Wednesday, July 22, 2020

புதிய பார்வை...புதிய கோணம்...

🍁  புதிய பார்வை  🍁

ஈராக் நாட்டின் 
புஷ்வா நகரம். 

ஓர் 
இறைமறுப்பாளர் 
ஒரு உயரமான 
மேடையில் 
நின்று...

இறைவன் 
இல்லை என்று 
பேசிகொண்டு 
இருக்கிறார்.

அப்போது 
ஒரு சிறுவன்
இறைவன் 
இருக்கின்றான் 
சில பேருக்கு அது 
தெரியவில்லை 
என்று கூறினான்.

இதை மறுத்த 
இறைமறுப்பாளர்...

நான் மூன்று 
கேள்விகளை 
கேட்கிறேன் நீ
பதில் சொல்வாயா?
என்று கேட்டார்.
 
சிறுவன் அதற்கு 
ஒப்புக்கொண்டான்.

இறைமறுப்பாளர்
முதல் கேள்வியை 
கேட்டார்.

இறைவன் 
என்ன செய்து 
கொண்டிருக்கிறார்?

சிறுவன் 
அவரை பார்த்து... 

மேடையில் இருந்து 
இறங்கி வாருங்கள் 
நான் பதில் 
கூறுகிறேன் 

என்று 
கூறினான். 

இறைமறுப்பாளர் 
மேடையில் 
இருந்து கீழே 
இறங்கினார்.

சிறுவன் 
மேடையில்
ஏறினான்.

இறைமறுப்பாளரை 
பார்த்து...

உங்கள் 
நிலையை 
கீழே தாழ்த்தி 
உள்ளார் 
என்னை 
மேலே ஏற்றி 
உள்ளார்...

இதுதான் 
இறைவன் 
இப்போது 
இந்த நிமிடத்தில் 
செய்திருக்கிறார் 

என்று  
கூறினான்.

இந்த பதிலில் 
இறைமறுப்பாளர் 
சற்று அவமானம் 
அடைந்தார்.

அடுத்த
கேள்வியை
கேட்டார்.

இப்போது 
இருக்கின்ற 
இறைவன்...

இதற்கு முன் 
யாராக இருந்தார் ?
என்று கேட்டார்.

சிறுவன் 
இறைமறுப்பாளரை 
பார்த்து...

பத்திலிருந்து 
தலைகீழாக 
எண்களை 
சொல்ல
சொன்னார்.

இறைமறுப்பாளர் 
பத்து
ஒன்பது
எட்டு
ஏழு
.....
.....
ஒன்று 
என
முடித்தார்.

தொடர்ந்து 
சொல்லுங்கள் 
என்று சிறுவன் 
இறைமறுப்பாளரை 
பார்த்து 
வேண்டினான்.

ஒன்றுக்கு கீழே 
ஒன்றும் இல்லை 
என்று
இறை மறுப்பாளர் 
கூறினார்.

சிறுவன்...

இறைவன் 
ஒருவனே 
அவனுக்கு 
முன்பும் 
யாரும் இல்லை 
அவருக்கு 
பின்பும் 
யாருமில்லை 

என்று 
கூறினான்.

இந்த 
விளக்கத்திற்கு 
இறைமறுப்பாளர் 
எந்த விதமான 
பதிலும் சொல்ல
இயலவில்லை.

இருப்பினும் 
மூன்றாவது 
கேள்வியை
சிறுவனை
பார்த்து கேட்டார்.

இப்போது 
எந்த திசையில் 
இறைவன் 
இருக்கிறார் ?

சிறுவன் 
அவருக்கு முன் 
ஒரு 
மெழுகுவர்த்தியை 
ஏற்றி...

இந்த தீபம் 
எந்த திசையை
காட்டுகிறது ?

என்று 
கேட்டான்.

இறைமறுப்பாளர்... 

தீபம் எல்லா 
திசையிலும் 
சுற்றி இருக்கிறது 
என்று கூறினார்.

சிறுவன்...

இறைவனும் 
எல்லா 
திசையிலும் 
பரவி
இருக்கின்றான் 
 
என்று 
கூறினான்.

இந்த மூன்று 
கேள்விக்கான 
விடைகளிலும் 
திருப்தி அடைந்த 
இறைமறுப்பாளர்...

தன்னுடைய 
தோல்வியை 
பகிரங்கமாக 
மக்கள் முன் 
ஒப்புக்கொண்டார்.

மேலும்...

இறைவன்  
எங்கும்
எதிலும்
எப்போதும்
இருக்கின்றான்...
 
என்பதை 
உணர்ந்து 
கொண்டார்.

அந்த 
சிறுவன்தான் 
பின்னாளில் 
புகழ்பெற்று
அறிஞராக 
விளங்கிய...

_*இமாம் அபு*_ 
_*ஹனிபா*_

வேண்டுதல் 
வேண்டாமை 
ஆத்திர 
மெய்சுடராய்

விளக்கிட 
முடியாத 
தத்துவ 
பொருளாய்

_*ஆண்டவன்*_ 
_*ஒருவன்*_ 
_*இருக்கின்றான்*_ 

_*அவன் அன்பு*_
_*மனங்களில்*_ 
_*சிரிக்கின்றான்*_

என்னும்...

கவிஞர்
_*ஆத்மநாதனின்*_
வார்த்தைகள்
உண்மைதானே.

அன்புடன்
இனிய
காலை
வணக்கம்.

No comments: