Sunday, April 10, 2022

அப்பா பாசம் பொய்யாகலாமா...?

அப்பா பாசம்பொய்க்கலாமா..?*

அன்புப் பிள்ளையே !

கைப்பேசிக்கு ஓய்வு கொடுத்துவிட்டு

காது கொடுத்து கேள்

" அப்பா நான் படிக்கணும்பா
கைப்பேசி வேணும்பா 

 வெல கம்மியில
வாங்கித் தாப்பா "

இப்படி நீ கேட்டப்போ
நெஞ்சுருகிப் போனேன்

சக்திக்கும் மீறி
கடன வாங்கி

தரமான கைப்பேசியை

உன் கையில கொடுத்துப்புட்டு 

"படிக்குது என் புள்ளன்னு"

நம்பித்தானே நான் கிடந்தேன்

"வரவுக்கு மீறிய செலவு
வேண்டாம்" னு 

அம்மா தடுத்த  போது...

" புள்ளப் படிப்புக்கு இது முக்கியமாக்கும்

உனக்கு ஒரு எழவும் தெரியாது " ன்னு

முரட்டு பிடவாதமா

வாங்கித் தந்த கைப்பேசி அது

கவனிச்சு பாத்தியா நீ...

கறிச்சோறு குறைஞ்சு போச்சு

மூனு வேள சாப்பாடு

இரண்டு வேளையா
மாறிப் போச்சு....

 சக்தி இல்லா
உடம்பினால

சம்பாதினையும்
பாதியாச்சி !

மானம் காத்த
துணியெல்லாம்

நஞ்சும் கூட போயாச்சு

உன் கவனமோ 
கைப்பேசியில் நிலையாச்சு

நான் படுற 
பாடெல்லாம்

நீ பட வேணாம் னு

இராப்பகலா உழைக்கிறேனே

தூக்கமின்றி கிடக்கிறேனே

சம்பந்தமே இல்லாதது போல
கைப்பேசியில் வாழறியே !

என்னப் படிக்கிறேன்னு

எதேச்சையா பார்த்தப்போ

படிப்புக்குச் சம்பந்தமில்லா

விளையாட்டில் நீ மூழ்கி

எட்டிப்பார்ப்பது *அப்பா* ங்கிறதையும் மறந்து

ஆனந்தக் களிப்பில்

ஆடித் திளைக்கிறியே !

அன்றொரு நாள் வாத்தியார்

"கொஞ்ச நாளா
உம் புள்ள  போற போக்கு சரியில்லை"ன்னு

குறையா 
சொன்னப்போ
ஏத்துக்காத எம் மனசு

கண்ணெதிரே கண்ட பின்பு

கலங்கித்தான் தவிக்கிறதே !

உனக்காக நான் சுமந்த
வலிகளெல்லாம்

எட்டிப் பார்த்து எட்டிப் பார்த்து

ஏளனமாய்ச் 
சிரிக்கிறதே

"உன்னைக் கெடுத்தது
நான்தான்" என

அம்மா ஏசுகிறாளே !

கொஞ்சம் யோசி என் உசுரே !

கைப்பேசி இல்லாதப்போ

கலகலப்பா இருந்த வீடு

இப்படி வெளவெளத்து கிடக்கிறதே !

இனி ஒரு முடிவெடு

உனக்கான சிகரத்தை

உனக்கான விலாசத்தை

உலகினில் பதிக்க

எந்திரக் கருவியை

மந்திரக் கருவியாக மாற்று

இனியும் இதனுள் மூழ்காதே

அறிவியல் சாதனம்

ஆற்றலை வளர்க்கும்

மூலமாக மாறட்டும்

"எம் புள்ள
ஜெயிக்கும்"

என்ற  நம்பிக்கை மட்டும்

எப்போதும்
பொய்த்துப் போகாது இருக்கட்டும்

 பாசத்துடன் அப்பா

நன்றி!
பகிர்வு பதிவு...

5 comments:

KILLERGEE Devakottai said...

அருமை நிகழ்கால உண்மை
- கில்லர்ஜி

Uma said...

Exactly sir.

Anonymous said...

It is a poem written by Deivanayagam sir who's a teacher in Kuralnatham school, Salem. Please inform the writer before you share their work.

Sivaramakrishnan. Salem said...

yes...informed now

Unknown said...

அப்பாவின் மனசு.....
அருமையான பதிவு.