Monday, November 01, 2021

புதிய பார்வை...புதிய கோணம்...

🍁  புதிய பார்வை  🍁

  நிராயுத
  பாணியாய்
  போராடும் 
  அந்த
  ஒற்றை 
  மனிதனை

  வலிமை 
  வாய்ந்த
  ஆயுதங்கள்
  வைத்திருக்கும்
  பிரிட்டிஷ்
  அரசால்
  நசுக்க 
  முடியாதா ?

எனும் 
கேள்வி
இங்கிலாந்து
பாராளுமன்ற
கூட்டத்தில்
எதிர்கட்சி 
உறுப்பினர்கள்
எழுப்பினர்

அதற்கு

  அந்த
  மனிதன்
  கத்தியை
  எடுத்திருந்தால்
  நான் துப்பாக்கியை
  எடுத்திருப்பேன்

  அந்த
  மனிதன்
  துப்பாக்கியை
  தூக்கி இருந்தால்
  நான் பீரங்கியை
  தூக்கி இருப்பேன்

  அந்த
  மனிதன்
  பீரங்கியோடு
  வந்திருந்தால்
  நான் குண்டு மழை
  பொழிந்திருப்பேன்

  ஆனால்

  அந்த 
  ஒற்றை
  மனிதன் 
  சத்தியத்தை
  கையில் வைத்து
  போராடுகிறானே

  சத்தியத்தை
  எதிர்க்கும்
  ஆயுதம்
  இதுவரை
  கண்டுபிடிக்க
  படவில்லை

என்று பதில்
அளித்தவர்
அந்நாட்டு
பிரதம மந்திரி
வின்ஸ்டன்
சர்ச்சில்

அந்த
ஒற்றை
மனிதன்

உலகம்
போற்றும்
உத்தமர்
காந்தி

எந்த
சூழ்நிலையிலும்
சத்தியத்தை
கடைபிடிப்பவர்
சரித்திரத்தில்
இடம் பிடிப்பது
நிச்சயம்
தானே

  வாங்க ::

  அவர்
  காட்டிய
  பாதையில்
  பயணப்பட
  தொடங்கலாம்

  அது
  கண்டிப்பாக
  கடினமாக கூட
  இருக்கலாம்

  இருப்பினும்
  முயற்சிகள்
  செய்யலாம்

புதிய
நம்பிக்கை
கீற்றுக்களுடன்

நன்றி 
முனை.சுந்நர மூர்த்தி

No comments: