Thursday, October 17, 2019

புதிய பார்வை...புதிய கோணம்...

நேர்மையே உன்
விலை என்ன ???

ஒரு கிராமத்தான் குதிரை வாங்க, குதிரைகள் விற்கும் சந்தைக்கு போனான்...

பல்வேறு நிறங்களில்,
வகைகளில் குதிரைகள் இருந்தன...

ஒன்றை தேர்ந்தெடுத்து, பணம் கொடுத்து வாங்கி, வீட்டிற்கு அழைத்து வந்தான்...

குதிரையின் தோளில் இருந்த, சேனத்தை எடுக்கும்போது, அதனுள் இருந்த சுருக்கு பையில், விலையுயர்ந்த வைர கற்கள் இருந்தன...

திடுக்கிட்டவன், அந்த சுருக்கு பையை எடுத்து கொண்டு, குதிரையை வாங்கிய சந்தைக்கு சென்று, குதிரை விற்றவனை தேடினான்...

அகப்பட்ட அவனிடம், விஷயத்தை கூறி, அவனிடமே
அந்த சுருக்கு பையை வழங்கினான், அந்த கிராமத்தான்...

பையில் இருந்த வைரகற்களை எண்ணிய குதிரை வியாபாரி,
"வைரகற்கள் சரியாக உள்ளது. இரண்டு வைர கற்களை உனக்கு பரிசாக தருகிறேன். வைத்து கொள் " என்றான்.

அதற்கு கிராமத்தான்," நான் ஏற்கெனவே இரண்டு கற்களை எடுத்து கொண்டு மீதம் உள்ளதைதான் உன்னிடம் தந்தேன்" என்றான்.

மீண்டும் கற்களை எண்ணி பார்த்த குதிரை வியாபாரி, எண்ணிக்கை சரியாக இருந்ததை எண்ணி வியப்புற்று," எல்லாம் சரியாகத்தான்உள்ளது.
எண்ணிக்கை குறைய வில்லையே" என்றான்...

கிராமத்தான், "இரண்டு
கற்கள் எடுத்தது
உண்மைதான். அதற்கு
'நேர்மை,சுய மரியாதை'
என்று பெயர் என்று பதில் அளித்தான்...

நேர்மையும், சுய மரியாதையும்
உயர்மதிப்பை பெற்று தரும்
என்பது உண்மைதானே.
இந்த நாள்
இனிக்க
வாழ்த்துகள்...

அன்புடன்
காலை
வணக்கம்.

No comments: