Wednesday, December 26, 2018

நுண்ணுயிரியல் லூயி பாஸ்டர் பிறந

#இன்று #பிறந்த #நாள்:- #டிசம்பர்-27.

நுண்ணுயிரியலின் தந்தை என்று அழைக்கப்பட்ட
பிரான்ஸ் வேதியியலாளர்
#லூயி #பாஸ்டர்
(Louis Pasteur)
பிறந்த தினம்.

#பிறப்பு:-

டிசம்பர்-27, 1822 ஆம் ஆண்டு,
டோல், பிரான்ஸில் பிறந்தார். 1831 இல் தனது ஆரம்பக் கல்வியை பயின்றார்.
டி அர்பாய்சு கல்லூரியில் தனது மேனிலைப் பள்ளிக் கல்வியைத் தொடர்ந்தார்.
1839 ஆம் ஆண்டில், மெய்யியல் படிப்பதற்காக ராயல் டி பெசன்கான் கல்லூரிக்குச் சென்று, தனது இளநிலை பட்டத்தினையும் (Bachelor of Letters degree) 1840 ஆம் ஆண்டு பெற்றார்.
1842 இல் டிசோனில் baccalauréat scientifique (பொது அறிவியல்) பட்டத்தில் தேர்ச்சி பெற்றார்.
பின்னர் 1842 இல், பாஸ்டியர் Ecole Normale Supérieure நுழைவுத் தேர்வு எழுதினார். 1843 ஆம் ஆண்டு அவர் உயர் தரவரிசையில் தேர்ச்சியடைந்து Ecole Normale Supérieure இடம்பெற்றனர்
. 1845 ஆம் ஆண்டில் அவர் licencié ES அறிவியல் பட்டம் (அறிவியலில் முதுகலைப் பட்டம்) பெற்றார்.

#பணிகள்:-

வேதியியலாளர் அண்டோனே ஜெரோம் பாலார்ட், லூயியை Ecole Normale Supérieure க்கு  ஆய்வக உதவியாளராக பணியாற்ற அழைத்தார். அவர் Balard உடன் இணைந்து
கொண்ட அதே வேளையில், படிகவியல் தொடர்பான தனது ஆய்வுகளையும் தொடங்கி, பின்னர் 1847 இல், வேதியியல், இயற்பியல் தொடர்பான இரு ஆய்வுக்கட்டுரைகளைச் சமர்ப்பித்தார்.
டிஜோன் உயர்நிலைப் பள்ளியில் இயற்பியல் பேராசிரியராக பணியாற்றிய  பின், 1848 ல், ஸ்ட்ராஸ்பர்க் பல்கலைக்கழகத்தில் வேதியியல் பேராசிரியராகக் பணிபுரிந்தார்.

#கண்டுபிடிப்புகள்:-

#பாஸ்டியர்முறை #நுண்ணுயிர் #நீக்கம்-

ஒயின் தயாரிப்பாளரான நண்பருக்கு உதவி செய்ய 1856 ஆம் ஆண்டு, ஆராய்ச்சி மேற்கொண்டார். ஒயினை புளிக்கச் செய்வது ஒருவகை பாக்டீரியா கிருமி என்பதைக் கண்டறிந்தார்.
கிருமிகள் பற்றி தொடர்ந்து ஆராய்ச்சி செய்தார். ‘பாலை புளிக்கச் செய்வதும் ஒருவகை பாக்டீரியாதான். அதை குறிப்பிட்ட அளவு வெப்பத்தில் வைத்தால் பெரும்பாலான கிருமிகள் அழிந்துவிடும்’ என்பதைக் கண்டறிந்தார். தற்போது பால் மற்றும் உணவுப் பொருள் பதப்படுத்தும் நிலையங்களில் இந்த தொழில்நுட்பமே பயன்படுத்தப்படு கிறது. இது அவரது பெயரால் ‘பாஸ்ச்சரைசேஷன்’ என்று அழைக்கப்படுகிறது. இம்முறையில் பாலானது 60 முதல் 100 °C  வெப்பநிலை வரைக் 30 நிமிடம் காய்ச்சி அதே வெப்பநிலையில் 30 நிமிடம் வேகமாக குளிரச்செய்யப்படுகிறது.
இதன் தொடர்ச்சியாக, மனித உடலில் நுண்ணுயிரிகள் புகுவதைத் தடுக்கும் ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டன. தீராத நோய்கள் என்று அதுவரை அறியப்பட்ட சின்னம்மை போன்ற நோய்கள் வராமல் தடுக்கவும், நோய் தீர்க்கவும் மருந்துகள், கிருமி நாசினிகள் கண்டறியப்பட்டன. கால்நடைகளுக்கு வரும் கோமாரி நோய்க்கும் மருந்து கண்டறிந்தார்.

#வெறிநாய்க்கடிக்கான #தடுப்பூசி:-

வெறிநாய்க் கடியால் உண்டாகும் ராபிஸ் நோய் பற்றி ஆராய்ந்தார்.
இந்த ஆராய்ச்சிக்காக, தன் உயிரையும் பொருட்படுத்தாமல் வெறிநாய்களைக் கொண்டு ஆபத்தான பல சோதனைகளை மேற்கொண்டார். ஆய்வு முடிவில், தடுப்பு மருந்தையும் கண்டறிந்தார்.
இவரது அடிப்படை கோட்பாடுகளைப் பயன்படுத்தி ஜன்னி, போலியோ போன்றவற்றுக்கும் மருந்து கண்டறிந்தனர் விஞ்ஞானிகள்.

#வேதியியல்:-

மூலக்கூறு அடிப்படையில் சில படிகங்களின் (crystal) ஒத்தமை
வின்மையைக் (assymmetry) குறித்த இவரது ஆய்வு குறிப்பிடத்தக்கது. இவரது ஆரம்பகால வாழ்க்கையில் டார்டாரிக் அமிலத்தில் இவரது ஆய்வு முதன் முதலில் ஒளியியற் சமபகுதியம் (optical isomer) என்ற தீர்மானத்துக்கு வழிவகுத்தது.
கரிமச் சேர்மங்களின் (organic compounds) அமைப்பைப் புரிந்து கொள்வதில், தற்போதுள்ள அடிப்படைக் கொள்கைக்கு இவரது ஆய்வு வழிவகுத்தது.

பாஸ்டியர் 1857 இல் தன்னுடைய பரிசோதனைகளைத் தொடங்கி, 1858 Comptes Rendus Chimie என்ற இதழில், ஏப்ரல் பதிப்பில் வெளியிட்டார்.

#விருதுகள்:-

ரம்ஃபோர்ட் விருது -(1856, 1892),
Forமெம்பர் ஆப் ராயல் சொசைட்டி-(1869),
கோப்லி விருது -(1874),
ஆல்பர்ட் விருது -(1882),
லீயுவென்கோக் விருது -(1895),
போன்ற விருதுகளை பெற்றார்.

#மறைவு:-

பல நோய்கள்
நுண்ணியிரிகளால் ஏற்படுகின்றன என்று கண்டறிந்த இவர்,
செப்டம்பர் -28, 1895 ஆம் ஆண்டு,
மார்னெசு-லா-கோக்கெட்,
பிரான்சில் மரணமடைந்தார்.

நன்றி..!

No comments: