Thursday, December 21, 2023

மாதங்களில் ஒரு வசந்தம்...மார்கழி...பாகம் 1


      🍒 மார்கழி மாதத்தின் சிறப்புகள்!! 🍒

     🍁 'மாதங்களில் நான் மார்கழியாக இருக்கிறேன்'  என   ஶ்ரீகிருஷ்ணர் கீதையில்  கூறியிருக்கிறார். 

🍁மார்கழி மாதம் பீடுடைய மாதமாகும்.  (பீடு=பெருமை)

🍁இம் மாதம்  தேவர்களுக்கான அதிகாலை பொழுதாகும்.  

🍁  ஒரு வருடம் என்பது  தேவர்களுக்கு ஒரு நாள் என்பர். 

🍁 தை மாதத்திலிருந்து  ஆனி மாதம் வரை  உத்ராயண புண்ணிய காலமாகும்.  

🍁அதாவது தேவர்கள் விழித்திருக்கும் காலம்.   

🍁எனவே  மார்கழி என்பது தேவர்களுக்கு  வைகறை  பொழுதைப் போன்றது. 

🍁மிகவும்  சிறப்புடைய மாதம் மார்கழி.  எனவே இந்த மாதம் முழுவதும் இறைவழிபாட்டிற்கு  உகந்தது. 

    🍁  தமிழ் வருடத்தின் ஒன்பதாவது மாதமான மார்கழியைத்  'தனுர் மாதம்" எனவும்  அழைப்பர்.

🍁 இம்மாதத்தில்  அதிகாலையில் எழுந்து குளிர்ந்த நீரில் குளித்துவிட்டு வாசலில் வண்ணக்கோலம் இட்டு இறைவழிபாடு செய்வது  மக்களின் வழக்கம். 

🍁 ஓசோன் படலமானது பூமிக்கு மிகஅருகில் இம்மாதத்தில் உள்ளது. 

🍁எனவே சுத்தமான காற்றை சுவாசித்து உடல்நலனைப் பேணும் பொருட்டு அதிகாலை வழிபாட்டைப்  பக்தர்கள்  இம்மாதத்தில்   மேற்கொள்ளுகின்றனர். 

🍁இம்மாதத்தில் மேற்கொள்ளப்படும் அதிகாலை இறைவழிபாடு பற்றி மாணிக்க வாசகர் திருவெம்பாவையிலும், ஆண்டாள் நாச்சியார் திருப்பாவையிலும் போற்றியுள்ளனர்.

நன்றி...!
பகிர்வு பதிவு

No comments: