Thursday, July 30, 2020

புதிய பார்வை...புதிய கோணம்....

🍁  புதிய பார்வை  🍁

ஹீரா வஸ்தி
வட இந்தியாவில் 
ஒரு கிராமம்.

புத்தர் 
ஒரு முறை 
இங்கு தங்கி 
இருந்தார்.

அப்போது 
அந்த 
கிராமத்தில்
மிகப்பெரிய 
பஞ்சம் ஏற்பட்டது.

ஊரிலிருந்த 
செல்வந்தர்களிடம் 
ஏழைகளுக்கு
உதவி செய்யுமாறு 
வேண்டினார் 
புத்தர்.

இவரது 
வேண்டுகோளை 
யாரும் 
ஏற்கவில்லை. 

அப்போது 
அந்த ஊரிலேயே 
மிகப்பெரிய 
பணக்காரரின்
மகள்...

" நான் வீடு வீடாக 
  சென்று பிச்சை 
  எடுத்து ஏழை 
  மக்களுக்கு உதவி 
  செய்கிறேன் "

என 
கையில் பிச்சை 
பாத்திரத்துடன் 
வீடு வீடாக செல்ல 
தொடங்கினாள்.

இதைப்பார்த்த 
சிறுமியின் தந்தை 
மட்டுமல்ல...

மற்ற 
செல்வந்தர்களும் 
ஏழை மக்களுக்கு 
உதவி செய்ய 
தொடங்கினர்.

ஒரு 
சிறுமியின் 
சீர்மிகு சிந்தனை...
 
மிகப் பெரிய 
மாற்றத்துக்கு 
வழிகோலியது.

இது 
வரலாற்று 
உண்மை.

வாங்க...

கொடுத்து 
பழகலாம்.

நம்மை 
சுற்றியுள்ள
ஏழை மக்களை
வாழ வைக்க
தொடங்கலாம்.

சிறு துளி
பெரு 
வெள்ளம்
ஆகட்டும்.

சிறப்பான
சமுதாயம்
உருவாக
தொடங்கட்டும்.

முதல்
மாற்றம்
நம்மிடமிருந்து.

அன்புடன்
காலை
வணக்கம்.

No comments: