Saturday, August 19, 2023

பத்து கட்டளைகள்...

பிள்ளைகள் அனைவரையும் திருமணம் முடித்துக் கொடுத்து, பணியிலிருந்து ஓய்வு பெற்ற மூத்த குடிமக்கள்; கீழ்கண்ட  பத்து கட்டளைகளை பின்பற்றினால் வாழ்வின் கடைசி பக்கங்கள் மிகவும் சுவாரசியமாகவும்  இனிமையாகவும்  இருக்கும்.. 🌹.*

*01) எந்த நிலையிலும் வாழ்வின் கடைசி பகுதியில்  பிள்ளைகளுடன் சேர்ந்து வாழ நினைக்காதீர்கள். (சுதந்திரம் அனைத்தும் பறிபோகும்)*

*02) பேரக் குழந்தைகளின் மேல்  எவ்வித உரிமையும் இல்லை என்பதை மறக்கவேண்டாம். குழந்தை வளர்ப்பில் மகனுக்கோ மகளுக்கோ எவ்வித அறிவுரையும் சொல்லாதீர்கள். அறிவுரை மற்றும் அனுபவங்களை அவர்கள் மதிக்க மாட்டார்கள்*

*03) விலகியே இருங்கள்.  உறவுகள் இனிமையாகத் தான் இருக்கும். என் பிள்ளை என் பிள்ளை என பதறாதீர்கள்.*

*சிறகு முளைத்த பறவைகள் அவர்கள் என்பதை நினைத்து அமைதியாக இருங்கள்*

*04) பொருள் இல்லார்க்கு இவ்வுலகம் இல்லை.  கையில் பணம் இல்லாவிட்டால்,  பிள்ளைகளிடம் மதிப்பும், மரியாதையும், உரிமையும்  நிச்சயம் இருக்காது. சேமிப்பு மற்றும் சுய சம்பாத்திய சொத்துக்களை உயிருடன் இருக்கும் வரை யாருக்கும் பகிர வேண்டாம். முழுவதும் பகிர்ந்தால்,  நிற்க வேண்டியது நடுத்தெருவில் தான்.*

*05) காலம் முழுதும் அவர்கள் உயர்வுக்காக பாடுபட்டு பல இழப்புகளை சந்தித்து இருப்பீர்கள். அவற்றை திரும்பத் திரும்ப சொல்லி காட்ட வேண்டாம். கடமையை செய்தீர்கள். அவ்வளவே!*

*06) கூட்டு குடும்ப வாழ்வு சிதைந்துபோன தலைமுறையில் வாழ்கிறோம் என்பதை மறவாதீர்கள். தேவைப்பட்டால், வருடம் ஒருமுறை பரிசுப் பொருட்களுடன் சென்று பேரன் பேத்திகளுடன் சந்தோஷமாக இருந்து வாருங்கள். அங்கே அதிகம் தங்க வேண்டாம்.*

*07) எந்த நேரத்திலும் மருமகள் முன்  மனைவியை /கணவனை விட்டுக் கொடுத்து பேசாதீர்கள். இருவரில் ஒருவரை யார் குறைத்து பேசினாலும் எதிர்குரல் கொடுக்கத் தவறாதீர்கள். பிள்ளைகள் வீட்டிற்கு சென்றால், கூடவே  தேவையான மருந்து மாத்திரை, எண்ணெய், பவுடர்,சீப்பு,சோப், போன்றவற்றை எடுத்து செல்லுங்கள்.*

*08) அவர்களின் ஆடம்பர வாழ்வை விமர்சிக்க வேண்டாம். சேமிப்பின் அவசியம் பற்றி சொல்லி அவமானப்பட வேண்டாம். அவர்கள் வாழ்வது உங்கள் வாழ்க்கை போல் போராட்ட வாழ்க்கை இல்லை. நவீன கார்பரேட் வாழ்க்கை.  1000 ரூபாயை பெரிதாக நினைத்தவர்கள். அவர்கள் லட்சங்களை புரட்டி பார்ப்பவர்கள்.*

*09) அதிக பாசம், ஆசை வைத்தால் அது மோசம். அவர்கள் குழந்தையை அவர்கள் கவனித்துக் கொள்வார்கள்.  அறிவுரைகளை தவிருங்கள்!*

*10) உங்களை விட அறிவிலும், திறமையிலும் அவர்கள் சிறந்தவர்கள் என்பதை ஏற்றுக் கொள்ளுங்கள். அல்லது,  முட்டாள்களாகவே நடியுங்கள். அப்பொழுது தான் பிழைப்பீர்கள்!*

*அதிக அறிவுரைகள் இக்கால சந்ததியினருக்கு அறவே பிடிக்காது.* 

*நன்கு படித்திருந்தாலும் நல்ல பதவியிலிருந்து ஓய்வு பெற்றிருந்தாலும் அவர்கள் முன் தற்குறிகளே.!*

*தலையாட்டும் பொம்மைகளே!!*

நன்றி..!
இது ஒரு பகிர்வு பதிவு...

2 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

அருமையான எண்ணங்கள்...

Anonymous said...

Unmai unmai unmai....