Wednesday, July 08, 2020

புதிய பார்வை....புதிய கோணம்...

🍁  புதிய பார்வை  🍁

நேர்மறை
சிந்தனையின்
தந்தை என
அழைக்கபடுபவர்
நார்மன்
வின்சென்ட்
பீலே.

நேர்மறை 
சிந்தனையின் 
திறன் 
என்ற நூலை
எழுதிய இவர்...

வாழ்க்கையில் 
பெற வேண்டிய 
வெற்றிகள், 
நம்பிக்கைகள், 
மகிழ்வான 
தருணங்கள், 
சிறப்புகள் 
பற்றி...

விரிவாகவும், 
இயல்பாகவும், 
அனைவரும்
ஏற்று கொள்ளும்
வகையிலும்...

இந்த 
புத்தகத்தில் 
எளிமையாக
விளக்குகிறார்.

ஏறக்குறைய 50 
ஆண்டுகளுக்கு
முன்னரே...

10 லட்சம் 
மக்களின்
மனதை 
மாற்றிய
நூல் இது.

மக்கள் 
எதிர்மறையான 
எண்ணங்களை 
கைவிட வேண்டும் 
என்றும்...

வாழ்க்கையில் 
நாம் வெற்றி பெற 
வேண்டுமானால்...

நமது 
நம்பிக்கை, 
நமக்கு
சாதகமான 
சூழ்நிலைகளை...

நமக்கு
ஏற்ற வகையில்
நாம் அமைத்து
கொள்ள வேண்டும்
என்றும் கூறியவர்
இவர்.

இவரின்
சிந்தனை 
துளிகள்
சில...

நல்லதே நடக்கும்
என உறுதியுடன்
இருப்பவர்கள்...

இறைவனின்
மகத்தான சக்தி
பெற்று வளம்
பெறுவர்.

உங்களுக்கு
தேவையான
சக்தியும்
செயல் 
ஊக்கமும்
உங்களிடம் தான்
உள்ளது.

இவைகளை
நீங்கள்
முழுமையாக
நம்பினால்...

இவை 
இரண்டும்
நீர்வீழ்ச்சி போல
தங்கு தடையின்றி
உங்களுக்கு
கிடைக்கும்.

வாழ்க்கையை 
அதன் போக்கில் 
அமைதியாக 
ஏற்று 
கொள்ளுங்கள். 

கட்டுப்பாட்டுடன் 
கூடிய 
உணர்ச்சியோடு 
உங்கள் 
பிரச்சனைகளை
கையாளுங்கள். 

வெற்றியை
நோக்கி
தொடர்ந்து 
சீராக 
செயல்படுங்கள்

உண்மையிலேயே 
சக்தி குறைந்து 
விட்டோமோ 
என்ற உணர்வே...
 
தனி 
மனிதனையும் 
சரி, 
ஒரு நாட்டையும் 
சரி, 
மிகவும் பாதித்து
விடுகிறது.

வாங்க...

இவரது 
கருத்துக்களை
முடிந்தவரை
தொடர
செய்வோம்.

இன்பமான
வாழ்வு 
அமைத்து 
கொள்ள
முயற்சிகள்
செய்வோம்.

அன்புடன்
இனிய
மதிய 
வணக்கம்