Sunday, January 19, 2020

புதிய பார்வை....புதிய கோணம்...

S   hut
U   p and
M  ove
O   n...

நம்மை சுற்றி உள்ள
மக்களில் பெரும்பாலோர்,
எப்போது பார்த்தாலும்,
யாரை பற்றியாவது,
எதை பற்றியாவது
குறை சொல்லி கொண்டே,
புலம்பி கொண்டே இருப்பர்...

இவர்கள் தங்களின் மகிழ்ச்சியை
தொலைப்பதோடு,
சுற்றி இருப்பவர்களின் சந்தோஷத்தையும்,
காலி செய்து விடுவார்கள்...

இவர்கள் மத்தியில் நாம் இருப்பின், நாமும் அவர்களை போலவே ஆகிவிடுவோம்.

மாறாக...

இம்மாதிரி மக்கள் நம்மிடம் வந்து புலம்பும்போது, நாம் அவர்களுக்கு சொல்வதுதான்...

'புலம்புவதை நிறுத்து.
அடுத்த நிலைக்கு செல்'

மேலை நாடுகளில் இதனை,
'Shut Up and Move On'
அதாவது S U M O Theory
என்று அழைக்கின்றனர்.

மேலும், நம்மை யாராவது அவமானப்படுத்தி விட்டாலும், நம்மை பற்றி பிறரிடம் புறம் பேசும் நேரங்களிலும்,
நம் மனதை பார்த்து, நாம் சொல்ல வேண்டிய வார்த்தை,  'S U M O'

இவைகளை கடைபிடிக்கும் நேரத்தில், நாமும் நம்
கவலைகளை மறந்து,
நம்மை நாமே உற்சாகபடுத்தி, அடுத்த நிலைக்கு நாம்
உயர முடியும்.

வாங்க...

முயற்சிகள்
செய்து
பார்ப்போம்...

அன்புடன்
காலை
வணக்கம்.

No comments: