்டமிடு.
அதற்காக
சிந்தனை யை வட்டமிடு.

மதிப்பெண்ணை மட்டும் யோசித்திவிடாதே.🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
அது உன்னைக்
கோழையாக்கும்
கைவிலங்கிடும்
மனதை மலடாக்கும்.

உழைப்பிற்கும்
உன்னதமான
முயற்சிக்கும்
உரிய மதிப்பெண்
கிடைத்தே தீரும்
☕☕☕
தேவையானால்
சாப்பிடு
தேவையானவற்றை
சாப்பிடு.

உணவுகள் கூட
உணர்வுகளைச்
சிதைக்கும்.

துணியை
உடுக்கும் போதே
துணிவை
உடுத்திக்கொள்.
👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻
தேர்வு
சதா  ரணம் அல்ல
சாதாரணம்.

தந்தையிடம்
தைரியத்தை க்
கடன் வாங்கு.
🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
தாயிடம்
நிதானத்தைப்
பெற்றுக்கொள்.

கற்றுக்கொடுத்தவனிடம்
காற்றை
வாங்கிக்கொள்.
🦋🦋🦋🦋
தேர்வறைக்குள்
தெளிந்த
நீரோடையாய் செல்.

ஒரு நொடி
கண்களை மூடிக் கொள்.

மிச்சமுள்ள
அச்சத்தை
எச்சமென தூக்கி எறி..
👍🏻👍🏻👍🏻👍🏻
எல்லாம் தெரியும்
என்று
நம்பி கையால் எழுது.
உன்
நம்பிக்கையால் எழுது.

எழுது
தெளிவாக எழுது.

எழுது
எளிதாக எழுது.

வினா அருகில்
விடையோ
உன்னுள்
உருண்டோடி விளையாடி வருகின்றன

எழுது
தடுமாறாமல் எழுது.
தடம் மாறாமல் எழுது.

எழுதியபின்
எழுந்து வா
வாழ்க்கையிலும்...

முன்னேற
முன்பதிவு செய்தோம்
என்று. ..
முகம் மலர வா...
🌻🌻🌻🌻🌻
உன்னை
அழைத்துச் செல்ல
வெற்றி
வெகு நேரம்
காத்துக்கிடக்கும்.

🌻🌻💐🌻🌹
அன்புடன்
இனிய
காலை
வணக்கம்..
🌺🌺🌺🌹🌹🌹🙏🙏👍👍

No comments: