Sunday, June 28, 2020

புதிய பார்வை...புதிய கோணம்...

🍁 புதிய பார்வை 🍁

ஊருக்கு
வெளியில்
ஆலமரத்தடியில்...

கண்பார்வையற்ற
துறவி ஒருவர்
அமர்ந்திருந்தார்.

அப்போது
அங்கு வந்த
ஒருவன்...

ஏய் 
சாமியாரே
இந்த பக்கம்
யாராவது
போனார்களா ???

என்று சற்றும் 
மரியாதை இன்றி 
கேட்டான்.

அப்படி யாரும்
சென்றதாக
தெரியவில்லை
என்று...

பதில் அளித்தார்
அந்த துறவி.

கொஞ்ச நேரம்
கழித்து...

வேறொருவர்
அங்கு வந்து
துறவியிடம்...

சாமி 
இந்த வழியாக
யாராவது
போனார்களா ???

என்று அதிகார
தொனியில்
கேட்டார்.

நான் கவனிக்க
வில்லை என்று
பதில் கூறினார்
துறவி.

சற்று நேரம்
கழித்து...

மற்றொருவர்
துறவியிடம்
அருகில் வந்து...

துறவியாருக்கு
என் அன்பு
வணக்கம்.

சற்று முன்
இவ்வழியாக
யாராவது
சென்றார்களா 
என்பதை 
தெரிவிக்குமாறு
பணிவுடன்
வேண்டினார்.

துறவி
இந்த வினாவில்
மனம் மகிழ்ந்து...

மன்னருக்கு
என் முதல்
வணக்கம்.

சற்று முன் ஒரு
காவல் வீரன்
சென்றான்.

அதை அடுத்து
ஒரு அமைச்சர்
சென்றார்.

இப்போது
நீங்கள் வந்து
இருக்கிறீர்கள்
என்று கூறினார்.

தங்களுக்கு
கண் பார்வை
இல்லை...

இருப்பினும்
எவ்வாறு 
சரியாக 
கூறினீர்கள் ???

என கேட்டார் 
மன்னர்.

இதை
அறிவதற்கு
பார்வை தேவை
இல்லை...

அவரவர் 
பேசுவதை 
வைத்தே
அவர் யார் 
என நாம் 
அறியலாம்.

முதலில் 
வந்தவன்
மரியாதை 
தவறி
பேசினான்...

இரண்டாவது
வந்தவன்
அதிகாரத்தில்
பேசினான்...

மூன்றாவது
நீங்கள் 
மிகுந்த
பணிவுடன்
பேசினீர்கள்
இது போதாதா...

என்று பதில்
அளித்தார்
துறவி.

மன்னர் 
மகிழ்ச்சி
அடைந்து...

துறவியை
மீண்டும்
வணங்கி
விடைபெற்றார்.

வாங்க...

நம்ம
பற்றிய
கருத்தை
தீர்மானிப்பது...

நாம் 
பயன்படுத்தும்
வார்த்தைகளே
என்பதை
உணருவோம்.

ஆதலால்
நல்லதையே
பேச முயற்சிகள்
செய்வோம்.

நம்
வாழ்க்கை
நம்
வார்த்தைகளில்.

அன்புடன்
இனிய
மதிய
வணக்கம்.


No comments: