Monday, December 20, 2021

சிவதாண்டவம்...நடனம்..காணொளி

ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு சிவதாண்டவம் நடனம் உங்கள் பார்வைக்கு கண்டு மகிழ்ந்து...Subscribe செய்ய அன்போடு வேண்டுகிறேன்..

என்றும் இறை பணியில்
 கனவு ஆசிரியர் 
சேலம் ஆ.சிவா.

video வைக் காண லிங்கை கிளிக் செய்க..
https://youtu.be/PH0ePjNFWh4

Wednesday, November 24, 2021

கோபம்..நம்...முதல் எதிரி...

🇨🇭#கோபம்_உங்களை_அழிப்பதற்கு
#முன்_நீங்கள்…

🇨🇭#அதை_அழித்து_விடுங்கள்❓❗❗

🔰  நமக்கு ஏற்படும் கோபத்தை குறைக்க சில வழிகள்❓❗

சராசரியாக எல்லா மனிதருக்குமே இருக்கும் ஒரு குணம், கோபம். இந்த உலகில் கோபப்படாத மனிதரே இருக்கமுடியாது. அப்படி கோபம் இல்லாவிட்டால் அவர் மனிதராகவே இருக்கமுடியாது. 

எல்லோருக்குமே கோபம் வரும். ஆனால் அது வெளிப்படும் முறையில்தான் வித்தியாசம்.

👉சிலபேர் அழுவார்கள், 

👉சிலபேர் கையை பிசைவார்கள், 

👉பல்லைகடிப்பார்கள், கையை ஓங்கி குத்துவார்கள் (சுவற்றிலோ அல்லது அடுத்தவர் மூக்கிலோ), 

👉காச் மூச்சென கத்துவார்கள், 

👉கையில் கிடைத்ததை போட்டு உடைப்பார்கள். 

சரியோ தவறோ, கோபப்படுவது அவ்வளவு நல்ல குணம் அல்ல. 

⭕கோபத்தை எப்படி கட்டுப்படுத்துவது❓

1. கோபத்தின் முக்கிய காரணியான வெறுப்பை கைவிடுங்கள். மற்றவர்களையும் அன்போடு பாருங்கள். நிதானமாக கோபமூட்டிய நபரின் சூழ்நிலையை சிந்தியுங்கள்.

2. கோபத்தை ஏற்படுத்தும் நிகழ்ச்சிகளை தவிர்த்திடுங்கள். உடனே உங்கள் மனதை வேறு விசயத்தில் திருப்புங்கள்.

3. அவசரம் ஒருபோதும் வேண்டாம். பொறுமையாக இருங்கள்

4. நேரம் மேம்பாடு மற்றும் சுய கட்டுப்பாட்டை கடைப்பிடியுங்கள்.

5. செய்யும் வேலையை நேசத்துடனும், நேர்மையுடனும், குழப்பம் இல்லாமலும் செய்யுங்கள்.

6. அந்த இடத்தை விட்டு நல்ல காற்றோட்டமான இடத்துக்கு சென்று விடுங்கள். அந்த நிகழ்வை பற்றி நினைக்காமல் நன்றாக மூச்சை இழுத்து விடுங்கள். இது உங்களை சாந்தப்படுத்தும்.

7. எனக்குத்தெரிந்து ஒரு மனிதனின் முகம் மிக அசிங்கமாக இருப்பது அவன் கோபப்படும் போதுதான். ஆகவே கோபம் வந்தால் உடனே கண்ணாடியில் முகத்தை பாருங்கள் (கண்ணாடி கைக்கெட்டும் தூரத்தில் இல்லாமல் இருப்பது நலம்). அசிங்கமான நம் முகத்தை பார்க்கும்போது நமக்கு சிரிப்பு வரும். அதன்பின் எப்போது கோபம் வந்தாலும் நம் முகம்தான் ஞாபகத்துக்கு வரும்.

8. கோபத்தில் தொலைவில் இருக்கும் யாரையாவது தாக்கவேண்டும், அல்லது திட்ட வேண்டும் என்றால், அதை கொஞ்சம் தள்ளிப்போடுங்கள். சாயங்காலம் திட்டலாம், நாளைக்கு கச்சேரியை வைத்துக்கொள்ளலாம் என்று தள்ளிப்போடுங்கள். தள்ளிப்போட்ட எந்த காரியமும் உருப்பட்டதில்லை.

9. உங்கள் மனதுக்கு பிடித்த இசையை கேளுங்கள். வலுக்கட்டாயமாக இல்லாமல், இயல்பாக கேட்க ஆரம்பியுங்கள். இசை கேட்க விருப்பம் இல்லை என்றால் கார்டூன் சேனல் பாருங்கள்.

10. குழந்தைகளோடு உரையாடுங்கள். கோபம் பறந்துவிடும். இல்லை இரண்டு குழந்தைகளுக்கு இடையே நடக்கும் நிகழ்வுகளை கவனியுங்கள். பிறகு உங்களுக்கு அதே போலத்தானே நாமும் செய்கிறோம் என்று வெட்கபடுவீர்கள்.

11.கோபத்தை ஏற்படுத்தும் நிகழ்ச்சிகளை தவிர்த்திடுங்கள்

12. நேரம் மேம்பாடு மற்றும் சுய கட்டுப்பாட்டை கடைப்பிடியுங்கள்

13. செய்யும் வேலையை நேசத்துடனும், நேர்மையுடனும், குழப்பம் இல்லாமலும் செய்யுங்கள்.

14. கோபம் வருகிற சூழ்நிலைகளில் வாயை பொத்திக் கொள்ளுங்கள்.

15. மதம் சம்பந்தான பிடித்தமான வரிகளை மனதுக்குள் சொல்லிக் கொள்ளுங்கள். அது உங்களை மகிழ்ச்சியுடனும், அமைதியாகவும் வைத்திருக்கும்.

16. ஆழமான பெருமூச்சு விடுங்கள்

17. எவ்வளவு கோபம் ஏற்படுகிறதோ, அதைப் பொறுத்து 1 முதல் 100 வரையிலான எண்களை எண்ணிடுங்கள்.

18. சுறுசுறுப்பான வாக்கிங் செல்லுங்கள்.

19. கோபம் வருகிறது என்று தெரிந்ததும், ஒரு டம்ளர் தண்ணீர் குடியுங்கள்.

20. முகத்தை கழுவுங்கள். அல்லது ஒரு சுகமான குளியல் போடுங்கள்.

21. எந்த விஷயம் கோபத்தை ஏற்படுத்துமோ, அதைப் பற்றி விவாதிப்பதை விட்டு விட்டு வேறு விஷயத்தை திருப்புங்கள்.

22. ஓய்வெடுக்கலாம், அல்லது குட்டித் தூக்கம் போடுங்கள்.

23. கோபத்தை உண்டு பண்ணும் நினைப்புகளில் இருந்து திருப்பும் வகையில் ஏதாவது ஒரு வேலையில் உங்களை ஈடுபடுத்திக் கொள்ளுங்கள்.

❌ 👉கோபம் உன்னையே 
அழித்து விடும்❗❗❗

உண்மையான பலசாலி யாரெனில் தன் வலிமையால் மக்களை அடக்குபவன் அல்ல. மாறாக கோபம் வரும்போது தன்னை அடக்கிக் கொள்பவனே

“ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு, ஆத்திரம் அழிவைத் தரும்” 

என்பதெல்லாம் கோபத்தினால் ஏற்படும் விளைவுகள் குறித்து சொல்லப்படும் வழக்குகள்…

🔴 கோபம் ஏன்  ஏற்படுகின்றது❓

கோபம் என்பது
அடுத்தவர்கள் செய்யும் சிறு சிறு தவறுகளுக்கு நமக்கு நாமே கொடுத்துக்கொள்ளும் தண்டனைக்கு பெயர் தாங்க கோபம்.

அதுமட்டுமல்லாமல்

நாம் நம் கோபத்தை குறைக்க அடுத்தவர்களிடம்……

👉 இதே கோபத்துடன் செயல்பட்டால்

💔 நட்பு நசுங்கி விடும்.

💔 உறவு அறுந்து போகும்.

💔 உரிமை ஊஞ்சலாடும்.

➡#மேலும்……↙

உடல் ரீதியாக, 

மன ரீதியாக, 

சமூக ரீதியாக, 

உளவியல்ரீதியாக, 

உணர்ச்சிப் பூர்வமான, 

சுற்றுச்சூழல் சார்ந்த பல விஷயங்களுடன் 

நமக்கு உண்டாகும் எதிர்மறையான சூழ்நிலை காரணமாக உண்டாகிறது.

¶ நாம் சொல்வதை (நம்மைவிட எளியவர்கள் என்று நாம் நினைக்கும்) மற்றவர்கள் மதிக்காத போது…

¶ நம்முடைய பிரச்சனைகளை உரியவர்கள் உடனே நிவர்த்தி செய்யாத போது…

¶ நாம் சொல்வது (தவறாகவே இருந்தாலும்) தவறு என்று பலர் முன்னிலையில் விமர்சிக்கப்படும் போது…

¶ எதிர்பார்த்த மரியாதை கிடைக்காத போது 

…இப்படியே பல காரணங்கள் உள்ளன.

ஒருவன் நம்மைப் பார்த்து “கழுதை” என்று திட்டும்போது நாம் “குரங்கு” என்று பதிலுக்குத் திட்டினால் அந்தச் செயல்தான் #reaction ஆகும்.

ஆக உடனே சிந்திக்காமல் ஏற்படும் ஒரு வித அதிருப்தியான வெளிப்பாடு தான் கோபம். அல்லது நம்மை நாமே தாழ்த்திக் கொண்டு சிந்திக்கும் போது ஏற்படும் எதிர் விளைவு கோபமாகும்.

கோபம் தன்னையே அழித்து விடும்

ஒரு மனிதனின் வெற்றிக்கு தடையாத இருப்பதில் மிக முக்கியமானது கோபமாகும்.

கோபம் கொள்வதால் நமது சிந்தனை, கவனம் போன்றன சிதறடிக்கப்படுகின்றன. 

சரியான சமயத்தில் செய்ய வேண்டிய செயல்கள் இதனால் பாதிக்படுகின்றன. 

நம்மை சுற்றி இருப்பவர்களைப் பற்றியும் சூழ்நிலையையும் உணராது நமது செயல்கள் பெரிய பின் விளைவுகளை ஏற்படுத்தி விடுகின்றன. அவற்றுள்…

¶ வாழ்வின் சந்தோசத்தை பறித்து விடும். (கோபமும் சந்தோசமும் ஒன்றுக்கொன்று எதிரானவைகள்)

¶ திருமணம் மற்றுமுள்ள தொடர்புகளை அழித்து விடும்.

¶ தொழிலை முடக்கி விடும். காரணம் தொழில் என்பது தொடர்புகளுடன் சம்பந்தப்பட்டது.

¶ மன இருக்கத்தை ஏற்படுத்தி இருதய வியாதிக்கு வழிவகுக்கும்.

¶ முறையாக சிந்தித்து செயல்படுவதை தடுத்து நமது செயல்களை தவறானதாக்கி விடுகின்றது….

கோபம், மாரடைப்பு முதலான இருதய நோய்களை உண்டாக்கி உயிரைப் பறித்து விடும் என்று வல்லுநர்கள் கூறுகின்றார்கள. 

55 வயதுக்கு கீழே உள்ளவர்கள் கோபப்பட்டால் அவர்கள் மாரடைப்பு உள்ளிட்ட இருதய வியாதிகளால் உயிரிழப்பதற்கான வாய்ப்பு 3 மடங்கு ஆகும். ஆனால் 55 வயதுக்கு கூடுதலாக இருந்தால் உயிரிழப்பு ஆபத்து 6 மடங்காக உயர்கிறது.

¶ கோபமானது இதய ரத்த நாளங்களை கடினமாக்கும் அடைப்புகளை திடீரென சிதைப்பதால், அங்கே அடைப்பு வேகமாக உண்டாக வாய்ப்பு ஏற்படும். இது மாரடைப்பில் விட்டு விடும்.

¶ இதயத் தசைகளில் வலிப்பு, இதயத் துடிப்பில் பாதிப்பு, உயர் ரத்த அழுத்தம், ஆஞ்சைனா எனப்படும் நிலையற்ற நெஞ்சுவலி போன்ற சிக்கல்களும் கோபத்தினால் ஏற்படும் விளைவுகள் தான்.

¶ மூளையை தாக்கும் பக்கவாதத்துக்கு கூட கோபம் காரணமாக அமைவதுண்டு. ஆக, கோபம் உங்களை அழிப்பதற்கு முன் நீங்கள் அதை அழித்து விட வேண்டியது முக்கியம்.

❌ 👉 நமக்கு நாமே கொடுத்துக்கொள்ளும் தண்டனை என்ன❓

சவுக்கு எடுத்து சுளீர்...சுளீர்ன்னு நம்மளையே அடித்துக்கொண்டால் மட்டும் அதுக்கு பெயர் தண்டனை இல்லீங்க.

கோபம் ஏற்படுவதால் பதட்டம்( டென்ஷன்) உண்டாகிறது.

இதனால் நமது உடல், மனம் இரண்டும் பாதிக்கப்படுகிறது.

கோபம் வரும்போது குறிப்பிட்ட மனிதன் தன்னிலை இழக்கிறான். இதனால் தான், கோபத்தில் கொந்தளிப்பவர்களுக்கு ……

👉#இந்த_பாதிப்பால்…………

🇨🇭நரம்புத்தளர்ச்சி,

🇨🇭ரத்த அழுத்தம், 

🇨🇭மன உளைச்சல், 

🇨🇭நடுக்கம் 

🇨🇭பக்கவாதம்

 🇨🇭இதயம் செயல் இழப்பு        [ ஹாட்அட்டாக் ]

🇨🇭வியர்வை, 

🇨🇭மூக்கு விடைத்துக் கொள்தல், 

🇨🇭தூக்கமின்மை, 

🇨🇭ஓய்வின்மை, 

🇨🇭நெஞ்சுவலி, 

🇨🇭மாரடைப்பு, 

🇨🇭ரத்த அழுத்தம் திடீரென அதிகரித்தல், 

🇨🇭எரிச்சல், 

🇨🇭தசைகள் கெட்டித்தன்மை ஆவது, 

🇨🇭தலைவலி

போன்ற உபாதைகள் உண்டாகிறது.
இதை தடுக்க டாக்டரிடம் சென்று மாத்திரை மருந்து சாப்பிடுவோம்.
இதே நிலை நீடித்தால்
ஒரு #மன_நோயாளி போல் ஆகி விடுவோம்.

இது பொய்யல்ல.
சத்தியமான உண்மை இது.

அன்பின் வேறொரு விதமான வெளிப்பாடுதான் கோபம்.

🆗 முதல்ல அடுத்தவங்களுக்கு கோபம் வர்ற மாதிரி நீங்க நடக்காதீங்க.

🆗 அடுத்தவங்கள குறை சொல்லாதீங்க. 

🆗 எதையும் அடுத்தவர்களிடம் எதிர்பார்க்காதீங்க.

🆗 அவங்க உங்க மேல கோபப்பட்டா முதல்ல சாரின்னு மன்னிப்பு கேளுங்க...

🆗 ஈகோ பார்க்காதீங்க.

நீங்க கோபப்படுற மாதிரி அடுத்தவங்க நடந்து கொள்கிறார்கள் என்று வைத்து கொள்வோமே.

முதல்ல பிளீஸ் என்னை கொஞ்சம் யோசிக்க விடுங்கன்னு அமைதியாயிடுங்க.
யார்மேல தவறுன்னு சிந்தியுங்க...

கொஞ்ச நேரத்தில் எல்லாம் சரியாயிடும்.

அப்படி இல்லைன்னா
அந்த இடத்தை விட்டு நகருங்க...

தனியா உக்காந்து யோசிங்க.

அடிக்கடி யாரிடம் கோபப்படுகிறீர்களோ 
அவர்களிடம் மனம் விட்டு சந்தோஷமாக சிரித்து பேசுங்கள்.

அடுத்தவர்களே தவறு செய்திருந்தால் கூட நீங்க நல்லது பண்ணுங்க.

அடுத்தவங்க என்ன செஞ்சுட்டாங்கன்னு கோபப்படுறோம்.என்ன நடந்துருச்சு பெருசா.என்னத்த இழந்துட்டோம்.
மரணம் ஒன்று தான் மாபெரும் இழப்பு.

அதை தவிர வேறொன்றுமே இழப்பு கிடையாது.எல்லாத்தையும் சமாளிச்சுடலாம்ங்ற முடிவுக்கு வாங்க.

வீட்டு பெரியவர்கள் திட்டும் போது கவனித்திருப்பீர்கள்
என்னத்த பெரிசா சாதித்து கிழிச்சன்னு.

நாட்காட்டியில் உள்ள தேதி பேப்பரைக் கிழிச்சால் மட்டும் போதாது.

ஒவ்வொரு நாளும் தூங்கச் செல்லும் முன் இன்றைக்கு என்ன சாதிச்சோம்னு யோசிச்சிட்டு தூங்குங்க.

அடுத்தவர்களுக்கு நல்லது பண்ணாட்டியும் கோபம்ங்ற கொடிய நோயைப் பரப்பாமல் இருந்தாலே,
நீங்க அவங்களுக்கு நல்லது செஞ்ச மாதிரிதான்.

தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொள்பவன் கூட. ஒரு செகண்ட் யோசிச்சான்னா தனது முடிவை மாற்றிக்கொள்வான்.

நமக்கோ ஆறு அறிவை ஆண்டவன் கொடுத்துள்ளான்.இதில் ஆறாவது அறிவை அப்பப்ப யோசிக்கிறதுக்கு யூஸ் பண்ணுங்க...

கோபம் வரவே வராது. நாமெல்லாம் சாதிக்கப்பிறந்தவர்கள். கோபப்படாமல் இருப்பதே ஒரு மாபெரும் சாதனை தான்.

#அதனால்……கோபத்தை அளவோடு வைத்து கொள்ளுங்க.

❤வாழ்வது இந்த பூமியில் ஒரு முறை தான். 

❤அதை கோபப்படாமல் சிறந்த முறையில் வாழ்ந்து சாதிப்போம்..

💚 கோபம் வராதிருக்க யோசிப்போம்..

💚 #அப்ப_என்ன_கோபத்தை_குறைங்க
#பாஸ்…❗❗❗

நன்றி
பகிர்வு பதிவு...

Tuesday, November 23, 2021

மெல்ல...கொல்லும்...உணவுமுறை...

#மெல்லஅழிந்த_இயற்கைஉணவுகள்..!!

ஆப்பிள் இன்று இந்திய சந்தையினை வியாபித்து நின்றாலும், சில ஆலயங்களின் பிரசாதம் என்ற அளவுக்கு வந்துவிட்டாலும் அப்பழம் உடலுக்கு நல்லதா என்றால் இல்லை..

இறைவன் சில விஷயங்களை மிக அழகாக செய்திருக்கின்றான்... குளிர் பிரதேசத்தில் சக்தி கொடுக்கும் காய்கனிகள், பாலை நிலத்தில் வெப்ப நிலத்தில் சக்தி கொடுப்பவை என அந்தந்த சூழலுக்கு ஏற்ப படைத்திருக்கின்றான்..

தமிழ்நாட்டு பனை கொடுக்கும் பதனீர் அப்படியானது, அது உடலுக்கு குளிர்ச்சி. இங்கு விளையும் அரிசி முதல் பயிர்வரை உடலுக்கு ஏற்றது..

அரேபிய பேரீட்சம்பழம் அந்த சூழலுக்கு ஏற்றது..
ஒட்டகங்கள் அங்கு தாக்குபிடிக்க படைக்கபட்டிருப்பது போல அங்குவாழும் மனிதருக்கானது அந்த கனி.

ஆப்பிள் உடலுக்கு சூடு கொடுக்கும் பழம், குளிர் பிரதேசத்தில் அது விளையும் குளிர்பிரதேச மக்களுக்கான பழம் அது..

மா பலா வாழை என தனக்கு சரியான பழத்தை இப்பூமி இங்கு விளைவித்தது..

இங்கு வெள்ளையன் 
வரும்வரை எல்லாம் சரியாக இருந்தது... சூடான பூமியில் மேலும் சூடேற்றி உஷ்ண கோளாரை உருவாக்கும் பழமோ உணவோ இங்கு இல்லை.

வெள்ளையன் மிளகை தேடித்தான் வந்தான்...

 வந்தவன் மிளகை வாங்கிவிட்டு சத்தற்றதும் நற்காரம் இல்லாததுமான மிளகாய் வற்றலை விட்டுவிட்டு சென்றான்... அது தென் அமெரிக்காவில் இருந்து வந்தது..

தக்காளியும் உருளையும் அப்படி வந்தது...

 புகையிலையும் அப்படி வந்ததே.

இங்கு காரத்துக்கு நல்லமிளகு பயன்படுத்தும் முறையே இருந்தது.

 உண்டபின் வெற்றிலையோடு மிளகும் பாக்கும் சுண்ணாம்பும் ஏலமும் வைத்தே தாம்பூலம் தரிக்கும் பழக்கம் இருந்தது.

வெள்ளையன் சமையலுக்கு வற்றலை கொடுத்தான், 
வெற்றிலைக்கு பாக்கை கொடுத்தான், மிளகை அவன் கொண்டு சென்றான்.

கருப்பட்டியும் வெல்லமும் இங்கு இனிப்புக்கான பொருளாய் இருந்தன, அதில் சீனியினை திணித்தான் , கருப்பட்டி சந்தை மெல்ல சுருங்கியது.

கள் இருந்த இடத்தை தன் நாட்டு ஒயினாலும் இன்னும் எதெல்லாமோ கொண்டு நிரப்பினான்.

தேங்காய் இருந்த 
இடத்தை எதுவெல்லாமோ பிடித்தது, தேங்காய் கொடுக்கும் ஆரோக்கியம் கொஞ்ச நஞ்சமல்ல‌

மிளகு, அரிசி, கருப்பட்டி, பயிர் என்றிருந்த தமிழர் உணவில் புகையிலை, சீனி, மிளகாய் என எதையெல்லாமோ திணித்தான் வெளிநாட்டு பரதேசிகள்...

நோய் பெருகின..

ஆப்பிளை அப்படித்தான் இங்கு பயிரிட்டான்...

 ஆப்பிளை மட்டுமா கொணர்ந்தான். கேரட் , பீட்ரூட் 
இன்னும் குளிரில் விளையும் பல பயிர்களை கொணர்ந்தான், அது அவனுக்கு சரி..

ஏற்கனவே உஷ்ணத்தில் வாழும் மக்களுக்கு இவை ஏன்? அவை கூடுதல் உஷ்ணத்தை ஏற்றின‌..

அத்தோடு விட்டானா?

அவன் ஏற்படுத்திய உலகப்போர்கள் அரிசி தட்டுப்பாட்டை உருவாக்கின.

 விளைவு..?

தமிழருக்கு சப்பாத்தியும் பரோட்டாவும் அறிமுகமாயின‌ ...

சப்பாத்தியினை கொடுத்தானே அன்றி அதை உண்ணும் முறை சொன்னான் இல்லை.

 சப்பாத்தி என்பது நெய் சேர்க்காமல் உண்ணகூடா உணவு...

ஆம்.... அதில் உஷ்ணம் அதிகம், அரேபியர் அதை தயிரோடு உண்பர், வட இந்தியர் நெய்யோடு உண்பர், தமிழன் அதை உண்ண தெரியாமல் உண்டான்..

நோய் பெருகிற்று....

அதாவது சூடான பூமியில் சூடு 
கொடுக்கும் உணவினை உண்டு நம்மை நாமே கெடுத்தோம்...

வெள்ளையனின் குளிர்நாட்டில் அரிசி கஞ்சியும், பனங்கள்ளும் குடிக்க சொல்லுங்கள், அவன் குடிப்பானா?

குடித்தால் என்னாகும் என அவனுக்கு தெரியும், அவன் தன் சமூகத்தை காத்து கொண்டிருக்கின்றான்..

உஷ்ணத்தால் ஏற்படும் நோய்க்கு விஞ்ஞானம் காரணம் சொல்லாது ..

இங்கு உஷ்ணத்தை கட்டுபடுத்த நல்லெண்ணெய் குளியலும் நெய்யும் இன்னும் பலவும் இருந்தது..

எல்லாம் பழமைதனம் என ஒழிக்கபட்டது.

இன்று எண்ணெய்யும் கலப்படம்... இப்போதுள்ள தலைமுறை டால்டாவினை நெய் என்றும் கலப்பட எண்ணெயினை சுத்தமான எண்ணெய் எனவும் அறிகின்றன...

பரிதாபம்.

காரணம்,  அவற்றுக்கு உண்மையான 
பொருளும் மணமும் எப்படி இருக்கும் என்றே தெரியவில்லை....

அவை என்ன செய்யும்?

எண்ணெயில் கலப்படம், உணவு பொருளில் கலப்படம் , இவை எல்லாம் இன்று ருசி இல்லா உணவல்ல...

 ஆரோக்கியமில்லா உணவினை கொடுத்துவிட்டன‌...!

நெய்யும் பாலும் வெண்ணெயும் போலி என அரசு கழகங்களே சொல்லும் நிலையென்றால் தனியார் 
நிலையங்கள் எப்படி இருக்கும்?

எதையோ தின்று 
எதையோ குடித்து, 
எதையோ புகைத்து, எதையோ மென்று 
இல்லா நோய்கள் எல்லாவற்றையும் தனக்குள்ளே இழுத்துவிட்டான் தமிழன்

எதை உண்டாலும் கசப்பாய் முடிப்பது உலகளாவிய உணவு முறையாய் இருந்தது, சீனாவில் தே எனும் கசப்பு பானத்தை அருந்துவார்கள்..

ஆப்ரிக்காவிலும் 
அரேபியாவிலும் காப்பி இருந்தது..

தமிழனுக்கு வேப்பம்பூ துவையலும் பாகற்காயும் அன்றாடம் சமையலில் இருந்தது. 

பாகம் என்றால் சமையல் அதில் இருக்க வேண்டிய காய் பாகற்காய் ஆனது..!

புரிகிறதா...?

இவை முறையாக இருந்தவரை சர்க்கரை நோய் இல்லை..

பாலில் காப்பி, டீ , சீனி என வெள்ளையன் ஏற்படுத்திய வியாபார தந்திரம்,
இன்று நம் வாழ்வியல் அங்கமாக மாறிவிட்டது. 

 காபியும் டீயும் பருகியே தீரவேண்டியவை அல்ல‌..

அவை இன்றியும் வாழமுடியும்...

அதுபோக பேக்கரிகள் வந்து நிரம்பியிருக்கின்றன.

 பரோட்டாவும் பேக்கரியும் இன்னும் பலவும் இங்கு ஏற்ற விஷயம் அல்ல. 

விஷம் அவை..

இவை பெருக பெருக மருத்துவ மனைகளும் பெருகுகின்றன. 
இச்சமூகம் எவ்வளவு நல்ல விஷயங்களை நாகரீகம் என இழந்து இன்று சீழ்பிடித்த சமூகமாக மாறிவிட்டது என நினைக்கும் பொழுது தலையே சுற்றுகின்றது

ஏகபட்ட விஷயங்களை இழந்துவிட்டோம், ஆனால் எதை எல்லாம் இழந்தோம் என்பதை இந்துமத ஆலயங்களிலும் இந்த நாட்டின் பாரம்பரியமான பண்டிகை மற்றும் சடங்குகளிலும் 
காணலாம்..

இந்து தெய்வங்களுக்கு பாரம்பரியமாக படைக்கபடும் பழம், பானம் எல்லாம் உடலுக்கு நல்லவையே..

துளசி போல் அருமருந்தில்லை..

அங்கு பயன்படும் எலுமிச்சை முதல் எள் வரை எல்லாமே நன்மை கொடுப்பவை.

தாம்பூல தட்டில் காணப்படும் வெற்றிலை முதல் எல்லாம் ஆரோக்கியமே..

தேர்களில் தெய்வங்களுக்கு 
வீசபடும் மிளமும் உப்பும் உடலுக்கு எக்காலமும் நன்மையே.

உங்களுக்கு ஆரோக்கியமான உணவு வேண்டுமென்றால் இந்துக்களின் உணவினை பாருங்கள், நைவேத்தியம் எனப்படும் உணவு முறையாக தயாரிக்கபடுமானால் அதை விட ஆரோக்கிய உணவு வேறு இல்லை...

அசைவத்தில் கூட கிராம ஆலயங்களை கவனிக்கலாம், ஆடும் சேவலும் எப்படி 
இருந்தால் அங்கு பலியிட வேண்டும் எப்படி சமைக்கபட வேண்டும் என்ற விதிகள் உண்டு.

அதன்படி உண்டால் அவையும் ஆரோக்கியமே, பிராய்லர் கோழியினை அங்கு வெட்டுவதில்லை.

சனிகிழமை தோறும் நல்லெண்ணெய் தேய்த்தால் உஷ்ணம் வராது..

அதிகாலை சேவலோடு எழுவதும் அந்தியில் பறவைகள் ஓயும்பொழுது தூக்கத்தை தழுவதும் 
நோய்க்கு இடம் கொடா...

மலைமேல் ஏறி தெய்வத்தை வணங்குவதும் , குளிர் ஆறுகளில் குளிப்பதும் ஆரோக்கியமே, மாதம் இருமுறையாவது இருக்கும் விரதம் உடலை வலுபடுத்தும்..

இன்னும் ஏராளமான விஷயங்கள் உண்டு..

அவை எல்லாம் இழந்ததன் விளைவு நீரிரிழிவு முதல் ஏகபட்ட நோய் ஒருபுறம்..

கருத்தரிப்பு சிக்கல் 
சிசேரியன் என மறுபுறம்.

 மிக மிக மோசமான சிக்கலுக்கு செல்கின்றது இச்சமூகம்..

பழமையினை மீட்டெடுத்து நல்வாழ்வு வாழ இந்துமதம் உதவும், நம் முன்னோரின் நலமான பலமான வாழ்வின் ரகசியம் அங்குதான் புதைந்திருக்கின்றது..

அதை மீட்டெடுப்பீர்களாயின் நல்வாழ்வு கிட்டும்...  மாறாக அதெல்லாம் பழமை என 
ஒதுக்குவீராயின் டாக்டரும் மருந்துகடைகாரனுமே உங்களுக்கு தெய்வமாவான்..

இந்த தெய்வத்தையும் ஆலயத்தையும் அதன் அனுகிரகத்தையும் அந்த உணவு மற்றும் விரத முறைகளை மறந்தவனுக்கு அதுதான் கதி.

அப்படி ஒரு பலஹீனமான சமூகமாக இந்தியா உருவாக வேண்டும் என வெள்ளையன் ஆசைபட்டதன் விளைவுதான் இங்கு உருவான 
இந்து எதிர்ப்பு கோஷ்டிகள்..

இந்துமதம் ஒழிய ஒழிய இங்கு நோய் கூடும் என்பதும் இந்தியா தன் மருந்து மற்றும் மருத்துவத்தின் வேட்டைகாடாகும் என்பது அக்காலத்தில் இருந்தே அவன் கணக்கு..

அது மிளகை திருடி வற்றலை கொட்டுவதில் தொடங்கி இன்றைய K F C வரை தொடர்கின்றது...

நாம் பாரம்பரியத்தை 
மீட்டெடுத்தால் தவிர நம் ஆரோக்கியத்தை திருப்பமுடியாது... அந்த பாரம்பரியம் இந்து ஆலயங்களின் வழிபாட்டிலும் இன்னும் பலவற்றிலுமே இருக்கின்றது..

என்று அதை இச்சமூகம் உணருமோ அன்றே இங்கு நல் ஆரோக்கியம் திரும்பும்..

ஆம். 

மாறாக,  கண்டதையும் உண்டுவிட்டு தெருத் தெருவாக + கடற்கரை கடற்கரையாக நடந்தாலும் 
ஆகபோவது ஒன்றுமில்லை...

நடக்க வேண்டியது வயல்வரப்புகளை நோக்கி..

 அங்கேதான் இருக்கின்றது உடல் நலத்துக்கான மருந்து...


நன்றி
பகிர்வு பதிவு

Monday, November 22, 2021

http & https இடையே உள்ள ரகசியம்....

*" http" மற்றும் "https "* என்னும் வார்த்தைகள் வெப்சைட்டின் ஆரம்பத்தில் பார்க்கிறோம் அல்லவா? இரண்டுக்கும் உள்ள வேற்றுமை என்ன?

 பாதுகாப்பிற்காக அறியவேண்டிய முக்கிய தருணம், 

இதை அறிய 32 லட்சம் டெபிட் கார்டுகள் பறிகொடுத்துள்ளோம். 

இருந்தபோதும் வித்தியாசம் என்னவென்று சிலர் அறிந்திருப்பீர்கள்.

*_👉அறியதவருக்கு இப்பதிவு...._*

நம் டெபிட் கார்டின் பாதுகாப்பு பற்றிய அறிகுறி தான் "http" மற்றும் "https" இவற்றின் வித்தியாசம்.

"http" என்பது "Hyper Text Transfer  Protocol" என்பதைக் குறிக்கும்.

"s" என்பது இணைந்தால்,  "Secure" என்பதைக் குறிக்கும். இணையதளத்தில் நாம் பார்த்தால் முதல் வார்த்தை "http://" என்றுதான் வரும். 
 
இதன் பொருள் தங்கள் இணையதளம் பாதுகாப்பற்ற இணைய முகவரியில் தங்களை இணைத்துள்ளது என்பதே.. இது தங்கள் கணினியின் மொழிகளை
தாங்கள் உள்நுழைந்த இந்த இணையமுகவரி மூலம் ஒட்டுக்கேட்கவும் வகை செய்யும். இப்படிப்பட்ட இணையமுகவரியில் தாங்கள் நுழைந்து பூத்தி செய்யும் தனிப்பட்ட விண்ணப்பங்களை பிறர் தாராளமாக பார்க்க முடியும்.
      
 எனவே தங்கள் கிரெடிட் கார்டு எண்களையோ பாஸ்வேர்டுகளையோ,

இந்த "http//" இணையமுகவரியில் தயவு செய்து பதிவிடாதீர்கள்.!

அதே சமயம் தங்கள் இணைய முகவரி "https://" என ஆரம்பித்தால், தங்கள் கணினி பாதுகாக்கப்பட்ட இணையமுகவரியில் உங்களை நுழைத்துள்ளது என அறியுங்கள். 

இதிலிருந்து நமது தகவல்கழை ஒட்டுக்கேட்கவோ சேகரிக்கவோ முடியாது.

இந்த S என்ற ஒற்றை எழுத்து சேர்வதன் பாதுகாப்பும், நம்பகத் தன்மையும் S இல்லாத இணையமுகவரி இரண்டுக்கும் உள்ள வித்தியாசமும் தற்போது தாங்கள் புரிந்து கொண்டிருப்பீர்கள்!

இனி எந்த இணைய முகவரிக்காவது உங்கள் கிரெடிட் கார்டு எண் பதிவிட வேண்டும் என்றால், முதலில் இந்த வித்தியசத்தை கவனித்துவிட்டு, பிறகு பதிவிடுங்கள்.

எந்த இணைய முகவரியைத் தேடும் போதும், முதலில் இணைய களம் எதில் முடிகிறது எனப் பார்க்கவும்.  (Eg: ".com"  or ".org", ".co.in", ".net"  etc).* இவற்றின் முன் உள்ள பெயர் மட்டுமே இணைய களப்பெயர்.
      
.Eg: "http://amazon.diwali -festivals.com" என எடுத்துக் கொள்வோம்.


இதில் ".com" என்பதற்கு முன்னால் உள்ள "diwali-festivals" ("amazon" என்பது அல்ல) என்பதுதான் அந்த இணையகளத்தின் முகவரி. எனவே இது "amazon.com" இணையதளத்தைச் சேர்ந்தது அல்ல என்பதை முதலில் புரிந்து கொள்ள வேண்டும். இது "diwali-festivals.com" எனும், நாம் இதுவரை அறியாத ஓர் இணைய களத்தைச் சேர்ந்தது.

இதே வழியில் வங்கித் திருட்டுக்களையும் தாங்கள் கண்டறிய முடியும். 

தங்கள் வங்கியுடனான இ-சேவையைத் தொடங்கும் முன்னர், மேலே கூறியது போல், ".com" எனும் வார்த்தயை ஒட்டி, அதன் முன்னால், உங்கள் குறிப்பிட்ட வங்கியின் பெயர் உள்ளதா எனமுதலில் கவனியுங்கள். Eg: "icicibank.com" என்பது icici வங்கியைச் சார்ந்தது; 

ஆனால் , "icicibank.'வேறு ஏதோ வார்த்தை'.com" என வந்தால், அது iciciவங்கியுடையது அல்ல. 
அந்த‌ _"வேறு ஏதோ வார்த்தையுடையது.

 _👆இது பார்க்க சாதாரண விஷயமாகத் தோன்றும். 

ஆனால் இந்தத் தவறால் பணம் இழந்தவர்கள் பலர்.👆_

இன்று ஒரு தகவலுடனும்
காலை வணக்கத்துடனும்
உங்கள் கவிஞர்
க.மணிஎழிலன்

நன்றி கவிஞர் அவர்களே...!

Thursday, November 18, 2021

சேலம் மாவட்டம் நாளை...விடுமுறை

கனமழை காரணமாக நாளை பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது..*தொடர் மழையை யொட்டி சேலம் மாவட்டத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு  நாளை (19.11.2021) விடுமுறை.*

*மாவட்ட ஆட்சித்தலைவர் திரு,செ. கார்மேகம் இ.ஆ.ப., அவர்கள் அறிவிப்பு.* இதுவரை 12 மாவட்டங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. சேலம், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம், வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, நீலகிரி, கிருஷ்ணகிரி தர்மபுரி, பெரம்பலூர் உட்பட விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது .. செங்கல்பட்டு, கடலூர் மாவட் டங்களுக்கு பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. .. சென்னையிலிருந்து நூற்றி ஐம்பது கிலோமீட்டர் தொலைவில் புதிய காற்றழுத்தத் தாழ்வு நிலை மையம் கொண்டுள்ளதாக வானிலை மையம் அறிவித்துள்ளது. 


Thursday, November 11, 2021

நன்றியுள்ள விக்கி.... காணொளி சிறு கதை

பள்ளிக்கு வருகை தரும் மாணவச் செல்வங்களை மகிழ்விக்கும் நிகழ்வில் இன்றைய பண்பு நல கதை ஒன்று உங்கள் பார்வைக்கும் மாணவர்களின் மகிழ்வுக்கும் பகிர்வது..
கனவு ஆசிரியர்
சேலம்.ஆ.சிவா...

காணொளியை கண்டு மகிழ்ந்து மறக்காமல் எங்கள் Channel யை Subscribe செய்து Bell பட்டனை அழுத்தி all என தர அன்போடு வேண்டுகிறோம்..

காணொளியை காண நீல நிற லிங்கை சொடுக்கவும்.
https://youtu.be/jnuclmLm6D8

Thursday, November 04, 2021

மாட்டு வண்டியின் தொழில் நுட்பம்....ஆசிர

*வியக்க வைக்கும்,*
*மாட்டுவண்டி தொழில்நுட்பம்* 

*மாட்டின் கழுத்தை, பாரம் அழுத்தாத, மரபு வடிவம்.*

வண்டியில் ஏற்றப்படும் பாரம் மாட்டின் கழுத்தை அழுத்தாதபடியான தொழில்நுட்பம் கொண்டது மாட்டுவண்டி.  

வண்டியை மாடு இழுக்க மட்டுமே சக்தியை செலவழித்தால் போதும். பாரத்தை வண்டியே சுமந்து கொள்ளும்.
உயிரினங்களை வதைக்காமல் மனிதன் அதை பயன்படுத்தவேண்டும்.

 இப்படி யோசித்த நமது முன்னோர்களின் அறிவுத்திறனையும், நேசத்தையும் வியக்காமல் இருக்க முடியவில்லை. நமது முன்னோர்கள் அதை எப்படியெல்லாம் சாத்தியப்படுத்தினார்கள் என்பதை பார்க்கலாம்.

குறிப்பாக தமிழ் நாட்டில் பயன்படுத்தப்படும் "சக்கடாவண்டி"  என்னும் பாரவண்டி வடிவமைப்பு,  தமிழ்நாடு மட்டும் அல்லாமல்,  கோரமண்டல் கடற்கரை பகுதி என்று குறிப்பிடப்படும் ஒரிசா வரை ஒரே மாதிரி இருக்கிறது.

மாட்டுவண்டிகளின் சக்கரத்தின் உயரம் 5¼ அடி என்று தரப்படுத்தபட்டிருக்கிறது
இந்தத் தரப்படுத்தல் என்பது ஏன்..?  என்று சற்று பார்ப்போம்.

பொதுவாக ஒரு நபரை 
" நெட்டையான ஆள்.." என்றோ "குட்டையான ஆள்.."  என்றோ என்றோ அடையாள படுத்துவது நம்மிடையே இருந்து வரும் ஒரு பழக்கம்.

 இந்த குட்டை நெட்டைக்கான அடிப்படை
(Reference point) 
என்று ஒன்று இருக்க வேண்டும் தானே.
அதாவது சராசரி உயரம் என்பதாக.

 நம்மை பொருத்த வரை நம்ம ஊரில் மனிதனின் சராசரி உயரம் என்பது 
5½ அடி என்பதாகும்.

இந்த சராசரி உயரத்தின் ¾ பங்கு என்பது அதாவது "எண் சாண் உடம்பு" என்று சொல்வோமே அதில் ¾ பங்கான 6 சாண் என்பது 4 1/8 (நாலே அரைக்கால்) அடி ஆகும்.
இது மனிதனின் நெஞ்சு பகுதி வரை உள்ள உயரமாகும்.

மாட்டுவண்டியின் நீளமான பகுதியின் பெயர் ‘போல்' என்பதாகும். இந்த போலின் முனையில் தான் மாடுகளை பூட்ட பயன்படும் நுகத்தடியை பொருத்திக் கட்டுவார்கள். 5¼ அடி விட்டம் கொண்ட வண்டி சக்கரத்தின் ஆரம் 2 5/8 / (இரண்டே அரையே அரைக்கால்) அடி ஆகும்.

 சக்கரத்தின் மையத்தில் அச்சு சொறுகப்பட்டிருக்கும். இரு சக்கரங்களையும் இணைக்கும் இந்த அச்சின் மேல் தான் பாரம் தாங்கி
 (load bearing)யாக செயல்படும் தெப்பக்கட்டை அமர்த்தப்பட்டிருக்கும். இந்த தெப்பக்கட்டையின் மேல் தான் 'போல்' என்னும் நுகம் கட்டும் நீளக்கட்டை பொருத்தப்பட்டிருக்கும். இந்தப் போல் மற்றும் தெப்பக்கட்டையும் சேர்ந்து 1½ அடி உயரம் இருக்கும்.

ஆக ஒரு வண்டியை படுக்கை மட்டத்தில் சமன் (balance) பண்ணினால் வண்டியின் உயரம் 4 1/8 அடியாக இருக்கும். அதாவது சக்கரத்தின் ஆரத்தின் அளவும் தெப்பக்கட்டையின் உயரமும் (2 5/8 + 1 ½ ) சேர்ந்து உயரம் 4 1/8 அடியாகும். ஒரு மாட்டின் கழுத்து வரை உள்ள உயரம் சராசரியாக 4 1/8 அடி. இத்தனை சராசரி உயரங்களின் அடிப்படையில் தான் நமது மாட்டுவண்டியினை வடிவமைத்திருக்கின்றனர் நமது முன்னோர்கள்.

அவர்களால் இவ்வளவு நுட்பமாக வடிவமைக்கப்பட்டுள்ள மாட்டு வண்டியை 4 1/8 அடி உயரத்தில் விரல் தொடலில் வண்டியில் ஏற்றப்படும் பாரம் மாட்டின் கழுத்தை அழுத்தாதபடி நொடிப்பொழுதில் சமன் (feather touch balance) செய்ய முடியும்.

 இத்தனை துல்லிய அளவு தொழில்நுட்ப ஒருங்கிணைவே மாட்டுவண்டி.

 ஒவ்வொரு பாகத்தையும் செய்ய இன்னின்ன மரவகையை தான் பயன்படுத்த வேண்டும் என்று வரையறுத்திருக்கின்றனர் நமது முன்னோர்கள். 

அந்த வரையறையில் சில:
சட்டம் -  வாகைமரம்.
குறியது - வாகைமரம்
ஆரக்கால் - உன்னி
அலகு - தேக்கு
குடம் -  வைமரம்
தெப்பக்கட்டை- வேங்கை
போல் - வேங்கை
நுகம் -  புன்ணை
நோக்காகுச்சசு - வைமரம்
தாங்குக்கட்டை- வைமரம் 
பிள்ளைச்சட்டம் -  வாகை
குரங்குகம்பு- கல்மூங்கில்
ஊனிகம்பு - விடத்தலை
அளி -  மூங்கில்பட்டியல்

பார வண்டியின் பாகங்களைச் செய்யப் பயன்படுத்தப்படும் குறிப்பிட்ட மர வகைகளின் சிறப்புத் தன்மையை சிறிது பார்ப்போம்.

வண்டிச் சக்கரத்தின் அலகுக்கு பயன்படுத்தும் தேக்கு மரம் வலுவானது நீண்ட காலம் உழைக்கும் தன்மை கொண்டதும் ஆகும்.

வண்டியின் நுகத்தடிக்கு மஞ்சனத்தி மர கம்பை பயன்படுத்துவதன் நோக்கம் அந்த மரத்திலுள்ள மஞ்சள் தன்மையின் மருத்துவ குணம் மாட்டின் கழுத்து உராய்வினால் ஏற்படும் புண்ணுக்கு மருந்தாகவும் பயன்படும் என்பதனாலேயே.
எடை குறைவு மற்றும் வலிமை தன்மையும் கொண்ட மூங்கிலை அளி பலகைக்கு பயன்படுத்தும் வழக்கம் இருந்து வருகிறது.

*இப்படி, பல வியக்க வைக்கும் தொழில்நுட்பம் கொண்டது, மாட்டுவண்டி**வியக்க வைக்கும்,*
*மாட்டுவண்டி தொழில்நுட்பம்* 

*மாட்டின் கழுத்தை, பாரம் அழுத்தாத, மரபு வடிவம்.*

வண்டியில் ஏற்றப்படும் பாரம் மாட்டின் கழுத்தை அழுத்தாதபடியான தொழில்நுட்பம் கொண்டது மாட்டுவண்டி.  

வண்டியை மாடு இழுக்க மட்டுமே சக்தியை செலவழித்தால் போதும். பாரத்தை வண்டியே சுமந்து கொள்ளும்.
உயிரினங்களை வதைக்காமல் மனிதன் அதை பயன்படுத்தவேண்டும்.

 இப்படி யோசித்த நமது முன்னோர்களின் அறிவுத்திறனையும், நேசத்தையும் வியக்காமல் இருக்க முடியவில்லை. நமது முன்னோர்கள் அதை எப்படியெல்லாம் சாத்தியப்படுத்தினார்கள் என்பதை பார்க்கலாம்.

குறிப்பாக தமிழ் நாட்டில் பயன்படுத்தப்படும் "சக்கடாவண்டி"  என்னும் பாரவண்டி வடிவமைப்பு,  தமிழ்நாடு மட்டும் அல்லாமல்,  கோரமண்டல் கடற்கரை பகுதி என்று குறிப்பிடப்படும் ஒரிசா வரை ஒரே மாதிரி இருக்கிறது.

மாட்டுவண்டிகளின் சக்கரத்தின் உயரம் 5¼ அடி என்று தரப்படுத்தபட்டிருக்கிறது
இந்தத் தரப்படுத்தல் என்பது ஏன்..?  என்று சற்று பார்ப்போம்.

பொதுவாக ஒரு நபரை 
" நெட்டையான ஆள்.." என்றோ "குட்டையான ஆள்.."  என்றோ என்றோ அடையாள படுத்துவது நம்மிடையே இருந்து வரும் ஒரு பழக்கம்.

 இந்த குட்டை நெட்டைக்கான அடிப்படை
(Reference point) 
என்று ஒன்று இருக்க வேண்டும் தானே.
அதாவது சராசரி உயரம் என்பதாக.

 நம்மை பொருத்த வரை நம்ம ஊரில் மனிதனின் சராசரி உயரம் என்பது 
5½ அடி என்பதாகும்.

இந்த சராசரி உயரத்தின் ¾ பங்கு என்பது அதாவது "எண் சாண் உடம்பு" என்று சொல்வோமே அதில் ¾ பங்கான 6 சாண் என்பது 4 1/8 (நாலே அரைக்கால்) அடி ஆகும்.
இது மனிதனின் நெஞ்சு பகுதி வரை உள்ள உயரமாகும்.

மாட்டுவண்டியின் நீளமான பகுதியின் பெயர் ‘போல்' என்பதாகும். இந்த போலின் முனையில் தான் மாடுகளை பூட்ட பயன்படும் நுகத்தடியை பொருத்திக் கட்டுவார்கள். 5¼ அடி விட்டம் கொண்ட வண்டி சக்கரத்தின் ஆரம் 2 5/8 / (இரண்டே அரையே அரைக்கால்) அடி ஆகும்.

 சக்கரத்தின் மையத்தில் அச்சு சொறுகப்பட்டிருக்கும். இரு சக்கரங்களையும் இணைக்கும் இந்த அச்சின் மேல் தான் பாரம் தாங்கி
 (load bearing)யாக செயல்படும் தெப்பக்கட்டை அமர்த்தப்பட்டிருக்கும். இந்த தெப்பக்கட்டையின் மேல் தான் 'போல்' என்னும் நுகம் கட்டும் நீளக்கட்டை பொருத்தப்பட்டிருக்கும். இந்தப் போல் மற்றும் தெப்பக்கட்டையும் சேர்ந்து 1½ அடி உயரம் இருக்கும்.

ஆக ஒரு வண்டியை படுக்கை மட்டத்தில் சமன் (balance) பண்ணினால் வண்டியின் உயரம் 4 1/8 அடியாக இருக்கும். அதாவது சக்கரத்தின் ஆரத்தின் அளவும் தெப்பக்கட்டையின் உயரமும் (2 5/8 + 1 ½ ) சேர்ந்து உயரம் 4 1/8 அடியாகும். ஒரு மாட்டின் கழுத்து வரை உள்ள உயரம் சராசரியாக 4 1/8 அடி. இத்தனை சராசரி உயரங்களின் அடிப்படையில் தான் நமது மாட்டுவண்டியினை வடிவமைத்திருக்கின்றனர் நமது முன்னோர்கள்.

அவர்களால் இவ்வளவு நுட்பமாக வடிவமைக்கப்பட்டுள்ள மாட்டு வண்டியை 4 1/8 அடி உயரத்தில் விரல் தொடலில் வண்டியில் ஏற்றப்படும் பாரம் மாட்டின் கழுத்தை அழுத்தாதபடி நொடிப்பொழுதில் சமன் (feather touch balance) செய்ய முடியும்.

 இத்தனை துல்லிய அளவு தொழில்நுட்ப ஒருங்கிணைவே மாட்டுவண்டி.

 ஒவ்வொரு பாகத்தையும் செய்ய இன்னின்ன மரவகையை தான் பயன்படுத்த வேண்டும் என்று வரையறுத்திருக்கின்றனர் நமது முன்னோர்கள். 

அந்த வரையறையில் சில:
சட்டம் -  வாகைமரம்.
குறியது - வாகைமரம்
ஆரக்கால் - உன்னி
அலகு - தேக்கு
குடம் -  வைமரம்
தெப்பக்கட்டை- வேங்கை
போல் - வேங்கை
நுகம் -  புன்ணை
நோக்காகுச்சசு - வைமரம்
தாங்குக்கட்டை- வைமரம் 
பிள்ளைச்சட்டம் -  வாகை
குரங்குகம்பு- கல்மூங்கில்
ஊனிகம்பு - விடத்தலை
அளி -  மூங்கில்பட்டியல்

பார வண்டியின் பாகங்களைச் செய்யப் பயன்படுத்தப்படும் குறிப்பிட்ட மர வகைகளின் சிறப்புத் தன்மையை சிறிது பார்ப்போம்.

வண்டிச் சக்கரத்தின் அலகுக்கு பயன்படுத்தும் தேக்கு மரம் வலுவானது நீண்ட காலம் உழைக்கும் தன்மை கொண்டதும் ஆகும்.

வண்டியின் நுகத்தடிக்கு மஞ்சனத்தி மர கம்பை பயன்படுத்துவதன் நோக்கம் அந்த மரத்திலுள்ள மஞ்சள் தன்மையின் மருத்துவ குணம் மாட்டின் கழுத்து உராய்வினால் ஏற்படும் புண்ணுக்கு மருந்தாகவும் பயன்படும் என்பதனாலேயே.
எடை குறைவு மற்றும் வலிமை தன்மையும் கொண்ட மூங்கிலை அளி பலகைக்கு பயன்படுத்தும் வழக்கம் இருந்து வருகிறது.

*இப்படி, பல வியக்க வைக்கும் தொழில்நுட்பம் கொண்டது, மாட்டுவண்டி*

நன்றி
பகிர்வு பதிவு.

Monday, November 01, 2021

புதிய பார்வை...புதிய கோணம்...

🍁  புதிய பார்வை  🍁

  நிராயுத
  பாணியாய்
  போராடும் 
  அந்த
  ஒற்றை 
  மனிதனை

  வலிமை 
  வாய்ந்த
  ஆயுதங்கள்
  வைத்திருக்கும்
  பிரிட்டிஷ்
  அரசால்
  நசுக்க 
  முடியாதா ?

எனும் 
கேள்வி
இங்கிலாந்து
பாராளுமன்ற
கூட்டத்தில்
எதிர்கட்சி 
உறுப்பினர்கள்
எழுப்பினர்

அதற்கு

  அந்த
  மனிதன்
  கத்தியை
  எடுத்திருந்தால்
  நான் துப்பாக்கியை
  எடுத்திருப்பேன்

  அந்த
  மனிதன்
  துப்பாக்கியை
  தூக்கி இருந்தால்
  நான் பீரங்கியை
  தூக்கி இருப்பேன்

  அந்த
  மனிதன்
  பீரங்கியோடு
  வந்திருந்தால்
  நான் குண்டு மழை
  பொழிந்திருப்பேன்

  ஆனால்

  அந்த 
  ஒற்றை
  மனிதன் 
  சத்தியத்தை
  கையில் வைத்து
  போராடுகிறானே

  சத்தியத்தை
  எதிர்க்கும்
  ஆயுதம்
  இதுவரை
  கண்டுபிடிக்க
  படவில்லை

என்று பதில்
அளித்தவர்
அந்நாட்டு
பிரதம மந்திரி
வின்ஸ்டன்
சர்ச்சில்

அந்த
ஒற்றை
மனிதன்

உலகம்
போற்றும்
உத்தமர்
காந்தி

எந்த
சூழ்நிலையிலும்
சத்தியத்தை
கடைபிடிப்பவர்
சரித்திரத்தில்
இடம் பிடிப்பது
நிச்சயம்
தானே

  வாங்க ::

  அவர்
  காட்டிய
  பாதையில்
  பயணப்பட
  தொடங்கலாம்

  அது
  கண்டிப்பாக
  கடினமாக கூட
  இருக்கலாம்

  இருப்பினும்
  முயற்சிகள்
  செய்யலாம்

புதிய
நம்பிக்கை
கீற்றுக்களுடன்

நன்றி 
முனை.சுந்நர மூர்த்தி

Thursday, October 28, 2021

மன உளைச்சல்..நமக்கு வேண்டாமே...

உலகத்தையே ஜெயிக்க நினைத்த *பிரான்ஸ் மாவீரன் நெப்போலியன் கடைசி காலத்தில் பிரிட்டனிடம் தோல்வி அடைந்தார்.* தோல்வி அடைந்த நெப்போலியனை பிரிட்டிஷ் ராணுவம் அவரை சிறை பிடித்து *ஆப்பிரிக்க தனிச்சிறையில் தனிமையில் வைத்தது. 

சிறையில் மன உளைச்சலில் அவரின் கடைசி காலம் கழிந்தது.* அவரை பார்க்க வந்த அவரின் *நண்பர் ஒருவர் அவரிடம் ஒரு சதுரங்க அட்டையை கொடுத்து “இது உங்களின் சிந்தனையை செயல்பட வைக்கும் தனிமையை போக்கும்” என்று கூறி அவரிடம் கொடுத்தார்.* ஆனால் சிறை படுத்தி விட்டார்களே என்ற மன உளைச்சலில் இருந்த மாவீரனுக்கு சிந்தனை செயல்படாமல் *அதன் மீது கவணம் போகவில்லை. சிறிது காலத்தில் இறந்தும் போனார்.* பிற்காலத்தில் பிரான்ஸ் அருங்காட்சியகம் *மாவீரன் நெப்போலியனிடம் இருந்த சதுரங்க அட்டையை ஏலம் விட அதை ஆய்வு செய்த போது அந்த அட்டையின் நடு பக்கத்தில் சிறிய அளவில் ஒரு குறிப்பு இருந்தது. அதில் அந்த சிறைச்சாலையில் இருந்து தப்பிப்பதற்க்கான வழியை அந்த குறிப்பு சொல்லி இருந்தது.* ஆனால் அவரின் மன உளைச்சலும்,பதட்டமும் அவரின் சிந்தனையை செயல்படாமல் ஆக்கி வைத்து அவரின் தப்பிக்கும் வழியை மூடி மறைத்தது...._

_அதைப் போல் உறுதியான *சிமெண்ட் தரையையும், மரபெட்டியையும் தன் கூர்மையான் பற்களாலும், நகத்தாலும் குடைந்து ஓட்டை போடும் எலி*....அதே *மரத்தால் செய்யப்பட்ட எலிப்பொறியில் சிக்கி கொண்டால் அதற்கு ஏற்படும் மன உளைச்சலாலும், பதட்டத்தாலும் அந்த எலி பொறியை உடைக்கும் வழியை விட்டு விட்டு அந்த பொறியின் பின்னால் இருக்கும் கம்பிக்கு முன்னால் பின்னாலும் பதட்டத்துடன் சென்று சிந்தனை செய்யாமல் மனிதர்களிடம் மாட்டிக்கொண்டு விடும்...*_

_,*மாவீரனுக்கும் சரி.. சாதாரண எலிக்கும் சரி... *பதட்டமும், மன உளைச்சலும் அவர்களின் சிந்தனையை செயல்படாமல் வைத்து* முன்னேற்றத்திற்கான வழியை அடைத்து விடுகிறது...
மனுஷனோட பலபிரச்சனைக்கு காரணம்,#மனஉளைச்சல் தான்!

Tuesday, October 19, 2021

ஆன்ற குடிப்பிறத்தல் வலையொலி ஒசை( Audio Lesson)

வகுப்பு.8. பாடம்.தமிழ்.  இயல்.4. விரிவானம்.
ஆன்ற குடிப்பிறத்தல். வலையொலி ( Audio Lesson).கேட்டு மகிழ்ந்து பயன் பெற அன்போடு அழைக்கிறேன்.
https://anchor.fm/sivaramakrishnan7/episodes/22------8-e191q31


Saturday, October 16, 2021

 கூகுள் மீட்டில் ( இணையத்தில் )  எனது மாணவர்கள் எவ்வாறு கற்றபில்தலை  கற்றுக்கொண்டார்கள் என்பதை   எம் பள்ளி மாணவர்களின் பெற்றோரின் கருத்து .



Tuesday, October 12, 2021

சேலத்தின் அடையாளம் ....

Dedicated to Salem Citizens by சுஜாதா

என்னுடய டயரியின் இன்றைய பக்கங்கள்.
பேலஸ் தியேட்டர் சேலம்
ஒரு சமயத்தில் தமிழகத்தில் சென்னைக்கு அடுத்தபடியாக மிக அதிகமான திரையரங்குகளைக் கொண்ட நகரம் என்ற சிறப்பினை பெற்ற நகரம் சேலம். அந்த திரையரங்களில் பேலஸ் ஒரு முக்கியமான திரையரங்கமாக  விளங்கியது.

பேலஸ் தியேட்டர் மதுரை தங்கம் போல ஆசியாவிலேயே அதிகம் பேர் அமர்ந்து பார்க்கும் அளவு வசதி கொண்டது அல்ல. சென்னையில் அமைந்திருந்த சபையர், ப்ளூ டைமண்ட், எமரால்ட் போன்ற பிரமாண்டமான நவீன கொட்டகையும் அல்ல. என்றாலும் எனக்கு மிகவும் பிடித்த திரையரங்கு.

சென்னையில் இருந்து குடி பெயர்ந்து (1960 ) சேலம் வந்தவுடன் அப்பா சேலம்-ஈரோடு மின்சார வினியோக கம்பெனியில் சேர்ந்ததும் சேலம் சுப்பராயன் தெருவில் ஒரு லைன் வீட்டில் குடியேறியதும் என் சேலம் வாசத்தின் ஆரம்பம். அதுதான் சினிமா என்னும் ஆசையை எனக்குள் அறிமுகப்படுத்தியதும் , அதை வளர்த்ததும் , அது ஆழமாய் வேரூன்றி இன்றுவரை நிலை பெறச்செய்ததும் அங்குதான்.

நாங்கள் குடி போன வீட்டுக்கு இடது புறத்தில் சேலம் டவுன் ரயில்வே ஸ்டேஷன். அது சுப்பராயன் தெருவை ஆரம்பித்து வைப்பது போல அமைந்திருக்கும். அந்த ஸ்டேஷனிலிருந்து வெளியே வந்து பார்த்தால் அந்த சாலையின் முடிவில் பேலஸ் தியேட்டர் கம்பீரமாக இருக்கும்.
இடைப்பட்ட தெருதான் டாக்டர் சுப்பராயன் தெரு. அதன் மத்தியில்தான் எங்கள் வீடு அமைந்து இருந்தது. நான் படித்த பள்ளி 
(G. H. M. H. S) கொஞ்ச தூரம். 
(அது சென்ட்ரல் தியேட்டர் பக்கத்தில். இப்படித்தான் நான் அறிந்த சேலத்தை கொட்டகைகளோடு சேர்த்துத்தான் என்னால் சொல்ல முடியும்) அது எனக்கு வருத்தத்தினை தரவில்லை. ஏனென்றால் பேலஸ் தியேட்டர் பக்கத்திலே என்று சொல்லிக் கொள்வதில் ஒரு பெருமை இருந்ததுதான் காரணம்.

பேலஸ் திரையரங்கின் கம்பீரத்தை இரட்டித்துக் காட்டியது அதற்கு முன் அமைந்திருந்த திறந்த வெளியும் அதில் அமையப்பெற்றிருந்த புல்வெளி மேடையும்தான். எனக்குத் தெரிய அங்கு அமர்ந்து காற்று வாங்கியவாறு சினிமா பார்க்க வருபவர்களை வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பவர்கள் இருபது முப்பது பேர் இருக்கும். இவர்களைத் தவிர டிக்கெட் வாங்கிவிட்டு மனைவிக்காக காத்திருப்பவர்கள் கொஞ்சம். ஐந்து ரூபா டிக்கெட் எட்டு ரூபாய் என்று விற்கும் ஆண் பெண் கறுப்பு மார்க்கெட் வியாபாரிகள் இப்படி ஐம்பது பேர் தாராளமாக நடமாடும் அளவுக்கு பெரிய முகப்பை உடையதாக இருந்தது பேலஸ் தியேட்டர்.

பெண்களுகென்று நாற்பது பைசா , தொண்ணூறு பைசா கவுண்டர் கூண்டுகளும், அதே வகுப்புக்கு ஆண்களுக்கு கொட்டகைக்கு வெளியே கூண்டுகளும் இருக்கும். அதற்கு அடுத்த வகுப்பு  ₹1.30 இரு பாலாருக்கும் பொது வரிசை. அதற்கு மேல் 1.70 பாக்ஸ் ₹3 இவை கொட்டகையின் உள்ளே மாடிக்கு போகும் படியின் கீழ் ஒரு கவுன்ட்டர். இங்கு டிக்கெட் வாங்கிவிட்டு அமர இருக்கைகள் இருக்கும். இவர்கள் கொட்டகையில் நுழையும் வாயிலில் பார்வையாக பன்றி மலை சுவாமிகள் படமும் அதன், அருகே இருந்த கடிகாரமும் இன்னும் நினைவில் இருக்கின்றது. கொட்டகையின் பின் புறம் ஒரு தோட்டம். அதில் கத்திரி , வெண்டை கீரை போன்றவை பயிரிடப்படும். பெரிய கிணறு, அதில் நீர் இரைக்க ஒரு பம்ப் செட்.
மிகவும் பசுமையாக இருக்கும் அந்த நிலத்தை கவுண்டர் என்பவர் குத்தகைக்கு எடுத்து இருந்தார். அவர் எங்களுக்குத் தெரிந்தவர். அதனால் முதல் நாள் டிக்கெட் வாங்க அவர் செல்வாக்கு எங்களுக்கு பயன் பட்டது.

கடைசி வகுப்புக்கே அமர சேர் வசதி இருந்த முதல் கொட்டகை பேலஸ். மேல் வகுப்புகளுக்கு குஷன் சேர். பாக்ஸ் வகுப்புக்கு தனித்தனியான குஷன் சீட். 
நல்ல காற்று வசதி. மாலைக்காட்சிகளின் போது கதவுகளைத் திறந்து வைப்பார்கள். இயற்கை காற்றும் வரும். இந்த அருமையான சூழலில் எவ்வளவு பாடாவதி படமும் நன்றாகவே இருக்கும். பேலசுக்கு அருகே வேறு கொட்டக்கைகள் கிடையாது. அதனால் இங்கு படம் பார்க்க வருபவர்கள் வேறு படத்துக்குப் போய் டிக்கெட் கிடைக்காமல் வருபவர்களாக இருக்க மாட்டார்கள். கமிட்டட் ஆடியன்ஸ் வகையைச் சேர்ந்தவர்கள். கொட்டகைக்கு வெளியே சைக்கிள் ஸ்டாண்டு. குறிப்பிட்ட அளவு டிக்கெட்டுகள் சைக்கிள் ஸ்டாண்டினை பயன் படுத்துபவர்களுக்கு உண்டு. அதனால் க்யூவில் நிற்காமல் டிக்கெட் வாங்க சைக்கிளில் வருபவர்களும் உண்டு.

கொட்டகையின் அருகே கோயம்பத்தூர் லாட்ஜ் , சிவ சக்தி வினாயகா, போன்ற ஹோட்டல்களும் சற்று காலாற நடந்தால் கிருஷ்ணா பவனும் உண்டு. சினிமா பார்த்துவிட்டு டிபன் சாப்பிடுவது சுகமான அனுபவம். ஹோட்டலில் டேபிள் கிடைக்காது என்பதால் சிலர் சினிமாவில் கிளைமாக்ஸ் சண்டை காட்சிகளைத்  தவிர்த்துவிட்டு ஹோட்டல்களுக்கு விரைபவர்கள் உண்டு.

மற்றொரு திரையரங்கமான.  நியூ சினிமாவும் பேலஸ் தியேட்டரின் உரிமையாளரான பொம்மண்ண செட்டியாருடையதே. சில படங்கள் ஒரே சமயத்தில் இவ்விரண்டு தியேட்டர்களிலும் திரையிடப்பட்டு   படச்சுருள் இரண்டு கொட்டகைகளுக்கும் ஆட்டோவில் பயணித்தது ஆச்சரியாமான விஷயமாக  இருந்தது. பி.ஆர்.சேகர் என்னும் ரஞ்சி கிரிக்கெட் பிளேயர் இவர் பேலஸ் செட்டியாரின் மகன். அவர் ரஞ்சி விளையாடியதை விட பேலஸ் கொட்டகை இவருடையது என்பது எங்களுக்கு அவர் மீது பொறாமை கொள்ளவைத்த விஷயம்.
செட்டியாரை நாங்கள் பார்த்தது இல்லை. ஆனால் பேலஸ் தியேட்டர் மேனேஜரை பார்க்காதவர்கள் இருக்க முடியாது. 1980 வரை வெள்ளை ஜிப்பா அணிந்து, அம்மைத் தழும்போடு கூடிய முகத்தோடு எப்போதுமே ஒரு சிடுசிடுத்த முகத்தோடு தியேட்டர் வாசலில் கூட்டத்தை பார்வையிடும் மனிதராக அவர் காணப்பட்டார்.

பாசமலர் இக்கொட்டகையில் நூறு நாட்களுக்கு மேல் ஓடி விழா எடுத்த போது சிவாஜியும் சாவித்திரியும் தேரில் ஊர்வலமாக (மலர்களைப் போல் தங்கை பாடலில் வருமே அதே போன்ற தேர்) அழைத்து வரப்பட்டனர். தொடர்ந்து பார் மகளே பார் படமும் இங்கு வெற்றிகரமாக ஓடியது. அன்னை இல்லம், தில்லானா மோகனாம்பாள், புதிய பறவை, இருவர் உள்ளம், நிறை குடம் போன்ற பல சிவாஜியின் வெற்றிப் படங்கள் இங்கு திரையிடப்பட்டு வெற்றி கரமாக ஓடினாலும் இங்கு திரையிடப்பட்ட கர்ணன் குறிப்பிட வேண்டிய ஒன்று. ஆரம்பத்தில் இப்படம் சரியாகப் போகவில்லை. ஆனால் எங்கள் குடும்பத்தினர் மிக அதிகமான முறை பார்த்த படம் இது. ஒவ்வொருவரும் குறைந்தது மூன்று முறை பார்த்திருப்பார்கள். என் அப்பாவும் பெரியப்பாவும் விடாமல் ஒரு வாரம் இரவுக்காட்சி பார்த்தார்கள். அதில் மூன்று முறை நானும் உடன் சென்றிருந்தேன்.

ஒரு விசித்திரமான விஷயம். பொதுவாக எம்ஜிஆர் படங்கள் மோசமான தோல்வியை சந்திக்காது. ஆனால் தலைவன், தாலி பாக்கியம், அன்னமிட்ட கை, ஒரு தாய் மக்கள் என பல எம்ஜிஆர் படங்கள் தோல்வியடைந்தது என்றாலும் பின்னாட்களில் எங்கள் தங்கம், குமரிக்கோட்டம் போன்ற படங்கள் அந்த அவப் பெயரைப் போக்கின.

பாலச்சந்தரின் மேஜர் சந்திரகாந்த், புன்னகை இதில்தான் திரையிடப்பட்டது. ஜெய்சங்கரின் முதல் படமான இரவும் பகலும் இதில்தான் திரையிடப்பட்டது. எங்க வீட்டு பிள்ளைக்கு பிறகு அவர்களது தயாரிப்பில் எங்க வீட்டு பெண் திரையிடப்பட்டதும் பெரிய எதிர்பார்ப்புடன் போய் ஏமாந்ததும் இங்குதான். கமலின் வறுமையின் நிறம் சிகப்பு, ரஜினியின் காளி, பாரதிராஜாவின் கிழக்கே போகும் ரயில், சிகப்பு ரோஜாக்கள், பாக்கியராஜின் மௌனகீதங்கள், அலைகள் ஓய்வதில்லை போன்ற படங்களும், அதே கண்கள் போன்ற பல படங்கள் இங்கு திரையிடப்பட்டு வெற்றியடைந்தது. 

முதன் முதலில் காலை காட்சிகளுக்கு குறைந்த கட்டணத்தில் பழைய ஆங்கில தமிழ் படங்களை சனி, ஞாயிறுகளில் திரையிட்டது. Mad Mad world, முதல் தேதி, எதிர்பாராதது ஆகிய படங்களைப் பார்க்க வைத்தது பேலஸ் தியேட்டர்.

பல வருடங்கள் அதிகமாக வெற்றிப் படங்கள் திரையிடப்படாத காலத்தில் கரகாட்டக்காரன் திரையிடப்பட்டது. பக்கத்து ஊர்களை இருந்து மக்கள் வண்டி கட்டிக் கொண்டு வந்து படம் பார்த்த அதிசயத்தை ஒரு நாள் , இரு நாட்கள் அல்ல. பல மாதங்கள் தொடர்ந்து பார்த்தேன்.
தினமும் ஐந்து காட்சிகள், டிராபிக் ஜாம் ஏற்பட்டு திருப்பிவிடப்பட்ட அதிசயம் இங்குதான் நடந்தது.

எல்லா வரலாற்றுக்கும் ஒரு முடிவு உண்டு. அப்படித்தான் பேலஸ் கொட்டகைக்கும் ஏற்பட்டது.
பல திரையரங்குகள் மூடப்பட்ட பொழுது பேலஸ் கொட்டகையும் கிடங்காக மாறி இப்பொழுது பெரிய அபார்ட்மெண்ட் இருப்பதாக அறிகின்றேன்.

1990 ல் சேலத்தை விட்டு போன நான் 
பேலஸ் தியேட்டர் மூடப்பட்டதை கேள்விப்பட்டேன்.
என் நினைவுகளில் இருக்கும் பேலஸ் தியேட்டர் என்றும் அப்படியேதான் இருக்கும். அப்படியேதான் பலரின் நினைவுகளில் ஏதாவது ஒரு திரையரங்கம் இருக்கும். இப்பதிவைப் படிக்கும் பொழுது அத்திரையரங்குகள் ஞாபகம் வரும்.


நன்றி
சுஜாதா

மன அழுத்தமின்றி பணிசெய்ய...வழிகள்...40

*பள்ளியில் அதிக மன அழுத்தம் இல்லாமல் மகிழ்ச்சியாக கற்பித்தல் பணி செய்ய ஆசிரியப் பெருமக்கள் பின்பற்றவேண்டிய நடைமுறைகள் சில இதோ உங்களுக்காக, பொறுமையாக படித்துவிட்டு ஆசிரியர்-நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்*

அனைத்து ஆசிரியர்கள் மற்றும் தலைமையாசிரியர்கள் தெரிந்துகொள்ள வேண்டிய 40-வழிமுறைகள்:-

1.காலை எழுந்தவுடன் மூச்சு பயிற்சி முக்கியமாக ஆசிரியர்கள் செய்ய வேண்டும். உடற்பயிற்சி மற்றும் யோகா செய்வது நலம்.

2.காலையில் பள்ளிக்கு செல்லும்முன் கடைசி அரைமணி நேரம் ஒய்வு எடுத்துவிட்டு மனது சந்தோசமாக வைத்துக்கொண்டு இறைவனை வணங்கிவிட்டு  பள்ளிக்கு செல்ல வேண்டும்.

3.வகுப்பில் ஒவ்வொரு பாட வேளையின் கடைசி ஐந்து நிமிடம் மாணவர்களுக்கு நடத்தியது தொடர்பான கற்றல் பணி தந்துவிட்டு நாம் பேசாமல் குரலுக்கு ஓய்வு தர வேண்டும்.

4.வகுப்பறையில் மிகவும் சத்தமாக பேசக்கூடாது.

சரியான சத்தத்துடன் மட்டுமே பேச வேண்டும்.நமது கண்பார்வை வகுப்பு முழுவதும் இருக்க வேண்டும்.

5.மாணவர்கள் எண்ணிக்கை அதிகம் இருந்தால் மைக் மூலம் வகுப்பு எடுத்தால் நமது வாழ்நாள் நீடிக்கும்.கரும்பலகையில் எழுதும்போது சுண்ணக்கட்டி உடம்பிற்குள் செல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

6.ஒவ்வொரு பாடவேளை முடியும்போது குரல்வலை வறண்டு போகாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.ஒவ்வொரு பாடவேளை முடியும்போதும் தண்ணீர் குடிக்க வேண்டும்.

7.பள்ளிக்கு செல்லும்போது முகம் மலர்ந்து சந்தோசமாக செல்ல வேண்டும்.

8.பள்ளி செயல்பாடு எதுவாக இருந்தாலும் வீட்டிலும்,வீட்டின் செயல்பாடு எதுவாக இருந்தாலும் பள்ளியிலும் பாதிக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.பள்ளி முடிந்தவுடன் மாலை நேரத்தில் பள்ளியின் செயல்பாட்டை மறந்துவிட்டு குடும்பத்துடன் சந்தோசமாக இருக்க பழக வேண்டும்.

 

9.பாடவேளை முழுவதும் நமது உடலும் உள்ளமும் ஒரே இடத்தில் இருக்க வேண்டும்.மாணவர்களிடம் அன்புடன் மட்டுமே பேச வேண்டும்.கோபப்பட்டு பேசக்கூடாது.

10.எண்ணம்,சொல்,செயல் மூன்றும் ஆசிரியர்களுக்கு எப்போதும் ஒருநிலை படவேண்டும்.

11.அனைத்து நேரமும் நாமும் சந்தோசமாக இருந்தது நம்மை சார்ந்த மாணவர்கள்,ஆசிரியர்கள்,

குடும்பம்,நண்பர்கள்,உறவினர்கள்,சொந்தங்கள், உலக மக்கள் என்று அனைவரையும் சந்தோசமாக வைத்துக்கொள்ள வேண்டும்.

12.ஒவ்வொரு முறையும் உணவு சாப்பிடும்போதும்,தண்ணீர் குடிக்கும் போதும் நமக்கு தந்த பிரபஞ்சம்,வழங்கிய உள்ளங்களை வாழ்த்த வேண்டும்.

 

13.மதிய இடைவேளை மற்றும் இடைவேளையின் போது சிரித்து சந்தோசமாக பாடத்தை தவிர்த்து மற்ற பயனுள்ள கருத்துக்களை சக ஆசிரியர்களுடன் பேச பழக வேண்டும்.

14.காலையில் பள்ளிக்கு சென்றவுடன் தலைமை ஆசிரியர் மற்றும் சக ஆசிரியர்களுக்கு முக மலர்ந்து வணக்கம் சொல்வது மிக முக்கியம் ஆகும்.

15.பள்ளியில் ஆசிரியர்,பெற்றோர்,

மாணவர்கள் கோபமாக பேசினாலும் மறந்துவிட்டு அவர்களை வாழ்த்த கற்றுக்கொள்ள வேண்டும்.

16.பள்ளியில் நம்முடன் பேசும் அனைவரின் கருத்துக்களையும் கேட்டு நாம் பேசும் போது சரியாக,சுருக்கமாக அன்புடன் பிறர் மனம் வருந்தாத வண்ணம் பேச வேண்டும்.

17.நம்முடன் அனைவரும் சந்தோசமாக பேசும் வண்ணம் நடந்து கொள்ள வேண்டும்.அனைவரின் பேச்சிற்கும் மதிப்பு தர வேண்டும்.

18. ஏழ்மையான குடும்பத்தில் இருந்து வரும் மாணவர்களின் குடும்ப சூழல் பற்றி கேட்டு தெரிந்து வைத்து இருக்க வேண்டும்.அவர்கள் மனம்விட்டு நம்முடன் பேச வாய்ப்பு தரவேண்டும்.

19.நாள்தோறும் இடைவேளையின் போது யாரேனும் ஒரு மாணவர் பெயர் சொல்லி அவரை வந்து நம்முடன் பேச சொல்லும்போது அவர்கள் மீது நாம் கவனம் செலுத்துவதை உணர்ந்து நன்றாக படிப்பார்கள்.

20.மாணவர்கள் செய்யும் சிறு தவறையும் தக்க அறிவுரை கூறி திருத்த முயற்சி செய்ய வேண்டும்.பாடவேளைக்கு செல்லும் போது கற்றல்,கற்பித்தல் உபகரணம் கொண்டு சென்றால் கற்பித்தல் மேம்படும்.

21.இதுகூட தெரியாத என்ற வார்த்தை மட்டும் மாணவர்களிடம் ஆசிரியர்கள் பயன்படுத்த வேண்டாம்.அப்படி சொன்னால் மாணவர்கள் நம்முடன் கடைசியாக பேசுவது அதுவாகத்தான் இருக்கும்.

22.நமக்கு தெரியாது உலகில் நிறைய உள்ளது என்பதை உணர்ந்து மாணவர்களிடம் பேச வேண்டும்.அன்றாட தொலைக்காட்சியில் வரும் முக்கிய பயனுள்ள செய்திகளை கேட்டு மாணவர்களுக்கு சொல்ல வேண்டும்.

23.கிடைக்கும் நேரத்தை மனது அமைதியாக இருக்க பழக்க படுத்திக்கொள்ள வேண்டும்.

24.பள்ளியில் வரும் பணியை வேகமாக முடித்துவிட்டு சந்தோசமாக இருக்க வேண்டும்.

25.பணியை அதிக நேரம் எடுத்து சென்று மனதை துன்பத்தில் வைத்திருக்க கூடாது.

26.மாணவர்களுக்கு பாட வேளையில் பேச வாய்ப்பு தரவேண்டும்.ஏன், எதற்கு,எப்படி,என்ன? என்பது போன்று வினா கேட்டு கற்க பயிற்சி தர வேண்டும்.புரிந்து படிக்க பயிற்சி தரவேண்டும்.

27.யாரிடமும் நமது துன்பத்தை பேசக்கூடாது.நமது சந்தோசத்தை மட்டுமே பகிர்ந்து கொள்ள வேண்டும்.

28.பள்ளியில் வகுப்பில் நடத்தும் பாடம் மற்றும் செயல்பாட்டை குறிப்பு எடுத்துக்கொண்டு பள்ளிக்கு சென்றால் மறக்காது.அப்போதுதான் அனைத்து கருத்துக்களையும் மாணவர்களுக்கு சொல்லமுடியும்.

29.பள்ளி முடிந்து விட்டு வீட்டிற்கு வந்தால் தங்களின் குழந்தை மற்றும் குடும்ப உறுப்பினருடன் சந்தோசமாக இருக்க வேண்டும்.நமது குடும்பம்தான் முதல் கோவில் என்பதை உணர்ந்து வாழ வேண்டும்.

30.தங்களின் குழந்தைகளின் தனித்திறனில் கவனம் செலுத்த வேண்டும்.நம்மை போன்று அவர்கள் எதிர் காலத்தில் வருந்தமால் இருப்பதில் கவனம் கொள்ள வேண்டும்.

31.பள்ளியில் இருந்து வந்தவுடன் அரைமணி நேரம் ஓய்வு எடுத்துவிட்டு,அதன் பிறகு மற்ற பணிகள் செய்ய வேண்டும்.

32.நாள்தோறும் மாலையில் குடும்பத்துடன் கோயிலுக்கு செல்லும் பழக்கம் இருக்க வேண்டும்.

33.விடுமுறை நாளில் குடும்பத்துடன் அருகில் உள்ள பூங்கா போன்று  சிறு சுற்றுலா மேற்கொள்ள வேண்டும்.

34.உறங்கும்போது இறைவனை வேண்டிக்கொண்டு சந்தோசமாக உறங்க வேண்டும்.

35.நாம் வாழ்வில் அனைத்து செயலிலும் *அமைதி ஆனந்தம்* நம்பிக்கை* பெருக வேண்டும்   என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

36.கடந்தகால மன உளைச்சலை மறந்து,

எதிர்கால கற்பனை மறந்து,நிகழ்காலத்தில் சந்தோசமாக இருக்க கற்றுக்கொள்ள வேண்டும்.

37.காலையில் எழுந்தவுடன் இரவு உறங்கும் வரை அனைவரையும் வாழ்த்த கற்றுக்கொள்ள வேண்டும்.

38.ஆசிரியராக அனைவரின் வாழ்வில் ஏணிப்படியாக இருப்போம்.சமூகத்தில் முன்மாதிரியாக வாழ்ந்து காட்டுவோம் என்ற குறிக்கோளுடன் வாழ வேண்டும்.

39.சமூகத்தின் முன்னுதாரணம் நாம் என்பதால் அனைவரிடமும் மாற்றம் வர முதலில் நம்மிடம் உருவாக வேண்டும்.

40.நீள் ஆயுள்,நிறை செல்வம்,மெய் ஞானம்,உயர் புகழ் பெற்று பல்லாண்டு அனைவரும் வாழ வாழ்த்தும் நல்ல மனதுடன் வாழ வேண்டும்.

நன்றி 

என்றும் அன்புடன் 

கல்வி ஆசிரியர்கள்.

பகிர்வு பதிவு

Monday, October 11, 2021

புதிய பார்வை...புதிய கோணம்...

🍁  புதிய பார்வை  🍁

மணம்
பரப்பும்
பூக்களுக்கு 
பசுமையான
மரங்களுக்கு
பெயர் போன 
பெங்களூரில் 

ஒரு 
புகழ்பெற்ற 
கல்வி நிறுவனம் 

அதில்
கௌரவ
பேராசிரியர்
பணிக்கு சேர 
ஆசைப்பட்டார்
அப்துல் கலாம்

அதற்கான 
விண்ணப்பம் 
அனுப்பினார் 

நேர்முக
தேர்வில் 
கலந்து 
கொண்டார்

  அவர் 
  முறையாக 
  பி எச் டி 
  படிக்காதவர் 

என்ற 
காரணத்தை 
காட்டி

கலாமை
வேலைக்கு 
சேர்க்க 
மறுத்தனர் 
நிர்வாகத்தினர்

இந்த சம்பவம் 
நடந்த போது 

கலாமிற்கு 
வயது 70

  அக்னி
  ஏவுகணை
  ஏவியவர்

  பொக்ரான்
  அணு குண்டு
  சோதனையை
  வெற்றிகரமாக
  முடித்தவர்

  பிரதம
  மந்திரியின்
  தலைமை
  அறிவியல்
  ஆலோசகராக
  இருந்தவர்

  அந்த 
  பணியில்
  சேர்க்க
  மறுத்தது

  அவர்
  மனதை 
  பாதித்தது 
  என்றால் 
  நிச்சயம் 
  இல்லை 

  அவரின் 
  பங்களிப்பை
  பயன்படுத்தி 
  கொள்ள 

  அந்த 
  நிறுவனம்
  கொடுத்து 
  வைக்கவில்லை 

என்பதே
நிஜம்

  மாபெரும் 
  லட்சியத்தில் 
  பயணம்
  செய்பவர்களை

  இந்த
  மாதிரியான 
  சின்ன சின்ன 
  மறுப்புகள் 

  அவர்கள் 
  மனதை 
  எள்ளளவும்
  பாதிப்பதில்லை

என்பதே
உண்மை

  வாங்க ::

  எந்த
  நிகழ்வையும்

  அது
  நன்மையோ
  தீமையோ

  அது
  வெற்றியோ
  தோல்வியோ

  அது
  இன்பமோ
  துன்பமோ

  இதுவும்
  கடந்து
  போகும்
  என்று

  சுலபமாக
  எடுத்து
  கொள்ள
  பழகுவோம்

  நம்
  வாழ்வில்
  அதிர்வுகளுக்கு
  இடமில்லை

  என்பதை
  உணரவும்
  செய்வோம்

புதிய
நம்பிக்கை
கீற்றுக்களுடன்

அன்புடன்
காலை
வணக்கம்

💫💫💫💫💫💫💫

நன்றி
முனை. சுந்தர மூர்த்தி

பெண் ( குழந்தை) கள்..வீட்டின் கண்கள்...

பெண் பிள்ளை பெற்ற மற்றும் கொடுத்து வைக்காத அனைவருக்கும் இனிய உலக பெண் குழந்தைகள் தின வாழ்த்துகள்....

மிக்க பேரன்போடு..
ஆ.சிவா..
ஆண்டாள்.
சேலம்.

பெண்( குழந்தை) களை போற்றுவோம்...

*இராமன் தன் மனைவியை சந்தேகித்து தீயில் இறங்க பணிக்கிறான். | இறங்கி தான் பத்தினி என்பதை சொல்கிறாள். அதற்கு பிறகு கூட ஊராரின் சந்தேகத்தை காரணங் காட்டி கர்ப்பிணியான தன் மனைவியை வனத்தில் தள்ளுகிறார் கணவன்.* 
அங்கேயே குழந்தைகள் பெற்று வனத்திலேயே வாழ்கிறாள், இரண்டு குழந்தைகள் வளர்ந்து ஊர் திரும்பியதும் மடிகிறாள். -
*இது ராமாயணம்*

ஓர் அழகிய இளம் மங்கை. 
அவளுக்கு முதிர்ந்த கணவன்.
 மனமுவந்து வாழ்கிறாள். 
ஒரு கட்டத்தில் கணவன் குஷ்டரோகியாகிறான். 
அதன் பிறகும் அவளுக்கு வெறுப்பு ஏற்பட வில்லை. பண்ணாத குசும்பெல்லாம் அக் கிழடு செய்தும் அவனை ஆராதிக்கிறாள்.
 ஒரு கட்டத்தில் ஒரு தாசியை பார்த்து "நான் இவளோடு கூட வேண்டுமென்கிறான். அதற்கும் அவள் இசைகிறாள்.
  தாசிக்கு கூலியாக தாசியின் வீட்டை துப்புரவு செய்வது உள்ளிட்ட பணிகளை செய்கிறாள். தன் கணவனை தோளில் தூக்கிச் சென்று தாசியின் வீட்டுக்குச் செல்கிறாள்.
*இது நளாயினி கதை*. 

*இது அனைத்தும் வட மொழிஇலக்கியங்கள்*...

தன் கணவனை செய்யாத குற்றத்திற்காக கொலை செய்து விட்டது அரசு. 
தன் கோப தீயால் ஒரு நகரத்தையே எரிக்கிறாள்,
 தன் உள்ளத்து எரிச்சல் பற்றி எரிகிறது என கெக்கலிட்டு சிரிக்கிறாள், ஆவேசமாக எரித்த படியே வேகமாக நடந்து சென்று சற்று நிதானித்து திரும்பி பார்க்கிறாள், 'அனைத்தும் எரிந்து விட்டதா அல்லது இன்னும் மிச்சமிருக்கிறதா' என்று. - 
*இது சிலப்பதிகாரம்*.

அவள் ஓர் பேரழகி. அவள் அழகில் கவரப்பட்டு ஓர் இளவரசன் தன் காதலை அவளிடம் கூறுகிறான்.
 அவள் வலக் கையில் வாங்கி இடக் கையில் தூர வீசிவிட்டு சலனமற்று நடக்கிறாள். இளவரசனும் ஆசிட் வீச வில்லை, 
ஆபாச படமெடுத்து மிரட்ட வில்லை.
 அவள் உணர்வுக்கு மதிப்பளித்து சென்று விடுகிறான். 
*இது மணிமேகலை*

அவள் கணவன் அவளை கொல்வதற்காக திட்டமிட்டு மலை உச்சிக்கு அழைத்துச் செல்கிறான். 
அவளும் விவரமறியாது கூடவே செல்கிறாள்.

 மலை உச்சியை எட்டியதும்தான் தெரிகிறது, 
'இவன் தன்னை கொலை செய்ய அழைத்து வந்திருக்கிறான்' என்று. 
யோசிக்கிறாள். 

இறுதியாக கணவனிடம் பேசுகிறாள், 
"நீ என்னை கொல்லத்தானே அழைத்து வந்திருக்கிறாய்?
நான் மடிவது பற்றி எந்த கவலையுமில்லை.
ஒரே ஒரு வேண்டுகோள்தான். என் கணவர் நீங்கள். உங்களை மூன்று முறை சுற்றி வந்து காலில் விழுந்து ஆசி வாங்கினால் மோட்சம் செல்லும் பாக்யம் கிட்டும் எனக்கு" என்று. 
"அட அதனாலென்ன? தாராளமாக சுற்றி வா" என்று கணவனும் சொல்ல, 
சுற்றுகிறாள்.
 முதல் சுற்று, 
இரண்டாம் சுற்று, மூன்றாம் சுற்றில் தன் கணவனை மலையிலிருந்து கீழே தள்ளி விட்டு கொல்கிறாள். 
*இது குண்டலகேசி*

*இவை அனைத்தும் தமிழ் இலக்கியங்கள்*...

ஓர் ஆண் என்ன செய்தாலும் அவனுக்கு சேவகம் செய்வதொன்றே பெண்ணின் பணி என்பதினை சொன்னது தான் வடமொழி இலக்கியங்கள். 

அவன் ஆணோ, கணவனோ,  அரசனோ, ஆண்டவனோ அநீதி என்றால்,
*அறம் தவறினால் அடங்காதே, அவனை எதிர்த்து போராடு* என்பதை போதிப்பதுதான் தமிழ் இலக்கியங்கள். 

தமிழ் மொழி எப்போதுமே பெண்களை கொண்டாடுவது.

வடமொழிகள் பெண்களை அடிமைத் தனமாக்குவது. 

உலகம் முழுவதுமே பெண்களைக் காலுக்கு கீழே வைத்திருந்த கால கட்டத்தில் பெண்களை மேன்மை மிகு பொக்கிஷமாக போற்றிப் புகழ்ந்தது தமிழ் சமூகம். 

*சங்ககாலத்திலேயே,  47 பெண் எழுத்தாளர்களைக் கொண்டது உலகிலேயே தமிழ் சமூகம் மட்டும்தான்.* உலக மொழிகளின் தாய் என்று கூறிக் கொள்ளும் கிரேக்கத்தில் கூட 7 பெண்கள் தான் உண்டு.

தேவபாஷை என்று கூறிக் கொள்ளும் சமஸ்கிருதத்தில் ஒரு பெண் எழுத்தாளர் கூட கிடையாது. 
ஏன்? சமஸ்கிருதத்தை வாசிக்கவோ, பேசவோ கூட பெண்களுக்கு உரிமை கிடையாது. 

ஆனால் கீழடி போன்ற இடங்களில் இருந்து கிடைத்ததில் தங்கத்திலும், பானை ஓடுகளிலும் பெண்களின் பெயரைப் பொறித்து புழங்குமளவிற்கு தமிழ் சமூகம் நாகரீகம் கொண்டது. 

ஆண்டாண்டு காலமாக  பெண்களை போற்றிப் புகழ்ந்து கொண்டாடியது நம் தமிழ் சமூகம்...

தமிழ், தமிழ் சமுதாயம் இன்றும் நிலைத்து இருப்பதற்கு காரணம் பெண்களைக் கொண்டாடியதால் தான். பெண்கள் உலகத்தின் ஆணிவேர்கள். அவர்களைக் கொண்டாடுவோம்.

படித்ததில் பிடித்தது...

நன்றி
பகிர்வு பதிவு

Saturday, October 09, 2021

முதுகெழும்பாய் தந்தை...

#அப்பா ஏன் எப்போதும் பின்தங்கி
யிருக்கிறார் என்று தெரியவில்லை.....

1. அம்மா 9 மாதங்கள் வயிற்றில் சுமக்கிறார். அப்பாவோ 25  வருடங்கள் மனதில் வைத்து சுமக்கிறார். ஆனால், இருவருமே சமம்தான். இருந்தாலும் அப்பா ஏன் பின்தங்கியிருக்கிறார் என்று இன்னும் தெரியவில்லை. 

2. தாய் குடும்பத்திற்கு ஊதியம் இல்லாமல் வேலை செய்கிறார். அப்பா தனது சம்பளத்தை குடும்பத்திற்காகவே செலவிடுகிறார். அவர்களின் முயற்சிகள் இரண்டுமே சமம்தான். இருப்பினும் அப்பா ஏன் பின்தங்கியிருக்கிறார் என்று இன்னும் தெரியவில்லை. 

3. அம்மா நீங்கள் விரும்பியதை சமைக்கிறார். அப்பா நீங்கள் விரும்பியதை வாங்கித் தருகிறார். அவர்களின் பாசம் இரண்டுமே சமம்தான். ஆனால், அம்மாவின் பாசம் உயர்ந்ததாக காட்டப்படுகிறது. அப்பா ஏன் பின்தங்கியிருக்கிறார் என்று தெரியவில்லை. 

4. நீங்கள் தொலைபேசியில் பேசும்போது, ​​முதலில் அம்மாவுடன் பேச விரும்புகிறீர்கள். உங்களுக்குக் காயம் ஏற்பட்டால், நீங்கள் ‘அம்மா’ என்று அழுகிறீர்கள். உங்களுக்குத் தேவைப்படும்போது மட்டுமே நீங்கள் அப்பாவை நினைவில் கொள்கிறீர்கள். ஆனால், மற்ற நேரங்களில் நீங்கள் அவரை நினைவில்கூட வைத்திருப்பதில்லை என்று அப்பா எப்போதாவது  நினைத்திருக்கிறாரா? குழந்தைகளிடமிருந்து அன்பைப் பெறும்போது, ​​தலைமுறை தலைமுறைகளாக, அப்பா எப்போதும் பின் தங்கியே இருக்கிறார். ஏன் என்று தெரியவில்லை..

5. அலமாரியில் வண்ணமயமான புடவைகள் மற்றும் குழந்தைகளுக்கான பல ஆடைகள் கொண்டு நிரப்பப்பட்டிருக்கும். ஆனால், அப்பாவின் உடைகளோ மிகவும் குறைவுதான். அவர் தனது சொந்த தேவைகளைப் பற்றி எப்போதும் கவலைப்படுவதில்லை. அப்பா ஏன் பின்தங்கியிருக்கிறார் என்று இன்னும் தெரியவில்லை. 

6. அம்மாவிடம் பல தங்க ஆபரணங்கள் இருக்கும். ஆனால், அப்பாவுக்கென்று ஆபரணம் ஏதும் இருப்பதில்லை. தனக்கென்று ஏதும் வாங்கியதுமில்லை. 
இருந்தாலும்  அப்பா ஏன் பின்தங்கியிருக்கிறார் என்று இன்னமும் தெரியவில்லை.

7. குடும்பத்தை கவனித்துக் கொள்வதற்கு அப்பா அன்றாடம் மிகவும் கடினமாக உழைக்கிறார். ஆனால், அங்கீகாரத்தைப் பெறும்போது, ​​அவர் எப்போதும் பின்தங்கியே இருக்கிறார். அது ஏன் என்று புரியவில்லை.

8. அம்மா கூறுகிறார், "நாம் இந்த மாதம் குழந்தைகளின் பள்ளி/ கல்லூரிக்கு கல்விக் கட்டணம் செலுத்த வேண்டும். எனவே, வரும் விசேஷத்துக்கு எனக்காக சேலை எதுவும் வாங்க வேண்டாம்" என்கிறாள். நான் முன்பே முடிவெடுத்து விட்டேன். எனக்கும் வேண்டாம் என்கிறார்.  குழந்தைகளுக்குப் தங்களுக்குப் பிடித்த உணவை வீட்டிலும், வெளியிலும் வாங்கித் தருகிறார். அப்பாவுக்கு என்று எதையும் வைப்பது இல்லை. அப்பா அன்று உணவுடன் ஊறுகாயைப் பொரியலாக எண்ணி  சாப்பிடுகிறார். பிள்ளைகள் மீது அவர்களின் பாசம் இரண்டுமே சமம்தான். ஆனால், அப்பா ஏன் பின் தங்கியிருக்கிறார் என்று இன்னும் தெரியவில்லை. 

9. பெற்றோர்களுக்கு வயதாகும் போது, ​​குழந்தைகள் சொல்கிறார்கள், வீட்டு வேலைகளை கவனித்துக் கொள்வதில் அம்மா தங்கள் உடன் இருப்பது பயனுள்ளதாக இருக்கும் என்று. ஆனால், அப்பாவோ பயனற்றவர் என்று குழந்தைகள் நினைக்கிறார்கள்.
அப்பா ஏன் பின்தங்கியே இருக்கிறார்?

அவர்தான் குடும்பத்தின் முதுகெலும்பாக இருக்கிறார். அவர் இருக்கும்  காரணத்தால் தான் நம்மால் நிமிர்ந்து நிற்க முடிகிறது. 
இருந்தாலும் அப்பா 
ஏன் பின்தங்கியே இருக்கிறார் என்றுதான்
தெரியவில்லை...,...

தந்தையைப் போற்றுங்கள்.

படித்ததில் வலித்தது.

நன்றி..
பகிர்வு பதிவு...

Friday, October 08, 2021

வாழ்வில் வெற்றிப்பெற....

பல வியாபாரங்கள் செய்து தோற்றுவிட்ட
ஒருவன் கடைசியில் என்ன வியாபாரம்
செய்வதென்றே தெரியாத நிலையில் அந்த
ஊருக்கு வந்த சந்நியாசி ஒருவரை சென்று
சந்தித்து தனது நிலைமையை சொல்லி
புலம்பினான்.
"நீ வியாபாரம் செய்யவேண்டும் என்று
முடிவு செய்தது தவறல்ல. என்ன வியாபாரம்
செய்யவேண்டும் என்று முடிவு செய்ததில்
தான் தவறு. மக்களுக்கு எது அன்றாடம்
தேவைப்படுகிறதோ எது வாங்க வாங்க
தீர்ந்துபோகிறதோ அதை நீ வியாபாரம்
செய் உன் பிரச்சனை முடிவுக்கு வரும். நான்
வடக்கே யாத்திரை செல்கிறேன்.
இரண்டொரு மாதங்களில் திரும்ப
வருவேன். அப்போது வந்து என்னை
மீண்டும் பார்" என்று ஆசி கூறிவிட்டு
சென்றார்.

*༺♦༻*
இவனுக்கு அப்போது தான் உண்மை
புரிந்தது. மக்களின் தேவையை
அறிந்துகொள்ளாமல் நமக்கு சுலபமாக
இருக்கிறதே என்று நாம் முடிவு செய்து
இத்தனை நாள் வியாபாரம் செய்துவந்தோம் அதனால் தான் தோல்வி
ஏற்பட்டது என்று உணர்ந்துகொண்டான்.
தொடர்ந்து தனது மனைவி மற்றும் நலம்
விரும்பிகளுடன் ஆலோசித்து, அந்த ஊரில்
ஒரு காய்கறி கடையை திறந்தான். பக்கத்து
ஊர்களுக்கு சென்று காய், கனி வகைகளை
வாங்கி வந்து தனது கடையில் நியாயமான
விலைக்கு விற்றான்.

*༺♦༻*
இதைத் தொடர்ந்து
வியாபாரம் சூடு பிடிக்க ஆரம்பித்தது.
அவனுக்கு வாடிக்கையாளர்கள் பெருகினர்.
துறவியின் வாக்கு பலித்ததை எண்ணி
அகமகிழ்ந்தவன் அவருக்கு மானசீகமாக
நன்றி சொன்னான்.
இந்நிலையில், இவனது வியாபாரத்தை
பற்றி கேள்விப்பட்ட பக்கத்து ஊர்
செல்வந்தர் ஒருவர், இவனது கடைக்கு
எதிரே இருந்த ஒரு காலி நிலத்தை வாங்கி
அந்த இடத்தில் மிக பிரமாண்டமான கட்டிடம்
ஒன்றை கட்ட ஆரம்பித்தார். தனது கடைக்கு
எதிரே புதிய கட்டிடம் ஒன்று கட்டப்படுவதை
பார்த்த இவன் என்ன ஏது என்று
விசாரித்தபோது, மிகப் பெரிய பல சரக்கு
கடை ஒன்று அங்கு வரப்போவதாகவும்,
அங்கு காய்கறி முதல் மளிகை சாமான்கள்,
வீட்டு உபயோக வரை அனைத்தும்
கிடைக்கும் என்றும் கூறினார்கள்.
அதைக் கேட்ட இவனுக்கு அடிவயிறு
கலக்கியது. இத்தனை ஆண்டுகள்
நஷ்டத்தில் வணிகம் செய்து வந்தோம்.
இப்போது தான் ஓரளவு வியாபாரம்
ஆகிறது. இந்நிலையில் இப்படி ஒரு
போட்டியா? இந்த கடை கட்டி
முடிக்கப்பட்டால், எல்லோரும் இதற்கு செல்லவே விரும்புவார்கள்... என் கடையை
யார் எட்டிப் பார்ப்பார்கள்? இறைவா இது
என்ன சோதனை என்று கலங்கித்
தவித்தான்.

*༺♦༻*
இந்நிலையில், அந்த சந்நியாசியும் தனது
யாத்திரை முடிந்து திரும்பினார். அவரிடம்
சென்று நடந்ததை விளக்கி, "நான்
இப்போது என்ன செய்யவேண்டும்?"
என்றான்.
"ஒன்றும் வேண்டாம். நான் சொல்வதைப்
போல செய். தினமும் காலை உன் கடையை
திறக்கும்போது, *'இன்று எனக்கு வியாபாரம் நன்றாக நடக்கவேண்டும்'* என்று கடவுளை
பிரார்த்தனை செய். அப்படியே எதிர்புறமும்
திரும்பி *அந்த புதிய கடையிலும் நன்றாக வியாபாரம் நடக்க வேண்டும்'* என்று
பிரார்த்தனை செய். ஒப்புக்காக
பிரார்த்திக்காமல் மானசீகமாக அதை
விரும்பு. நல்லதே நடக்கும்" என்றார்.
"என்னது எனது போட்டியாளரும் நன்றாக
இருக்கவேண்டும்? அவருக்கும் நன்கு
வியாபாரம் நன்கு நடக்கவேண்டும் என்று
பிரார்த்திப்பதா?"

*༺♦༻*
"ஆமாம்... நீ அவருக்கு கூறும் ஒவ்வொரு
வாழ்த்தும் நல்லெண்ணமும் உனக்கே
பன்மடங்கு திரும்ப வரும். அதே போல அதே
போல அவருக்கு தீமை நினைத்தால்
அதுவும் உனக்கே திரும்ப வரும்" என்றார்.
"அதே போல அவரை எங்கேனும் சந்திக்க
நேர்ந்தால், ஒரு போட்டியாளரை பார்ப்பது
போல பார்க்காது, ஒரு நண்பரை நலம்-
விரும்பியை பார்ப்பது போல பார்த்து ஒரு
புன்னகை செய்." என்றார்.
அந்த சந்நியாசி மீதும் அவரது
வார்த்தைகள் மீதும் இவனுக்கு பெரு மதிப்பு
உண்டு என்பதால் அவர் கூறியதைப்
போலவே தினமும் முழு மனதுடன்
தனக்காகவும் அந்த எதிர்
கடைக்காரருக்காகவும் பிரார்த்தனை
செய்து வந்தான். அந்த எதிர்கடைக்காரரை
பார்க்கும்போதெல்லாம் புன்னகை செய்தும்
வந்தான்.

இதன் பயனாக நாளடைவில் இருவரிடமும்
ஒரு வித நட்பு ஏற்பட்டுவிட, தனது கடைக்கு
காய்கறிகளை கொள்முதல் செய்யும்
பொறுப்பை இவரிடம் விட்டுவிட்டார் அவர்.
விளைவு இவனுக்கு பன்மடங்கு பிஸ்னஸ்
கிடைத்தது.
நாளடைவில் இவன் கடையும் வளர்ந்து ஒரு
மிகப் பெரிய காய்கறி சந்தையாக
மாறிவிட்டது. மெல்ல மெல்ல அந்த பகுதி
முழுக்க வளர்ந்து அந்த பகுதியே ஒரு மிகப்
பெரிய வணிக சந்தையாக மாறிவிட்டது.
ஒரு நேர்மறையான அணுகுமுறை,
மனோபாவம் எந்தளவு அவரது
வாழ்க்கையை மாற்றியிருக்கிறது
பார்த்தீர்களா?

*༺♦༻*
*நாம் இந்த உலகத்தில் தனியாக இல்லை .*
*ஒவ்வொரு விஷயமும் ஒன்றுக்கொன்று பின்னிப் பிணைந்தவை.* நமது
எண்ணங்கள் தான் நமது எதிர்காலத்தை
தீர்மானிப்பதில் மிகப் பெரிய பணியை
செய்கின்றன. *ஒருவரைப் பற்றி நமக்கு ஏற்படும் நல்ல சிந்தனையோ கெட்ட சிந்தனையோ அவரை தீர்மானிப்பதில்லை நம்மையே தீர்மானிக்கின்றன.* எனவே
வாழ்க்கையில் வெற்றி பெற விரும்புகிறவர்
என்றும் எப்போது நல்ல நேர்மறையான
சிந்தனையையே
வளர்த்துக்கொள்ள வேண்டும்.
இனிய முகநூல் நண்பர்களே வணக்கம்.

நன்றி..
பகிர்வு பதிவு...

Wednesday, October 06, 2021

ஆசிரியர் என்றும் ஆசிரியரே...

ஆசிரியர் சமுதாயத்திற்கு மனநிம்மதியை தரக்கூடிய ஒரு தீர்ப்பு.

Supreme Court says reprimanding students for indiscipline not tantamount to provocation for suicide

ஒரு மாணவர் தனது ஒழுக்கமின்மைக்காக கண்டிக்கப்படுவது என்பது  மாணவரை தற்கொலைக்கு தூண்டப்படுவதற்கு ஒப்பானதல்ல, என உச்ச நீதிமன்றம் இன்று தெரிவித்துள்ளது.

மாணவர்களிடம் ஒழுக்கத்தை வளர்ப்பது ஆசிரியரின் தலையாய கடமை என்று உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. மற்றும் ஒரு மாணவர் கவனத்துடன் இருக்காததற்காக அல்லது படிப்பில் மதிப்பெண் பெறாததற்காக அல்லது வகுப்புகளில் கவனமில்லாமல் இருப்பதற்காகவோ  அல்லது பள்ளிக்கு வராததற்கோ கண்டிப்பது அசாதாரணமானது அல்ல.

ஒரு மாணவரை சமுதாயத்தில் நல்ல மனிதராக்க, நல்ல குணங்களைப் புகட்டுவது ஒரு ஆசிரியரின் தார்மீகக் கடமை. ஒழுக்கமின்மைக்காக ஒரு மாணவரை கண்டிக்கும் ஒரு எளிய செயல்  தற்கொலைக்கு தூண்டுதலுக்காகவோ  இருக்காது என்று உச்ச நீதிமன்றம் கூறியது.  

மாணவரின்  வருகை பதிவு, கற்றல் திறன், கற்றலில் முன்னேற்றம் மற்றும் மாணவரை பற்றிய வேறு எந்த செயலும் அல்லது தொடர்புடைய தகவல்களும். பெற்றோர்கள் மற்றும் பாதுகாவலர்களுடன் குறிப்பிட்ட காலங்களில்  கூட்டங்களை நடத்தி அவர்களுக்குத் தெரிவிப்பது. 
"ஒரு ஆசிரியரின் தார்மீகக் கடமை மட்டுமல்ல, இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம், பிரிவு 24 (இ) இன் கீழ் சட்டரீதியாக ஒதுக்கப்பட்ட கடமைகளில் ஒன்று என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது 

 ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூரில் 9 ஆம் வகுப்பு மாணவியின் தற்கொலைக்காக இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 306 ன் கீழ் குற்றம் சாட்டப்பட்ட பள்ளி ஆசிரியருக்கு எதிரான எஃப்.ஐ.ஆரை ரத்து செய்யும் போது உச்சநீதிமன்றத்தால் இந்த அவதானிப்புகள் செய்யப்பட்டன.

The top court said it is a solemn duty of a teacher to instill discipline in the students and reprimanding a student for not being attentive or not being up to the mark in studies or for bunking classes or not attending the school is not uncommon.

“It is not only a moral duty of a teacher but one of the legally assigned duties under Section 24 (e) of the Right of Children to Free and Compulsory Education Act, 2009 to hold regular meetings with the parents and guardians and apprise them about the regularity in attendance, ability to learn, progress made in learning and any other act or relevant information about the child,” the bench said.

பகிர்வு பதிவு

Saturday, October 02, 2021

கொரோனாவுக்கு பின் கற்பித்தல்...

நவம்பரில் நடக்க வேண்டியது... 2

முறையான கற்பித்தலுக்குப் போகும்போது நாம் கவனிக்க வேண்டிய சில அடிப்படைக் கருத்துகள். 

1. குழந்தைகள் ஒன்றரை வருடம் சற்று சுதந்திரத்துடன் இருந்திருக்கிறார்கள். 
2. விரும்பியதை மட்டும் செய்திருக்கிறார்கள். 
3. தாங்களே முடிவெடுத்து அதற்கேற்ப நாட்களைக் கழித்திருக்கிறார்கள். 
4. குழந்தைகளோடு செலவிட நேரம் உள்ள, படித்த பெற்றோர்கள் அவர்களுக்குத் தெரிந்தவற்றைக் குழந்தைளுக்குக் கற்பித்திருப்பார்கள்.  
5. இணைய வகுப்புகளைக் கவனிப்பதற்கு வாய்ப்புக் கிடைத்த குழந்தைகள் அதற்கு வாய்ப்பில்லாத குழந்தைகளைவிட சற்று மேம்பட்டு இருக்கலாம். 
6. இது குழந்தைகளுக்கு இடையே இருக்கும் கற்றல் இடைவெளியை அதிகப்படுத்த வாய்ப்பிருக்கிறது. 
7. தனியார் பள்ளிகளிலிருந்து அரசுப் பள்ளிகளுக்கு வந்திருப்பவர்கள் கொஞ்சம் சந்தேகத்தோடு நம் வகுப்பறைகளைக் கவனிக்க முதிர்வார்கள். 
8. முதல் வகுப்பு கற்றல் இலக்குகளை முதல் மூன்று வகுப்பு மாணவர்களுக்கும் கற்பிக்க வேண்டியிருக்கும். 
9. இரண்டு, மூன்று வகுப்புக் குழந்தைகளுக்கு ஒன்றாம் வகுப்புப் பாடத்தை நடத்தும்போது, அவர்களுக்குத் தாழ்வுணர்ச்சி ஏற்பட வாய்ப்பிருக்கிறது. 
10. அந்தத் தாழ்வுணர்வுகொண்டவர்களிடம் “நான் சொல்லித்தருகிறேன். நீ தெரிந்துகொள்” என்ற நம் முந்தைய முறை பொருந்தாமல் போகலாம். 
11. நடத்தி முடிப்பது என் வேலை என்று எல்லா பாடப்பொருளையும் சிவனே என்று நாம் கற்பிக்கத் தலைப்படுவோமா இல்லை தேர்ந்தெடுத்த பாடப்பொருள்களை அவசரமின்றி பொறுமையாகக் கற்பிப்போமா? 

குழப்பம்தான்.  நிச்சயமான, தெளிவான, உறுதியான முடிவுகள் எடுக்க முடியாது. பல கருத்துகளின் அடிப்படையில் சில செயல்பாடுகள் வடிவமைத்து, நடைமுறைப்படுத்திப் பார்த்து, குழந்தைகளின் ஈடுபாட்டைக் கவனித்து அதிலிருந்து பாடம் கற்பதுதான் ஒருவழி. 

எடுத்துக்காட்டாக ஒரு செயல்பாட்டை அறிமுகப்படுத்த விரும்புகிறேன்.  (வயது முதிர்ந்த குழந்தைகளுக்கு அடிப்படைக் கருத்துகளை அவர்கள் மனம் கோணாமல் கற்பிப்பதற்கான உத்தியாக இச்செயல்பாட்டை நான் காண்கிறேன்.) 

1. வகுப்புக் குழந்தைகளின் பெயர்களை சார்ட்டுத் துண்டுகளில் எழுதுக்கொள்ளுங்கள். இனிஷ்யல் உட்பட எழுதுவது நல்லது. (பெயரட்டைகள்) கூடவே குண்டூசிகளையும் வைத்துக்கொள்ளுங்கள். 
2. ஒவ்வொருவரின் பெயரை வாசித்து அவருடைய சட்டையில் பெயரட்டையைக் குத்தி விடுங்கள். ஒருவாரம் இது தொடருங்கள். 
3. அடுத்த வாரம் பெயரட்டைகளை மேசைமேல் பரப்பி வையுஙகள். குழந்தைகளிடம் அவரவர் பெயரட்டைகளை எடுக்கச் சொல்லுங்கள். 
4. அடுத்த வாரம் சார்ட்டில் குழந்தைகளின் பெயர்களை எழுதுங்கள். அதை வாசித்து வருகையைப் பதிவு செய்யுங்கள். 
5. சார்ட்டில் குழந்தைகள் தங்கள் பெயர்களைக் கண்டுபிடித்துக் காட்டட்டும். 
6. மேசைமேல் பரப்பி வைத்த பெயரட்டைகளிலிருந்து தன் பெயரட்டையையும் தங்கள் நண்பர்களுள் சிலரின் பெயரட்டையையும் தேர்ந்தெடுக்க வாய்ப்பளியுங்கள். 
7. அதற்கும் அடுத்த வாரம் நீங்கள் குறிப்பிடும் பெயரைச் சார்ட்டிலிருந்து கண்டுபிடிக்க முடியுமா என்று கேளுங்கள். 
8. பெயரட்டைகளைக் குழந்தையிடம் கொடுத்து எத்தனை பேருக்கு பெயரட்டைகளைக் கொடுக்க முடியும் என்று கேளுங்கள். 
9. இதற்கிடையே ஐந்தோ ஆறோ குழந்தைகளின் பெயர்களைக் கரும்பலகையில் எழுதுங்கள். (அதில் இரண்டு பெயர்கள் இருப்பது நல்லது) எடுத்துக்காட்டு விஜயகுமார், சந்திரசேகர்  போன்றவை
10. விஜயகுமார் என்ற பெயரை வாசித்துக் காட்டிவிட்டு அதன் கீழே குமார் என்பதற்குக்கீழே குமார் என்று எழுதி இது என்ன என்று கேளுங்கள். 
11. பிறகு புதுப்பெயர் உருவாக்கும் செயல்பாட்டை நடத்துங்கள். அதாவது விஜயகுமார், சந்திரசேகர்  என்றிருப்பதிலிருந்து விஜயசேகர், சந்திரகுமார் போன்ற புதுப்பெயர்களை உருவாக்க வேண்டும். 
சில சொற்களை வாசிக்கக் குழந்தைகள் சிரமப்படும்போது இந்தச்சொல்லில் வரும் எழுத்துகள் .................................... இந்தப் பெயரில் வந்துள்ளன. அதை வாசித்தால் இந்தச் சொல்லையும் வாசிக்கலாம் என்று சொல்லுங்கள். அதுபோல் சில எழுத்துகளை வாசிக்கத் தெரியாமல் இருக்கும்போது ..................... இவருடைய பெயரின் இனிஷ்யல் இந்த எழுத்துதான் என்று சொல்லுங்கள். 

புதுப்பெயர் உருவாக்கும் செயல்பாட்டில் குழந்தைகள் விருப்பம் காட்டினால் புது ஊர்ப்பெயர்கள் உருவாக்கும் செயல்பாட்டை நடத்தலாம். குழந்தைகளுக்குத் தெரிந்த ஊர்ப்பெயர்களை எழுதுதல், வாசித்துக் காட்டுதல், வாசிக்க வாய்ப்பளித்தல், பிறகு புது ஊர்ப்பெயர்கள் உருவாக்கும்படி சொல்லுதல், அவற்றை எழுதுதல், வாசிக்க வாய்ப்பளித்தல் என்னும் படிகளைப் பின்பற்றலாம். 

காட்டாயப்படுத்தாமல், அவர்களுக்குத் தெரியாமலே அவர்களின் கவனத்தை எழுத்துகளின் மேல் பதிய வைக்க இச்செயல்பாடு உதவும் என்று நினைக்கிறேன். மட்டுமல்ல விரைந்து கற்கும் மாணவர்களுக்கு கடினத்தன்மை கூடிய அடுத்த செயல்பாட்டைக் கொடுக்கவும் அவர்களைச் செயல்பாட்டில் தொடர்ந்து ஈடுபடச் செய்யவும் இச்செயல்பாடு உதவும். 

மேலும் சில செயல்பாடுகளுக்காக காத்திருங்கள். 

மீள்பதிவு

நன்றி
PC; Puthiathalaimurai

ஜி. ராஜேந்திரன் 
கல்வி இயக்குநர்
Qrius Learning Initiatives, Coimbatore 
Blog:qriuslearning.wordpress.com

Tuesday, September 28, 2021

புதிய பார்வை..புதிய கோணம்..

🍁  புதிய பார்வை  🍁

  ஒருவர்
  கேட்கும் 
  பத்து
  உதவிகளை
  தொடர்ந்து
  செய்

  பதினோராவது
  உதவியை
  மறுத்து
  பார்

  செய்த பத்து
  உதவியையும்
  மறந்து

  மறுத்த
  நிகழ்வை
  மட்டுமே அவர்
  மனதில் தாங்கி
  கொண்டிருப்பார்

இது
தமிழ் வாணன்
அவர்களின்
கூற்று

  இது
  தான்
  உலகம்

  இது
  தான்
  மனித 
  இயல்பு

  இதுதான்
  யதார்த்தம்

  இருப்பினும்

  நமக்கும்
  அதைப்போல
  சூழ்நிலைகள்
  வரலாம்

  அந்த
  நேரங்களில்

  கருத்து
  வேறுபாடு
  கொண்டு
  நாம் சலித்து
  கொள்ளாமல்

  அவர்கள்
  நமக்கு செய்த
  நன்மைகளை
  நெஞ்சத்தில்
  நிறுத்தி

  ஒரு
  நிமிடம்
  பொறுத்து
  போனால்

  ஏற்படும்
  நன்மைகள்
  ஏராளம்

இது
லேனா
தமிழ் வாணன்
அவர்களின்
கருத்து

  நன்றி 
  தெரிவிக்கும் 
  மக்களின்
  வாழ்க்கை 
  நிலையாகவும் 
  வலிமையாகவும் 
  இருக்கும்

  மேலும்
  நன்றி 
  தெரிவித்து 
  வாழ்பவர்கள் 
  மிகவும் 
  ஆனந்தமாய் 
  இருப்பார்கள் 

என்கிறது  
மெக்சிகன் 
பல்கலைக்கழக 
ஆய்வு முடிவுகள்

இன்றைய
நடைமுறையில்
இவைகளை
கடைபிடிப்பது
கண்டிப்பாக
கடினம்தான்

இருப்பினும்

  நாம்
  செய்த
  உதவிகளை
  மறந்த அவர்
  
  அவராகவே
  இருந்து விட்டு
  போகட்டுமே

  அவர்
  செய்த
  உதவிகளை

  நம் 
  மனதில் நாம் 
  என்றைக்கும்
  நிறுத்துவோமே

  நன்றி 
  சொல்லும் 
  நெஞ்சம் 
  நமக்கு
  இருப்பின்

  நான்கு 
  திசையிலும் 
  நன்மைகள்
  நமக்கு
  விளையுமே

முயற்சிகள்
செய்து
பார்க்கலாம்
வாங்க

புதிய
நம்பிக்கை
கீற்றுக்களுடன்

அன்புடன்
காலை
வணக்கம்

🎉🎉🎉🎉🎉🎉🎉

நன்றி முனைவர். சுந்தர மூர்த்தி

Saturday, September 18, 2021

தலைக்குள் ஓர் உலகம்- சுஜாதா ( நிலை.8 விரிவானம்)

சுஜாதா எழுதிய கட்டுரை தலைக்குள் ஓர் உலகம். வலையொலி ஓசை உங்கள் காதருகில் பேசுவது சேலம்.ஆ.சிவா...
https://anchor.fm/sivaramakrishnan7/episodes/20-----8------e17i84i
கேட்டு மகிழுங்கள்...


Friday, September 17, 2021

பள்ளிக்கு செல்லாமல்...CBSC க்கு இணையான படிப்பு...

NIOS ஓர் அறிமுகம் 

என்னுடைய மூத்த மகன் மதி, 2018 - ல் பத்தாம் வகுப்பு தேர்வு பெற்றான். சில காரணங்களினால் அவனால் 11 - ம் வகுப்பை  பள்ளியில் தொடர முடியவில்லை. மாற்று வழி என்னவென்று யோசித்துக் கொண்டிருந்த சமயம். நம் வீட்டுத் தலைவர் தான் "Alternative education, Home schooling" அப்படின்னு நிறைய படிக்கிறார் இல்லையா, அதனால், "Home schooling பண்ண சொன்னால் என்ன!" என்ற ஒரு சிறு யோசனை தான் இன்று மதி யை NIOS - ல் பன்னிரெண்டாம் வகுப்பை முடிக்க செய்திருக்கிறது.

NIOS என்றால் என்னவென்று தெரியாதவர்களுக்கு அதைப்பற்றி முதலில் சொல்லிவிடுகிறேன். NIOS - National Institute of Open Schooling, என்பது CBSE, ISC, State Syllabus போன்றதொரு அமைப்பு. இது இந்திய மத்திய அரசால் நடத்தப் படுகிறது. இதன் பாடத்திட்டம் CBSE யோடு  ஒப்பிட முடியும்.  இதில் படிக்கும் மாணவர்கள் பல பயன்களை பெற முடியும். உதாரணமாக, மதி க்கு அறிவியல் என்றாலே ஒத்து வராது. மேலும் அவனுக்கு சட்டம் படிக்க வேண்டுமென்பது இப்போதைய குறிக்கோள். கணக்கு மற்றும் வரலாறு ஆகியவை மிகவும் பிடித்த பாடங்கள். இவை எல்லாம் சேர்ந்த ஓர் பிரிவு எந்தவொரு பள்ளியிலும் கிடைக்கவில்லை. இப்பொழுதிருக்கும் பள்ளியில் ஏதாவது ஓர் பிரிவை தேர்ந்தெடுத்தால், அதில் அவனுக்கு பிடித்த பாடங்களை விட பிடிக்காத பாடங்களே அதிகம். NIOS யை தேர்ந்தெடுக்கும் மாணவர்கள் தங்களுக்கு விருப்பமான பாடங்களை, NIOS - ன் பாடப்பட்டியலில் இருந்து தேர்வு செய்து கொள்ளலாம். அவர்களின் பாடப்பட்டியலை இங்கு சென்று காணலாம். https://www.nios.ac.in/departmentsunits/academic/senior-secondary-course-equivalent-to-class-xii.aspx

எப்படியும் பன்னிரெண்டாவது படிக்கும் நம் பிள்ளைகளை டியூஷன் ல் சேர்ப்போம். பள்ளிக்கும் சென்று வந்து பின்பு டியூசன் க்கும் சென்று வர நம் பிள்ளைகள் எவ்வளவு கஷ்டப்படுகிறார்கள் என்பதை நாம் அறிவோம். NIOS - ல் சேர்த்தால் டியூசன் மட்டும் போய் வந்தால் போதும், பள்ளிக்கு போக தேவை இல்லையே என்ற சந்தோஷம் பெற்றோர்களாகிய எங்களுக்கு இல்லாமல் இல்லை. மேலும் NIOS, நம் நகரங்களிலேயே சில பள்ளிகளின் பட்டியலை, வார கடைசி நாட்களில் சென்று நம் சந்தேகங்களை தீர்த்துக் கொள்ள, நமக்கு அளிக்கிறது. அதிலிருந்து நமக்கு வசதியான பள்ளியை நாம் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். அங்கு சென்று practical classes ஐயும் attend செய்து கொள்ளலாம். 

மதி இம்முறையை தேர்ந்தெடுத்ததினால், பள்ளியில் படிக்கும் பாடங்கள் அல்லாமல் அவனுக்கு பிடித்தமான பாடங்களில் சில "Certification" ஐயும் முடிக்க முடிந்தது. அது கல்லூரியில் சேர்வதற்கான நேர்க்காணலில் மிகவும் பயனுள்ளதாய் இருந்தது. 

இம்முறையில் இன்னுமொரு சிறப்பு என்னவென்றால், NIOS குழுமம் வருடத்திற்கு அக்டோபர், ஏப்ரல் என இரண்டு முறை பரீட்சையை நடத்துகிறது. ஆகையால், நாம் நம் பாடங்களை பிரித்தும் எழுதிக் கொள்ளலாம். மதி, 3 பாடங்களை அக்டோபரிலும், 2 பாடங்களை ஏப்ரலிலும் எழுதி 80% உடன் தேர்ச்சி பெற்றிருக்கிறான். 

எல்லா மாற்று முறைக்கும் நன்மை, தீமை ஆகிய இரண்டும் இருக்கும். அதை போலத்தான் இம்முறைக்கும் சில எதிர்மறைகளும் இருக்கின்றன. பிள்ளைகள் தங்களுடைய நண்பர்களுடனான நேரத்தை அதிகம் இழக்கிறார்கள். மேலும் மதி, அவனுடைய vocabulary ஐ இழந்து வருவதாக மிகவும் வருத்தமடைந்தான். சில கல்லூரிகள் NIOS ல் படித்திருந்தால் admission கொடுக்க தயங்குகிறார்கள். மத்திய அரசின் பாடத்திட்டத்திற்கு ஏன் இந்த தயக்கம் என்று தான் புரியவில்லை. ஆனால் பயன்களுடன் ஒப்பிடும் பொழுது, இது பரவாயில்லை என்றே தோன்றியது. ஒன்றை பெற மற்றொன்றை சில நேரங்களில் இழந்து தானே ஆகவேண்டும். 

இன்று மதி, இந்தியாவின் top 10 ன் ஒன்றான, புகழ் பெற்ற கல்லூரி ஒன்றில் சட்டம் படிக்க தேர்வு செய்யப்பட்டிருக்கிறான். இப்பொழுதிருக்கும் பள்ளிக் கல்விக்கு மாற்றுமுறையில் செல்கிறோமோ என முதலில் மனதில் பயம் இருந்தது. ஆனால் எங்களின் ஊக்கமும் மதியின் உழைப்பும், இம்முறையை தேர்ந்தெடுத்ததில் வெற்றி பெற செய்திருக்கிறது. 

இப்பதிவு கண்டிப்பாக எங்களை போன்ற சில பெற்றோர்களுக்கு உதவியாக இருக்கும் என்ற நம்பிக்கையில் பதிவிடுகிறேன். 

NIOS - ன் link https://www.nios.ac.in/default.aspx 
தேவை எனில் மேற்கூறிய சுட்டியை பயன்படுத்தி விவரங்களை தெரிந்து கொள்ளலாம். 

பி. கு. : சொல்ல மறந்துவிட்டேன். மதி பன்னிரெண்டாவது படிக்க ஆன செலவு 1700/- ரூபாய் மற்றும் ஒவ்வொரு பாடத்திற்கான தேர்வுக் கட்டணம் தலா 250 ரூபாய். இந்த 1700 ரூபாயில் புத்தக செலவும் அடக்கம். 

படத்தில் - மதி.