Saturday, September 12, 2026

A.I ஆல் ஏற்படப் போகும் தண்ணீர் பஞ்சம்

சமூக வலைத்தளங்களை திறந்தால் போதும், இன்ஸ்டாகிராம் மற்றும் பேஸ்புக் பக்கங்கள் முழுவதும் 80-களில் வாழ்ந்ததைப் போன்ற Vintage புகைப்படங்களால் நிரம்பி வழிகின்றன. 

Gen-Z முதல் Millennial வரை அனைவரையும் அடிமைப்படுத்தியுள்ள இந்த AI 80s Trend, வெறும் ஒரு நொடிப் பொழுதில் நம்மை கடந்த காலத்திற்கு அழைத்துச் செல்கிறது. 

கண்ணுக்கு மிகவும் அழகாகவும் வித்த்தியாசமாகவும் தெரியும் இந்த மாயாஜாலத் தோற்றத்திற்குப் பின்னால், நமது பூமி எதிர்கொள்ளப் போகும் மாபெரும் சுற்றுச்சூழல் அதிர்ச்சி மறைந்துள்ளது பலரும் அறியாத சோகம்.

செயற்கை நுண்ணறிவு (AI) என்பது வெறும் டிஜிட்டல் திரையில் இயங்கும் மென்பொருள் மட்டுமல்ல. அதன் பின்னணியில் சக்திவாய்ந்த தரவு மையங்கள் (Data Centers), அதிவேக கணினி சிப்கள் (Chips) மற்றும் பிரம்மாண்ட குளிரூட்டும் அமைப்புகள் என ஒரு மாபெரும் இயற்பியல் கட்டமைப்பு இயங்கிக் கொண்டிருக்கிறது. 

நாம் பதிவேற்றும் ஒவ்வொரு புகைப்படமும் இந்த இயந்திரங்களின் மூலமே Vintage  வடிவமாக மாற்றப்படுகிறது.

2030-ஆம் ஆண்டிற்குள் Al பயன்பாட்டிற்கான தரவு மையங்களின் தண்ணீர் தேவை, சுமார் 130 கோடி இந்திய மக்கள் பயன்படுத்தும் தண்ணீரின் அளவை மிஞ்சிவிடும்.

இது ஐக்கிய நாடுகளின் நீர், சுற்றுச்சூழல் மற்றும் ஆரோக்கியத்திற்கான பல்கலைக்கழக நிறுவனம் (UNU-INWEH) வெளியிட்டுள்ள அதிர்ச்சி எச்சரிக்கையாகும். 

தரவு மையங்களில் தொடர்ச்சியாக இயங்கும் கணினிகள் வெளியிடும் வெப்பத்தைத் தணிக்க, தினமும் கோடிக்கணடோக்கான லிட்டர் தண்ணீர் குளிரூட்டும் அமைப்புகளுக்கு அவசியமாகிறது. 

இது கண்களுக்குத் தெரியாத மறைமுக நீர் நுகர்வை அதிகரித்து, உலகளாவிய நீர்த் தட்டுப்பாட்டை உருவாக்கும்.

Carnegie Mellon பல்கலைக்கழகம் மற்றும் hacking base நிறுவனம் மேற்கொண்ட ஆய்வின்படி, ஒரு AI படத்தை உருவாக்க 0.01 முதல் 0.29 கிலோவாட் மின்சாரம் செலவாகிறது. 

உலகளவில் கோடிக்கணக்கான மக்கள் ஒரே நேரத்தில் இந்த மோகத்தில் மூழ்கிப் படங்களை உருவாக்கும் போது, மின்சார நுகர்வு பல மடங்கு அதிகரிக்கிறது. 

அமெரிக்காவின் MIT ஆய்வும், இந்தத் தரவு மையங்களின் மின்சாரத் தேவை மிகக் குறுகிய காலத்திலேயே இரட்டிப்பாகியுள்ளதாக பகீர் செய்தியை கிளப்பியுள்ளது.

ஒரு சில நொடிப் பொழுதுகளில் கிடைக்கும் டிஜிட்டல் மகிழ்ச்சிக்காக, நமது எதிர்கால சந்ததியின் நீராதாதாரத்தையும் பூமியின் சுற்றுச்சூழலையும் பணயம் வைப்பது எந்த விதத்தில் நியாயம்? 

AI தொழில்நுட்பம் என்பது மனித குலத்தின் வளர்ச்சிக்குத் தேவைதான், ஆனால், அதன் விபரீத விளைவுகளை உணர்ந்து விழிப்புணர்வுடன் பயன்படுத்துவதே காலத்தின் கட்டாயம்.

சமூக வலைத்தளங்களின் மாய வித்தையில் சிக்கி, சில நொடிப் பொழுதுகளில் கிடைக்கக்கூடிய டிஜிட்டல் புகழுக்கும் மகிழ்ச்சிக்கும் வீணாப்போன நாலு லைக்கிற்கும் அடிமையாகிவிட்ட மனித குலம், தனக்கு உயிர் தந்து கொண்டிருக்கும் பூமியையே மெல்லக் கொன்று கொண்டிருக்கிறது. 

தொழில்நுட்ப வளர்ச்சியின் உச்சத்தில் இருக்கும் நாம், இயற்கையைச் சூறையாடும் இந்தத் திளைப்பு நமது எதிர்கால சந்ததிக்கான மரணப் படுகையை நாமே தோண்டுவதற்குச் சமம். 

சுயநலத்தின் வாசலில் நிற்கும் இந்த ஆபத்தான போக்கு மாறாவிட்டால், நவீன மனிதனின் முடிவு இயற்கையின் கோரத் தாண்டவத்தில்தான் முடியும் என்பது மறுக்க முடியாத கசப்பான உண்மை!
நன்றி பகிர்வு பதிவு.